ஞாயிறு, 19 ஜனவரி, 2020

தென்சென்னையில் பொங்கல் விழா

தமிழ்ப் புத்தண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு 15.01.2020 காலை 10.45 மணி அளவில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு அனனவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. தென் சென்னை மாவட்ட செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி, அமைப்பாளர் மு.ந. மதியழகன், துணைத்தலைவர்கள் சி. செங்குட்டுவன், டி.ஆர். சேதுராமன், துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன் , க. தமிழ்ச்செல்வன், ஆயிரம்விளக்கு மு.சேகர்,  பூந்தமல்லி மணிமாறன் மற்றும் இளைஞரணி செயலாளர் ந.மணித்துரை, மு. சண்முகப் பிரியன், ஈ.குமார்,  மந்தைவெளி சிவகுமார் பிடிசி.இராஜேந்திரன், அரும்பாக்கம் எம்.பிரகாசம் ஆகியோரும் பங்கேற்றனர்.

- விடுதலை நாளேடு 19 1 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக