விஜயவாடா கிருஷ்ணா ஆற்றின் 'கிருஷ்ணா சாகர்' அணையின் மேற்புறம்.
தி.இரா. இரத்தினசாமி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தி.இரா.இரத்தினசாமி (வயது 82) அவர்கள் 14.10.2025 மறைவுற்றார்.
உழைப்பால் உயர்ந்த கொள்கை வீரராவார்! தூத்துக்குடி மாவட்டம் பண்டாரபுரத்திலிருந்து 70 ஆண்டுகளுக்குமுன் சைக்கிளிலேயே சென்னை வந்து சேர்ந்து சிறு சிறு தொழில்களைச் செய்து, உழைப்பால் உயர்ந்த நிலையை எய்தியவர்.
தொடக்கத்தில் மிட்டாய் வியாபாரம், புலி மார்க் சீயக்காய், ஜம்போ தீப்பெட்டி என்று கடைகளுக்கு விநியோகித்து, அன்னை இந்திரா நகர் (சேலையூர் பகுதி) வியாபாரிகள் சங்கத் தலைவர் என்கிற அளவுக்கு உயர்ந்தவர். அந்த நகரின் உருவாக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்ததோடு மட்டுமல்லாமல், அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து தொண்டறப் பணி ஆற்றியவர்.
தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவராகவும், சென்னை மண்டல கழகத் தலைவராகவும், மாவட்டக் கழகக் காப்பாளராகவும் பல்வேறு பொறுப்புகளில் இருந்து அரிய இயக்கப் பணிகளை ஆற்றிய அரும்பெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆவார். மாதந்தோறும் ஒரு கூட்டம் என்ற ஒருமுறையை தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்தி வந்தவர். கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவர்.
- 14.10.2025 விடுதலை நாளேட்டில் வந்த இரங்கல் அறிக்கையின் சுருக்கம்
-விடுதலை நாளேடு 19.01.1996செ.ர.பார்த்தசாரதி அவர்களின் விஜயவாடா உலக நாத்திகர் மாநாடு குறித்த பயணக் கட்டுரை
-----------------------------------------------------------------------------------
சுயமரியாதைச் சுடரொளிகள் தி.இரா. இரத்தினசாமி – ஆதிலட்சுமி ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
சுயமரியாதைச் சுடரொளிகள் தி.இரா. இரத்தினசாமி – ஆதிலட்சுமி ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார். உடன்: கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், வி.பன்னீர்செல்வம், ஆர்.டி. வீரபத்திரன், தாம்பரம் முத்தையன், நெய்வேலி ஞானசேகரன், ஆ.இர. இராமசாமி, ஆ.இர. சிவசாமி, முத்துமணி, தங்கமணி, திருமணம் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (சென்னை, 8.2.2026)
- விடுதலை நாளேடு, 9.2.2026
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக