வெள்ளி, 21 நவம்பர், 2025

கழகத் தோழர் கி.காண்டீபன் மறைவு



பேரமனூர், நவ. 19- பேரமனூர் திராவிடர் கழக பொறுப்பாளர்

கி.காண்டீபன் (வயது 52), 2.11.2025 அன்று காலை 7.00 மணியளவில் இயற்கை எய்தினார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகரியம், பேரமனூர், எம்.ஜி.ஆர். தெருவில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் மா. நரசிம்மன் கழக கொடி போர்த்தினார். கழக பொதுக்குழு உறுப்பினர் செங்கை சுந்தரம் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
உடன் மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர் மு. அருண், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் சே. சகாயராஜ், மாவட்ட அமைப்பாளர் அ.சிவ குமார், மாவட்ட துணைப் பொறுப்பாளர் சி.தீனதயாளன், மறைமலை நகர கழகத் தலைவர் திருக்குறள் வெங்கடேசன், மு ஏழுமலை, தென் சென்னை மாவட்டச் செய லாளர் செ.ர பார்த்தசாரதி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தி.பிற்பகல் 3.00 மணியளவில் இரங்கல் உரை ஆற்றினர்.
மாலை 4.00 மணி அளவில் புறப்பட்ட இறுதி ஊர்வலம், வீரவணக்க முழக்கத்துடன் இடுகாடு சென்றடைந்தது., இடுகாட் டில் உடல் புதைக்கப்பட்ட பின் சிறிது நேரம் அமைதி காக்கப்பட்டது.
இடுகாட்டில் அ.தி.மு.க நகர செயலாளர் எம்.ஜி. கே. கோபி கண்ணன், சிந்தனையாளர் பேரவை நிறுவனர் பன்னீர்செல்வம் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
பேரமனூர் நகர கழக தலைவர் கி நீலகண்டன், பேரமனூர் நகர செயலாளர் சு.விஜயராகவன், காட்டாங்குளத்தூர் ம.கருணாநிதி, மேனாள் நகர்மன்ற உறுப்பினர் முனுசாமி, கி.காண்டீபன் இணையர் கா.அனிதா, மைத்துனர் தினேஷ், மகன் கா.செல்வா, மகள் கா.மலர், குடும்பத்தினர், மறைமலை நகர் ஆட்டோ ஓட்டுநர்கள் கோத்ரேஜ் தொழிற்சாலை ப.மணிவண்ணன், கோ.ஆனந்தராஜ் மற்றும் நண்பர்கள் இறுதிவரை கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்,
சுயமரியாதைச் சுடரொளி கி.காண்டீபன் எண்ணப்படி, குடும்பத்தின ரின் ஒத்துழைப்புடன்; எந்த வகை மூடச் சடங்குகள் இன்றி கழகக் கொடி போர்த்தி இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.

- விடுதலை நாளேடு, 19.11.25


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக