ஞாயிறு, 7 அக்டோபர், 2018

களை கட்டிய தஞ்சாவூர் பொதுக்குழு

கடும் மழை - புயல் எச்சரிக்கைகளைக் கடந்து குமரி முதல் சென்னை வரை கழகத்தினர் திரண்ட எழுச்சி! களை கட்டிய தஞ்சாவூர் பொதுக்குழு
தஞ்சாவூர், அக்.7 திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம் தஞ்சாவூர் புதுப் பேருந்து நிலையம் அருகில் உள்ள இராமசாமி திருமண மண்டபத்தில் நேற்று (6.10.2018) மாலை 5 மணிக்கு திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில் கூடியது.
கழக கலை இலக்கிய அணிச் செயலாளர் தெற்குநத்தம் சித்தார்த்தன் கடவுள் மறுப்புக்கூற, தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் வரவேற்புரையாற் றினார்.
பொதுக்குழுவிற்குத் தலைமை வகித்த திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும் என்றும், அன்னை மணியம்மையார் நூற்றாண்டை ஒட்டி திரட்டப் படும் ஒரு கோடி ரூபாய் நன் கொடை என்ற இலக்கில் எங்கள் குடும்பத்தின் பங்களிப்பாக ஒரு லட்சம் ரூபாய் அளிப்போம் என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
14 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டதைத் தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன், கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி, கழக மாநில மகளிரணி - மகளிர் பாசறை அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஊமை செயராமன், கடலூர் மண்டல இளைஞரணி செயலாளர் திராவிடன், மாநில மாணவர் கழக கூட்டுச் செயலாளர் மதிவதனி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் தேவகோட்டை பேராசிரியர் முனைவர் மு.சு.கண்மணி ஆகி யோர் உரையாற்றினர்.
கழகப்  பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கடந்த கடலூர்  கழகப் பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின் (2017 அக்டோபருக்குப் பின்) ஓராண்டுக் காலத்தில் நடைபெற்ற கழக நடவடிக்கைகள், கழகத் தலைவர் சுற்றுப்பயண விவரங்களை விரிவாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து திராவிடர் கழக துணைத் தலைவர்  கலி.பூங்குன்றன், அன்னை மணியம் மையார் அவர்களின் அடக்க உணர்வு, தன்னை முன்னிலை நிறுத்தாமை காரணமாக அவர்களைப் பற்றிய பெரும்பாலான ஆற்றலும், தொண்டும், தலைமைத்துவமும் வெளியு லகிற்குத் தெரியவில்லை. அவர்களுக்கு நாம் கொண்டாட இருக்கும் நூற்றாண்டு விழாவின் மூலம் அவற்றை வெளியில் கொண்டு வருவது அவருக்குச் செய்யும் மகத்தான மரியாதை என்று எடுத் துரைத்தார். கழகத்  தோழர்கள் ஒவ்வொருவரும் விடுதலை சந்தாதாரர் ஆக வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத் தினார். நமது ஆசிரியர் அவர்கள் மிசாவில் சிறையில் இருந்த போது அன்னை மணியம் மையார் அவர்களின் நேரடிப் பார்வையில் ஒவ்வொரு நாளும் அவர்களின் ஆணையை ஏற்று செயல்படும் பாக்கியம் தனக்கு கிடைத்த தையும், விடுதலை தலையங்கத்தை எழுத வேண்டும் என்று கட்டளையிட்டதையும் நினைவு கூர்ந்து கழகத் தலைவர் தங்கள் குடும்பத்தின் சார்பில் ரூ.1 லட்சம் நிதியை அறிவித்தார்.
கழகத் தலைவர் முடிவுரை வழங்கிட, தஞ்சாவூர் திராவிடர் கழக செயலாளர் அருணகிரி நன்றி கூறிட இரவு 9 மணிக்கு பொதுக்குழு நிறைவுற்றது.
கடுமையான மழை, புயல் எச்சரிக்கையை வானிலைத்துறை அறிவித்திருந்த நிலையிலும், குமரி முதல் தலைநகர் சென்னை வரை கழகத் தோழர்கள் திரண்டு வந்திருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
தஞ்சை கழகப் பொதுக்குழுவையொட்டி நகரமெங்கும் கழகக் கொடிகள் கட்டப்பட்டு பொதுமக்களின்  கவனத்தை ஈர்த்தன.
அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிதியாக ரூ.1,00,000/- தமிழர் தலைவரிடம் வழங்கினர்

தஞ்சையில் நடைபெற்ற கழக பொதுக்குழுக் கூட்டத்தில் (6.10.2018) காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளிகள் என்.ஆர்.சாமி - -பேராண்டாள் அம்மாள் ஆகியோரது நினைவாக அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிதியாக ரூ.1,00,000/-&க்கான காசோலையை  சிவகங்கை மண்டல தலைவர் சாமி.திராவிடமணி, பொதுக்குழு உறுப்பினர் தி.செயலெட்சுமி,மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமை கழக பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
Print
கழகத்தினரின் கவனத்துக்குக் கழகத் தலைவர்!
- நமது செய்தியாளர் -
தஞ்சை கழகப் பொதுக்குழுவில் உரையாற்றிய கழகத் தலைவர் ஆசிரி யர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சில முக்கிய தகவல்களையும், வழிகாட்டும் வெளிச்சத்தையும் பாய்ச்சி இருக்கிறார்.
அன்னை மணியம்மையார் பெய ரால் அவர்களின் நூற்றாண்டு தொடங்க இருக்கும் கட்டத்தில் மூல நிதி என்று வரும்பொழுது, நமது தோழர்கள் வாய்ப்புள்ளவர்கள் குடும்பம் சார்பாக ஒரு லட்சம் அளிப்பு என்பது வரவேற் கத்தக்கதே! அதே நேரத்தில் கழகத் தினர்தான் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மக்களி டம் செல்லுங்கள் - நிதியைத் தாரீர் என்று கூச்சம் இல்லாமல் கேளுங்கள், நாம் கேட்பது - நம் தனிப்பட்ட நலனுக் காக அல்ல - பொது நலனுக்காக, மக்கள் பணிக்காக என்பதால் நாம் உற்சாகத் துடன் பொது மக்களைச் சந்திக்க வேண்டும். புத்த மார்க்கத்தில் பிக்குகள் பிச்சை எடுத்துதான் வாழ்வைக் கடத் துவார்கள். துண்டு ஏந்தி மக்களிடம் செல்ல நானும் தயார்!
நாம் கேட்கும்பொழுதெல்லாம் மக்கள் மனம் மகிழ்ந்து அளித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். அவர் களுக்கு மிக நன்றாகவே தெரியும். திராவிடர் கழகத்திடம் அளிக்கப்படும் ஒவ்வொரு காசும்  மிகச் சரியாகவே பிழை ஏதுமின்றி செலவிடப்படும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உண்டு என்று கழகத் தலைவர் குறிப்பிட்டார். உண்மைதான்! இந்த அறிவு நாணயம்தான் தந்தை பெரியார் நம்மிடம் விட்டுச் சென்ற அசையாத மாபெரும் சொத்தாகும் அல்லவா!
தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் உரையாற்றிய தந்தை பெரியார் ஒரு முத்திரைக் கருத்தினைக் கூறினார்.
"நாம் எதிர்பார்த்த இலட்சியத்தில் எதிலும் தோற்றுவிடவும் இல்லை. பெரிதும் வெற்றி பெற்றுக் கொண்டு மற்றவர்களும் ஏற்கும்படிதான் வளர்த்து வருகிறோம்.
இந்த நிலை, பெருமை மாறாமல் இருக்க வேண்டும். இப்படியே இருந்து வரும் நிலையிலேயே நான் சாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நமது கழகத் தோழர்களும் கட்டுப் பாடாகவுமே இருக்கிறார்கள்.
நமது கொள்கையில் ஓட்டை விழுந்தால்கூட பரவாயில்லை. ஆனால் நாணயத்தில், ஒழுக்கத்தில் தவறு இருக்கக் கூடாது, அதுதான் ஒரு கழகத்துக்கு முக்கியமான பலம்.
பணம் காசைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. நான் கழகத்துக்கு வரும்போது கழகத்துக்குப் பணம் இல்லை. சொந்தக் காசுதான் செலவு செய்தேன்."
- ('விடுதலை', 11.10.1964, பக். 3)
பெரியார் உலகம்
திருச்சி சிறுகனூரில் உருவாகும் "பெரியார் உலகம்" பற்றி விளக்கப்படம் மூலம் விவரித்தார் பேராசிரியர் ப.சுப்பிரமணியம்.
தந்தை பெரியார் சிலையின் உயரம் 95 அடி என்றும் பீடம் 40 அடி என்றும்தான் ஏற்கெனவே சொல்லப்பட்டது. அதில் மிகப் பெரிய மாற்றம் 40 அடி பீடத்தையும் சேர்த்து தந்தை பெரியார் சிலையின் உயரம் 188 அடி என்று சொன்னபொழுது கழகக் குடும்பத்தினர் அடைந்த மகழ்ச்சிக்கோர் எல்லையே இல்லை!
மத்திய, மாநில அரசுகளிடமிருந்து ஏழு வகையான அனுமதித் தேவைப்படும் இந்த திட்டத்திற்கு இதுவரை ஆறு அனுமதிகள் கிடைக்கப் பெற்றன.
இன்னும் ஒன்றே ஒன்றுதான் நிலுவையில் இருக்கிறது. அதுவும் விரைவில் கிடைக்கப் பெறும் என்று அறிவித்தார்.
சுற்றுச்சுவர்கள் எழுப்பபட்டுள்ளன. அந்த வளாகத்தில் ஓர் அலுவலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. 200 பேர்களுக்கு மேல் நாள்தோறும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நூலகம், ஆவணக் காப்பகம், சிறுவர் பூங்கா , உணவகம், நூல்கள் விற்பனையகம் உள்ளிட்ட பல அம்சங்கள் பெரியார் உலகம் வளாகத்தில் இடம் பெறும் என்று பட விளக்கத்துடன் திரையிடப்பட்டு விளக்கப்பட்டது.
தந்தை பெரியார் அவர்கள் கையாண்டுள்ள ஒவ்வொரு சொல்லும் உவமை சொல்ல முடியாத அளவுக்கு உயர் எண்ணத்தின் செறிவான முத் தாகும். இதை நம் கைப்பையில் வைத் துக் கொண்டு அவ்வப்போது முகத் தைக் கண்ணாடியில் பார்ப்பது போல பார்த்துக் கொண்டு நாம் நமது ஒவ் வொரு அடியையும் எடுத்து வைப் போம்!
"நம்மீது மக்கள் நம்பிக்கை வைத்து, நாம் கேட்கும் பொழுதெல்லாம் நிதி யைத் தாராளமாக தந்து வருகிறார்கள்" என்று கழகத் தலைவர் நேற்று அழுத்த மாகச் சொன்னதற்கான அடித்தளம் தந்தை பெரியார் அவர்களின் மேற் கண்ட கருத்தின் பலத்திலிருந்துப் பூத்த தாகும்.
ஒரு கடவுள் மறுப்பு இயக்கந்தான் ஒழுக்க நெறியின் உச்சம் ஆகும். கொள் கையால் மட்டுமல்ல நம் ஒழுக்கத்தால், நன்னடத்தைகளால் இளைஞர்கள் இந்த வகையில் கவரப்பட வேண்டும்.
கழகத்தின் அமைப்பு முறை செயல் பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தரவுகளையும் கழகத் தலைவர் பொதுக்குழுவில் அறிவித் தார். 1. மாவட்டக் கழகக் கூட்டம் - இரு மாதங்களுக்கு ஒரு முறை
2. மண்டலக்குழுக் கூட்டம் - 3 மாதங்களுக்கு ஒரு முறை
3. நகர, ஒன்றிய, கிளைக் கழகக் கூட்டம் மாதம் ஒரு முறை
4. பொதுக்குழுக் கூட்டம் 6 மாதங்களுக்கு ஒரு முறை
5. தலைமைச் செயற்குழுக் கூட்டம் தேவைப்படும் பொழுதெல்லாம்
இந்தச் செயல்பாட்டின் அறிக்கையினை மாதந்தோறும் தலைமைக் கழகத்துக்கு சம்பந்தப்பட்ட பொறுப் பாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
காரைக்குடி மாவட்டக் கழகத்தின் சார்பில் அதன் செயலாளர் தோழர் வைகறை தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைத்ததைப் பாராட்டி, அதனை மற்ற மற்ற மாவட்டக் கழகத் தோழர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் கழகத் தலைவர் கேட்டுக் கொண்டார்.
கழகத்தில் மூத்த தோழர்கள் அடுத்த தலைமுறையினருக்கு, இளைஞர்க ளுக்கு, மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும், தோள் கொடுக்க வேண்டுமே தவிர, காலைப் பிடித்து இழுக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.
'விடுதலை' பற்றி
'விடுதலை' ஏட்டைப் பற்றி 'விடுதலை' ஆசிரியர் - கழகத் தலைவர் குறிப்பிட்டதும் முக்கியமானதாகும்.
நமது இயக்க ஏடான 'விடுதலை' என்பது மட்டும் இல்லாமல் போனால் சமூக மாற்றம் கிடையாது - நமது இயக்கம் என்ற ஒன்று இருப்பதாகவே யாருக்கும் தெரியாது.
காலமாற்றத்திற்கேற்ப 'விடுதலை'யி லும் பல மாற்றங்களையும் செய்திருக்கி றோம். இணைய தளத்தில் முதன் முதலாக வெளிவந்தது நமது 'விடுதலை' தான்.
பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம், நேர்த்தியாகக் கொண்டு வருகிறோம் - அதைக் கொண்டுபோய் சேர்ப்பது நமது முதல் பணியல்லவா என்று கேட்டார் கழகத் தலைவர்.
நிகழ்ச்சியின் போது மாவட்டக் கழகத் தோழர்கள் 'விடுதலை' சந்தாக் களையும் கழகத் தலைவரிடம் அளித் தனர்.
Print
தீர்மானம் எண்: 1
முன்மொழிதல்: கலி. பூங்குன்றன்
மானமிகு கலைஞர் அவர்களின் மறைவிற்கு இரங்கல்
13 வயதில் மாணவர் பருவத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, தந்தை பெரியார் கொள்கையை மாணவர் பருவத்திலேயே பரப்புவதற்குக் கையெழுத்து ஏடு நடத்தி, பிரச்சார நாடகம் எழுதி நடித்து, ஈரோடு குடிஅரசு அலுவலகத்தில் புடம் போடப்பட்டு, திரை உலகில் புகுந்து தனி எழுத்தாற்றலைப் பதித்து, திராவிடர் கழகத்தின் எழுத்தாளராக, பேச்சாளராக சுடர்விட்டு, அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க.வில் இணைந்து தனது கடும் உழைப்பால், ஆற்றலால் மேலும் மேலும் உயர்ந்து, தேர்தலில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமின்றி 13 முறை சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அய்ந்து முறை முதல் அமைச்சராக  ஒளி வீசி, ஆட்சியை சமுதாயக் கொள்கைகளுக்குச் சட்ட வடிவம் கொடுக்கும் கருவியாகப் பயன்படுத்தி, பெண்கள் மறுமலர்ச்சிக்கான எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வளர்ச்சிக்கு அரும் பெரும் திட்டங்களைச் செயல்படுத்தி, சமூகநீதி காத்து, மதச்சார்பின்மை கொள்கைகளை நெஞ்சில் தேக்கி, அரை நூற்றாண்டுக் காலம் தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பை ஏற்று, நெருக்கடி காலத்தை எதிர்த்து எதிர் நீச்சல் போட்டு ஏற்றம் - தாழ்வு என்ற இருநிலைகளிலும் சீராகவே நிமிர்ந்து நின்று, கட்சியைக் கட்டிக் காத்து பல்திறன் கொள்கலனாக விளங்கியவர் மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் என்பதை திராவிடர்  கழகப் பொதுக்குழு பெருமிதத்துடன் போற்றுகிறது. அத்தகு பெருமகனாராகிய மானமிகு கலைஞர் அவர்களின் மறைவு (7.8.2018) என்பது தி.மு.க.வுக்கு மட்டுமல்ல; திராவிட இயக்கத்திற்கு மட்டுமல்ல; தமிழ்நாடு மக்களுக்கு மட்டுமல்ல; உலக முழுவதும் உள்ள தமிழின மக்களுக்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். எளிதில் மறக்க முடியாத - ஈடு செய்ய இயலாத இந்தப் பேரிழப்பால் ஆறாத் துயரத்தில் மூழ்கி இருக்கும் கலைஞர்தம் குடும்பத்தினருக்கும், திமுகவுக்கும், கலைஞரைத் தன் உயிரினும் மேலாக நேசிக்கும் திமுக தோழர்களுக்கும், குறிப்பாக பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன், தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் கலைஞர் மறைவால் பெரும் துயரத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் திராவிடர் கழகம் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து மானமிகு சுயமரியாதைக்காரரின் அளப்பரிய பெருந்தொண்டுக்கு திராவிடர் கழகப் பொதுக்குழு தம் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
உலகப் பகுத்தறிவுப் பேரறிஞர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் (வயது 76 மறைவு 14.3.2018)
பெரியார் பேருரையாளரும் பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநிலத் தலைவரும் தந்தை பெரியார் பற்றி ஏராளமான நூல்களை எழுதித் தமிழ் மண்ணுக்கு மிகப்பெரிய அளவில் அறிவுக்கொடை அளித்தவருமான புலவர் மா.நன்னன் (வயது 94 - மறைவு 7.11.2017)
உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி - சமூகநீதியாளர் இரத்தினவேல் பாண்டியன் (வயது 89 மறைவு 28.2.2018)
ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் மகனும் பிரபல கண் மருத்துவருமான டாக்டர் ஏ.டி.செல்வம். (வயது 92 - மறைவு 28.11.2017)
இலண்டன் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சேகர் (வயது 84 - மறைவு 30.10.2017)
பெரியார் பற்றாளரும் பகுத்தறிவாளருமான டாக்டர் பி.கே.தருமலிங்கம் (வயது 86 - மறைவு 13.1.2018)
திராவிடர் இயக்க உணர்வாளர், தொழிலதிபர் வேதாரண்யம் எ.கே.எம்.காசிநாதன் (மறைவு 16.1.2018)
தெலுங்கில் பெரியார் திரைப்படம் தயாரித்தவரான பில்வேல்லி சுனில் (வயது 43 - மறைவு 22.1.2018)
மேனாள் தமிழக அமைச்சர் செ.மாதவன், அமைச்சர் இராசாங்கம் (வயது 85 - மறைவு 3.4.2018)
சென்னை மேனாள் மேயரும் சீரிய சுயமரியாதை வீரருமான சா.கணேசன் (வயது 88 - மறைவு 13.4.2018)
ஈரோடு எஸ்.ஆர்.கண்ணம்மாள் அவர்களின் மருமகளும் எஸ்.ஆர்.சாமி அவர்களின் வாழ்விணையருமான சாரதா சாமி (வயது 85- மறைவு 30.5.2018)
புதிய பார்வை ஆசிரியர் மா.நடராசன் (வயது 75 - மறைவு 10.3.2018)
அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் லெ.ப.கரு.இராமநாதன் (செட்டியார்) (வயது 104 - மறைவு 14.4.2018)
பேராசிரியர் ம.லெனின் தங்கப்பா (வயது 84 _மறைவு 31.5.2018)
எழுத்தாளரும் பகுத்தறிவாளருமான குல்தீப் நய்யார் (வயது 95- மறைவு 22.8.2018)
விஜயவாடா நாத்திக மய்யத்தின் பொறுப்பாளர் சென்னபடி வித்யா (வயது 84- மறைவு 18.8.2018)
இனமொழிப் போராளி புலவர் கி.த.பச்சையப்பன் (வயது 84- மறைவு 20.9.2018)
ஆகிய பெருமக்களின் மறைவிற்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த துயரத்தினையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது. இப்பெருமக்களின் கடந்த கால தொண்டுக்கு வீரவணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறது.
முதுபெரும் பெரியார் பெருந்தாண்டர் பொன்மலை கணபதி (வயது 95 - மறைவு 5.2.2018)
செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ.கோ.கோபால்சாமி (வயது 91 - மறைவு 2.11.2017)
மாநிலக் கலைத்துறை செயலாளர், கழக சொற்பொழிவாளர் இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் (வயது 74 - மறைவு 13.3.2018)
சட்ட எரிப்புப் போராட்ட வீரர் எடமேலையூர் கே.எஸ்.காசிநாதன் (வயது 96 - மறைவு 10.3.2018)
மொழிப்போர் தியாகி கங்களாஞ்சேரி இரா.நடேசன் (வயது 88 -  மறைவு 23.3.2018)
அத்திமாஞ்சேரிப்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் பி.எஸ்.சக்கரபாணி (வயது 100- மறைவு 31.12.2017)
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பெருவளப்பூர் இரா.சாமிநாதன் (வயது 84 - மறைவு 25.1.2018)
குமரி மாவட்ட திராவிடர் கழக முன்னாள் செயலாளர் எம்.முகம்மதப்பா (வயது 102 - மறைவு 8.2.2018)
சட்ட எரிப்புப் போராட்ட வீரர் அன்டகுண்டன் எஸ்.எம்.மாரியப்பா (வயது 86 - மறைவு 14.9.2018)
போடி - சங்கராபுரம் பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் பே.ஆங்கன் (மறைவு 2.9.2018)
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சி.ஜெ.ஜெயகுருநாதன் (வயது 89 -  மறைவு 5.9.2018)
வேலூர் சத்துவாச்சாரி - மாவட்ட கழக அமைப்பாளர் ச.கி.செல்வநாதன் அவர்களின் வாழ்விணையரும், கழகப் போராட்டங்களில் பங்குகொண்டவருமான பாப்பம்மாள் (வயது 82 - மறைவு 22.10.2017)
பெண்ணாடம் திராவிடர் கழகத் தலைவர் கடலூர் செ.சுவாமிநாதன் (மறைவு 4.5.2018)
சேலம் குகைகருங்கல்பட்டி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தா.நாகராசன் (வயது 85 - மறைவு 3.5.2018)
கிருட்டினகிரி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஜி.வி.வெங்கட்ராமன் (வயது 90 - மறைவு 9.7.2018)
கரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ப.காமராஜ் (வயது 64 - மறைவு 11.7.2018)
நெல்லை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் பிரின்ஸ் (மறைவு 8.8.2018)
லால்குடி- மேலவாளாடி பெரியார் பெருந்தொண்டர் தனபால் (மறைவு 18.9.2018)
மதுரை புறநகர் பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஜெ.சுப்பிரமணியன் (மறைவு 27.9.2018)
திண்டுக்கல் நகர கழக செயலாளர் இரா.இரமேஷ் கண்ணா (வயது 43 - மறைவு 18.1.2018)
திருவாரூர் நகர முன்னாள் தலைவர் ஆசிரியர் பொன்.இராமையா (வயது 75-மறைவு 7.4.2018)
மயிலாடுதுறை கழக இளைஞரணி தோழர் குண்டு கலியபெருமாள் (வயது 66 - மறைவு 3.2.2018)
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மேனாள் மாவட்ட செயலாளர் சக்திவேல் (மறைவு 13.4.2018)
செங்கற்பட்டு நகர திராவிடர் கழகத் தலைவர் நாகப்பன் (வயது 75- மறைவு 16.2.2018)
செய்யாறு பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கே.முனுசாமி (வயது 48 - மறைவு 14.2.2018)
கிருட்டினகிரி ஒன்றிய கழக அமைப்பாளர் தேவசமுத்திரம் செ.பத்மநாபன் (வயது 45 - மறைவு 2.4.2018)
சிதம்பரம் நகர முன்னாள் கழகத் தலைவர் புலவர் இராஜாங்கம் (வயது 93 - மறைவு 28.11.2017)
திருச்சி மாநகர மேனாள் செயலாளர் திருச்சி ஜங்சன் என்.எம்.முருகேசன் (மறைவு  - 20.10.2017)
விழுப்புரம் நகரக் கழக அமைப்பாளர் கு.அ.பெரியதம்பி (வயது 96-  மறைவு 24.10.2017)
பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநிலத் துணைத் தலைவர் கோ.அண்ணாவி (மறைவு 18.11.2017)
தஞ்சை மாவட்ட பகுத்தறிவு கலை இலக்கிய அணித் தலைவர் கவிஞர் சித்தார்த்தன் (வயது 59 - மறைவு 7.4.2018)
காஞ்சி ஆர்.ஜானகிராமன் (வயது 85- மறைவு 28.11.2017)
குடந்தை வட்டம் சாமிமலை நகரக் கழகத் தலைவர் நமச்சிவாயம் (வயது 85 - மறைவு 14.12.2017)
பெரியகுளம் கழக செயலாளர் அ.பரசுராமன் (மறைவு 17.12.2017)
கடலூர் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.
எஸ்.சுப்பராயன் அவர்களின் வாழ்விணையர் இராஜராஜேஸ்வரி (வயது 87 - மறைவு 16.1.2018)
வத்திராயிருப்பு ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் வெ.கருப்பையா (வயது 46- மறைவு 17.1.2018)
உரத்தநாடு ஒன்றியம் வடசேரி விவசாய அணி செயலாளர் புண்ணியகோடி (மறைவு 26.1.2018)
பட்டுக்கோட்டை ஒன்றிய கழகத் தலைவர் எம்.எஸ்.முத்துக்குமாரசாமி (மறைவு 28.1.2018)
கரூர் - மண்மங்கலம் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ம.கு.கணேசன் (மறைவு 30.1.2018)
புதுக்கோட்டை மேனாள் மகளிரணி அமைப்பாளர்  சுடர்மதி தங்கையா (மறைவு 31.1.2018)
தருமபுரி மாவட்டம் - மொரப்பூர் ஒன்றிய கழகத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இராமியம்பட்டி ஆர்.வி.சாமிக்கண்ணு (வயது 90 - மறைவு 2.2.2018)
இலால்குடி இடையாற்றுமங்கலம் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் நாகராஜன் (வயது 80- மறைவு 12.4.2018)
கோவை மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் பாவலர் தென்மொழி ஞானபாண்டியன் (வயது 88 -  மறைவு 12.4.2018)
சேலம் பெருமாள்கோயில்மேடு சட்ட எரிப்புப் போராட்ட வீரர் இளஞ்செழியன் (மறைவு 12.7.2018)
சட்ட எரிப்புப் போராட்ட வீரர் செம்பனார்கோயில் _  பரசூலூர் முனுசாமி (வயது 82 - மறைவு 25.5.2018)
சேலம் மாவட்டம் திராவிடர் கழக முன்னாள் செயலாளர் கடவுள் இல்லை சிவகுமார் (வயது 61-மறைவு 26.8.2018)
உடற்கொடை அளித்தவர்கள்
உடற்கொடை அளித்த பெருமக்கள்- பாராட்டு
நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் திரு. ப.பழனியப்பன்  (வயது 86 - மறைவு 19.2.2018)
கன்னியாகுமரி மாவட்ட திங்கள் நகர் கிளைக்கழகத் தலைவர்  திரு.சா.பாலையன் (வயது 68 - மறைவு 17.2.2018)
சேலம் மாநகர திராவிடர் கழகத் தலைவர் திரு.பூ.வடிவேல் அவர்களின் வாழ்விணையர் திருமதி எல்லம்மாள் (வயது 78 - மறைவு 23.2.2018)
சென்னை பகுத்தறிவாளர் கழகத் தோழர்  திரு.அரங்க.இராமச்சந்திரன் அவர்களின் தந்தையார் பெரியார் பெருந்தொண்டர் திரு.தஞ்சை ரெங்கநாதன் (வயது 78 - மறைவு 10.2.2018)
திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் சென்னை திருமதி. குஞ்சிதம் நடராசன்  (வயது 75 -மறைவு 7.9.2018)
குறிஞ்சிப்பாடி நகர திராவிடர் கழக அமைப்பாளர் திரு.இந்திரஜித் அவர்களின் அன்னையார் திருமதி. சின்னம்மாள் (மறைவு 15.10.2017)
தேனி கெங்குவார்ப்பட்டி கழக செயல்வீரர் திரு. கு.முத்துவேல் (மறைவு 27.10.2017)
குடியாத்தம் கழகத் தோழர் திரு.ஓவியர் சிவா அவர்களின் அன்னையார் திருமதி. பெரியநாயகி (மறைவு 24.4.2018)
சட்டஎரிப்புப் போராட்ட வீரர் திருவானைக்காவல் திரு. முத்துக்குமாரசாமி (வயது 88)
தேனி - கம்பம் நகர கழகத் தலைவர் திரு. சொ.குமரேசன் (வயது 70- மறைவு 30.6.2018)
ஆகிய பெருமக்களின் மறைவிற்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த துயரத்தினையும், இரங்கலையும் கூறி, உடற்கொடை அளித்த இப்பெருமக்களுக்குப் பாராட்டுத் தெரிவிப்பதுடன் இவர்களின் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் இப்பொதுக்குழு ஆறுதல் தெரிவிப்பதுடன் இவர்களின் விலைமதிப்பில்லா இயக்கத் தொண்டுக்கு இப்பொதுக்குழு வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
- விடுதலை நாளேடு, 7.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக