செவ்வாய், 15 செப்டம்பர், 2026

அறிஞர் அண்ணாவின் 118ஆம் ஆண்டு பிறந்த நாள் : சிலை – படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

சென்னை, செப்.15, அறிஞர் அண்ணா அவர்களின் 118ஆம்ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2026) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தும் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் தலைமாணாக்கரான அறிஞர் அண்ணா அவர்களின் 118ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2026) காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் வளாகத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்தும், சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த அறிஞர் அண்ணா அவர்களின் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில்,திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, துணைப் பொதச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ. சுரேஷ், சி. வெற்றிச்செல்வி, பேராசிரியர் க. பெரியார் செல்வி, பசும்பொன் , மு.பவானி, தங்க. தனலட்சுமி, த.இளவரசி, சி.காமராஜ், கி. தளபதிராஜ், நெய்வேலி ஞானசேகரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன், கோ.நாத்திகன், சு.மோகன்ராஜ், மா. குணசேகரன், அ.கருப்பையா, மதியழகன் ஜனார்த்தனன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் மயிலை சேதுராமன், அய்ஸ்அவுஸ் அன்பு, அரும்பாக்கம் சா.தாமோதரன், பி.டி.சி.இராஜேந்திரன், கரு. அண்ணாமலை, எம்.ஆர். மாணிக்கம், செல்வம், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, துணைத் தலைவர் கலைச்செல்வன்.
ஆவடி மாவட்டத் தலைவர் க. இளவரசன், பாடி இராவணன், தமிழ்ச்செல்வன், ராஜா, ரங்கநாதன், உடுமலை வடிவேல்,க.கலைமணி, அருள், விஜய், சைதை மதியழகன், ப.கோபாலகிருஷ்ணன், கோ. தங்கமணி, ப. சிவக்குமார், இளங்கோ, தி.செ.கணேசன் மற்றும் திரளான கழகத் தோழர்கள் பங்கேற்று அறிஞர் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

- விடுதலை நாளேடு, 15.09.26
-----------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக