வியாழன், 21 ஜூலை, 2016

கருஞ்சட்டைக் கடலான பழவேற்காடு ஏரி

10.7.2016 அன்று அதிகாலையில் பெரியார் திடலில் இருந்து கருஞ்சட்டைப்படை பழவேற்காடு நோக்கி புறப்பட்டது.

























 சென்னை மண்டல செயலாளர் பன்னீர்செல்வம், கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞர் அணி தலைவர் நாகராஜ், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முருகன், பொன்னேரி நகர இளைஞர் அணி செயலாளர் கார்த்தி, கும்மிடிப் பூண்டி மகளிரணி தலைவர் ராணி, கும் மிடிப்பூண்டி மகளிர் பாசறை செல்வி ஆகியோர் பழவேற்காட்டில் கூட்டம் சிறப்பாக நடைபெற தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
 தத்துவமேதை தந்தை பெரியாரின் சிலைக்கு கழக மகளிரும், தோழர்களும் மாலை அணி வித்து மரியாதை செய்தனர். கட்சி, ஜாதி மத வேறுபாடு இன்றி அப்பகுதி வாழ் பொதுமக்களும் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அப்பொழுது பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! என்ற முழக்கம் வானத்தைப் பிளக்கும் வண்ணம் எழுந்தது.
கி.பி.1609 முதல் கி.பி.1690 வரை பழவேற்காட்டில் வணிகம் செய்த டச்சுகாரர்களின் வரலாற்று எச்சமாக வும், காலத்தை கடந்து நிற்கும் சான் றாகவும் உள்ள டச்சுகாரர்களின் கோட்டை மற்றும் கல்லறைத் தோட்டத் தையும் கழகத் தோழர்கள் பார்வையிட் டனர்.








பழவேற்காடு ஏரியை நோக்கி பயணம் தொடர்ந்தது. தோழர் களின் முன்னேற்பாட்டில் ஏரியில் படகுகள் தயார் நிலையில் இருந்தன.

 ஆந்திரா மற்றும் தமிழக எல்லையில் 18 கி.மீ. நீளமுள்ள பழவேற்காடு ஏரி யினை சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக பயணம் செய்து கடல்நீரோடு ஏரிநீர் கலக்கும் முகத்துவாரத்தினை
 சென்றடைந்தோம்.






  பக்கிங்காம் கால்வாய், ஆரணி ஆறு, ஸ்வர்ணமுகி ஆறுகளின் வடிநிலங்களும், பழவேற்காடு ஏரியும் ஒன்றாக வங்காள விரிகுடா கடலில் கலக்கும் எழிலை கண்டுகளித்தோம்





 




 புலிக் காட்டு தீவினை சென்றடைந்தோம். 
 தீவினை அடைந்தவுடன் சிறுவர் கள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கழக மகளிரணியினரால் சிறப்பாக நடத்தப் பட்டன. குதித்து விளையாடுதல், இசை நாற்காலி போன்ற விளையாட்டுகள் உற்சாகமாக நடத்தப்பட்டன. விளை யாட்டை தொடர்ந்து மிகச்சிறப்பான முறையில் சுவையான மீன் உணவு வழங்கப்பட்டது.








 கொள்கையிலும், போராட்டங்களிலும் மட்டும் அல்ல, அனைத்து நிகழ்ச்சியிலும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படுவோம் என்பதைப் போல திருவள்ளூர் மாவட்ட திமுக (வடக்கு) ஊராட்சி செய லாளர் ஜெ.எஸ்.கன்னிமுத்து அவர் களின் மேற்பார்வையில் உணவு பரி மாறப்பட்டது.
 மதிய உணவைத் தொடர்ந்து கழக மகளிரணியின் 100ஆவது சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் எழுச் சியாக நடைபெற்றது. சென்னை மண் டலம் முழுவதும் இருந்து வந்த மகளி ரணியினர் தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர். 








 ஆலோசனைக் கூட்டம் நிறைவ டைந்தவுடன் நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்த கழக நிர்வாகிகளுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி சிறப்பு செய்யப் பட்டன.







































எழுத்துரு அளவு Larger Font Smaller Font
பெண்களுக்கு வேண்டியது புத்தகப் படிப்பு மட்டும் அல்ல, உலக அறிவும் தான் என்று கூறிய தந்தை பெரியாரின் வழிநடக்கும் திராவிடர் கழக மகளிரணி யின் 100ஆவது சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தை எழுச்சி யோடு இயற்கை எழில் கொஞ்சும் பழவேற்காட்டில் நடத்திட சென்னை மண்டல கழக மகளிரணி, பாசறை முடிவு செய்தது. மகளிரணியின் 50ஆவது கூட்டம் ஏலகிரி மலைப்பகுதியிலும், 75ஆவது கூட்டம் ஒகேனக்கல்லிலும் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தலைமை செயற்குழு உறுப்பினர் பார்வதி, வடசென்னை மகளிரணி செயலாளர் இன்பகனி, மகளிர் பாசறை சென்னை மண்டல செயலாளர் உமா செல்வராஜ், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, மகளிர் பாசறை அமைப் பாளர் சுமதி மற்றும் மகளிரணியைச் சார்ந்த தோழர்களும் ஒன்றிணைந்து மகளிரணியின் 100ஆவது கூட்டத்தை எழுச்சியோடு நடத்திடத் தேவையான முன்னேற்பாடுகளை செய்தனர். அதன் படி 10.7.2016 அன்று அதிகாலையில் பெரியார் திடலில் இருந்து கருஞ்சட்டைப்படை பழவேற்காடு நோக்கி புறப்பட்டது.

சென்னை மண்டல செயலாளர் பன்னீர்செல்வம், கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞர் அணி தலைவர் நாகராஜ், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முருகன், பொன்னேரி நகர இளைஞர் அணி செயலாளர் கார்த்தி, கும்மிடிப் பூண்டி மகளிரணி தலைவர் ராணி, கும் மிடிப்பூண்டி மகளிர் பாசறை செல்வி ஆகியோர் பழவேற்காட்டில் கூட்டம் சிறப்பாக நடைபெற தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மூடநம்பிக்கையற்றவர்களாக...

பெண்கள் மூடநம்பிக்கைமீதுள்ள பற்றுதலை முதலில் விட்டொழிக்க வேண்டும். தாங்கள் பெற்று வளர்க்கும் பிள்ளைகளையும் மூடநம்பிக்கையற்ற வர்களாக வளர்க்க வேண்டும் என்று கூறிய அன்னை மணியம்மையாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப மகளிரணி தோழர்கள் குடும்பம் குடும்பமாக பழ வேற்காடு நோக்கி படையெடுத்திருந் தனர். பழவேற்காட்டை அடைந்தவுடன் முதல் பணியாக மூடபழக்க வழங்கங் களால், ஜாதிபாகுபாடுகளால் கூன் விழுந்து இருந்த இந்த சமூகத்தில்; பெண்களின் நிலைமை பற்றி யாருமே கனவில் எண்ணத் துணியாத காலகட் டத்தில், நம் பெண்களை மனித சமு தாயத்திற்குத் தொண்டாற்றவும், புகழ் பெறும் பெண்மணிகளாக்கவும் வேண் டும். அவர்கள் புது உலகம் சித்தரிக்க வேண்டும் என்று கூறியதோடு அல்லா மல் தன் கொள்கைகளால் அதனை சாதித்துக்காட்டிய தத்துவமேதை தந்தை பெரியாரின் சிலைக்கு கழக மகளிரும், தோழர்களும் மாலை அணி வித்து மரியாதை செய்தனர். கட்சி, ஜாதி மத வேறுபாடு இன்றி அப்பகுதி வாழ் பொதுமக்களும் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அப்பொழுது பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! என்ற முழக்கம் வானத்தைப் பிளக்கும் வண்ணம் எழுந்தது. ஒவ் வொரு தமிழனின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் தந்தை பெரியார் உள் ளார். என்றென்றைக்கும் இந்த இனம் பெரியாருக்கு நன்றி உள்ள இனமாக இருக்கும் என்றும், இந்த தமிழ்நாடு பெரியாரின் மண்ணாகத்தான் இருக்கும், இருக்க முடியும் என்று அறுதியிட்டு சொல்வதைப் போல கழகத் தோழர் களும், பொதுமக்களும் உற்சாகமாக முழக்கங்கள் எழுப்பினர்.

சிறீஅரி கோட்டா தீவு

பகுத்தறிவு பகலவனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் திய பிறகு, கி.பி.1609 முதல் கி.பி.1690 வரை பழவேற்காட்டில் வணிகம் செய்த டச்சுகாரர்களின் வரலாற்று எச்சமாக வும், காலத்தை கடந்து நிற்கும் சான் றாகவும் உள்ள டச்சுகாரர்களின் கோட்டை மற்றும் கல்லறைத் தோட்டத் தையும் கழகத் தோழர்கள் பார்வையிட் டனர். வரலாற்றுச் சுவடுகளை கண்டு களித்த பின்பு பழவேற்காடு ஏரியை நோக்கி பயணம் தொடர்ந்தது. தோழர் களின் முன்னேற்பாட்டில் ஏரியில் படகுகள் தயார் நிலையில் இருந்தன. ஆந்திரா மற்றும் தமிழக எல்லையில் 18 கி.மீ. நீளமுள்ள பழவேற்காடு ஏரி யினை சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக பயணம் செய்து கடல்நீரோடு ஏரிநீர் கலக்கும் முகத்துவாரத்தினை சென்ற டைந்தோம். பக்கிங்காம் கால்வாய், ஆரணி ஆறு, ஸ்வர்ணமுகி ஆறுகளின் வடிநிலங்களும், பழவேற்காடு ஏரியும் ஒன்றாக வங்காள விரிகுடா கடலில் கலக்கும் எழிலை கண்டுகளித்தோம் அதன் தொடர்ச்சியாக கடலுக்கும் ஏரிக் கும் இடையில் அமைந்துள்ள சிறீஅரி கோட்டா தீவினை சென்றடைந்தோம். இந்த தீவுகளில் தான் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மய்யம் அமைந் துள்ளது என்பதும் கூடுதல் தகவல்.

தீவினை அடைந்தவுடன் சிறுவர் கள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கழக மகளிரணியினரால் சிறப்பாக நடத்தப் பட்டன. குதித்து விளையாடுதல், இசை நாற்காலி போன்ற விளையாட்டுகள் உற்சாகமாக நடத்தப்பட்டன. விளை யாட்டை தொடர்ந்து மிகச்சிறப்பான முறையில் சுவையான மீன் உணவு வழங்கப்பட்டது.
கொள்கையிலும், போராட்டங்களிலும் மட்டும் அல்ல, அனைத்து நிகழ்ச்சியிலும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படுவோம் என்பதைப் போல திருவள்ளூர் மாவட்ட திமுக (வடக்கு) ஊராட்சி செய லாளர் ஜெ.எஸ்.கன்னிமுத்து அவர் களின் மேற்பார்வையில் உணவு பரி மாறப்பட்டது.

மதிய உணவைத் தொடர்ந்து கழக மகளிரணியின் 100ஆவது சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் எழுச் சியாக நடைபெற்றது. சென்னை மண் டலம் முழுவதும் இருந்து வந்த மகளி ரணியினர் தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.  தந்தை பெரியாரின் கருத்துக்களை இன்னும் சிறப்பாக மூலை முடுக்கெல் லாம் கொண்டு சேர்க்கவேண்டிய அவ சியத்தையும் அதற்கான முயற்சிகளை யும் எவ்வாறு மேற்கொள்வது என்பவை எல்லாம் விவாதிக்கப்பட்டன.

அருமையான
பழவேற்காடுப் பயணம்

ஆலோசனைக் கூட்டம் நிறைவ டைந்தவுடன் நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்த கழக நிர்வாகிகளுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி சிறப்பு செய்யப் பட்டன. பெரியாரியலை அசைபோட்டு பார்க்க அருமையான தருணமாக பழவேற்காடுப் பயணம் அமைந்தது. கண்களுக்கு குளிர்ச்சி! மனத்திற்கு மகிழ்ச்சி! சிந்தனையில் எழுச்சி!!
-விடுதலை13.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக