திங்கள், 9 பிப்ரவரி, 2026

பெரியார் பெருந்தொண்டர் தி.இரா. இரத்தினசாமி - இர. ஆதிலட்சுமி படத்திறப்பு நிகழ்ச்சி



சென்னை பெரியார் மய்யம், நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 08.02.2026 முற்பகல் 10:30 மணி அளவில் பெரியார் பெருந்தொண்டர் தி.இரா. இரத்தினசாமி - இர.ஆதிலட்சுமி ஆகியோரின் படத்திறப்பு நிகழ்ச்சியும், ஆவண காணொலி மற்றும் நினைவுமலர் வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் படத்தை திறந்து வைத்து புகழ் உரை ஆற்றினார்.

கழகத் தோழர்கள், வணிகப் பெருமக்கள், ஆதிமாறன், வந்திய தேவன், திருமுருகன் காந்தி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மற்றும் பலர் உரையாற்றினர். 

நிகழ்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் 'நினைவு மலர்' வழங்கப்பட்டது.

நினைவு மலர் அடங்கிய கைப்பை 
நினைவு மலர் 
நினைவு மலர் வெளியீடு 
தி.இரா.இரத்னசாமி - இர.ஆதிலட்சுமி
படத்திறப்பு 
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி புகழ் உரை 

-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 1996 ஜனவரி 4 5 6 ஆகிய மூன்று நாட்களில் நான்காவது உலக நாத்திகர் மாநாடு நடைபெற்றது. 

அந்த மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் இருந்து 120 பேர் ' பினாகினி விரைவு தொடர்வண்டி' மூலம் சென்றனர்.

அதில் சென்னையில் இருந்து புறப்பட்ட தாம்பரம் மற்றும் சென்னை தோழர்கள் ஒரு குழுவாக இருந்தனர். 

அதில் தி.இரா.இரத்தினசாமி, ஆர்.டி. வீரபத்திரன், தாம்பரம் ப.முத்தையன், தென் சென்னை செ.ர.பார்த்தசாரதி மற்றும் பலர் அடங்குவர். 
விஜயவாடா உலக நாத்திகர் மாநாட்டின் நுழைவு வாயிலில்
ஆஸ்திரேலியா பகுத்தறிவாளருடன்
இங்கிலாந்து பகுத்தறிவாளருடன்
வெளிநாட்டு (நாட்டின் பெயர் தெரியவில்லை)பகுத்தறிவாளருடன்
விஜயவாடா தெருக்களில் 'கடவுள் மறுப்பு' தத்துவத்தை தெலுங்கில் அச்சிட்டு துண்டறிக்கையாக வழங்குதல்.
விஜயவாடா கிருஷ்ணா ஆற்றின் 'கிருஷ்ணா சாகர்' அணையின் மேற்புறம்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி . வீரமணி அவர்களுடன் தி.இரா. இரத்தினசாமி
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுடன் தி.இரா. இரத்தினசாமி.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுடன் தி.இரா. இரத்தினசாமி.
தி.இரா. இரத்தினசாமி அவர்களும் அவரின் இணையர் இர. ஆதிலட்சுமி அவர்களும்.

தி.இரா. இரத்தினசாமி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தி.இரா.இரத்தினசாமி (வயது 82) அவர்கள்  14.10.2025 மறைவுற்றார்.

  உழைப்பால் உயர்ந்த கொள்கை வீரராவார்! தூத்துக்குடி மாவட்டம் பண்டாரபுரத்திலிருந்து 70 ஆண்டுகளுக்குமுன் சைக்கிளிலேயே சென்னை வந்து சேர்ந்து சிறு சிறு தொழில்களைச் செய்து, உழைப்பால் உயர்ந்த நிலையை எய்தியவர்.

தொடக்கத்தில் மிட்டாய் வியாபாரம், புலி மார்க் சீயக்காய், ஜம்போ தீப்பெட்டி என்று கடைகளுக்கு விநியோகித்து, அன்னை இந்திரா நகர் (சேலையூர் பகுதி) வியாபாரிகள் சங்கத் தலைவர் என்கிற அளவுக்கு உயர்ந்தவர். அந்த நகரின் உருவாக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்ததோடு மட்டுமல்லாமல், அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து தொண்டறப் பணி ஆற்றியவர்.

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவராகவும், சென்னை மண்டல கழகத் தலைவராகவும், மாவட்டக் கழகக் காப்பாளராகவும் பல்வேறு பொறுப்புகளில் இருந்து அரிய இயக்கப் பணிகளை ஆற்றிய அரும்பெரும்  பெரியார் பெருந்தொண்டர் ஆவார். மாதந்தோறும் ஒரு கூட்டம் என்ற ஒருமுறையை தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்தி வந்தவர். கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவர்.

- 14.10.2025 விடுதலை நாளேட்டில் வந்த இரங்கல் அறிக்கையின் சுருக்கம்

-விடுதலை நாளேடு 19.01.1996

செ.ர.பார்த்தசாரதி அவர்களின் விஜயவாடா உலக நாத்திகர் மாநாடு குறித்த பயணக் கட்டுரை

-----------------------------------------------------------------------------------

சுயமரியாதைச் சுடரொளிகள் தி.இரா. இரத்தினசாமி – ஆதிலட்சுமி ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

சுயமரியாதைச் சுடரொளிகள் தி.இரா. இரத்தினசாமி – ஆதிலட்சுமி ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார். உடன்: கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், வி.பன்னீர்செல்வம், ஆர்.டி. வீரபத்திரன், தாம்பரம் முத்தையன், நெய்வேலி ஞானசேகரன், ஆ.இர. இராமசாமி, ஆ.இர. சிவசாமி, முத்துமணி, தங்கமணி, திருமணம் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (சென்னை, 8.2.2026)

- விடுதலை நாளேடு, 9.2.2026

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக