செவ்வாய், 9 அக்டோபர், 2018

புலவர் மா.நன்னன் மருமகன் பகுத்தறிவாளர் செம்மல் மறைந்தாரே!

மறைந்த புலவர் மா.நன்னன் அவர்களின் மருமகனும், சிறந்த பகுத்தறிவாளருமான செம்மல் என்ற இரா.கோவிந்தன் (வயது 69) அவர்கள் நேற்று (7.10.2018) பிற்பகல் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

மானமிகு செம்மல் அவர்கள் யூனியன் வங்கியில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். புலவர் மா.நன்னன் அவர்களின் பெரியாரியல் எழுத்துப் பணிக்கு உற்ற துணையாக இருந்தவர். மா.நன்னன் மறைவிற்குப் பிறகும் அவர் எழுதி வெளிவராத நூல்களை வெளியிடும் பணியில் ஈடுபட்டு வந்தவர்.

செம்மல் அவர்களின் மறைவால் பெருந்துயரத்திற்கு ஆளாகியிருக்கும் அவரது வாழ்விணையர் வேண்மாள், மகன் அறிவன், மகள் அணிமலர் மற்றும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கழகத்தின் சார்பில் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

திருச்சி

8.10.2018

கழகத்தின் சார்பில் மரியாதை

பகுத்தறிவாளர் செம்மல் அவர்களின் மறைவு செய்தி அறிந்ததும், இன்று  (8.10.2018) காலை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, அகில இந்திய வங்கி பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் சங்க பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி மற்றும் யூனியன் வங்கி பணியாளர்கள் மற்றும் பெரும் திரளான தோழர்கள் - செம்மல் அவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் கண்ணம்மா பேட்டை சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு, எவ்வித மூட சடங்குமின்றி  எரியூட்டப்பட்டது

-  விடுதலை நாளேடு, 9.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக