வியாழன், 19 ஜனவரி, 2023

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சைதை.எம்.பி.பாலு அவர்களின் தொண்டினைப் பாராட்டி திராவிடர் கழகத்தின் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து நினைவு பரிசை வழங்கினார் (''பெரியார் விருது'' வழங்கப்பட்டது)

சென்னை பெரியார் திடலில், திராவிடர் திருநாள் பொங்கல் விழாவில் ''பெரியார் விருது'' வழங்கப்பட்டது

91 வயதை நெருங்கக் கூடிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சைதை.எம்.பி.பாலு அவர்களின் தொண்டினைப் பாராட்டி திராவிடர் கழகத்தின் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து, நினைவுப் பரிசினை வழங்கினார்; ஜாதிய கட்டமைப்புகளுக்கு எதிராக பாடல் வரிகளை எழுதி, இசைக்கும் தெருக்குரல் அறிவு அவர்களைப் பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினார். தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் 2023 ஆம் ஆண்டுக்கான 'பெரியார் விருது', எழுத்தாளர் வீ.மா.ச.சுபகுணராஜன், குழலிசைக் கலைஞரும், திரைப்பட பின்னணி பாடகருமான அருண்மொழி (எ)நெப்போலியன் ஆகிய இருவருக்கும் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து தந்தை பெரியார் சிலை மற்றும் இயக்க நூல்களை வழங்கி, பாராட்டுகளைத் தெரிவித்தார் (சென்னை பெரியார் திடல், 17.1.2023).


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக