திங்கள், 21 ஜூலை, 2025

தென் சென்னையில் தந்தை பெரியார் -146ஆவது பிறந்த நாள் விழா

       17.09.2024 நண்பகல் 12.00 மணி அளவில் மயிலாப்பூர் நொச்சி நகர்    பகுதியில் தந்தை பெரியாரின் 146 வது பிறந்த நாளை முன்னிட்டு நெகிழித்திரை வைக்கப்பட்டு, அதன் அருகே தந்தை பெரியாரின் படம் அலங்கரித்து வைத்து மாலை அணிவிக்கப்பட்டது. 

பகுதி கழகத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் இர வில்வநாதன் தலைமையில், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி முன்னிலையில் 100 பேருக்கு கேசரி இனிப்பு வழங்கப்பட்டது.

மாவட்ட துணை செயலாளர் கோ.வீ. ராகவன், தொழிலாளர் அணி தலைவர் ச மாரியப்பன், இளைஞர் அணி செயலாளர் ந.மணிதுரை, இளைஞர் அணி துணைத் தலைவர் ச. மகேந்திரன், இளைஞர் அணி துணை செயலாளர் இரா.மாரிமுத்து, தரமணி ம.ராஜி, பெரியார் ஆதவன் மற்றும் இன்பக் கதிர் ஆகியோர் பங்கேற்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக