ஞாயிறு, 29 டிசம்பர், 2019

கிரகண மூடநம்பிக்கையை முறியடிக்கும் நிகழ்ச்சி (சென்னை, 26.12.2019)

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், Parthasarathy Rationalist உட்பட, புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், வானம் மற்றும் வெளிப்புறம்


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், Anbu உட்பட, புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறம்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், Parthasarathy Rationalist மற்றும் Vilvanathan R உட்பட, பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உணவு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் சாப்பிடுகின்றனர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உணவு


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார்

26.12.19 முற்பகல் நிகழ்ந்த சூரிய மறைப்பின் (கிரகணத்தின்) பொழுது மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில் பெரியார் திடல் வாயிலில் உணவு உண்டு மகிழ்ந்தோம்!


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், புன்னகைப்பவர்கள்
இந்தக் கடமையைத்தான் திராவிடர் கழகம் செய்து கொண்டுள்ளது; மூளையைப் பிடித்த கிரகணம் நீங்குவதுதான் உண்மை விடுதலை
கிரகண மூடநம்பிக்கையை விளக்கி தமிழர் தலைவர் அறிக்கை
* சூரிய கிரகணம் - சந்திர கிரகணம் இயற்கையின் நிகழ்வு
* இதில் மூடநம்பிக்கைகளைப் புகுத்துவது வெட்கக்கேடு!

* விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்கிறது அரசமைப்புச் சட்டம்

சூரிய கிரகணம் என்பது இயற்கை யில் நிகழக்கூடிய ஒன்றே! இதில் மூடநம்பிக்கையைப் பரப்பி வருகிறார் கள். இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ மக்களிடத்திலே விஞ்ஞான மனப்பான் மையை வளர்க்கவேண்டும் - இது ஒவ்வொரு குடிமகனின் கடமை என் கிறது - அந்தக் கடமையை திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் செய்து கொண்டிருக்கிறது என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
கிரகணங்கள் (eclipses) என்பவை சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை - பூமி, சூரியனை சுற்றி வரும்போது - ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் மறைப்புகள் ஆகும்; குறிப்பிட்ட நேரத் திற்குப் பிறகு அது விலகிவிடும்; வழக்கம் போன்ற வெளிச்சம் பூமியில் உள்ளோ ருக்குக் கிடைக்கும்.
இதை அறிவியலில் - விஞ்ஞான வகுப் பில் நமது மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும்கூட தேவையற்ற புராண மூடநம்பிக்கைக் குப்பைகளையும் நமது மாணவர்கள், இளம்பிஞ்சுகள் உள்ளத்தில் அச்சுறுத்தும் வகையில், கற்பனைக் கட்டுக் கதைகளைப் பரப்பி, மூடநம்பிக்கைகளைப் பரப்பி, அதன் தோஷம் நீங்க, தர்ப்பைப் புல்லை, சட்டிப் பானை முதல் வீட்டில் எல்லா இடங்களிலும் போடவேண்டும்; பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து ‘‘கிரகண தோஷம்'' நீங்கிட மந்திரம் ஜபித்து, தானம் வழங்கவேண்டும் என்றும்,
கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாதா?
அந்தக் கிரகணத்தில் பெண்கள் குறிப் பாக கர்ப்பிணிப் பெண்கள் - வெளியே வரக்கூடாதென்றும், இன்னும் பல மூட நம்பிக்கைகளை அடுக்கடுக்காய் மூளைக்கு விலங்கு போட்டு, நமது மூளையில் ஏற்றி வைத்துள்ளார்கள்.
கிரகணம்பற்றி விஞ்ஞான பாடம் எடுக்கும் ஆசிரியர்களே, வீட்டில் குளிப்பது, தர்ப்பைப் புல்லைப் போடுதல் முதலிய சடங்குகளுக்குள் சரணாகதி அடைவது மகாவெட்கக்கேடு! தந்தை பெரியார் கூறு வதுபோல், படிப்பிற்கும், பகுத்தறிவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை; வெறும் தேர்வு - மதிப்பெண் படிப்பினால் காதொடிந்த ஊசி அளவுக்குக்கூடப் பயனில்லை!
‘ராகு, கேது என்ற பாம்புகள்' விழுங்கு வதுதான் புராணக் கதை!
அதுமட்டுமா?
சூரியனுக்குக் குழந்தை பிறக்குமா?

சூரியனுக்கும், குந்திதேவிக்கும் பிறந்த குழந்தைதான் கர்ணன் என்ற பாரத (பாதக) கதை.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் 27 பெண் டாட்டிகள் என்பது, சந்திரன் பெற்ற சாபத் தால்தான் தேய்பிறை - பிறகு வேண்டிக் கொண்டதால் வளர்பிறை என்ற  பூகோள அடிப்படை அறிவையே கெல்லி எறியும் விஞ்ஞானத்திற்கு எதிரான அஞ்ஞானக் கதைகள்!
படித்தவர்கள் பலர்கூட ஜோதிடத்தை நம்பி நாசமாகிறார்கள்; ஏடுகள் ராசி பலன், வார பலன், நாள் பலன் எல்லாவற்றிற்கும், ஆங்கில ஆண்டுக்கும் பிறந்த நாளை வைத்து, இந்த கிரக பலன் கூறுவது எவ்வளவு வேடிக்கையும், விந்தையும் நிறைந்தது! இதில் கூடுதல் வெட்கக்கேடு - கம்ப்யூட்டர் ஜோதிடமாம்!  அஞ்ஞானத்தை விஞ்ஞானத்தின்மூலம் பரப்பும் வெட்கக்கேடு!
வானியல் வேறு; ஜோதிடம் வேறு!
வானவியலை (Astronomy) பகுத்தறிவா ளர்களான நாங்கள்  முழுக்க முழுக்க ஏற் கிறோம். ஆனால், ஜோதிடம் என்ற Astrology  என்பது போலி விஞ்ஞானம் (Pseudoscience). 9 கிரகங்களா,8 கிரகங் களா? புதிய கிரகங்கள் ஏராளம் உள்ளனவே - அவற்றிற்கென்று ஜோதிடத்தில் இடம் இல்லையே! செவ்வாய்த் தோஷம் பேசி, அதை நம்பி பல பெண்களின் திருமண வாழ்க்கையைக்கூட இழந்து தற்கொலை வரை செல்லும் கொடுமை உள்ள நாட்டில், செவ்வாய்க் கோளில் நாம் ஏவிய ஏவுகணை ராக்கெட்டுகள் வெற்றிகரமாகத் திரும்பி னவே - அதுவும் ஒரு செவ்வாய்க்கிழமை யிலே - அதைக் கண்ட பிறகாவது, திருந்த வேண்டாமா? மூடநம்பிக்கை இருளிலி ருந்து பகுத்தறிவு வெளிச்சத்திற்கு வர வேண்டாமா?
அரசமைப்புச் சட்டம்

என்ன கூறுகிறது?
நமது அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ பிரிவு, குடிமக்களின் அடிப்படைக் கடமை களில் ஒன்றான,
அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல்,
கேள்வி கேட்டு ஆராயும் பண்பு, மனித நேயம், சீர்திருத்தம் இவைகளைப் பரப்ப கட்டளை இட்டுள்ளதே!
அதன்மீது பிரமாணம் எடுத்தவர்கள் பரப்புகிறார்களா? பகுத்தறிவாளர்களும், இடதுசாரிகளும், முற்போக்காளர்களும் தானே அதைச் செய்கிறார்கள். ஆட்சியா ளர்கள் இதை கேலிக் கூத்தாக்கி மூடநம் பிக்கையை முழு மூச்சுடன் பரப்பும் பணி யில் ஈடுபடுவது அரசமைப்புச் சட்ட பிர மாண உறுதிமொழிக்கு விரோதம் அல்லவா?
மூளைக் கிரகணம் நீங்கவேண்டும்
இவர்களைப் பிடித்த ‘‘மூளைக் கிர கணம்'' எப்போது நீங்குமோ அப்போதுதான் உண்மை விடுதலை! விடுதலை!!

கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
26.12.2019
கேள்விக்கென்ன பதில்?

சூரிய கிரகணத்தின்போது இந்துக் கோவில்கள் மட்டும் மூடப்படுவதேன்?

சூரிய கிரகணத்தின்போது கோவில்களின் நடை மூடப்பட்டு, கிரகணம் முடிந்த பின்னரே திறக்கப்படுகிறது!
ஏன் இந்து கடவுள்களுக்கு மட்டும்? மற்ற மதக் கடவுள்களுக்கு இல்லை. மாதாக் கோவில், பள்ளிவாசல் - மசூதிகள் ஏன் மூடப்படுவதில்லை?
அந்தக் கடவுள்களுக்கு மட்டும் ‘பயம்' இல்லையா? ‘தோஷம்' பிடிக்காதா?
வேடிக்கையாக இல்லையா?

கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு நிகழ்ச்சியின் விவரம் 5 ஆம் பக்கம் காண்க
அறிவியல் ஆர்வமிகுதியில் பெண்கள், குழந்தைகள் பெரியார் திடலில் குவிந்தனர்
சூரிய கிரகணத்தின்போது மூடநம்பிக்கைகள் முறியடிப்பு

மூடநம்பிக்கை முறியடிப்பு நிகழ்வில் கழகக் குடும்பங்களோடு தமிழர் தலைவர் உணவருந்தினார்


சென்னை,டிச.26, சூரிய கிரகண மூடநம்பிக் கைகளை முறியடிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்கழகம் சார்பில் இன்று (26.12.2019) காலை நடத்தப் பட்டது.  நிகழ்ச்சியை திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார்.
செந்தமிழ் சேகுவேரா அறிவியல் விளக்கங் களை எடுத்துரைத்தார். இளைஞர்கள், மாண வர்கள், குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராள மானவர்கள் பெரிதும் ஆர்வத்துடன் திரண்டிருந் தார்கள்.  கிரகணத்தின்போது சூரியனை பாது காப்பான கண்ணாடியால் அனைவரும் கண்டு பயன் பெற்றனர்.
சூரியகிரகண மூடநம்பிக்கைகளை முறி யடிக்கும் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிற்றுண்டி அருந்தினார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி,  பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால் வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத் தய்யன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலா ளர்கள் செ.ர.பார்த்த சாரதி,கோ.நாத்திகன், தி.செ. கணேசன்,  விடுதலைநகர் ஜெயராமன் மற்றும் சி.வெற்றி செல்வி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பெரியார் களம் இறைவி, சவுந்தரி நடராசன், தங்க.தனலட்சுமி, மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, வழக்குரைஞர் ந.விவேகானந்தன், சென்னை மண்டல இளை ஞரணி  செயலாளர் இர.சிவசாமி, பெரியார் சமூகக் காப்பு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் சோ.சுரேஷ், மகளிரணி நூர்ஜகான், சுமதி கணேசன், பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, பூங்குழலி, ஆ.வெங்கடேசன், திண்டிவனம் சிறீராமுலு, திருவண்ணாமலை கவுதமன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், சீனுவாசன், புரசை சு.அன்புச்செல்வன்,  மடிப்பாக்கம் பாண்டு, கொரட்டூர் பன்னீர்செல்வம், கொடுங்கையூர் கோ.தங்கமணி, திராவிடர் மாணவர் கழகத்தினர் உள்பட கழகத் தோழர்கள், பொதுமக்கள் பெருந் திரளாக திரண்டிருந்தனர். கருவுற்ற பெண்கள் வெளியே வரக்கூடாது என்கிற மூடநம்பிக்கையை முறியடித்து சீர்த்தி - பகலவன் இணையர் தமிழர் தலைவருடன் சூரிய கிரகணத்தின்போது உணவருந்தினார்கள்.
"செய்வதையே சொல்கிறோம், சொல்வதையே செய்கிறோம்" என்று மூடநம்பிக்கை முறியடிப்பு நிகழ்ச்சி எழுச்சியுடன் பெரியார் திடலில் கழகத் தோழர்களால் சிறப்பாக ஏற்¢பாடு செய்யப்பட்டது.
அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அரும்பாக்கம் சா.தாமோதரன் சிக்கன் பிரெட் அளித்தார். வானவியல் காட்சி திரையிடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நடை பெற்றது. பெரியார் பிஞ்சுகளுக்கான ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டது.
- விடுதலை நாளேடு 26 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக