சனி, 18 ஏப்ரல், 2015

தாலி அகற்றும் விழா குறித்து - ஒன்இந்தியா » தமிழ்


AppIOS App ஒன்இந்தியா  » தமிழ்  » செய்திகள்  » தமிழகம் தாலி அகற்றும் போராட்டம் முடிந்த பின்னர் தடை விதித்த ஹைகோர்ட் பெஞ்ச் Posted by: Mayura Akilan Published: Tuesday, April 14, 2015, 13:29 [IST] Share this on your social network:    FacebookTwitterGoogle+   CommentsMail
தாலி அகற்றும் போராட்டம் முடிந்த பின்னர் தடை விதித்த ஹைகோர்ட் பெஞ்ச்
 சென்னை: கடும் எதிர்ப்புக்கிடையே திராவிட கழகத்தினர் தாலி அகற்றும் போராட்டம் நடத்தி முடித்த நிலையில் உயர்நீதிமன்ற பெஞ்ச் இடைக்கால தடை விதித்துள்ளது. திராவிடர் கழகம் சார்பில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, நிபந்தனையுடன் அனுமதி வழங்கியதோடு போராட்டத்தை அமைதியான முறையில் நடத்துமாறும் திராவிட கழகத்தினரை அறிவுறுத்தினார். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடக்கவிருந்த நிலையில் காலை 10 மணிக்கு தொடங்குவதாக இருந்த தாலி அகற்றும் நிகழ்ச்சியை காலை 7 மணிக்கே திராவிடக்கழகம் தொடங்கி நடத்தி முடித்தது. நீதிபதி அக்னிஹோத்ரி வீட்டில் 8 மணிக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. இதற்கிடையே திராவிட கழகத்தினர் ஏராளமான பெண்களின் தாலிகளை அவசரம் அவசரமாக அகற்றி போராட்டத்தை நடத்தி முடித்தனர். இந்தநிலையில் உயர்நீதிமன்ற பெஞ்ச் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.


ஒன்இந்தியா  » தமிழ்  » செய்திகள்  » தமிழகம் தாலி அகற்றும் நிகழ்வுக்கு எதிர்ப்பு – கி.வீரமணி வீடு முற்றுகை… பஸ் மீது கல் வீசியவர்கள் கைது Posted by: Mayura Akilan Updated: Tuesday, April 14, 2015, 15:40 [IST] Share this on your social network:    FacebookTwitterGoogle+   CommentsMail சென்னை: கடுமையான எதிர்ப்பையும் மீறி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுடன் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் தாலி அகற்றும் நிகழ்வுக்கு பலமான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பஸ் மீது கல்வீச்சு, திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியின் வீடு முற்றுகை என போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
தாலி அகற்றும் நிகழ்வுக்கு எதிர்ப்பு – கி.வீரமணி வீடு முற்றுகை… பஸ் மீது கல் வீசியவர்கள் கைது
சென்னை பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் தாலி அகற்றும் போராட்டம் இன்று காலையில் நடைபெற்றது. இந்த தாலி அகற்றும் போராட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. நீதிபதி அக்னிஹோத்ரி வீட்டில் 8 மணிக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.
தாலி அகற்றும் நிகழ்வுக்கு எதிர்ப்பு – கி.வீரமணி வீடு முற்றுகை… பஸ் மீது கல் வீசியவர்கள் கைது
 கல்வீச்சு 
இந்நிலையில், இந்த தாலி அகற்றும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பூந்தமல்லியில் நள்ளிரவில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியினர் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கண்ணாடிகள் உடைந்தன. இந்த தாக்குதல் சம்வத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 


தாலி அகற்றும் நிகழ்வுக்கு எதிர்ப்பு – கி.வீரமணி வீடு முற்றுகை… பஸ் மீது கல் வீசியவர்கள் கைது

கி.வீரமணி வீடு முற்றுகை 
திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு கண்டனம் தெரிவித்து சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டை, இந்து மகா சபை அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 10 பேரை கைது செய்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக