புதன், 30 ஜூலை, 2025

பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி அளிப்பது செங்கல்பட்டு மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்க முடிவு தென்சென்னை கூட்டத்தில் தீர்மானம்


சென்னை, ஜூலை30– பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி அளிப்பது எனவும், செங்கல்பட்டு மாநாட்டிற்கு வாகனங் களில் சென்று பங்கேற்பது என்றும் தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல்  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது,

27.07.2025, ஞாயிற்றுக் கிழமை, முற்பகல் 11.00 மணிக்கு திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதி கஜபதி தெருவில் உள்ள ஆர்.வீ.ஆட்டோ ஒர்க்ஸ் வாயிலில் தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல்  கூட்டம் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

‘பெரியார் உலகம்’  நிதி திரட்டல், செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க  நூற்றாண்டு நிறைவு மாநாடு மற்றும் ‘குடிஅரசு இதழ்’ நூற்றாண்டு நிறைவு விழா, ‘விடுதலை ஏடு’ சந்தா சேர்த்தல், இயக்க பணிகள் குறித்து துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை, இளைஞரணி மாவட்ட செயலாளர் பெரியார் யுவராஜ், துணைத் தலைவர் அ.அன்பு, துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, பகுதி கழக பொறுப்பாளர்கள் சூளைமேடு நல்.இராமச் சந்திரன், இராயப்பேட்டை கோ.அரிகரன், எம்.ஜி.ஆர்.நகர் கண்ணன் ஆகியோர் கருத்துகளையும் செயல் திட்டங்களையும் கூறினர்.

மாநில  இளைஞரணி  துணைச் செயலாளர் சோ.சுரேஷ் செயல் திட்டங்கள் வகுப்பது குறித்தும், குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயலாற்றுவது  குறித்தும் விளக்கி உரையாற்றினார்.

அய்ஸ் அவுஸ் உதயா, மா.இனியவள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

‘பெரியார் உலகம்’  நிதியை பெருமளவில் திரட்டி தருவது என்றும்,  செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க  நூற்றாண்டு நிறைவு மாநாடு மற்றும் ‘குடிஅரசு இதழ்’ நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு பெருமளவில் வாகனங்களில் சென்று பங்கேற்பது என்றும், மாநாடு குறித்து சுவர் விளம்பரம் செய்தல், நெகிழி திரை வைத்தல்,  தெருமுனைக் கூட்டம் நடத்தி பரப்புரை செய்வது என்றும், ‘விடுதலை ஏட்டிற்கு’ சந்தாக்களை சேர்த்தல் என தீர்மானிக்கப்பட்டது.

இறுதியில் கோட்டூர் புரம் ச.தாஸ் நன்றி கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக