தென் சென்னை திராவிடர் கழகம்

நடவடிக்கை மற்றும் செயல்பாடு இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சிந்தனை செய்வோம்
  • தமிழ் மலர்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வெற்றிவலவன் பக்கம்
  • சமூக நீதி
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu

வியாழன், 23 செப்டம்பர், 2021

தந்தை பெரியாரின் 143ஆம் ஆண்டு பிறந்த நாள் (17.9.2021)



September 17, 2021 • Viduthalai

சிலைக்கு - நினைவிடத்தில் மலர் மாலை வைத்து கழகத் தலைவர் மரியாதை

தனிச்சிறப்பு: தமிழர் தலைவர் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதி மொழி ஏற்பு!

சென்னை, செப். 17- தந்தை பெரியாரின் 143ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2021) அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும், “சமூகநீதி நாளாக” கடைப்பிடித்து உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான இன்று உலகமெங்கும் உள்ள பகுத்தறிவாளர்கள் மிகச்சிறப்பாக பல்வேறு சமூகத் தொண்டினை மேற்கொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாளை ஆண்டுதோறும் ‘சமூகநீதி நாள்’ ஆக கடைப்பிடிப்பது - உறுதிமொழி மேற்கொள்வது என ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, 13.9.2021 அன்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது.

அதனையொட்டி சென்னை பெரியார் திடலில் தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து பெரியார் பிறந்த நாள் விழா தமிழர் தலைவர் தலைமையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் காலை 10 மணியளவில் வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவித்தும், பின்னர் பெரியார் திடலில் உள்ள 20 அடி உயர முழு உருவ தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், தந்தை பெரியார் நினைவிடத்திலும், அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவுத் தூண் ஆகிய இடங்களிலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

உறுதிமொழி ஏற்பு

இதையடுத்து தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழியான:-

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் -

  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்

  எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!

  சுயமரியாதை ஆளுமைத் திறனும்-பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!

மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!

சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!”

என கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சொல்ல கழகத் தோழர்கள் உறுதி மொழி ஏற்றனர்.

இந்நிகழ்வில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், வழக்குரைஞர் கே.வீரமணி, வழக்குரைஞர் ஜெ.துரை, வழக்குரைஞர் வீரமர்த்தினி.

ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி இரா.பரஞ்ஜோதி, மோகனா வீரமணி அம்மையார், க.பார்வதி, டாக்டர் மீனாம்பாள், டாக்டர் தங்கம், டாக்டர் இ.தேனருவி, பேராசிரியர் இசையமுது, ஆடிட்டர் இராமச்சந்திரன், சி.வெற்றிச்செல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் சத்தியநாராயணன், நெய்வேலி வெ.ஞானசேகரன், டி.கே.நடராசன், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, செயலாளர் தெ.சே.கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், செயலாளர் விடுதலைநகர் ஜெயராமன், பகுத்தறிவாளர் கழக செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவிஞர் கண்மதியன், திராவிட இயக்க வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்,  சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் கவிஞர் எஸ்.வாசு, திண்டிவனம் சிறீராமுலு, பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டச் செயலாளர் பவானி இளவேனில் மற்றும் பொறுப்பாளர்கள், ஆதித்தமிழர் கட்சி ஜக்கய்யன் மற்றும் பொறுப்பாளர்கள், இடதுதொழிற்சங்கம் ஏ.எஸ்.குமார் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்   கலந்து கொண்டனர்.

நினைவிடத்தில்

தந்தை பெரியார் நினைவிடத்தில் மகளிரணி சார்பில் ச.இன்பக்கனி, அ.அருள்மொழி தலைமையிலும், திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பில் த.வீரசேகரன் தலைமையிலும், திராவிடன் நல நிதி சார்பில் அருள்செல்வன் தலைமையிலும், திராவிட தொழிலாளரணி சார்பில் திருச்சி சேகர் தலைமையிலும், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

வைகோ

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ தலைமையில் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் தலைமை குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன் தலைமையில் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் தலைமையில் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை

திராவிடர் இயக்கத்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் தலைமையில் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

நூல் வெளியீடு

இன்று காலை 11 மணியளவில் பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், தந்தைபெரியார் வாழ்க்கைக் குறிப்புகள், வைக்கம் போராட்டம் தலைப்பில் ஜப்பானிய மொழியில் இரண்டு புத்தகங்கள் வெளியீட்டு விழா தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நூல்களை வெளியிட்டு உரையாற்றினார். ஜப்பானியத் தூதரக கலாச்சார மற்றும் தகவல் பிரிவு ஆராய்ச்சியாளர், ஆய்வாளர் செல்வி மியூகி இனோஉவே சான் நூல்களைப் பெற்றுக்கொண்டு உரையாற்றினார்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மியூகி இனோஉவே சான் ஆகியோருக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

கழகத் தலைவர் ஆசிரியருக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பயனாடை அணிவித்துச் சிறப்பு செய்தார்.

திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி வரவேற்றார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நோக்கவுரை ஆற்றினார். சமூக நீதி நாள் உறுதி மொழியை கழகத் துணைத் தலைவர் கூற பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அரங்கம் அதிர உறுதிகூறினர்.

திராவிடர் கழக தொழில் நுட்பப்பிரிவு வி.சி.வில்வம், ÔவரலாறுÕ இணைய இதழாசிரியர்  ச.கமலக்கண்ணன் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து ஜப்பானியர் கோரோ ஒசிதா, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பயின்ற ஆய்வாளர் ஜப்பான் நாட்டைச்சேர்ந்த ஜுன்இச்சி ஹுக்காவோ, தமிழ்நாட்டைச்சேர்ந்தவரும், ஜப்பான் நாட்டில் பணியாற்றிவருபவருமான பொறியாளர் எழுத்தாளர் இரா.செந்தில்குமார் ஆகியோர் காணொலி வாயிலாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து உரை யாற்றினர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய 'கற்போம் பெரியாரியம்' நூல் வெளியீடு

திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நூலை வெளியிட்டு உரையாற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உதவி பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா நூலைப் பெற்றுக்கொண்டு உரையாற்றினார்.

தந்தைபெரியார் 143ஆவது பிறந்த நாள் விடுதலை மலர் வெளியீடு

கருர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி மலரை வெளியிட்டு உரையாற்றினார்.

சிறப்புவிருந்தினர்கள் அனைவருக் கும் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

நிகழ்ச்சியின் நிறைவாக தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி நன்றி கூறினார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:48 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: நூல், பிறந்தநாள், பெரியார்

ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் போராட்டம்!


September 21, 2021 • Viduthalai

சென்னை, செப்.21 ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சிகளின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தையொட்டி, நேற்று (20.9.2021) காலை 10 மணிக்கு சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடல் நுழைவு வாயிலில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில்  எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்!

ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்! இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் தலைமையிலே ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!

மக்கள் விரோத பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!

மறுக்காதே! மறுக்காதே! ரத்து செய்ய மறுக்காதே! மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுக்காதே!

வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே! விவசாயிகளை வஞ்சிக்காதே!

மோடி அரசே! மோடி அரசே! உயருது! உயருது!  கேஸ் விலை உயருது! கட்டுப்படுத்து! கட்டுப்படுத்து!  கேஸ் விலையைக் கட்டுப்படுத்து!

ஒன்றிய அரசே! மோடி அரசே! கட்டுப்படுத்து! கட்டுப்படுத்து! பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்து!

மோடி அரசால்... மோடி அரசால்....  பொருளாதாரச் சீரழிவுத் திண்டாட்டம் அதனால்... அதனால்.. வேலையில்லாத் திண்டாட்டம்!

மோடி அரசே! ஒன்றிய அரசே!  விற்காதே! விற்காதே! பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே!

ஆகிய முழக்கங்கள் உணர்ச்சிகரமாக இப்போராட்டத்தின் போது ஒலிக்கப்பட்டன.

பங்கேற்றோர்

இப்போராட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர்  பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன், மண்டல செயலாளர் தே.செ.கோபால், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன்,  செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன்,    திருவொற்றியூர் மாவட்ட தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், ஆவடி மாவட்ட துணைத் தலைவர் பா.முத்தழகு, பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்றுநர் சி.காமராஜ்,  பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர்கள் அரும்பாக்கம் சா. தாமோதரன், கோ.வீ.இராகவன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ் வழக்குரைஞர்கள் வீரமணி, துரைசாமி, பகுத்தறிவாளர் கழக வடசென்னை அமைப்பாளர் ஆ.வெங்கடேசன், கூடுவாஞ்சேரி ராஜூ, வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் மகேந்திரன், பெரியார் பெருந்தொண்டர் ஜெஜெ நகர் ராஜேந்திரன், பெரியார் மாணாக்கன், வை.கலையரசன், திராவிட மாணவர் கழக தோழர்கள் மங்களபுரம் பார்த்திபன், செந்தமிழ் சேரன், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மாணவர் தமிழ்ச்செல்வன், இளைஞர் அணி  மதுராந்தகம் கவுதமன், அண்ணா நகர் ஆகாஷ், வி.ரவிக்குமார், திராவிடர் மகளிர் பாசறை த.மரகதமணி, கோடம்பாக்கம் கோடீஸ்வரி, 100ஆவது வட்ட திமுக பிரதிநிதி சதீஷ்குமார், அரும்பாக்கம் அருள்தாஸ், கொரட்டூர் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால், மதுராந்தகம் நகரச் செயலாளர் அறிவுக் கடல் செல்வம், ஓட்டுநர்கள் ஆனந்த், மகேஷ், இளங்கோ  உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பங்கேற்றனர்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:38 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆர்ப்பாட்டம், சென்னை, விலைவாசி

தந்தை பெரியார் விழாவில் முக்கிய தீர்மானங்கள்


September 18, 2021 • Viduthalai

தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு பிறந்த நாள்  நாடு தழுவிய அளவில், கடந்த காலங்களைவிட வெகு எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று - தமிழ்நாடு அரசே தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாகவும் அறிவித்ததோடு, அந்த நாளில் தந்தை பெரியார் கருத்துகளை மய்யமாக வைத்து தலைமைச் செயலகம் முதல் அனைத்து அரசுப் பணி யாளர்களும், கல்விக் கூடங்களிலும் உறுதிமொழி எடுக்கப் பட்டது மகத்தான திருப்பு முனையான நிகழ்வாகும்.

சென்னையில் நேற்று திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பல முக்கிய அம்சங்களை மய்யமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஒன்றாகும் (தனியே செய்தி காண்க).

விழாவுக்குத் தலைமை ஏற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அய்ந்து தீர்மானங்கள் என்ற ஓர் அறிவிப்பைத் தந்தார்.

(1) தந்தை பெரியார் பிறந்த நாளை "சமூகநீதி நாளாக" அறிவித்து அரசுப் பணியாளர்களை உறுதிமொழி எடுக்கச் செய்த தமிழ்நாடு அரசுக்கு சிறப்பாக மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்ததோடு - இடஒதுக்கீடு சரிவரப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணித்திட கண்காணிப்புக் குழு அமைக்கப் பட்டதை வரவேற்றது முதல் தீர்மானம். ஒன்றிய அரசும் இது போன்ற கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்பதும் அத்தீர்மானத்தின் முக்கிய பகுதியாகும்.

(2) அடல்பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்து பொதுத்துறையை விற்பதற்கென்றே (Disinvestment) ஒரு தனித்துறை உருவாக்கப்பட்டது (அருண்ஷோரி என்பவர் அத்துறைக்கான அமைச்சராகவும் இருந்தார்)

வாஜ்பேயி அரசு சொத்துக்களை விற்றது என்றால் தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (NDA)அரசு சொத்துக்களை அடமானம் வைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

அரசுத்துறை தனியார் கைக்கு மாற்றப்படும்போது இடஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்படுகிறது. ஏன் எனில் தனியார்த் துறையில் இடஒதுக்கீடு இல்லை.

இந்நிலையில் தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை என்பதை வற்புறுத்துகிறோம் என்று கூறிய திராவிடர் கழகத் தலைவர் இந்தியாவின் தேசிய கட்சியான காங்கிரஸ் தனியார்த்துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை என்பதை வலியுறுத்தி வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

3) சமூகநீதி என்று சொல்லும் பொழுது - அது பாலியல் நீதியையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது மூன்றாவது தீர்மானமாகும்.

4) நீதித்துறையில் தற்போது மாவட்ட நீதிபதிகள் வரை இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. ஆனால் உயர்நீதி மன்றங்களிலும், உச்சநீதிமன்றத் திலும் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. இந்த நிலையில் உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம் பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது நான்காம் தீர்மானம்.

5) 'நீட்' தேர்வு என்பது சமூகநீதிக்கு எதிரானது என்றும், 'நீட்' ஒன்றும் தகுதிக்கு அளவுகோல் இல்லை என்றும், 'நீட்' கேள்வித்தாள் 34 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதும் - இது யாருக்குப் பயன்படக் கூடியது என்பது விளங்கக் கூடியதாகும். முறைகேடுக்கு அப்பாற்பட்ட முறையே 'நீட்' என்பது சுத்தப் புரட்டு என்பதும் அம்பலமாகி விட்டது. மாணவர்கள் மத்தியில் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டி இது தொடர்பாக மக்கள் கருத்தைப் பெரும் அளவில் உருவாக்கிட  சமூகநீதியில் ஒத்த கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து முடிவு செய்யும் வகையில் வரும் 21ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் சென்னையில் பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் கடைசி தீர்மானமாகும்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என்பது தந்தை பெரியார் அவர்களுக்குப் புகழ் மாலை சூட்டும் விழாவாக இல்லாமல், தந்தை பெரியார் விரும்பிய சமூகநீதியை வென்றெடுக்கக் கூடிய முடிவுகளை மேற்கொள்ளும் அர்த்தம் நிறைந்த செயல் ஊக்கமுள்ள விழாவாக அமைந்தது குறிப்பிட்டதக்கதாகும்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:27 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தீர்மானம்

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

துரைமுத்து படத்திறப்பு - நினைவேந்தல்


      September 21, 2021 • Viduthalai

கழக துணைத் தலைவர் இரங்கலுரை

மறைமலை நகர், செப்.21 26.8.2021 அன்று மறைந்த மறைமலை நகர் திராவிடர் கழக தலைவர் துரை.முத்து அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு 12.9.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 4 மணியளவில் துரை.முத்து அவர்கள் இல்லத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் திராவிடர் கழக துணை தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் படத்திறப்பு நடைபெற்றது.

துரை முத்து அவர்களின் மகன் குகன் அவர்கள் தொகுப்புரை வழங்கினார்.

படத்திறப்பு மற்றும் இரங்கல் உரை நிகழ்த்தியவர்கள்

விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர்,  திராவிடர் விடுதலைக் கழகம்), ப.முத்தையன்.  (தாம்பரம் மாவட்ட தலைவர் , திராவிடர் கழகம்) சு.க.விடுதலை செழியன் (மண்டல செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி) கேது.தென்னவன் (தொகுதி செயலாளர்.விடுதலை சிறுத்தைகள் கட்சி) செங்கை.தமிழரசன் (மாவட்ட செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி) செ.கு.தெள்ளமிழ்து (மாவட்ட தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி) மு.பிச்சை முத்து (தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு) மா.சமத்துவமணி (திருவள்ளுவர் மன்றம்) திருக்குறள்.வெங்கடேசன் (மறைமலை நகர் செயலாளர் திராவிடர் கழகம்)

தொடர்ந்து  கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் இரங்கல் உரை நிகழ்த்தினார்.

படத்திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பெரியார் உணர்வாளர்கள்.

கோ.நாத்திகன், மா.இராசு, சு.மோகன்ராஜ், சீ.லட்சுமிபதி, மா.குணசேகரன், ரூபன் தேவராஜ், பாலமுரளி, ப.கோவன் சித்தார்த், கூடுவாஞ்சேரி மதிவாணன், தீனதயாளன், கருணாகரன்,சா.தாமோதரன், விஷய்ஆனந்த் ஆசிரியர் சிவகுமார், முருகன், கலைவாணன், குடியாத்தம், சிவகுமார், லதா சிவகுமார், தன்மொழி, லெனின், செங்கை சுந்தரம், மாருதி மோட்டார்ஸ் டில்லிபாபு, விஜய்பாபு, மஞ்சுளா, முடியரசன், கருணாநிதி, நரசிம்மன், விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்.

முடிவில் துரை முத்து அவர்களின் வாழ்விணையர் சந்திரா துரை.முத்து அவர்களும், குடியாத்தம் தேன்மொழி அவர்களும் நன்றியுரை ஆற்றினர்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:44 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: துரைமுத்து, படத்திறப்பு

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு - மண்டல, மாவட்ட கழகத் தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்தின் தீர்மானங்கள்!

 ‘பெரியார் உலகம்' உருவாக்கத்திற்கு நிதியினைத் தாரீர்! நிதி திரட்டிடும் பணியில் ஈடுபடுவீர்! அரசு - அனைத்துக் கட்சி - அனைத்துத் தரப்பினரிடமும் ஆதரவு கோரி வேண்டுகோள்!

September 04, 2021 • Viduthalai

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு - மண்டல, மாவட்ட கழகத் தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்தின் தீர்மானங்கள்!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர்  பணி நியமனத்திற்குப் பாராட்டு

மருத்துவ மேற்படிப்பு - உயர் சிறப்பு மேற்படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு தேவை

‘நீட்'டை ரத்து செய்க! தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு அவசியம்!

‘‘பெரியார் உலகத்திற்கு'' அரசாணை அளித்த தி.மு.க. அரசுக்கு - முதலமைச்சருக்கு நன்றி!

சென்னை, செப்.4- அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமனம், பெரியார் உலகத்திற்கு அரசாணை, மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு, தனியார்த் துறை களிலும் இட ஒதுக்கீடு, ‘நீட்' தேர்வு ரத்து, பெரியார் உலகத் திற்கு நன்கொடை உள்ளிட்ட தீர்மானங்கள் திராவிடர் கழக மாநில அளவிலான கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன.

 சென்னை, செப்.4- அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமனம், பெரியார் உலகத்திற்கு அரசாணை, மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு, தனியார்த் துறை களிலும் இட ஒதுக்கீடு, ‘நீட்' தேர்வு ரத்து, பெரியார் உலகத் திற்கு நன்கொடை உள்ளிட்ட தீர்மானங்கள் திராவிடர் கழக மாநில அளவிலான கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன.

திராவிடர் கழக தலைமைச் செயற்குழு, மாநில பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், மாநிலப் பகுத்தறிவாளர் கழகப் பொறுப் பாளர்களின் மாநில அளவிலான கூட்டம் சென்னை பெரியார் திடலில் - நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத் தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் இன்று (4.9.2021) முற்பகல் கூடி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1:

இரங்கல் தீர்மானம் (5 ஆம் பக்கம் காண்க)

தீர்மானம் 2:

தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு

பிறந்த நாள் விழா

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 143ஆம் ஆண்டு பிறந்த நாளை வரும் செப்டம்பர் 17ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எழுச்சியுடன் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

அனைத்துக் கட்சியினரையும், அமைப்பினரையும் அழைத்து, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழர்களின் ஒட்டுமொத்தமான ‘திராவிடத் திருவிழாவாக’ நடத்துவது என்றும், அன்று காலை முதல் மாலை வரை ஒலிபெருக்கி மூலம் தந்தை பெரியார் உரை களையும், பாடல்களையும் ஒலி பரப்புவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3:

திருச்சி - சிறுகனூரில் பெரியார் உலகம் - தமிழ்நாடு அரசின் அனுமதி ஆணைக்கு நன்றி தெரிவிப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சிறுகனூரில் உருவாக்கப்பட இருக்கும் “பெரியார் உலகத்திற்கு”த் தேவையான முக்கியமான அனுமதி ஆணையினை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு - குறிப்பாகவும், சிறப்பாகவும் தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களுக்கு இக்கூட்டம் தனது சிறப்பு நன்றியுணர்வைத் தெரிவித்துக் கொள்கிறது.

உலகம் வியக்கும் வண்ணம் தமிழ்நாட்டின் பெருமைகளுள் முக்கியமானதாகத் திகழும் வகையில் உருவாகும் “பெரியார் உலகம்“ பணிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து அளித்து வரு மாறும் தமிழ்நாடு அரசையும், அனைத்துக் கட்சிகள், அமைப்புகளையும், பொதுமக்களையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

(அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்).

தீர்மானம் 4(அ):

பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமனத்துக்குப் பாராட்டும் - நன்றி அறிவிப்பும்!

தந்தை பெரியார் அவர்களால் அறிவிக்கப்பட்டு - அதற்கான போராட்டக் களத்தில் நின்ற தந்தை பெரியாரின் இறுதிப் போராட்டமான ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஆணையை செயல்படுத்தும் வகையில், மானமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் முயன்றதை முடிக்கும் வகையில், பயிற்சி பெற்ற 58 பேர்களுக்குப் பணி நியமனம் வழங்கி - சமூக மறுமலர்ச்சி - சமத்துவப் பாதையில் புதிய மைல் கல்லைப் பதித்த தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய தி.மு.க. ஆட்சிக்கு - அதிலும் குறிப்பாக - சிறப்பாக தமிழ்நாடு முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் தனது மகிழ்ச்சியையும், பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 4(ஆ):

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள்

பயிற்சி பெற்ற மற்ற எஞ்சியவர்களுக்கும், அர்ச்சகர்களாகும் பணி வாய்ப்பு அளிப்பதுடன் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ஆண்டு தோறும் தொடர்ந்து நடைபெற ஏற்பாடு செய்யவேண்டுமென்றும் இக்கூட்டம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 5:

“பெரியார் உலகம்” நிதி அளித்திடுவீர்!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சிறுகனூரில் “பெரியார் உலகம்” பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய வரலாற்றுக் கருவூலமாக, காட்சியகமாக உருவாக்கப்பட உள்ளது.

95 ஆண்டு காலம் வாழ்ந்து, தன் முழு வாழ்வையே தமிழர் பெருவாழ்விற்கு முழுமையாக ஒப்படைத்து - “தொண்டு செய்வதே பிறப்பின் பயன்” என்ற தொண்டறத்தை கடைசி மூச்சு அடங்கும்வரை மேற்கொண்ட - மானுடக் காவலர் உலகத் தலைவர் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மொழியில் கூறவேண்டுமானால், ஒரு சகாப்தம் - ஒரு காலகட்டம் - ஒரு திருப்பம் - ஒரு நிறுவனமான ஒப்பாரும் மிக்காருமில்லாத தலைவராம் தந்தை பெரியாரின் வரலாற்றை நிரந்தரப்படுத்தி, நிகழ்கால, எதிர்கால சந்ததியினருக்கும் உணர்வூட்டும், சிந்தனைக்கு விருந்தளிக்கும் ஒப்பரிய வரலாற்று சின்னம்தான் “பெரியார் உலகமாகும்”

95 அடி உயரப் பெரியார் சிலை, 40 அடி அடிபீடம், திராவிட வரலாற்று அருங்காட்சியகம், அறிவியல் கண்காட்சி, குழந்தைகள் பூங்கா, கோளரங்கம், படிப்பகம், நூலகம், புத்தக விற்பனையகம், உணவகம்,, வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களின் அணிவகுப்பாக அமையவிருக்கும் “பெரியார் உலகம்” உருவாகிட பெரு நிதி தேவைப்படும் நிலையில், தந்தை பெரியாரால் பயனடைந்த மக்களின் நன்றி உணர்வின் வெளிப்பாடாக, பெரும் அளவில் நிதியளித்து உதவுமாறு பொதுமக்களை இக்கூட்டம் ஒரு மனதாகக் கேட்டுக் கொள்கிறது.

திராவிடர் கழகத்தின் அனைத்து அணியினரும், பகுத்தறிவாளர்களும், அமைப்புகளும் நிதி திரட்டும் இம்முக்கிய பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நன்கொடை திரட்டி அளித்து “பெரியார் உலகம்” என்னும் பெரும் பணியினை சிறப்புடன் முடித்திட உதவிக்கரம் நீட்டுமாறு அனைத்துத் தரப்பினரையும் இக்கூட்டம் ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 6:

மருத்துவ மேற்படிப்பு - உயர் சிறப்பு மேற்படிப்பிலும் 50% இடஒதுக்கீடு தேவை

தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு MD/MS/MDS  மருத்துவ மேற்படிப்புகளிலும், DM/MCH உயர் சிறப்பு மேற்படிப்புகளிலும் வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீடு நடைமுறையானது NEET நுழைவுத் தேர்வு முறையினால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்டது. அதனை எதிர்த்து திராவிடர் கழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது - வருகிறது, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தார்கள். உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்கில் மாநில அரசுக்கு “அரசு மருத்துவர்கள் சர்வீஸ் கோட்டா” வழங்க உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு MD/MS/MDS பட்டமேற்படிப்புகளிலும், ஞிவி/விசிபி உயர் சிறப்பு மேற்படிப்புகளிலும் 50% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணைகள் 463 மற்றும் 462 மூலம் முறையே கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் மூலம் கடந்த ஆண்டில் நடைமுறைப்படுத்தாமல் தடுக்கப்பட்டது.

உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான DM,MCh   ஆகியவை இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தான் அதிக அளவில் 369 இடங்கள் உள்ளன. இந்த 369 இடங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடும் தமிழ்நாடு தனியார் மருத்துவர்களுக்கு 50 விழுக்காடும் இட ஒதுக்கீடு இருந்து வந்தது. மூன்றாண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பினால் 369 இடங்கள் அனைத்தும் அகில இந்திய தொகுப்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது . இதனால் DM, MCh சேருகின்ற தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வந்தது. இவ்வாண்டு சிறுநீரகவியல் துறைக்கான 47 டிஎம் இடங்களில் வெறும் 2 அரசு மருத்துவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர் . அதுபோல இதய நோய் துறையில் 74 இடங்களில் 17 என்று மிகவும் குறைந்த அளவு அரசு மருத்துவர்கள் சேர்ந்துள்ளனர். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து இங்கு படிக்க வந்த மருத்துவர்களும் படிப்பு முடிந்த பின்னர் இரண்டாண்டுகள் பணி செய்ய வேண்டும் என்கிற ஒப்பந்தத்தையும் பின்பற்றாமல் விதிமீறல்கள் நடந்து கொண்டே உள்ளன.

இந்நிலை நீடித்தால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உயர் சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை (Doctors with Super - Speciality Degree) அடுத்து வருகின்ற ஆண்டுகளில் மிகவும் குறைந்து போய்விடும். அதனால் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை எளிய பொதுமக்கள் மிகவும் பாதிப்படைவார்கள். மேலும் எதிர் வரும் ஆண்டுகளில் உயர் சிறப்பு மருத்துவக் கல்லூரிகளில் பாடம் நடத்துவதற்கான அரசு மருத்துவர்கள் கூட இல்லாமல் போய்விடும் ஆபத்தும் உள்ளது. இதனால் 369 உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் எண்ணிக்கையில் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது, வெளி மாநிலத்தவர்கள் கையில் மருத்துவக் கல்வி பறிபோகும் ஆபத்தும் இதில் உண்டு.

தமிழ்நாடு அரசின் நிதியால் பல ஆண்டுகாலமாக உயர் சிறப்பு மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களை ஏற்படுத்தி, அதன் மூலம் உயர் சிறப்பு மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் நோக்கம் முற்றிலும் சிதைக்கப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் இதுவரை பெற்றுவந்த பலனும் பயனும் பறிக்கப்படுகிறது.

எனவே தமிழ்நாடு அரசு தனிச்சட்டத்தை இயற்றி MD/MS/MDS மற்றும் DM/MCh  இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பாதுகாத்துத் தரவேண்டும் என்று சமூகநீதியில் அக்கறை உள்ள தமிழ்நாடு அரசை - சிறப்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

மேலும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து சிறப்பான முறையில் வாதாடி சாதகமான தீர்ப்பினைப் பெற்று மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

தீர்மானம் 7:

தனியார் துறையில் தேவை இடஒதுக்கீடு

அரசு துறைகள், பொதுத்துறைகள் வேகவேகமாக தனியார் வசம் பறிபோகும் ஒரு சூழலில், தனியார் துறைகளில் சமூகநீதி கண்ணோட்டத்தில் இடஒதுக்கீடு அவசியம் தேவையாகி விட்டதால் அதற்கான சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஒன்றிய அரசையும், ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில் மாநில அரசுகளையும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

சமூகநீதியில் ஆர்வமும், அக்கறையும் உள்ள அனைத்துத் தரப்பினரும் இதற்கு முக்கியத்துவம் அளித்து பாடுபட வேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 8:

‘நீட்’டை ரத்து செய்க - அல்லது விதிவிலக்கைத் தருக!

ஒடுக்கப்பட்ட மக்களையும், கிராமப்புற மக்களையும் மிகக்கடுமையாக பாதிக்கச் செய்யும் ‘நீட்’ தேர்வை அறவே ரத்து செய்ய வேண்டும் என்றும், குறைந்தபட்சம் விதிவிலக்குக் கேட்கும் மாநிலங்களுக்கு அந்த வாய்ப்பினைத் தர வேண்டும் என்றும் இக்கூட்டம் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:19 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: செயற்குழு, தீர்மானங்கள்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

திராவிடம் வெல்லும்

திராவிடம் வெல்லும்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்
உறுதிமொழி ஏற்பு - பெரியமேடு

பகுத்தறிவும் மாணவர்களும்’சிறப்புக்கூட்டம்

பகுத்தறிவும் மாணவர்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு பகுத்தறிவு உரையாற்றினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவின் படி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, பகுத்தறிவும் மாணவர்களும் எனும் தலைப்பில் நேற்று (9.9.2024) மாலை 6.30 மணிக்கு, சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் ஜீவானந்தா சாலையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரு.அண்ணாமலையின் தலைமையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா. தீபக், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ,அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வில் இணைப்புரை வழங்கி நெறிப்படுத்தினார். துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தலைமை நிலைய அமைப்பாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி. செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன்,வழக்குரைஞர் துரை அருண், ந.மணிதுரை, பெரியார் யுவராஜ், வி.வளர்மதி, மு.பவானி, வி.தங்கமணி, ச.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Wikipedia

தேடல் முடிவுகள்

சிறப்புடைய இடுகை

திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்' பார்வையில்..

"பிஜேபி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!" "பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்க...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16
தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில்-அறநிலையத்துறை-நுங்கம்பாக்கம்
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • 'முகம்' மாமணி
  • 1000 ஆவது நிகழ்ச்சி
  • 1000ஆவது நிகழ்ச்சி
  • 13மாவட்டம்
  • 1985
  • 2020
  • 2021
  • 2022
  • 2025
  • 2053
  • 6 மாவட்டங்கள்
  • 90வயது
  • 9ஆவது அட்டவணை
  • அ.பாபு
  • அகற்றம்
  • அசோக் நகர்
  • அஞ்சலா
  • அஞ்சாமை
  • அடையாறு
  • அண்ணா
  • அண்ணா நினைவு நாள்
  • அண்ணா பிறந்தநாள்
  • அண்ணாநகர்
  • அதிரடி அன்பழகன்
  • அம்பேத்கர்
  • அம்பேத்கர் பாலம்
  • அமுதவள்ளி
  • அமைச்சர்
  • அமைதிப்பேரணி
  • அமைந்தகரை
  • அமைப்பு
  • அய்ந்தாம் பயணக்குழு
  • அய்யாவின் அடிச்சுவட்டில்
  • அய்ஸ் அவுஸ்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சுனன்
  • அரங்கண்ணல்
  • அரங்கநாதன்
  • அரங்கம்
  • அரியலூர்
  • அரும்பாக்கம்
  • அரும்பாக்கம்< சா. தாமோதரன்
  • அருள்
  • அருள்மொழி
  • அவ்வை நடராசன்
  • அவமதிப்பு
  • அழிப்பு
  • அளிப்பு
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிப்பு
  • அறிவிப்பு
  • அறிவிப்பு பலகை
  • அறிவுக்கரசு
  • அன்பளிப்பு
  • அன்பு
  • அனகை ஆறுமுகம்
  • அனைத்து கட்சி
  • அனைத்து ஜாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் பிறந்தநாள்
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியருக்கு பாராட்டு
  • ஆசைத்தம்பி
  • ஆட்சியர் அலுவலகம்
  • ஆடிட்டர் ராமச்சந்திரன்
  • ஆண்டு சந்தா
  • ஆண்டு மலர்
  • ஆதித்தமிழர்
  • ஆதித்தனார்
  • ஆம்ஸ்ட்ராங்
  • ஆயிரம் விளக்கு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரம் வீரப்பன்
  • ஆலந்தூர்
  • ஆவடி
  • ஆளுநர்
  • இசையின்பன்
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டைக் காக்க
  • இடஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு ஆணை
  • இடிப்பு
  • இணையதளம்
  • இணையேற்பு
  • இணையேற்பு நாள்
  • இதழ்
  • இதழ் வெளியீடு
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்தித் திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மாணவர் சங்கம்
  • இந்திரா நகர்
  • இந்திராநகர்
  • இயக்க நிதி
  • இரங்கல்
  • இரண்டாம் கட்டம்
  • இரயில் நிலையம்
  • இராசவேலு
  • இராமநாதபுரம்
  • இராயப்பேட்டை
  • இராஜரத்தினம் ஸ்டேடியம்
  • இராஜா அண்ணாமலைபுரம்
  • இருசக்கர வண்டி
  • இல்லத் திறப்பு
  • இலங்கைத் தூதரகம்
  • இலயோலா
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இளைஞர் அணி மாநாடு
  • இளைஞர்அணி
  • இளைஞரணி
  • இளைஞரணி மாநில மாநாடு
  • இறப்பு
  • இறுதி மரியாதை
  • இறுதி முழக்கம்
  • இறுதிப் பேட்டி
  • இறுதிப் பேருரை
  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை
  • ஈக்காட்டுத்தாங்கல்
  • ஈரோட்டுத் தீர்மானம்
  • ஈரோடு
  • ஈரோடு. சிறப்புத் தீர்மானம்
  • ஈழப்போராட்டம்
  • ஈழம்
  • உடல் நலன்
  • உடல்நலம்
  • உண்ணா நிலை
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உதயநிதி ஸ்டாலின்
  • உதவி
  • உயர்நீதிமன்றம்
  • உரை
  • உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
  • உறுதி முழக்கம்
  • உறுதிமொழி
  • உறுப்பினர் சேர்க்கை
  • ஊடகவியலாளர்
  • எத்திராஜ்
  • எத்திராஜன்
  • எதிர்ப்பு
  • எம் பி பாலு
  • எம்.பி பாலு
  • எம்.பி.பாலு
  • எம்.ஜி.ஆர். நகர்
  • எம்.ஜி.ஆர்.நகர்
  • எம்பி பாலு
  • எம்ஜிஆர் நகர்
  • எரிப்பு
  • எழிலன்
  • எழுச்சி மாநாடு
  • எழுத்தாளர் மன்றம்
  • எழும்பூர்
  • ஏழுமலை
  • ஏற்புரை
  • ஒழிப்பு
  • ஒளிப்படக் கண்காட்சி
  • ஒளிபெருக்கி
  • ஓசூர்
  • ஓட்டேரி
  • ஓபிசி வாய்ஸ்
  • க.தனசேகரன்
  • க.பார்வதி
  • கடலூர்
  • கடற்கரை
  • கடை அடைப்பு
  • கடை வசூல்
  • கண்டண போராட்டம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டன உரை
  • கண்டனக் கூட்டம்
  • கண்டனம்
  • கண்மதியன்
  • கந்தவேல்
  • கம்யூனிஸ்ட்
  • கருத்தரங்கம்
  • கருப்புக் கொடி
  • கருப்புக்கொடி
  • கரூர்
  • கரோனா
  • கல்வி
  • கல்வெட்டு
  • கலந்துரை
  • கலந்துரையாடல்
  • கலைஞர்
  • கலைஞர் நகர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிதை
  • கவிதைப் பித்தன்
  • கழக கொடி
  • கழக நிகழ்வுகள்
  • கழக போராட்டம்
  • கற்போம் பெரியாரியம்
  • கன்சிராம்
  • கனகரத்தினம்
  • கனடா
  • கனிமொழி
  • காஞ்சி
  • காட்டுப்பாக்கம்
  • காணொலி
  • காமராசர்
  • காமராசர் அரங்கம்
  • காமராஜ்
  • காரல் மார்க்ஸ்
  • கால்டுவெல்
  • காலச்சுவடு
  • காவிரி
  • கி வீரமணி
  • கி. இராமலிங்கம்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கிரிதரன்
  • கிளைக் கழகங்கள்
  • கிளைக்கழகம்
  • கு.க.செல்வம்
  • குட்டிமணி
  • குடந்தை
  • குடியரசுத்தலைவர்
  • குடியுரிமை
  • குடும்ப விழா
  • கும்பகோணம்
  • கும்மிடிப்பூண்டி
  • குமார்
  • குமாரி
  • குலக்கல்வி
  • குழந்தை நாதன்
  • குழு
  • குளக்கரை
  • குளித்தலை
  • கூட்டம்
  • கூடல் மாநாடு
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளம்
  • கைது
  • கையெழுத்து
  • கொடி ஏற்றம்
  • கொடியேற்றம்
  • கொடும்பாவி எரிப்பு
  • கொலை முயற்சி
  • கோ.சாமிதுரை
  • கோ.பா.சாரதி
  • கோ.வீ. ராகவன்
  • கோட்சே
  • கோட்டூர்
  • கோட்டூர்புரம்
  • கோடம்பாக்கம்
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோவிந்தசாமி
  • கோவில்
  • கோவில்பட்டி
  • கோவை
  • சக்திதாசன்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சட்டமன்றம்
  • சடுகுடு
  • சண்முகநாதன்
  • சண்முகப்பிரியன்
  • சத்யராஜ்
  • சந்தா
  • சந்தா வழங்கல்
  • சந்திப்பு
  • சந்திப்புக் கூட்டம்
  • சந்திரா
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சனாதனம்
  • சா. தாமோதரன்
  • சா.தாமோதரன்
  • சாதி ஒழிப்பு
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாமிநாதன்
  • சி.பா.ஆதித்தனார்
  • சி.பி.அய் – எம்
  • சிகாமணி
  • சிட்டிபாபு
  • சித்த மருத்துவர்கள்
  • சிதம்பரம்
  • சிந்தனை பலகை
  • சிந்தாதிரிப்பேட்டை
  • சிந்தாதிரிபேட்டை
  • சிலை திறப்பு
  • சிவகங்கை
  • சிறப்புக்கூட்டம்
  • சின்மயா நகர்
  • சு.குமாரதேவன்
  • சுதாகர்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
  • சுயமரியாதை இயக்கம்
  • சுவர் எழுத்து
  • சுவரெழுத்து
  • சுழலும் சொற்போர்
  • சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • சூளைமேடு
  • சூளைமேடு நன்கொடை
  • செங்கல்பட்டு
  • செங்கற்பட்டு
  • செங்குட்டுவன்
  • செங்கை
  • செந்தில்வேல்
  • செந்துறை
  • செயல்முறை
  • செயலவைத் தலைவர்
  • செயற்குழு
  • செயற்குழுக் கூட்டம்
  • செல்வப்பெருந்தகை
  • சென்னை
  • சென்னை அசோக் நகர்
  • சென்னை காஞ்சி
  • சென்னை பல்கலைக்கழகம்
  • சென்னை மண் டலம்
  • சென்னை மண்டலம்
  • சேகர்
  • சேத்துப்பட்டு
  • சேதுராமன்
  • சேலம்
  • சைதாப்-பேட்டை
  • சைதாப்பேட்டை
  • சைதை
  • சைதை எம்.பி பாலு
  • சைதை எம்.பி.பாலு
  • சைதை துரைசாமி
  • சைதை பாலு
  • சைதை மேற்கு
  • சோமங்கலம்
  • சோமு கனிமொழி
  • சோழிங்கநல்லூர்
  • டி கே நடராஜன்
  • டி.ஆர். சேதுராமன்
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டில்லி பெரியார் மய்யம்
  • டெய்சி
  • த.க.நடராசன்
  • த.புகழேந்தி
  • த.வீரசேகரன்
  • தங்கம்
  • தஞ்சாவூர்
  • தஞ்சை
  • தஞ்சை மாநாடு
  • தட்சிணாமூர்த்தி
  • தட்ஷணாமூர்த்தி
  • தடை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலைக்கு மாலை
  • தந்தை பெரியார் பிறந்த நாள்
  • தமிழ்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் வார விழா
  • தமிழ்ச்செல்வன்
  • தமிழ்நாடு முதல்வர் உரை
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் புலிகள்
  • தமிழச்சி
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழின எழுச்சி நாள்
  • தரமணி
  • தலைமை கழகம்
  • தலைமை செயற்குழு
  • தலைமைக் கழகம்
  • தலைமைச் செயற்குழு
  • தலையங்கம்
  • தாக்குதல்
  • தாம்பரம்
  • தாமோதரன்
  • தாராபுரம்
  • தி.தொ.க.
  • தி.மு.க. மாணவர்
  • திசை
  • திட்டங்கள்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமுக
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் கலையரங்கம்
  • தியாகராயர் நகர்
  • தியாகராயர் பிறந்த நாள்
  • திராவிட மகளிர்
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடக் கொள்கை அறிக்கை 
  • திராவிடர் எழுச்சி மாநாடு
  • திராவிடர் எழுச்சி மாநாடு!
  • திராவிடர் கழக மகளிரணி
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திராவிடர்கழகம்
  • திரிபுரா
  • திருச்சி
  • திருத்தணிகாசலம்
  • திருத்தம்
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமண நாள்
  • திருமண வரவேற்பு
  • திருமணநாள்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருவண்ணாமலை
  • திருவல்லிக்கேணி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் சிலை
  • திருவான்மியூர்
  • திருவிழா
  • திருவெற்றியூர்
  • திருவொற்றியூர்
  • திரைப்படம்
  • திவாகரன்
  • திறந்தவெளி மாநாடு
  • திறப்பு
  • தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
  • தீர்மான விளக்கம்
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துண்டறிக்கை
  • துப்பாக்கிசூடு
  • துயர் துடைப்பு
  • துரை.அருண்
  • துரைமுத்து
  • தூத்துக்குடி
  • தெருமுனை
  • தெருமுனை கூட்டம்
  • தெருமுனைக் கூட்டம்
  • தென் சென்னை
  • தென்சென்னை
  • தென்றல்
  • தென்னரசு
  • தே.செ.கோபால்
  • தேர்தல்
  • தேர்தல் பரப்புரை
  • தேனாம்பேட்டை
  • தேனி
  • தொலைக்காட்சி
  • தொலைக்காட்சி நிலையம்
  • தொழிலாளர்
  • தொழிலாளர் அணி
  • தொழிலாளர் அமைச்சர்
  • தொழிலாளரணி மாநாடு
  • தொழிற்சங்கம்
  • தோழர்
  • நடராசன்
  • நடராஜன்
  • நடவடிக்கைகள்
  • நரிமணம்
  • நலம் விசாரிப்பு
  • நன்கொடை
  • நன்னன்
  • நன்னன் குடில்
  • நன்னன் மகள்
  • நன்னிலம்
  • நாகநாதன்
  • நாகப்பன்
  • நாகர்கோயில்
  • நிதி
  • நிவாரணப் பணி
  • நிவாரணம்
  • நினைவகம்
  • நினைவகம் திறப்பு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவு நாள் கூட்டம்
  • நினைவுநாள்
  • நினைவேந்தல்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீட் ஒழிப்பு
  • நீட் தேர்வு
  • நீட் தேர்வு எதிர்ப்பு
  • நீட் விலக்கு
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதிகள்
  • நீதிபதிகள் தீர்ப்பு
  • நீதிபதிகள் நியமனம்
  • நீதிமன்றம்
  • நீலகண்டன்
  • நுங்கம்பாக்கம்
  • நுழைவுத் (CUET) தேர்வு
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு நிறைவு விழா
  • நேர்காணல்
  • நொச்சி நகர்
  • ப.க
  • பக்தவச்சலம்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுதி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சாட்சரம்
  • பட்டம்மாள்
  • பட்டாளம்
  • பட்டியல்
  • பட்ஜெட்
  • பட்ஜெட்டைக் கண்டித்து
  • படத் திறப்பு
  • படத்திறப்பு
  • படிப்பகம்
  • படுகொலை
  • பணி நிறைவு
  • பணிநிறைவு
  • பயணக் குழுவிற்கு வரவேற்பு
  • பயணம்
  • பயனாடை
  • பயிலரங்கம்
  • பயிற்சி
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சிப் பட்டறை
  • பரப்புரை
  • பரப்புரை பயணம்
  • பல்கலைக்கழகம்
  • பவழ விழா
  • பவழ விழா மாநாடு
  • பள்ளி
  • பா. தென்னரசு
  • பா.தட்சிணாமூர்த்தி
  • பாக்கியம்
  • பாடல் தொகுப்பு
  • பாத பூஜை
  • பாதுகாப்பு மாநாடு
  • பாம்குரோ
  • பார்த்தசாரதி
  • பார்வதி
  • பாரத் ஓவர்சீஸ் வங்கி
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுரை
  • பாலகிருஷ்ணன்
  • பாவாணர் மகன்
  • பாஸ்கர்
  • பி பி சிங்
  • பிரச்சார பயணம்
  • பிரச்சாரப் பயணம்
  • பிரபாகரன்
  • பிரேமா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பினராய் விஜயன்
  • புகழ் பேரணி
  • புகார்
  • புத்தகக்காட்சி
  • புத்தாண்டு
  • புதிய பொறுப்பாளர்
  • புதிய பொறுப்பாளர்கள்
  • புதிய பொறுப்பு
  • புதுக்கோட்டை
  • புதுப்பேட்டை
  • புதுமை இலக்கிய தென்றல்
  • புதுமை இலக்கியத் தென்றல்
  • புரசை
  • புரசைவாக்கம்
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சிக்கவிஞர் விருது
  • புரட்சிக்கவிஞர் விழா
  • புரடசிக்கவிஞர்
  • புழல்
  • பூவிருந்தவல்லி
  • பெரியார்
  • பெரியார் ஆயிரம்
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் பிஞ்சு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் பிறந்தநாள்
  • பெரியார் பெருந்தொண்டர்
  • பெரியார் மேளா
  • பெரியார் யுவராஜ்
  • பெரியார் விருது
  • பெலா மு. சந்திரா
  • பேட்டி
  • பேரணி
  • பேரமனூர்
  • பொதுக் குழு
  • பொதுக் கூட்டம்
  • பொதுக்-கூட்டம்
  • பொதுக்குழு
  • பொதுக்குழு உறுப்பினர்
  • பொதுக்கூட்டம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பாளர் கலந்துரையாடல்
  • பொறுப்பாளர்கள்
  • பொறுப்பு
  • பொன்.மாடசாமி
  • பொன்முடி
  • பொன்விழா
  • பொன்னேரி
  • போராட்டம்
  • மகளிர்
  • மகளிர் அணி
  • மகளிர் பாசறை
  • மகளிர்ப் பாசறை
  • மகளிரணி
  • மகளிரணி கலந்துரையாடல்
  • மஞ்சநாதன்
  • மண்டல் குழு பரிந்துரை
  • மண்டல் பரிந்துரை
  • மண்டல கலந்துரை
  • மண்டல கலந்துரையாடல்
  • மண்டல மாநாடு
  • மண்டலம்
  • மண நாள்
  • மணநாள்
  • மணவிழா
  • மணவிழா வரவேற்பு
  • மணி அம்மையார்
  • மணிப்பூர்
  • மணியம்மையார்
  • மதியழகன்
  • மதிவதனி
  • மதுரை
  • மந்தவெளி
  • மந்தைவெளி
  • மம்தா
  • மயக்க பிஸ்கட்டுகள்
  • மயிலாப்பூர்
  • மயிலை
  • மயிலை த.வேலு
  • மயிலை முரளி
  • மரியாதை
  • மருத்துவக் கல்லூரி
  • மல்யுத்த வீராங்கனை
  • மலர் வளையம்
  • மலையாளிகள்
  • மறியல்
  • மறைவு
  • மன்றல்
  • மனித சங்கிலி
  • மனுதர்ம எரிப்பு
  • மா. சுப்பிரமணியன்
  • மா.பா.அன்புதுரை
  • மாசு
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாணவர் இயக்கம்
  • மாணவர் எழுச்சி மாநாடு
  • மாணவர் கழகம்
  • மாணவர் நகலகம்
  • மாணவர் பேரணி
  • மாணவரணி
  • மாணவரணி கூட்டம்
  • மாணிக்கம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநில இளைஞரணி
  • மாநில கலந்துரை
  • மாநில கலந்துரையாடல்
  • மாநில பொறுப்பாளர்
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாநிலக் கல்லூரி
  • மாலை
  • மாலை அணிவிப்பு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மாவட்டக் கழகம்
  • மாவட்டம்
  • மின்சாரம்
  • மீனம்பாக்கம்
  • மீனா முத்தையா
  • மு.இரா.மாணிக்கம்
  • மு.சண்முகப்பிரியன்
  • முகம் மாமணி
  • முத்தரசன்
  • முதல்வர்
  • மும்பை
  • முழக்கம்
  • முழு அடைப்பு
  • முற்றுகை போராட்டம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூர்த்தி
  • மெமோரியல் ஹால்
  • மோட்டார் சைக்கிள்
  • யுவராஜ்
  • யூஜிசி
  • ரகுராமன்
  • ரயில்
  • ரயில் மறியல்
  • ராமேசுவரம்
  • ராயப்பேட்டை
  • ராயல்டி
  • ராஜரத்தினம் அரங்கம்
  • ரிசர்வ் வங்கி
  • ரெக்கார்ட்ஸ்
  • லக்னோ
  • லெனின்
  • வ.உ.சி.
  • வ.கோட்டம்
  • வங்கி
  • வங்கிகள்
  • வங்கிப் பணி
  • வட சென்னை
  • வடசென்னை
  • வண்டி பரப்புரை
  • வர்ணாசிரம எதிர்ப்பு
  • வரவேற்பு
  • வரவேற்பு விழா
  • வருணாசிரம எதிர்ப்பு
  • வருமானவரம்பாணை
  • வழக்குரைஞர்
  • வழக்குரைஞரணி
  • வழகுரைஞர்
  • வள்ளியம்மாள்
  • வள்ளுவர் கோட்டம்
  • வள்ளுவர்கோட்டம்
  • வளசரவாக்கம்
  • வளர்ச்சி நிதி
  • வன்னி அரசு
  • வாசுதேவன்
  • வாழ்த்து
  • வி.சி.க.
  • வி.பி.சிங்
  • வி.ஜி.பி.
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை சிறுத்தைகள்
  • விடுதலை நிதி
  • விடுதலை90
  • விடுதலைச் சந்தா
  • விருது
  • வில்சன்
  • வில்வநாதன்
  • விலைவாசி
  • விழா
  • விழிப்புணர்வுப் பிரச்சார பயணம்
  • விழுப்புரம்
  • விளக்கம்
  • விளம்பரம்
  • விளையாட்டுப் போட்டி
  • வீரசேகரன்
  • வீரமர்த்தினி
  • வீரர்
  • வீரவணக்கம்
  • வெளியீடு
  • வெற்றி
  • வே.சிறீதர்
  • வேட்பாளர்
  • வேலை வாய்ப்பு
  • வேலைத் திட்டம்
  • வேழவேந்தன்
  • வைக்கம்
  • வைகோ
  • ஜனநாதன்
  • ஜனநாயக விரோதம்
  • ஜனவரி2024
  • ஜாதி ஒழிப்பு மாநாடு
  • ஜாபர்
  • ஜாபர்கான் பேட்டை
  • ஸ்டாலின்
  • ஹிந்தி எதிர்ப்பு

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயர் எழுதிட போராட்டம்
    திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அ...
  • நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் மறைவு
                                                                                வருந்துகிறோம் தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகு...
  • சூளைமேட்டில் 43வது மாநாடு-9.2.15
    விடுதலை,6.2.15 விடுதலை,8.2.15,பக்கம்-3
  • மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடை
    பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்காக ரூ.5000, பெரியார் நூலக வாச...
  • கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி நன்கொடை
     சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைக...
  • ச.துணைவேந்தன் - மு. உமா இணையேற்பு விழா
    சுயமரியாதை திருமண விழா நாள்: 10.2.2019 ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள் இடம்: பத்மாவதி திருமண மண்டபம், சூனாம்பேடு மணமக்கள்:...
  • இனமானப் பேராசிரியர் அன்பழகன் இறுதி ஊர்வலம்
    மறைந்த இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்...
  • நடிகர் எம்.ஏ.கிரிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு  நினைவுநாளையொட்டி நன்கொடை!
    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, சிக்கல்நாய்க்கன் பேட்டை அஞ்சல் கிளிமங்கலத்தைச் சேர்ந்த பிச்சைமணியின் மகள் பி.முத்துச்செல்வி அவர...
  • திராவிட மாணவர் கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் அறிவியல் பரப்புரைக் கூட்டங்கள்
    01-02-2019 சொற்பொழிவாளர்  ஊர் அதிரடி அன்பழகன்                               துறையூர் இரா.பெரியார் செல்வன்                      காரைக...
  • பட்டினப்பாக்கம் மு.குணசுந்தரி மறைவுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை
    தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன்  சகோதரியும், பெரியார் திடல் பணித் தோழர் மு.பவானியின் தாயாருமான மு.குணசுந்தரி (வயது 62) அவர்...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (46)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (9)
  • ►  2024 (177)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (22)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (40)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (10)
  • ►  2023 (164)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (14)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (13)
  • ►  2022 (180)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (23)
    • ►  செப்டம்பர் (13)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (25)
    • ►  ஜூன் (23)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (9)
  • ▼  2021 (119)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (10)
    • ▼  செப்டம்பர் (8)
      • தந்தை பெரியாரின் 143ஆம் ஆண்டு பிறந்த நாள் (17.9.2021)
      • ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து தி...
      • தந்தை பெரியார் விழாவில் முக்கிய தீர்மானங்கள்
      • துரைமுத்து படத்திறப்பு - நினைவேந்தல்
      • திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு - மண்டல, மாவட்ட ...
      • வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு ம...
      • கரிகாலன் (எ) மணி அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை...
      • ‘பெரியார் உலகத்திற்கு' நன்கொடை!
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (14)
    • ►  பிப்ரவரி (24)
    • ►  ஜனவரி (18)
  • ►  2020 (66)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (12)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (11)
  • ►  2019 (119)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (123)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (6)
  • ►  2017 (81)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (46)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (84)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (5)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.