திங்கள், 25 ஜூலை, 2016

மயிலை அம்பேத்கர் பாலத்தில் சமஸ்கிருத எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவு பரப்பு கூட்டம்



 மயிலை அம்பேத்கர் பாலத்தில் சமஸ்கிருத எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவு பரப்பு கூட்டம்
        22.7.2016 ம் நாள் மாலை 6.30 மணி அளவில் தென் சென்னை.மாவட்டத்தை சேர்ந்த மயிலாப்பூர் பகுதி திராவிடர் கழகம் ஏற்பாட்டில் மயிலாப்பூர், அம்பேத்கர் பாலம் அருகில் (பி.வி. கோயில் தெரு) பொறியாளர் ஈ.குமார் தலைமையிலும்,  மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத் தலைவர்  டி.ஆர் சேதுராமன் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோதரன் முன்னிலையிலும் சமஸ்கிருத எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவு பரப்பு தெரு முனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் கோ.வீ. ராகவன் வரவேற்புரையாற்றினார். 
     மண்டல செயலாளர் வி. பன்னீர் செல்வம், மாணவரணி பொறுப்பாளர் பா. மணியம்மை உரைக்குப்பின், தலைமைக் கழக பேச்சாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
 கோ.மஞ்சநாதன்மு.திருமலை, இளைஞரணி துணைத் தலைவர் மு.ஈழமுகிலன்,   இளைஞரணி  செயலாளர் ச.மகேந்திரன் இளைஞரணி துணைச் செயலாளர் இரா.பிரபாகரன், ச.துணைவேத்தன், மு.சண்முகப்பிரியன், கூடுவாஞ்சேரி மா.இராசு, விடுதலை நகர் ஜெயராமன் க.பெரியார் சேகர்,  புரசை.சு.அன்புச் செல்வன், வி.வளர்மதி, வி.தங்கமணி, பி.அஜந்தா, சோ.பாலு, வி.யாழ்ஒளி, கோ.செல்வராஜ், மு.பவானி, நொச்சி நகர் சேது, கண்ணன் மற்றும் பல கழகத்தோழர்களும் கலந்துகொண்டனர். பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று விளக்கமும் எழுச்சியும் பெற்றனர்.
 ச.சந்தோஷ் அவர்கள் நன்றியுரையுடன்.இரவு 10.00மணி அளவில் கூட்டம் முடிவுற்றது.
 மாவட்ட துணைச்செயலாளர் கோ.வீ. ராகவன் வரவேற்புரையாற்றினார்
பொறியாளர் ஈ.குமார் தலைமையுரையாற்றிய போது
மண்டல செயலாளர் வி. பன்னீர் செல்வம் அவர்கள் உரையாற்றிய போது...
மாணவரணி பொறுப்பாளர் பா. மணியம்மை அவர்கள் உரையாற்றிய போது..
தலைமைக் கழக பேச்சாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
ச.சந்தோஷ் அவர்கள் நன்றியுரையுடன்.இரவு 10.00மணி அளவில் கூட்டம் முடிவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக