ஞாயிறு, 29 டிசம்பர், 2019

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி திராவிட மாணவர் கழகத் தோழர்கள் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டுப் போராட்டம்!

சென்னை. டிச. 21- குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி, திராவிட மாணவர் கழகஜத்தின் சார் பில் சாஸ்திரி பவன் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் மாநில மாணவரணிச் செயலாளர் ச.பிரின்சு நன்னாரெசு பெரியார் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப் பையும் மீறி, நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடிரிமைத் திருத்தத் சட்டத்தை மத்தியில் உள்ள பி.ஜே.பி அரசு நிறைவேற்றியது. இதனை எதிர்த்து நாடெங்கிலும் மாணவர்கள் கடுமையான போராட்டத்தை முன் னெடுத்தனர்! அதன் தொடர்ச்சியாக திராவிட மாணவர் கழகத்தினர், அதன் மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் மத்திய அரசின் அலுவலகமான சாஸ்திரிபவன் அலுவலகத்தை 19-.12.2019 காலை 11 மணி அளவில் முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்! எதிர்பாராத இந்தப் போராட்டத்தால் அந்தப்புகுதியில் சற்று நேரம், போக்குவரத்து நெரிச லும், பரபரப்பும் ஏற்பட்டது!

முற்றுகை! மறியல்! சிறை!

கல்லூரி சாலையில் உள்ள வானி யல் ஆயுவு மய்யத்திலிருந்து ஆர்ப் பாட்டம் தொடங்கியது! பிரின்சு என்னாரெசு பெரியார் மத்திய அர சைக் கண்டித்து முழக்கமிட்டபடியே வர, தோழர்களும் உணர்ச்சிபூர்வமாக முழக்கங்கள் இட்டபடியே பின் தொடர்ந்தனர்! கல்லூரி சாலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் ஹேடோசு சாலை வழியாக சென்று, சாசுத்திரிபவனை அடைந்தது! அங்கு சாஸ்திரிபவன் அலுவலகத்தின் முதன்மை வாயில் முன்பாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவலர்கள் குவிந்தவுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்! அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர் களை காவல் துறையினர் கைது செய்து, வள்ளுவர் கோட்டம் சாலை யில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத் திற்கு எதிரில் உள்ள, ஏபிவிபி திருக் கோயில் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

சிறைக்குள்ளும் அறிவுரையாடல்!

கைது செய்து செய்யப்பட்டத் தோழர்கள், தாங்கள் திராவிடர் கழ கத்திற்கு எப்படி வந்தோம்  என்ப தைப்பற்றி தனிதனியாக விவரித்தனர். கழகத்தின் பேச்சாளர் சே.மெ. மதிவதனி ஆசிரியரின் சிறப்புகளைப் பற்றி மாணவரணித் தோழர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் பேசினார். மாணவரணித் தோழர்கள் அனை வரும் தனித்தனியாக ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஆவடி விஜய் ஜாதி, அதன் தன்மைகள், அதை மக்கள் இன்னமும் புரிந்துகொள்ளாமல் இருப்பதால் ஏற்படும் தொல்லைகள் பற்றி விரிவாகப் பேசினார். அதைத் தொடர்ந்து புழல் அறிவுமாணன் பகுத்தறிவு, மூடநம்பிகை ஒழிப்புப் பாடல்களைப் பாடி தோழர்களை உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்வை பெரியார் களம் தலைவர் தோழர் இறைவி நெறிப்படுத்தினார். பிற்பக லில் கைதானவர்களை பொதுச்செய லாளர் வீ.அன்புராஜ், மண்டலச் செய லாளர் தே.செ.கோபால் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினார். மாலை 6 அளவில் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, மாநில அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட் டத் தலைவர் பா.முத்தையன், செய லாளர் கோ.நாத்திகன், தாம்பரம் நகரச் செயலாளர் சு.மோகன்ராஜ், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி,  பொன் னேரி வே.அருள், ஆவடி மாவட்ட இ¬ளைஞரணிச் செயலாளர் வி. சோபன்பாபு, தாம்பரம் ரூபன் தேவ ராஜ், புழல் அறிவுமாணன், பூந்தமல்லி சுரேசு, பூந்தமல்லி நகர அமைப்பாளர் மணிமாறன், பூவை சு.வெங்கடேசன், ஆவடி மாவட்ட மாணவரணிச் செய லாளர் வெற்றி, ஆவடி இளைஞரணித் தோழர் இ.தமிழ்மணி, திருவொற்றியூர் இளைஞரணித் தோழர் இரா.சதீசு,  மண்டல மாணவரணித் தலைவர் இர.சிவசாமி, பெரியார் களம் தலை வர் இறைவி, தென்சென்னை மாவட்ட மாணவரணித் தலைவர் வி.விசுவாசு, மாணவரணித் தோழர்கள் பொ.இ. பகுத்தறிவு, ஆவடி மாவட்ட மாண வரணித் தலைவர் செ.பெ.தொண் டறம், சென்னை மண்டல மாணவர ணிச் செயலாளர் வ.ம.வேலவன், வட சென்னை மாவட்ட மாணவரணிச் செயலாளர் சு.தமிழ்செல்வன், சி.பிர பாகரன், கோயம்பேடு மா.திருமால், மாநிலக்கல்லூரி மாணவர் வை.கு. நிரஞ்சன், சோலவரம் பா.சக்கரவர்த்தி, தரமணி கோ.மஞ்சநாதன், ஊரப் பாக்கம் பி.சீனிவாசன், சட்டக்கல்லூரி மாணவர் செ.பிரவீன்குமார், திரு வள்ளூர் மு.மேகலா, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மே.மதி வதனி, செங்குன்றம் கவு.ஜெகத்விஜய குமார், ஆகியோர் கைது செய்யப்பட் டனர்.

-  விடுதலை நாளேடு, 21.12.19


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக