ஞாயிறு, 7 ஜூன், 2026

மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் குளம் அருகில் திராவிடர் கழக கொடி ஏற்றப்பட்டது

மாலை அணிவித்து மரியாதை

திராவிடர் கழகம்

3.6.2026 நண்பகல் 12:00 மணி அளவில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் குளம் அருகில், தெற்கு மாட வீதி மற்றும் இராமகிருஷ்ண மடம் சாலை சந்திப்பில், தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட திராவிடர் கழக கொடி கம்பத்தில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் தென் சென்னைமாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தலைமையில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டத் துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், இளைஞர் அணி மாவட்டத் தலைவர் ந.மணிதுரை ஆகியோர் முன்னிலையில் மாவட்டத் துணைத் தலைவர் டி. ஆர். சேதுராமன் கொடி ஏற்றி வைத்தார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

- விடுதலை நாளேடு, 06.06.2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக