திங்கள், 18 செப்டம்பர், 2017

உலகத் தலைவர் தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா


மாநாடுபோல் எழுச்சியுடன் நடைபெற்ற

பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம்



சென்னை, செப். 18- உலகத் தலைவர் தந்தை பெரியார் 139 ஆவது பிறந்த நாள்விழாவை யொட்டி சென்னை திருவல் லிக்கேணி (அய்ஸ் அவுஸ்) சேக்தாவூத் தெருவில் தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் நேற்று (17.9.2017) மாலை மாபெரும் பொதுக் கூட்டம் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமை யில் நடைபெற்றது.

சென்னை இராயப்பேட்டை அய்ஸ் அவுஸ் பகுதியை இணைக்கின்ற பெசன்ட் சாலையின் இருமருங்கிலும்  கழகக் கொடிகள், மின்விளக் குத் தோரணங்கள் அமைக்கப் பெற்று அறிவுலக ஆசானின் பிறந்த நாள் விழா கொண் டாட்டத்தை பறை சாற்றின. தந்தை பெரியார் முழு உரு வத்தில் வண்ண மின்விளக் குகள் அமைக்கப்பெற்று அனை வரின் கவனத்தை ஈர்த்தன. தந்தை பெரியார் பிறந்த நாள்விழா மாநாட்டுக்குரிய ஏற்பாடுகளுடன் எழுச்சியாக நடைபெற்றது.

தென்சென்னை, வட சென்னை, ஆவடி, கும்மிடிப் பூண்டி, தாம்பரம் உள்ளிட்ட கழக மாவட்டங்களின் பொறுப் பாளர்கள் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா எனும் திருவிழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

விழாவில் பெருமளவில் திரண்ட பொதுமக்கள் தமிழர் தலைவர் உரையை கடைசி வரையிலும் இருந்து கேட்டு பயன்பெற்றனர்.

வீரவிளையாட்டுகள்

தொடக்க நிகழ்வாக கழக மாணவரணி, இளைஞரணியினருடன் பெரியார் பிஞ்சு களும்  இணைந்து நிகழ்த்திக் காட்டிய தற்காப்புக்கலை,   வீர விளையாட்டுகள், சிலம் பாட்ட வீரர்களின் தீப்பந்தங் களுடன் கூடிய சிலம்பாட்ட சாகசங்கள் நடைபெற்றன.

மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி வரவேற்றார்.

சென்னை மண்டல செய லாளர் வி.பன்னீர்செல்வம், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் த.ஆனந்தன், வட சென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, பொன்னேரி செல்வி உள்ளிட்டவர்கள் உரையாற்றினார்கள்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர் கள்.

இறுதியாக தந்தை பெரியார் உருவப்படத்தைத் திறந்துவைத்து தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  எழுச்சியுரையாற் றினார்.

தென்சென்னை மாவட்ட கழகம் சார்பில் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் பயனாடை அணிவித்தார்.

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழக வழக்கு ரைஞரணித் தலைவர் த.வீர சேகரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், பொதுக்குழு உறுப்பினர்கள் சைதை எம்.பி.பாலு, நீலாங் கரை ஆர்.டி.வீரபத்திரன், ஆவடி மாவட்டச் செயலாளர் சிவக்குமார், வடசென்னை மாவட்டச் செயலாளர் தே. ஒளிவண்ணன், துணைசெய லாளர் கி.இராமலிங்கம், தென்சென்னை இளைஞரணித் தலைவர் செ.தமிழ்சாக்ரட் டீஸ், மகளிரணி வி.வளர்மதி,  சி.வெற்றிசெல்வி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, பி.அஜந்தா, பெரியார் சுய மரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந் தில்குமாரி, சீர்த்தி, பூவை செல்வி, கலைமதி, மு.பவானி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, ஜெயந்தி,  சைதை மதியழகன், கோவீ.ராகவன், மயிலை டி.ஆர்.சேதுராமன், சா.தாமோதரன், செந்துறை இராசேந்திரன், கு.செல்வேந் திரன், சண்முகப்ரியன், திரு மலை, பொறியாளர் ஈ.குமார், பிரபாகரன்,  சேகர், பெரி யார்மாணாக்கன்,    இராமலிங் கம், புழல் ஏழுமலை, தாம் பரம்  சீ.இலட்சுமிபதி, மோகன் ராஜ், செயராமன், குணசேக ரன், தரமணி மஞ்சுநாதன், இ.ப.இனநலம் உள்பட ஏரா ளமானோர் விழாவில் பங் கேற்றனர். இளைஞரணி செய லாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

-விடுதலை,18.9.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக