சனி, 18 ஏப்ரல், 2015

AMbedkar 125 (தாலி அகற்றும் விழா-14.4.15-பெரியார் திடல்)




அண்ணல் அம்பேத்கர் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்
சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு
சென்னை, ஏப். 14-_ அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125_ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
புரட்சியாளர் அண் ணல் அம்பேத்கர் அவர்க ளின் 125_ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2015) சென்னை, நேரு விளையாட்டு அரங்கம் நுழைவு வாயிலில் உள்ள அவரது சிலைக்கு கழகத் தோழர் _ தோழியர்கள் புடை சூழ திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திர சேகரன், வீ.அன்புராஜ், தஞ்சை ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குண சேகரன் மற்றும் மாநில வழக்குரைஞரணி செயலா ளர் ச.இன்பலாதன், அமைப்பாளர் தெ.வீரமர்த் தினி, வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டல செய லாளர் பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப் பினர் கே.சி. எழிலரசன், பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு, பெரி யார் புத்தக நிலைய மேலா ளர் டி.கே.நடராஜன், தென் சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வ நாதன், செயலாளர் செ.ரா. பார்த்தசாரதி, மாவட்டத் தலைவர் ம.த.முத்தையன் துணை தலைவர் மயிலை சேதுராமன், துணைச் செயலாளர் கோ.வீ.ராக வன், வடசென்னை சொ. அன்பு, புரசை அன்புச் செல்வன், திருவொற்றி யூர் கணேசன், பெரியார் மாணாக்கண், தங்க.தனலட் சுமி, மரகதமணி மற்றும் திராளான கழகத் தோழர் தோழியர்கள் பங்கேற்றனர்.
-விடுதலை,14.4.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக