
சென்னை, ஜூன் 4– 3.6.2026 அன்று முற்பகல் 11:30 மணி அளவில் முத்தமி ழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மந்தைவெளி, விசாலாட்சி தோட்டம், செயின்ட் மேரிஸ் பாலம் அருகில், மந்தைவெளி பகுதி திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அப்படியே திராவிடர் கழகக் கொடி கம்பத்தில் தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து தலைமையில், தென் சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி. மாவட்டத் துணைத் தலைவர்கள்
டி.ஆர். சேதுராமன், மு.சண்முகப்பிரியன், இளைஞர் அணி மாவட்டத் தலைவர்
ந. மணிதுரை ஆகியோர் முன்னிலையில், தென் சென்னை மாவட்டத் தலைவர்
இரா.வில்வநாதன் கொடி ஏற்றி வைத்தார்.
திமுக இளைஞரணி பகுதி அமைப் பாளர் திவான், திமுக வட்ட துணைச் செயலாளர் தினேஷ், ரஞ்சித் மற்றும் திமுக பொறுப்பாளர்களும், தோழர்கள் ராஜேஷ், சதீஷ், சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- விடுதலை நாளேடு, 04.06.2026
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக