திங்கள், 29 ஏப்ரல், 2019

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 129ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை



சென்னை, ஏப். 29, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 129ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 129ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2019) காலை 10 மணியளவில் சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  கழகத் தோழர் - தோழியர் புடைசூழ மலர் மாலை அணிவித்தும், அவரது படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், திருமதி.மோகனா அம்மையார், திருமதி.சுதா அன்புராஜ், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்கள் யாழ்.திலீபன், நா.பார்த்திபன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, தொழிலாளரணி தோழர்கள் திருவொற்றியூர் செல்வராஜ், பழநி பாலு, பொறியாளர் ஈ.குமார், தென்சென்னை மாவட்டத் துணைத்  தலைவர் மயிலை சேதுராமன், சி.செங்குட்டுவன், ராஜபாளையம் சிவக்குமார், சி.யாழ்பிரபா, தென்சென்னை மாவட்ட கழக இளைஞரணி மு.சண்முகபிரியன், அரும் பாக்கம் சா.தாமோதரன், ஆயிரம் விளக்கு சேகர், அரும் பாக்கம் தமிழ்ச்செல்வன்,  பசும்பொன் செந்தில்குமாரி, பவானி, அமுதரசன், சோ.சுரேஷ், மகேசு, கலையரசன், பெரியார் நூலகர் வாசகர் வட்ட க.செல்லப்பன், முரளி கிருஷ்ணன், சின்னதுரை ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், கவிஞர் பொன்னடியான், கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், கவிஞர் கண்மதியன், காஞ்சி மணி மொழியார் தமிழ் பேரவை நா.இளவரசன், வழக்குரைஞர் அருணாசலம் மற்றும் திரளானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

- விடுதலை நாளேடு, 29.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக