வியாழன், 9 அக்டோபர், 2025

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!


தமிழ்நாடு

* இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மனதை உலுக்குகின்றன!
* போர் நிறுத்தத்திற்கு ஒன்றிய அரசு முயற்சிக்கவேண்டும்!
காசா மீதான தாக்குதலைக் கண்டித்து
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்!

சென்னை, அக்.8 இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மனதை உலுக்குகின்றன! போர் நிறுத்தத்திற்கு ஒன்றிய அரசு முயற்சிக்கவேண்டும்! காசா மீதான தாக்குதலைக் கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

காசா இனப்படுகொலகளைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் சென்னை எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் இன்று (8.10.2025) காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், ம.தி.மு.க. பொருளாளர் செந்திலதிபன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, த.வா.க. தலைவர் வேல்முருகன், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறூப்பினர் உ.வாசுகி, மேனாள் மாநிலச் செயலாளர்கள் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரை யாற்றும்போது,

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரக்கூடிய கண்மூடித்த னமான தாக்குதல்கள், நம் எல்லோருடைய மனதை இன்றைக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய மனது மட்டுமல்ல, உலகத்தையே இன்றைக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு

பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களையும், அய்க்கிய நாடுகள் அவையின் கொள்கைகளையும் அப்பட்டமாக மீறும் இந்தத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, மனிதநேய பண்போடு நம்மையெல்லாம் ஒருங்கிணைத்து இந்தக் கண்டன கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சார்ந்த அமைப்பு இதை எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கிறது! எழுச்சியோடு என்று சொல்வதைவிட உணர்ச்சியோடு இதை ஏற்பாடு செய்திருக்கிறது!

இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவிற்கும், குறிப்பாக, மாநிலச் செயலாளர் தோழர் சண்முகம் அவர்களுக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த கூட்டத்தில் பங்கெடுத்திருக்கக்கூடிய நாம் மட்டுமல்ல; மனிதநேய சிந்தனை கொண்டிருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதரும் காசாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இனப்படுகொலையை கண்டித்துக் கொண்டிருக்கிறோம்.

பாலஸ்தீன மக்களுக்கு நம்முடைய மனிதாபிமான, மனித உரிமை ஆதரவை மனப்பூர்வமாகநாம் வழங்குகிறோம்.இதுதான் இந்தக் கண்டன இயக்கத்தின் முழக்கமாக அமைந்திருக்கிறது!

50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்

கடந்த ஓராண்டாகவே, காசாவில் இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய தாக்குதல்கள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இதுவரையில், ஏறக்குறைய 11 ஆயிரம் பெண்கள் – 17 ஆயிரம் குழந்தைகள் – 175 பத்திரிக்கையாளர்கள் – 125 அய்.நா. ஊழியர்கள் என்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; 26 ஆயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்திருக்கிறார்கள்;ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்; சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஓராண்டில் காசாவின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுவிட்டது!

ஆனாலும், இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு எதிராக, பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எல்லோருடைய இதயமும் நொறுங்கி போயிருக்கிறது!

அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொடுமை களுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டுச் சொல்ல வேண்டும் என்றால்,கடந்த ஜூன் மாதத்தில்,  பட்டினியால் வாடக்கூடிய பாலஸ்தீனர்கள், உணவுப் பொருள் ஏற்றி வரும் லாரியை எதிர்பார்த்துக் காத்திருந்தபோது, 45 பேரை இஸ்ரேல் இராணுவம் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். உணவுக்காக காத்திருந்தவர்களின் உயிரையே பறித்திருக்கக்கூடிய இந்தக் கொடூரத்தை பார்த்து, எல்லோருடைய இதயமும் நொறுங்கி போயிருக்கிறது.

மனித உரிமைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமையான இந்த அநீதிகளைக் கண்டிக்காமல் – அமைதியாக கடந்து செல்ல யாருக்காவது மனது ஒப்புமா?

சில நாள்களுக்கு முன்னால், மற்றொரு செய்தி வந்தது…

காசாவில் மரணத்தின் விளிம்பில் தவித்துக்கொண்டு இருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு வழங்க, உணவுப் பொருள்கள் – மருந்துகள் – குழந்தைகளுக்கான பால் பவுடர்களைக் கொண்டு சென்ற, 47 நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்களைத் தடுத்து கைது செய்திருக்கிறது இஸ்ரேல்.

பன்னாட்டுச் சட்டங்களை மீறும் இதுபோன்ற செயல்களைக் கண்டிக்காமல் நம்மால் இருக்க முடியுமா?

இஸ்ரேல் நடத்திக்கொண்டிருக்கும் இனப்படுகொலை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்!

காசாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரக்கமற்ற படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திக்கொண்டிருக்கும் இனப்படுகொலை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இதுதான் இந்தக் கூட்டத்தின் நோக்கமாக அமைந்திருக்கிறது.

இதற்கான முயற்சிகளை, இந்திய ஒன்றி யத்தை ஆளக்கூடிய பா.ஜ.க. அரசு வேகமாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்தக் கூட்டத்தின் மூலமாக எல்லோருடைய சார்பிலும் நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

தாக்குதல்களை நிறுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்!

ஒன்றிய பா.ஜ.க. அரசு, இஸ்ரேல் மற்றும் பிற தொடர்பு டைய நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து, இந்தத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுத்தாகவேண்டும்.

அய்க்கிய நாடுகள் சபை மற்றும் பிற பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து, காசாவில் அமைதியை நிலைநாட்டவும், மனிதாபிமான உதவிகளை செய்யவும், ஒன்றிய அரசு முயற்சிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

வேறொரு நாட்டு விவகாரமாகப்
பார்க்கக் கூடாது!

மனிதாபிமானம் இருக்கும் எல்லோரும் இதை வேறொரு நாட்டு விவகாரமாக நாம் பார்க்கக் கூடாது.

உலக அமைதி என்பது, எல்லோருக்கும் பொதுவானது! மனித உரிமை என்பதை எல்லோரும் காக்க வேண்டும்! மானுட உயிர்கள் ஒவ்வொன்றும் விலைமதிப்பு இல்லாதது! இந்த மூன்றையும் காக்கின்ற கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது!

இந்த மோசமான நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, உணவு – மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அவசிய உதவிகளும், உடனடியாக  முழுமையாக வழங்கப்பட வேண்டும்.

தெளிவான வாக்குறுதிகள்
வழங்கப்பட வேண்டும்!

பாலஸ்தீனர்களின் மறுவாழ்வுத் திட்டம், காசாவை மறு கட்டமைப்பு செய்வது – மனிதாபிமான உதவிகளை தொடர்ச்சியாக வழங்குவது ஆகியவை குறித்து தெளிவான வாக்குறுதிகள் வழங்கப்பட வேண்டும்!

அனைத்து பணயக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

உலக நாடுகள் முன் வைக்கும் நிபந்தனைகள் – உறுதிமொழிகள், பாலஸ்தீன மக்களுக்கு நன்மை செய்வதாக அமைய வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை உங்களிடம்நான் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்!

வருகின்ற14 ஆம் நாள், தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற இருக்கிறது.

இந்தக் கூட்டத்தொடரில், காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்தும், அங்கு உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை இந்திய அரசு எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வைத்தும், சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்படும். இந்தத் தீர்மானம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருக்கும்; அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, அனைத்துக் கட்சியினரும் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

கடுமையான கண்டனத்தைத்
தெரிவித்துக் கொள்கிறேன்!

இந்த கூட்டம் மூலமாக, காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

அப்பாவி மக்கள் உயிர் இழப்பது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற என் விருப்பத்தை கோரிக்கையாக முன்வைத்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

முதலமைச்சர் உரையைத் தொடர்ந்து, காசா இனப்படுகொலையைக் கண்டித்து ஒலிமுழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

காசாவில் நடக்கும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தாத அய்.நா.வின் போக்கைக் கண்டித்தார். நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவரும் சூழலில், அமைதிக்கான நோபல் பரிசைக் குறிவைத்துத் தான் திடீரென போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவதாகக் குற்றம் சாட்டினார். காசா மட்டுமல்லாமல், இலங்கையில் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளான போதும் அய்.நா. அமைப்பு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். இது தொடக்கம் தான்; இந்த இயக்கம் காசா மக்கள் மீட்கப்பட்டு, சுதந்திர பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தொடர்ந்து நடைபெறும் என்று உரையாற்றினார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாவட்டத் தலைவர்கள் இரா.வில்வநாதன், ப.முத்தையன், தளபதி பாண்டியன், வே.பாண்டு, மாவட்டச் செயலாளர்கள் செ.ர.பார்த்தசாரதி, கோ.நாத்திகன், புரசை அன்புச்செல்வன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பொதுக்குழு உறுப்பினர் தனலட்சுமி, தங்கமணி, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் காஞ்சி கதிரவன், மு.இரா.மாணிக்கம், உள்ளிட்ட ஏராளமான திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். (தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முழு உரை நாளை வெளிவரும்.)

- விடுதலை நாளேடு, 8.10.25

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முழக்கம்!


தமிழ்நாடு

காசா பகுதியில், கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதல்,
60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்று உள்ளது இஸ்ரேல்!
மதங்கள் பிரிக்கலாம்; ஆனால், நாங்கள் மனங்களால் ஒன்றுபட்டு இருக்கின்றோம்!
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்! வன்முறையைக் கண்டிக்கின்றோம்! மனிதநேயத்தோடு கண்டிக்கின்றோம்!

சென்னை, அக்.9 காசா  பகுதியில், கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதிமுதல், இஸ்ரேல், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்று உள்ளது! மதங்கள் பிரிக்கலாம்; ஆனால், நாங்கள் மனங்களால் ஒன்றுபட்டு இருக்கின்றோம். கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்! வன்முறையைக் கண்டிக்கின்றோம்! மனிதநேயத்தோடு கண்டிக்கின் றோம்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

காசா இனப்படுகொலைகளைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் சென்னை எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நேற்று (8.10.2025) காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

அவரது கண்டன உரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு, மனிதநேயத்தோடு ஒரு வரலாறு படைக்கக்கூடிய அற்புதமான கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டினுடைய ஒப்பற்ற திராவிட மாடல் ஆட்சியினுடைய நாயகரான முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில், சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மானுடப் பற்றுள்ள ஓர் இயக்கம்

இந்த இயக்கம் மானுடப் பற்றுள்ள ஓர் இயக்கம்; மானுட உரிமைகளுக்காகப் போராடக் கூடிய இயக்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், காசா இனப்படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

இவ்வார்ப்பாட்டத்திற்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆற்றல்மிகு மாநில செயலாளர் அன்பிற்குரிய தோழர் சண்முகம் அவர்களே,

உலக மக்களுடைய பார்வையை ஈர்க்கக்கூடிய அளவிற்கு…

ஓர் அற்புதமான செய்தியை தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுடைய பார்வையை ஈர்க்கக்கூடிய அளவிற்கு, மிகச் சிறப்பாக எனக்கு முன் உரையாற்றிய நம்முடைய மாண்புமிகு, மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு அடுத்து உரையாற்ற இருக்கக்கூடிய அருமைத் தோழர் உ.வாசுகி அவர்களே, அருமைத் தோழர் செல்வப்பெருந்தகை அவர்களே, செந்திலதிபன் அவர்களே, தோழர் வீரபாண்டியன் அவர்களே, தோழர் தொல்.திருமாவளவன் அவர்களே, தோழர் மகமது அபுபக்கர் அவர்களே, தோழர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களே, தோழர் வேல்முருகன் அவர்களே, தோழர் நித்தியானந்த் அவர்களே, தோழர் பாலசுப்பிரமணியம் அவர்களே, தமிம் அன்சாரி அவர்களே,

இந்நிகழ்வில் சிறப்பாக பங்கேற்றுக் கொண்டி ருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேனாள் செயலாளர்களும், இந்நாள் தேசிய பொறுப்பாளர்களுமாக இருக்கக் கூடிய அருமைத் தோழர்கள் பாலகிருஷ்ணன் அவர்களே, இராமகிருஷ்ணன் அவர்களே,

புரட்சிகரமான வணக்கம்!
சுயமரியாதை வணக்கம்!!

இந்த மேடையில் அமர்ந்திருக்கக்கூடிய  அனைத்து இயக்கங்களைச் சார்ந்த, எதிரில் இருக்கக்கூடிய அருமைத் தோழர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் புரட்சிகரமான வணக்கம்! சுயமரியாதை வணக்கம் உங்கள் அனைவருக்கும்.

இந்த நேரத்தில், காலத்தை அறிந்து, உலகத்திற்கு ஒரு பெரிய கொடுமை– மனிதநேயக் கொடுமை நடந்துகொண்டிருப்பதைத் தடுப்பதற்காக ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்து, அனைவரையும் ஒன்று திரட்டி, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் போகிறோம் என்ற ஓர் அருமையான அறிவிப்பையும் தந்திருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்களையும் அழைத்து,  ஏற்பாடு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அனைவரின் சார்பாக அன்பார்ந்த நன்றி! வாழ்த்துகள்!! பாராட்டுகள்!!

குறிப்பாக, தோழர் சண்முகம் அவர்கள், இந்த கண்டனக்  கூட்டத்தினுடைய தலைவர். அவருக்கு உறுதுணையாக இருக்கக்கூடியவர்கள் இந்நாள், முன்னாள், எந்நாளும் இருக்கக்கூடிய தோழர்கள் மட்டுமல்ல; இந்த மேடையில் இருக்கின்ற நாங்களும், அந்தக் கொடியை உயர்த்திப் பிடித்து, அந்த உணர்வை,  அந்த உரிமையை முழங்குவோம் என்பதுதான் மிக முக்கியமான ஒன்றாகும்.

‘‘காசா இனப்படுகொலையைக்
கண்டிக்கின்ற கண்டன இயக்கம்’’

தோழர்களே, ஒன்றே ஒன்று –  ‘‘காசா இனப் படு கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்’’ என்று இங்கே தலைப்பைப் போட்டிருக்கிறார்கள்.

ஆனால், நண்பர்களே! முதலமைச்சர் அவர்கள் இங்கே  கலந்துகொண்டு உரையாற்றும்போது, ஒரு சிறிய திருத்தத்தைச் செய்தார்.

என்ன அந்தத் திருத்தம் தெரியுமா?

இது வெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தோடு முடியாது.

ஆகவே, ‘‘காசா இனப்படுகொலையைக் கண்டிக்கின்ற கண்டன இயக்கம்’’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

இந்த இயக்கம், இந்த ஒரு நிகழ்ச்சியோடு நின்று விடாது. இதனுடைய எதிரொலி, செயல்திட்டம், தேவை எல்லா இடங்களிலும் பரவும் என்பதுதான் மிக முக்கியமானதாகும்.

அதுமட்டுமல்ல, மனிதநேயம் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

அய்.நா. சபை என்பது  கொலு பொம்மையா?

ஓர் அதிகாரமும் இல்லாமல், வேடிக்கைக் காட்டு கின்ற விந்தை மனிதர்களா?

அய்.நா. சபையில் மனித உரிமை ஆணையம் என்பது இருக்கிறது; அது என்ன தீர்மானம் போட்டிருக்கிறது?

இதோ என்னுடைய கையில் இருக்கிறது, ஆதா ரத்தோடுதான் சொல்கிறேன்.

காசாவில், இஸ்ரேலால் நடத்தப்படுவது
ஓர் இனப்படுகொலையே!

அந்தத் தீர்மானத்தில் மிக முக்கியமாக, காசாவில், இஸ்ரேலால் நடத்தப்படுவது ஓர் இனப்படுகொலை (ஜெனோசைடு) என்று அவர்கள் அறிவித்து, குற்றவாளியாக இஸ்ரேலை நிறுத்தி இருக்கிறது. இஸ்ரேல் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.

அப்படிக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்தக் குற்றவாளியை விசாரணை செய்து தண்டனை வழங்கப்படவேண்டாமா?

அந்த குற்றவாளிக்கு உலகம் முழுவதும் இருப்பவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக துண்டறிக்கை அடித்திருக்கிறார்கள். கம்யூ னிஸ்ட் தோழர்களும், திராவிடர் கழகத் தோழர்களும் எப்போதும் சிக்கனமாக இருப்போம்; செய்யவேண்டிய செயலைச் சிறப்பாகச் செய்வோம்; சொல்லவேண்டிய கருத்துகளைச் சிறப்பாகச் சொல்வோம்.

60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்று உள்ளது!

அந்தத் துண்டறிக்கையில் உள்ளவற்றைப் படிக்கிறேன், ‘‘காசா  பகுதியில், கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதிமுதல், இஸ்ரேல், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்று உள்ளது.’’

இது எவ்வளவு பெரிய கொலைகார நிலை?

உயிர்கள் அல்லவா, மனித உயிர்கள் அல்லவா?

மதங்கள் பிரிக்கலாம்; ஆனால், நாங்கள் மனங்களால் ஒன்றுபட்டு இருக்கின்றோம்.

ஒவ்வொரு நாளும் பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டு வருகின்றனர், இஸ்ரேல் படைகளால்.

இதில் என்ன அரசியல் இருக்கிறது?

நோபல் பரிசு வேட்டையாளரான டிரம்ப், தசா வதாரங்களில் ஒருவர் அவர்.

இங்கே பார்த்தால் ஒரு மாதிரி சொல்வார்; அங்கே பார்த்தால் வேறுவிதமாக சொல்வார். அவரோடு கூடிக் குலாவுகிறவர்கள் இருக்கிறார்கள்; அவர்களை மீற முடியாதவர்கள் இருக்கிறார்கள்.

இந்தக் காலகட்டத்தில், இதை ஒரு மக்கள் இயக்க மாகக் கட்டமைத்து, நாடெங்கும் பிரச்சார இயக்கமாகக் கொண்டு போகவேண்டிய கடமை இருக்கிறது.

அவர்கள், இனப்படுகொலை செய்கிறார்கள் என்கிறபோது, எங்கே நடவடிக்கை?

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நடவடிக்கைக் கிடையாது?

அதேபோல, காசாவிலே இனப்படுகொலை, நட வடிக்கை கிடையாது.

எங்கெல்லாம், யாருக்கெல்லாம் மனித நேயத்திற்கு இடமில்லையோ, அவர்களுக்கெல்லாம் ஆதரவாக இருப்பதுதான், இந்த மக்கள் கூட்டம். இதில் கட்சி இல்லை; ஜாதி இல்லை; வேறுபாடு இல்லை என்பதை நன்றாக உணர்ந்து, இந்த இயக்கத்தை வலுப்படுத்துவோம்; இந்தக் கோரிக்கைகளை வலி யுறுத்துவோம்.

தமிழ்நாட்டு மண்தான், இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடிய மண்!

சட்டமன்றத்தில், தீர்மானம் நிறைவேற்று வதற்காகச் சொல்லியிருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். ஒரு மாநில சட்ட மன்றம்தானே என்று நினைக்காதீர்கள்.

இந்த மண் தான் இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடிய மண்; இந்த மண்தான் சிறப்பான மண்.

எனவே, தமிழ்நாட்டிலிருந்து எது கிளம்பி னாலும், அது வெற்றியாக இருக்கும் என்பது மட்டுமல்ல,  உலகத்திற்கே வழிகாட்டக் கூடியதாக இருக்கும்.

அப்படிப்பட்ட இந்தப் பெரியார் மண்ணில், புரட்சி மண்ணில், சிங்காரவேலர் மண்ணில், காமராஜர் மண்ணிலே இந்தக் கண்டன இயக்கம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கி்ன்றது.

மனிதநேயத்தோடு கண்டிக்கின்றோம்!

எனவேதான், கைகோர்த்து நிற்கின்றோம், கண்டன இயக்கமாக இதனைக் கட்டிக் கொண்டு போவோம்!

கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்!

வன்முறையைக் கண்டிக்கின்றோம்!

மனிதநேயத்தோடு கண்டிக்கின்றோம்.

இக்கண்டன இயக்கத்திற்கு ஏற்பாடு செய்த தோழர்களுக்கு நன்றி!

இது முதல் கட்டம்தான், முடிவல்ல!

அந்த முதல் கட்டத்தை நாம் தொடங்கியிருக்கின்றோம்; இது வளர வேண்டும். நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 09.10.2025

ஆர்ப்பட்டம் குறித்த காணொலி



வியாழன், 2 அக்டோபர், 2025

தந்தை பெரியார் 147ஆம் பிறந்த நாள் (17.9.2025) கழகத் தோழர்கள் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு

 மயிலை நொச்சி நகர் (கற்கரை லூப் சாலை) பகுதியில் மகளிர் அணி சார்பில் உறுதிமொழி ஏற்பு

-விடுதலை நாளேடு, 22.09.25

'பெரியார் உலக'த்திற்குத் தமிழர் தலைவரிடம் சென்னை கழக மாவட்டங்களின் மகளிரணி -மகளிர் பாசறையினர் சார்பில் நன்கொடை

 

நன்கொடை

 

சென்னை கழக மாவட்டங்களின் மகளிரணி -மகளிர் பாசறையினர் சார்பில் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் அன்று 'பெரியார் உலக'த்திற்கு ரூ.1,00,000 நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். (சென்னை
17-9-2025)

- விடுதலை நாளேடு,20.09.2025