வியாழன், 19 மார்ச், 2015

தாலி அகற்றும் விழா, மாட்டிறைச்சி விருந்து

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல்14 அன்று
தாலி அகற்றும் விழாமாட்டிறைச்சி விருந்து
இந்துத்துவா நோய்க்கு இதுதான் மாமருந்து!

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு
சென்னை மார்ச் 19- சென்னை பெரியார் திடலில் அண்ணல் அம் பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று தாலி அகற்றும் நிகழ்ச்சியும் மாட்டிறைச்சி விருந்தும் நடைபெறும் - இதுதான் இந்துத்துவா நோய்க்கான மாமருந்து என்றார் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கிவீரமணி அவர்கள்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கருத் துச் சுதந்திரத்தை வலி யுறுத்தியும்புதிய தலை முறை தொலைக்காட்சி நிலையம்மீதான இந்துத் துவாவாதிகளின் வன் முறைகளைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று (18.3.2015) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் ஜி.இராம கிருஷ்ணன்இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்தமிழ் மாநிலக் காங்கிரசு முன்னணித் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ்விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்திருமாவளவன்,  மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா,   மனிதநேய மக்கள் கட்சிப் பொருளாளர் குணங்குடி அனீபாபத்திரிகையாளர் ஆர்.எஸ்.மணிமுற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் கள் சங்க பொறுப்பாளர் பேராசிரியர் அருணன்பத்திரிகையாளர் ஞானிதிராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் உள்ளிட்டோர் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றனர்.
கண்டன ஆர்ப்பாட் டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரை வருமாறுதிடீரென்று சில நாள்களுக்கு முன்னாலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலே அருமைத் தோழர் இராம கிருஷ்ணன் அவர்களு டைய அரிய முயற்சியி னாலே ஏற்பாடு செய் யப்பட்ட இந்தக் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான வன்முறையைக் கண்டிக் கக்கூடிய கண்டன ஆர்ப் பாட்ட நிகழ்ச்சியாக கடந்த ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக  இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
அன்றே சொன்னோம் - கேட்டார்களா?
கருத்துச் சுதந்திரத் துக்கு எதிராக இப்படி ஒரு போராட்டம் நடை பெறுவது நாம் எதிர் பார்க்காதது அல்லகடந்த 10 மாதங்களுக்கு முன்னாலே இங்கே நண் பர்கள் சுட்டிக் காட்டி யதைப்போல இப்படி ஒரு பொதுத்தேர்தல் நாடாளுமன்றத்துக்கு வந்த காலத்திலேயேவளர்ச்சி என்ற மயக்க மருந்தை உண்டுஇளை ஞர்களே மீண்டும் காவிக் கட்சிக்கு வாக்களித்தால்என்ன விளைவுகள் ஏற் படும் என்றால் பச்சை யாக சமதர்மத்துக்கோமனித தர்மத்துக்கோ இடம் இல்லாமல் வெறும் மனு தர்மம்தான் மீண்டும் ஆட்சிக்கு  வரும் என் பதை மேடை தவறாமல் நாங்கள் எடுத்துச் சொன்னோம்ஆனால்வழக்கம்போல மயக்கத் தில் இருந்தவர்கள் அதை உணரவில்லைஆனால்இன்றைக்கு ஒருவகை யிலேஅந்தக் காவி களுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட் டிருக்கிறோம் எப்படி என்றால்அய்ந்து ஆண்டு காலம்வரையிலேகூட நாங்கள் பொறுத்திருக்க மாட்டோம்நாங்கள் எட்டு மாதங்களுக்குள் ளாக எங்கள் பொய் உரு வத்தைக் கலைத்து உண் மையான உருவத்தைக் காட்டுவோம் என்று இறங்கி இருக்கிறார்களே அதற்காக வரவேற் கிறோம்.
இந்த அணி சாதாரண மான அணி அல்லஇது ஏதோ புதிய தலைமுறை ஒன்றின்மீது திட்டமிட்டு அந்த செய்தி ஊடகங்கள் மீது நடத்தப்பட்டத் தாக் குதல் என நினைக்காதீர்கள்.
பார்ப்பனீயப் பாதுகாப்புக்கு ஒத்திகை
இது ஒட்டு மொத்த மாக மனித தர்மத்துக்குகருத்துச் சுதந்திரத்துக்குபகுத்தறிவுக்கு,  எல்லோ ருக்கும் எல்லாமும்அனைவருக்கும் அனைத் தும் என்கிற தத்துவத் துக்கு எதிராகஇன்னா ருக்கு இதுதான்இதுதான் எங்களுடைய பார்ப்பனீயஆதிக்க,  வர்ணாசிரமப் பாதுகாப்புத் திட்டம் என்பதை வைப்பதற்கான ஒத்திகை பார்க்கிறார்கள்அவ்வளவுதான்இது ஒரு ஒத்திகை.  இங்கே சொன் னார்கள்அவர்களைத் தாக்குவது என்பது மட்டும் இவர்களுடைய நோக்கம் அல்லஅதே நேரத்திலே  மத்தியிலே எங்கள் ஆட்சி இருக் கிறதுஎன்னவோ தெரி யாது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற அந்தக் காலக்கட்டம் இவர்களுக்கு இருக்கிறது என்று நினைக் கக் கூடிய ஒரு நிலைஇவைகளை வைத்துக் கொண்டு நீங்கள் ஆட்டம் போடலாம் என நினைத் தால்கேடு எங்களுக்கல்லஉங்களுக்குத்தான் வரும்காரணம் இந்த மக்கள் சாதாரண மக்கள் அல்லஇங்கே சொன்னதைப் போலஇது வெறும் வாக்குப் பெட்டியோடு கிளம்பிவிடுவது அல்லஇது வெறும நாடாளு மன்ற மெஜாரிட்டிமைனாரிட்டியைப் பொறுத்தது அல்ல.
இது மக்களுடைய கிளர்ச்சியாகஎழுச்சியாக இது திரும்பும்அது வெறும் ஊடகச் சுதந்தி ரத்தை மட்டும் அல்லமனிதர்களுடைய அத்து ணைச் சுதந்திரத்தையும் பாதுகாக்கும்பாசிசத் துக்கு விடை கொடுக்கும்.
பாசிசப் போக்கு இன் றைக்கு இருக்கிறதென்றால்,
காவிகள் ஆட்சி என்ற நிலை மாறிகாவிகள் ஆட்சி என்றாலே காலிகள் ஆட்சி என்று சொல்லக்கூடிய அளவிற்கு நீங்கள் நடந்து கொண் டிருக்கிறீர்கள் என்று சொன்னால்அதைக்கட்டுப்படுத்த வேண்டிய வர்கள் கண்டும் காணாமல் கண்டு கொள்ளாமல்  ஒதுங்கிக் கொண்டி ருக்கிறார்கள் என்று சொன்னால்,  எங்களைப்போன்ற பொறுப்புள் ளவர்கள் அமைதியாகக்கூட இருப் பார்கள்.
ஜனநாயகத்தின்மூலமாக அதை மாற்றிவிடலாம்மாற்றி இருக்கிறோம் என்றுநெருக்கடி காலத்தையே  சந்தித்த மண் இதுஇந்தியாவிலேயே நெருக் கடி காலத்தில் அதற்குத் தலை வணங்க மாட்டோம் என்று சொன்னப் பெருமை திராவிட முன்னேற்றக்கழக ஆட்சிக்கும்அதனுடைய முதல்வர் கலைஞரையும் சார்ந்ததுஇன்றைக்கு அவரிடத்தி லிருந்து மாறுபடுபவர்கள்கூட இந்த உண்மையை மறுக்க முடியாது.
அந்த காலக்கட்டத்திலே நாங்க ளெல்லாம் மிசாக் கைதிகளாக இருந்தவர்கள்சிபிஎம் போன்ற நண்பர்கள் எல்லாம் எங்களோடு இருந்தார்கள்.
நெருக்கடி காலத்தைவிடவா!
அப்போது சொன்னார்கள் இனிமேல் ஒரே கட்சிதான்நீங்களெல் லாம் வெளியேகூட போக முடியாது என்று எங்களை அச்சுறுத்தினார்கள்வெளியே போகாவிட்டால் நல்லதாகி விட்டதுஇருட்டிலே இருப்பதை விட இங்கே இருப்பது ரொம்ப மகிழ்ச்சிஎந்த விலையும் கொடுப்பதற்குத் தயாராகத்தான் நாங்கள் வந்திருக் கிறோம் என்று சொன்னோம்.
ஆனால்நெருக்கடி காலத்தை வைத்தவர்களேஇன்றைக்கு என்ன சூழல்நினைத்துப்பார்க்க வேண்டும்தயவுசெய்து அரசியல் பார்வையோடு பார்க்காதீர்கள்நான் வரலாற்றுச் சம்பவங்களை உங்களுக்குப் புரட்டிக் காட்டுகிறேன்நம்முடைய நாட்டிலேஅந்த நெருக்கடிக் காலத்தைவிட நீங்கள் பெரிதாக செய்துவிட முடியுமா?  அதற்குத்தான் உலகத்தைக் காட்டினார்கள் இரண்டுபேரும்அருமைச் சகோதரர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களும் சொன் னார்கள்துவங்கினார்கள்நம்முடைய இராமகிருஷ்ணன் அவர்கள் அதை விளக்கி முடித்தார்கள்.
இட்லர் உலக வரலாற்றிலேயே ரொம்ப அதிசயமான சர்வாதிகாரிஎன்ன அதிசயமான சர்வாதிகாரி என்று சொன்னால்இட்லர் ஜனநாயக முறைப்படி வந்த சர்வாதிகாரி.
ஹிட்லரின் வெய்மார் அரசியல் சட்டம்
எங்களுக்கெல்லாம் அரசியல் சட்டம் படிக்கிற நேரத்திலேபல்வேறு அரசியல் சட்டங்களை சொல்லிக் கொடுப்பார்கள்அப்படி பல்வேறு அரசியல் சட்டங்களைச் சொல்லிக் கொடுக்கிறபோதுஇட்லர் வருவதற்கு முன்னாலே பழைய அரசியல் சட்டத்தை ஜெர்மானிய அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டுஒரு புதிய அரசியல் சட்டத்தை அங்கே கொண்டுவந்தார்அதற்கு முன்னாலே அவர் பதவிக்கு வருவதற்கு முன்னாலே திட்டமிட்டு அதை நிறைவேற்றும்படி பார்த்துக் கொண்டார்.
அந்த அரசியல் சட்டத் துக்கு வெய்மார் அரசியல் சட்டம் (Weimar Constitution) என்று பெயர் கொடுத்தார்கள்.
அதிலே பிரிவு 48 என்ற ஒரு பிரிவை வைத்தார்கள்அந்த 48 என்ற பிரிவில் இருப்பது என்னவென்றால்,  நாட்டில் திடீரென்று ஏதாவது ஒரு நெருக்கடி ஏற்பட்டால்தலைவராக இருக்கக்கூடியவர் மற்ற அதிகாரங் களையெல்லாம் கலைத்துவிட்டுஅவரே எடுத்துக்கொள்ளலாம்இதுதான் அவசர காலம் என்று வைத்து இந்த முறையில் ஜனநாயக முறைப்படி வந்தவர் இட்லர்.
கோணிப் புளுகன் கோயபல்ஸ்
இட்லருடைய பாசிசம் என்ன ஆயிற்றுபாடத்திட்டங்களிலே மாற்றம்,  இனப்படுகொலை செய்தார்மாற்றுக்கருத்து உள்ளவர்களுக்கு இடமில்லைபிரச்சாரம்இப்போது நடைபெறுகின்ற மாதிரிகோயபல்ஸ் கோணிப் புளுகன் கோயபல்ஸ் என்று நாமெல்லாம் நாடகம் நடத்திக் காட்டவில்லையா?
பிறகுஇட்லருடைய நிலை என்னவரலாற்றிலே குப்பைத் தொட்டியி லேகூட இடமில்லை    என்று சொல்லக்கூடிய அளவுக்குத்தானே ஆளானார்நம்மை மாதிரி இருப் பவர்கள்தான் இட்லரை ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.
எனவேமோடி அரசாங்கமாக இருந்தாலும்அல்லது அவர்களை ஆதரிக்கிற வேறு அரசுகளாக இருந் தாலும்அவர்களுக்குத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறோம்.   நீங்கள் எந்த அரசியல் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துப்போயிருக்கிறீர்களோஅந்த அரசியல் சட்டம் அளிக்கின்ற கருத்து சுதந்திரத்தை,  தாக்குவோம்ஊட கங்கள் இயங்கக் கூடாதுமாற்றுக் கருத்துகளே பேச முடியாதுநாங்கள் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்பது ஜன நாயகமாசர்வாதிகாரமா?
எதேச்சதிகார ஆட்சியா?  பாசிசத்துக்கு  இடமில்லை என்று காட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறதுநம்மைப் பொறுதத வரையிலே இது ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சிமீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று மட்டும் கருதக்கூடாது.
பார்ப்பனியத்தைக் காப்பாற்றவே!
குறிப்பிட்ட செய்திக்காக மட்டு மல்லமதவாதக் கொடியை ஏற்ற வேண்டும்இந்துத்துவா என்று சொல் லக்கூடிய அந்த வெறித்தனத்தை நிலை நாட்ட வேண்டும்பச்சைப் பார்ப்பன வருணாசிரம தர்மத்தை நிலைநாட்ட வேண்டும்மனுதர்மக் கொடியை தாழ விடக்கூடாது என்பவைதான் உங்கள் நோக்கமாக இருந்தால்சந்திக்கத் தயாராக நாங்கள் வருவோம்மக்களை ஆயத்தப்படுத்துகின்ற கூட்டம்தான் இந்தக் கூட்டம்அதை நன்றாக நினைவிலே வைத்துக்கொள்ளுங்கள்அதற்காக அதற்காக ஒத்திகை பார்க்க வேண்டுமா?
தாலியாம் தாலி!
இரண்டு அறிவிப்புகள்-. ஒன்று எந்தத் தாலியைப்பற்றி நீங்கள் பேசு கிறீர்கள்தந்தைபெரியார் அவர்கள் நீண்ட காலத்துக்கு முன்னால்சாதாரணமாக திருமணங்களிலே சொன்னார்தாலியாவது வெங்காய மாவது என்றார்அதை அப்படியே வைத்து நம்முடைய உவமைக் கவிஞர் சுரதா பாட்டு எழுதினார்தாலியாம்தாலியாம் பெண்ணுக்கு வேலியாம்வேலியாவதுவெங்காயமாவது என்றார் பெரியார் என்று பாட்டு எழுதினார்எத்தனைக் காலத்துக்கு முன்னாலேஎங்கள் கூட்டங்களிலே தாய்மார்கள் வந்து இந்த அடிமைச் சின்னம் வேண்டாம்இதை விலக்கு கிறோம் என்று சொல்லி மேடை களிலே அவர்கள் அகற்றிஅந்தக் காட்சிகள் நடந்துகொண்டிருக் கின்றனவே.
கணவன் முன்னாலே இறந்து விட்டால்பின்னாலேஎங்கள் சகோ தரிகளை எல்லாம் நீங்கள் அவமானப் படுத்துவதற்குத்தானே அந்த அடிமைச்சின்னத்தைவிதவைக் கோலம் என்று ஆக்கி இருக்கின் றீர்கள்இதைவிடக் கொடுமை வேறு என்ன?  எனவேநாங்கள் சொல்லுகிறோம்அருணன் அவர்கள் சொன்னதுமாதிரி அந்த ஊடகத்திலே இரண்டு பேருக்கும் வாய்ப்பு கொடுத்துஇன்னும் கேட்டால்பளிச்சென்று பச்சையாகக்கூட சொல்லவில்லைஏனென்றால் பச்சையாகப் பேசுவதில் இருக்கின்ற தயக்கம்இங்கேயே இருக்கும் சாதாரணமாகஇங்கே பேசிய சகோதரர்கூட புனிதம் என்று சொன்னார்அது அவருடைய கருத்து.
புனிதமாவது புடலங்காயாவது! (கைதட்டல்)
ஒன்றும் கிடையாதுபுனிதமாக இருந்தால்  சேட்டுக் கடைக்குப் போய் அடகு வைப்பானாபுனிதமாக இருந்தால் ஏனய்யா டாஸ்மாக் போவ தற்கு விற்பதற்காகப் போகிறான்அதனாலே இது போலித்தனம்.
ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில்!
ஆனால்இங்கே அவர்கள் தவறாக சொல்லவில்லைநீண்டகாலமாக கருதி வருவதைத்தான் சொன்னார்கள்எங்களை மாதிரி ஒன்றுமில்லாத மொட்டையான ஆட்கள் இல்லைஅவர்கள் வாக்கு வாங்க வேண்டும்.  அவர்கள் ஓட்டு கேட்க வேண்டி யவர்கள்எங்களுக்கும் ஒன்றும் கிடையாதுஏறினால் ரயில்இறங் கினால் ஜெயில் (கை தட்டல்). அப்படி என்றால் சரிஅவ்வளவுதான்மூன்றாவதாக கொலை செய்கிறாயாஅதுக்கும் தயார்நோயினால் ஒருவன் சாகக் கூடாதுவிபத்தினால் சாகக்கூடாதுகொள்கைக்காக செத்தால்அதைவிட வேறு கிடையாது.
தாலி அகற்றும் விழாமாட்டுக்கறி விருந்துஇதுதான் இந்துத்துவா நோய்க்கும் மருந்து என்பதை சொல்லி விடை பெறுகிறேன்வணக் கம்நன்றிவாழ்க பெரியார்வளர்க பகுத்தறிவு.
_
இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்கள்.
கலந்துகொண்டவர்கள்
திராவிடர் கழக வட மாவட்டங் களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன்சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள்மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ் சோதிமாநில மாணவரணிச் செய லாளர் பிரின்சு என்னரெசு பெரியார்சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம்சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் தமிழ்சாக்ரட்டிஸ்சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணி யம்மைதொழிலாளரணி செல்வராசுமுத்துக்கிருஷ்ணன்பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி.வீர பத்திரன்ஏழுகிணறு கோ.கதிரவன்,  தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,  செயலாளர் செ..பார்த்தசாரதிதுணை செய லாளர்கள் கோவீஇராகவன்சா.தாமோதரன்தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன்செயலாளர்அனகை ஆறுமுகம்வடசென்னை மாவட்டத் தலைவர் தி.வே.சு.திருவள் ளுவர்கோ.தங்கமணிசைதை தென்றல்ஜீவாவழக்குரைஞர்கள் வீரமர்த்தினிதெஅருள்மொழிபெரியார் களம் இறைவிதங்க.தன லட்சுமிவளர்மதிபசும்பொன் மீனாட்சிசுமதிவனிதாஆவடி மோகனப்ரியாமரகதமணிபூவை செல்விபவானிசந்தியாவட சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் புரசை அன்புச்செல்வன்தென்சென்னை மாவட்ட இளைஞ ரணித் தலைவர் கு.செல்வேந்திரன்,  கூடுவாஞ்சேரி ராசுபெரியார் மாணாக்கன்பொறியாளர் .குமார்ஜெகத் விஜயக்குமார்தரமணி மஞ்சுநாதன்மாணிக்கம்ஒளிவண் ணன்தங்க.இரமேஷ்திருவொற்றியூர் கணேசன்வெற்றி,  சுரேஷ்கலை யரசன்கலைமணி,  இசையின்பன்காரல்மார்க்ஸ்உடுமலைசிறீராம்ராவந்த்கோடம்பாக்கம் மாரியப்பன் உள்பட திராவிடர் கழகம்இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்இந்திய கம்யூனிஸ்ட்தமிழ்மாநில காங்கிரசுவிடுதலை சிறுத்தைகள் கட்சிமனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந் திரளாக பங்கேற்றனர்.
----------------------
தாலி அகற்றும் விழா - மாட்டுக்கறி விருந்து வாரீர்!
இந்த சென்னையிலே ஒரு தொலைக்காட்சியிலே தாலிபற்றிய ஒளிபரப்பைக் காட்டக்கூடாது என்று சொல்கிறான்மீறினால் டிபன்பாக்ஸ் குண்டுவெடிகுண்டு என்கிறான்.  ஏப்ரல்-14 அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள்அந்த நாளில் சென்னையில் பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை எங்களுடைய பெண்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள். (கைதட்டல்).
ஒத்த கருத்து  உள்ளவர்கள் வரலாம்அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றிய உடன்மாட்டுக்கறி விருந்து நடைபெறும். (கைதட்டல் ஆரவாரம்மாட்டுக்கறி விருந்துக்கு யார்யார் வருகிறீர்களோ இப்போதே ரிசர்வ் செய்து கொள்ளுங்கள்குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் உண்டுஏனென்றால்நான் என்ன சாப் பிடுவது என்பதை இராமகோபாலய்யர் முடிவு பண்ணுவதா?  எங்கள் வீட்டில் என்ன செய்வதுஅல்லது இராமகிருஷ்ணன் வீட்டிலேமுத்தரசன் வீட்டிலேபீட்டர் அல்போன்ஸ் வீட்டிலேஎன்ன சமைப்பது என்று இவர்கள் முடிவு செய்வார்களா?
எனக்கு டயாபடிசுங்கதித்திப்பு வேண்டாம் என்றால்அது நியாயம்அதுமாதிரி சொல்லுங்கள்பசுவைமட்டும் பாதுகாப்பார்களாம்ஏன் எருமை மாடு என்னய்யா பாவம் பண்ணியதுஒரே விஷயம் கருப்புத் தோல் என்பதாலா? (ஆரவாரம்சிந்திக்க வேண்டாமாஆகவேதான் நண்பர்களேநான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

-விடுதலை19.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக