செவ்வாய், 18 மே, 2021

காணொலி வாயிலாக நடைபெற்ற சென்னை மண்டலக் கலந்துரையாடல் கூட்டம்:


 திமுக ஆட்சி அமைய 5000 கி.மீ. பிரச்சாரம் செய்த தமிழர் தலைவருக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டு!


சென்னை மே 18. சென்னை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது.

தலைமைச் செயற்குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை செயல் படுத்தும் நோக்கத்தில், 16-.05-.2021, ஞாயிறன்று காலை 11 மணியளவில் சென்னை மண்டலக் கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

தொடக்கத்தில்  திராவிட மாண வர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கட வுள் மறுப்புக் கூறினார். கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள சென்னை மண்டலச் செயலாளர் தி.செ.கோபால் கலந்துரையாடல் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் நோக்கவுரை ஆற் றினார். அமைப்புச் செயலாளருடன் நிகழ்வை ஒருங்கிணைத்த பிரின்சு என்னாரெசு பெரியார் புதிய கோணத்தில் பிரச்சாரத்தை கொண்டு செல்லவேண்டிய தேவை குறித்து பேசியது அனைவரின் கவனத்தைக் கவர்ந்தது. அதையொட்டி பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

மாவட்டப் பொறுப்பாளர்களாக வடசென்னையின் செயலாளர் கணேசன், தென் சென்னையின் செய லாளர் பார்த்தசாரதி, சோழிங்க நல்லூர் தலைவர் வீரபத்ரன், ஆவடி செயலாளர் க.இளவரசு, தாம்பரம் தலைவர் முத்தையன், கும்மிடிப் பூண்டி செயலாளர் இரா.ரமேஷ். திருவொற்றியூர் தலைவர் எண்ணூர் மோகன் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளையும், ஆலோசனை களையும் பகிர்ந்து கொண்டனர்.

இளைஞரணிப் பொறுப்பாளர் களான மாநில துணைச் செயலாளர் பொழிசைக் கண்ணன், சென்னை மண்டலச் செயலாளர் இர.சிவசாமி, அமைப்பாளர் சோ.சுரேஷ், ஆவடி மாவட்டத்  தலைவர் வெ.கார் வேந்தன், செயலாளர் சோபன்பாபு, நகர தலைவர் தமிழ்மணி, பூவை மணிமாறன், சு.வெங்கடேசன், திரு நின்றவூர் இர.பிரேம்குமார், தாம்பரம் மாவட்டத் தலைவர் தே.சுரேஷ், செயலாளர் சட்டநாதன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் மணித்துரை, அமைப்பாளர் சிவ சீலன், வடசென்னை மாவட்டத் தலைவர் தளபதி பாண்டியன், செய லாளர் இந்தரஜித், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் ப.சக்கரவர்த்தி, திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் இர. சதீசு ஆகியோரும், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, திராவிட மாணவர் கழக,   சட் டக் கல்லூரி மாநில துணை அமைப் பாளர் பிரவீன் உள்ளிட்ட தோழர்கள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

கலந்துரையாடலின் முடிவில் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மரபு வழியாகவும், இக்காலச் சூழலுக்கேற்பவும் பிரச் சாரத்தை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகளின் மனித விரோத முன்னெடுப்புகளின் காரணமாக, இளைய தலைமுறையினரிடம் தந்தை பெரியார் மிகவும் வேகமாக சென்று சேர்ந்து கொண் டிருக்கும் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளத் தவறக் கூடாது என்று குறிப்பிட்டார்.

முன்னதாக பெருந்தொற்றுக் காலத்தையும் துச்சமென மதித்து, தமிழக சட்டமன்ற தேர்தல் வெற் றிக்கு தமிழகம் எங்கும் சுற்றிச் சுழன்று சுமார் 5,000 கி.மீ மேலாகப் பயணம் செய்து தி.மு.க. தலைமையிலான கூட் டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நெஞ்சாரப் பாராட்டு கிறது என்றும், தி.மு.க கூட்டணியை வெற்றி பெறவைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும், ’உளமாற’ என்று பதவி யேற்றதற்கும், தகுதி வாய்ந்த அமைச் சரவை அமையக் காரணமாக இருந்த முதலமைச்சர் மானமிகு, மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தும், தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி சுவரெழுத்துப் பிரச்சாரம் செய்வ தென்றும், விடுதலையை ஜீபீயீ வடிவத் தில் அனுப்புகின்ற எண்ணிக்கையை விரிவுபடுத்த உறுதியேற்பதாகவும் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட 5 தீர்மானங்களை,   ஆவடி மாவட்டத்தின் அமைப்பாளர் உடுமலை வடிவேல் முன்மொழிந்தார். அனைவராலும் அய்ந்தும் ஒருமன தாக வழிமொழியப்பட்டது.

இறுதியில் தாம்பரம் மாவட்டத் தின் செயலாளர் கோ. நாத்திகன் நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக