புதன், 30 ஏப்ரல், 2025

தமிழ் வார விழா'


தமிழ்நாடு

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி (ஏப்.29) ஒரு வாரம் தமிழ் வார விழாவாகக் கொண்டாடப்படும் என்று 'திராவிட மாடல்' அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவையில் அறிவித்தார். உலகத் தமிழராய்ச்சி மன்றம் சார்பில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா மற்றும் முதலமைச்சருக்குப் பாராட்டு விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். 'தமிழ் வார விழா' அறிவிப்புக்குப் பல்வேறு வகையில் முயற்சி எடுத்த தமிழர் தலைவருக்கு, விழாக் குழுவின் சார்பில் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், கவிஞர் ஈரோடு தமிழன்பன், உலகத் தமிழாராய்ச்சி மன்றப் பொதுச்செயலாளர் பொறியாளர் த.ஞானசேகரன், மும்பை சு.குமணராசன், துரைகண்ணன் (அமெரிக்கா), பேராசிரியர் மறைமலை இலக்குவனார், 'கலைமாமணி' பொன்னடியார், முத்துமணி நன்னன், மு.முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டனர் (சென்னை, 29.4.2025).

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில் தமிழ் வார விழா – முதலமைச்சருக்குப் பாராட்டு

திராவிடர் கழகம்

உலகத் தமிழ் மொழி நாள் மற்றும் தமிழ் வார விழா மற்றும் ஏப்ரல் 29லிருந்து மே 5 வரை தமிழ் வார விழா என அறிவித்து தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், புரட்சிக்கவிஞருக்கும் பெருமை சேர்த்த திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. தமிழ் இணையக் கல்விக்கழகம் கலையரங்கத்தில் ஏப்ரல் 29, 2025 அன்று அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், அமெரிக்கா, இலெமுரியா அறக்கட்டளை, மும்பை, கருநாடக மாநில தமிழ் பத்திரிகையாளர் சங்கம், பெங்களூரு, உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம், கவிஞர் புதுவைச் சிவம் இலக்கியப் பேரவை, புதுச்சேரி, வலைத்தமிழ், அமெரிக்கா. கவிஞர் கோ மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மய்யம் ஆகிய தமிழ் அமைப்புகள் இணைந்து “உலகத் தமிழ் மொழி நாள் மற்றும் தமிழ் வார விழா” கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மறைமலை இலக்குவனார் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விரைவில் வெளியிட உள்ள அந்த புத்தகப் பிரதியை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் சிறப்பு விருந்தினர்கள் பொறியளர் த.ஞானசேகரன், சு.குமணராசன் (மும்பை), துரைக்கண்ணன் (அமெரிக்கா), கலைமாமணி பொன்னடியார், முத்துமணிக்கண்ணன், மு.முத்துராமன், முனைவர் மைக்கேல் பாரடே உள்ளனர்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

Published April 29, 2025

தமிழ்நாடு

சென்னை, ஏப்.29- புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தும் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு என முழங்கிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 135ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2025) காலை 10 மணியளவில், சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த புரட்சிக் கவிஞர் படத் திற்கு மலர் தூவியும் மரி யாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் வா.நேரு, பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் வேல்.சோ.நெடுமாறன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், சி.வெற்றிச்செல்வி, அ.இளவேனில், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மு.பவானி, வி.தங்கமணி, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவிஞர் வீரமுத்து, வழக்குரைஞர் துரை.அருண்,

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், துணைத் தலைவர் மயிலை சேதுராமன், அரும்பாக்கம் சா.தாமோதரன், ஈ.குமார், சண்முகப்பிரியன், பெரியார் யுவராஜ், ச.மகேந்திரன், பெரியார் இனியன்,

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் – கழகத் தலைவர் மரியாதை

திராவிடர் கழகம்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 135ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன்: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர்), கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழக செயலவைத் தலைவர் வீரமர்த்தினி, வேல்.சோ. நெடுமாறன், இரா. வில்வநாதன், பசும்பொன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (சென்னை 29.4.2025)


திங்கள், 28 ஏப்ரல், 2025

திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் அறிவிப்பு


விடுதலை நாளேடு

வடசென்னை மாவட்டம்
மகளிரணி தலைவர்: மணிமேகலை சுப்பையா
செயலாளர்: த. இளவரசி
மகளிர் பாசறை தலைவர்: த.மரகதமணி
செயலாளர்: க.சத்தியா
தென் சென்னை மாவட்டம்
மகளிரணி தலைவர்: வளர்மதி
செயலாளர்: குமாரி
மகளிர் பாசறை தலைவர்: பவானி
செயலாளர்: அஜந்தா
ஆவடி மாவட்டம்
மகளிரணி தலைவர்: ஜெயந்தி
செயலாளர்: ராதிகா
மகளிர் பாசறை தலைவர்: சுகந்தி
செயலாளர்: அன்புச்செல்வி.
தாம்பரம் மாவட்டம்
மகளிரணி தலைவர்: நாகவள்ளி
செயலாளர்: நூர்ஜகான்
மகளிர் பாசறை தலைவர்: அருணா
செயலாளர்: உத்ரா
திருவொற்றியூர் மாவட்டம்
மகளிரணி தலைவர்: விஜயலட்சுமி
செயலாளர்: தமிழரசி
மகளிர் பாசறை தலைவர்: யுவராணி
செயலாளர்: மணியம்மை
கும்மிடிப்பூண்டி மாவட்டம்
மகளிரணி தலைவர்: ராணி
செயலாளர்: நதியா
மகளிர் பாசறை தலைவர்: பொன்னேரி செல்வி
செயலாளர்: இளையராணி
திருச்சி மாவட்டம்
மகளிரணி தலைவர்: ரெஜினா பால்ராஜ்
செயலாளர்: சாந்தி கணேசன்
துணை தலைவர்: வசந்தி சேவியர்
துணை செயலாளர்: ரேவதி மகாமணி
மகளிர் பாசறை தலைவர்: அம்பிகா கணேசன்
செயலாளர்: சங்கீதா தமிழ்மணி
துணை தலைவர்: புனிதா அசோக்குமார்
துணை  செயலாளர்: அமுதா குணசேகரன்
திருவெறும்பூர் ஒன்றியம்
மகளிர் பாசறை ஒன்றிய தலைவர்: ரூபியா ஸ்டாலின்
ஒன்றிய செயலாளர்: கவுரி விஜய் யோகானந்த்
திருச்சி மாநகரம்
மாநகரத் தலைவர்: பேபி ராம்தாஸ்
வேலூர் மாவட்டம்
மகளிரணி தலைவர்: இரா ராஜகுமாரி
செயலாளர்: பெ.இந்திரா காந்தி
மகளிர் பாசறை தலைவர்: ச. ரம்யா
செயலாளர்: சு.வசுமதி
வேலூர் மாநகரம்
மகளிரணி தலைவர்: மருத்துவர் தி.அனிதா
மகளிர் பாசறை தலைவர்: வீ.பொன்மொழி
தஞ்சாவூர் மாவட்டம்
மகளிரணி தலைவர்: தஞ்சை அ.கலைச்செல்வி
செயலாளர்: இ.அல்லிராணி வடசேரி
துணைத் தலைவர்: த.வள்ளியம்மை
துணைச் செயலாளர்: தெ.மலர்க்கொடி
மகளிர் பாசறை தலைவர்: ச.அஞ்சுகம்
செயலாளர்: ஏ.வெண்ணிலவு
தஞ்சாவூர் மாநகரம்
மகளிரணி தலைவர்: ந.கலைச்செல்வி
செயலாளர்: ப.சாந்தி
மகளிர் பாசறை அமைப்பாளர்: இரா.ரமணி
தஞ்சாவூர் ஒன்றியம்
மகளிரணி அமைப்பாளர்: அ.சாருலதா
திருவையாறு ஒன்றியம்
மகளிரணி தலைவர்: அல்பேனியா
செயலாளர்: மலர்க்கொடி
பூதலூர் ஒன்றியம்
மகளிரணி அமைப்பாளர்: வி.சுசீலா
ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம்
மகளிரணி அமைப்பாளர்: சு.மாதவி
கிருஷ்ணகிரி மாவட்டம்
மகளிரணி தலைவர்: சி.முருகம்மாள்
செயலாளர்: உண்ணாமலை
மகளிர் பாசறை தலைவர்: மா.சிவசக்தி
துணைத் தலைவர்: ப.சுதா
செயலாளர்: சி.வசந்தமல்லி
துணைச் செயலாளர்: பெ.அச்சுதா
ஓசூர் மாவட்டம்
மகளிரணி தலைவர்: து.சங்கீதா
செயலாளர்: கிருபா சின்னசாமி
துணைத் தலைவர்: செ.வாகினி
மகளிர் பாசறை தலைவர்: செ.செல்வி
செயலாளர்: சே.மெ.காவ்யா
துணைச் செயலாளர்: நிஷா
அரூர் மாவட்டம்
மகளிரணி தலைவர்: மணிமேகலை, கொலகம்பட்டி
செயலாளர்: கே.உமா, அம்மாபேட்டை
துணைச் செயலாளர்: புனிதவதி,
வெங்கடசமுத்திரம்
துணைத் தலைவர்: த.முருகம்மாள்,
வேப்பிலைப்பட்டி
மகளிர் பாசறை தலைவர்: பெ.கல்பனா. வேப்பநத்தம்
செயலாளர்: த.மு.சுடரொளி.
வேப்பிலைப்பட்டி
துணைத் தலைவர்: வெண்ணிலா
அன்பரசு, பாப்பிரெட்டிப்பட்டி
துணைச் செயலாளர்: அன்புச்செல்வி
தருமபுரி மாவட்டம்
மகளிரணி தலைவர்: நளினி கதிர்
செயலாளர்: காமலாபுரம் முனியம்மாள்
துணைச் செயலாளர்: அருணா பீமன்
மகளிர் பாசறை தலைவர்: கா.கவிதா
செயலாளர்: பெ.கோகிலா
துணைச் செயலாளர்: பாளையம் மஞ்சு
பட்டுக்கோட்டை மாவட்டம்
மகளிரணி தலைவர்: சுபத்ரா உத்ராபதி
துணைத்தலைவர்: சரோஜா நல்லதம்பி
செயலாளர்: ராஜலட்சுமி தமிழ்ச்செல்வம்
மகளிர் பாசறை தலைவர்: தேவி நீலகண்டன்
செயலாளர்: தேவிகா அண்ணாதுரை
துணைத் தலைவர்: ஜோதி சேகர்
சேலம் மாவட்டம்
மகளிரணி தலைவர்: சுஜாதா தமிழ்ச்செல்வம்
துணைத் தலைவர்: வீ.வாசந்தி
செயலாளர்: சு.மல்லிகா
துணைச் செயலாளர்: பூ..கோமதி
மகளிர் பாசறை தலைவர்: ப.காயத்ரி
துணைத்தலைவர்: மருத்துவர் ச.மேனகா
செயலாளர்: ப.கஸ்தூரி
துணைச் செயலாளர்கள்: சு.சீறிலேகா,
கலையரசி
புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படாத கழக மாவட்டங்களில் பழைய பொறுப்பாளர்களே தொடர்கிறார்கள்.
– சே.மெ.மதிவதனி
துணைப் பொதுச் செயலாளர்
தகடூர் தமிழ்ச்செல்வி
மாநில மகளிர் அணிச் செயலாளர்
பா.மணியம்மை
மாநில திராவிட மகளிர் பாசறைச் செயலாளர்

புதிய பொறுப்பாளர்கள்

விடுதலை நாளேடு

மகளிரணி செயலாளர் சாந்தி சுரேசு.
வட சென்னை மாவட்டம்
மாவட்ட மகளிரணி தலைவர்: பா. ரமணி
மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்: த.சத்யா

– தகடூர் தமிழ்ச்செல்வி

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

தென் சென்னை அரும்பாக்கத்தில் சுழலும் சொற்போர் ‘திராவிட மாடல்’ அரசுக்கு தடைக்கல்லாய் இருப்பது எது?

தென் சென்னை அரும்பாக்கத்தில் சுழலும் சொற்போர் ‘திராவிட மாடல்’ அரசுக்கு தடைக்கல்லாய் இருப்பது எது?

விடுதலை நாளேடு

 சென்னை, ஏப். 25  தென் சென்னை மாவட்டம், அரும்பாக்கம், பெருமாள் கோயில் தெருவில் 20.04.2025 அன்று மாலை 6 மணியளவில்  கழகப் பரப்புரைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தோழர் க.செல்வம் தலைமையிலும், மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்ட  கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன், துணைத் தலைவர்கள் டி. ஆர்.சேதுராமன், மு. சண்முகப்பிரியன், துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை மற்றும் இளைஞர் அணி தலைவர் ந.மணிதுரை ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

தொடக்கத்தில் புள்ளம்பாடி சி.பொற்செழியன்  கழகப் பாடல்களை பாடினார். கி. சங்குநாதன் வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக அறிவு வழி காணொலி சா.தாமோதரன் நன்றியுரை கூறி, நிகழ்ச்சியை நிறைவு செய்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாமன்ற உறுப்பினர் நா.அதியமான்(தி.மு.க.) மற்றும் க.இளவழகன்(ம.தி.மு.க) பங்கேற்றனர்.

ஆளுநரின் இடக்குதான்!

‘சுழலும் சொற்போர்’ நிகழ்வை முறைப்படி முனைவர் அதிரடி க.அன்பழகன் தொடங்கி வைத்து பேசினார். அதைத் தொடர்ந்து முதலாவதாக ‘நிதி மறுப்பு!’ என்கின்ற தலைப்பில், கழக மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, இரண்டாவதாக ‘ஹிந்தி திணிப்பு!’ என்கின்ற தலைப்பில் தலை மைக் கழகச் சொற்பொழிவாளர் இராம. அன்பழகன், மூன்றாவதாக ‘உரிமை பறிப்பு!’ என்கின்ற தலைப்பில்  கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன், நான்காவதாக  கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் தங்களது கருத்துகளைத் தரவுகளுடனும் எழுச்சிகரமாகவும் எடுத்து வைத்தனர்.

இடையிடையே தலையிட்டு சொல்லப்பட வேண்டிய கருத்துகளை வெளிக் கொணர்ந்தும், பார்வையாளர்களை சிந்திக்கவும், சிரிக்கவும் செய்தும், அதே சமயம் நால்வருடைய கருத்துகளையும் உள்வாங்கிய, நடுவராக வீற்றிருந்த அதிரடி க.அன்பழகன்  சிறப்பானதொரு கருத்து மழை பொழிந்து நிதி மறுப்பு, ஹிந்தித் திணிப்பு, உரிமை பறிப்பு, ஆளுநர் இடக்கு என்ற நான்கு தலைப்புகளில் பேசியதையும் தொகுத்து வழங்கி, எல்லாம் தடைகளாக இருந்தாலும், ‘திராவிட மாடல்’ அரசுக்கு தடைக்கல்லாய் இருப்பது ‘‘ஆளுநரின் இடக்கு” தான் என்று தீர்ப்பு வழங்கினார்.

ஆளுநர் ஊதியம் பிடித்தம் செய்யப்பட வேண்டும்!

இறுதியில் அவர், “தமிழ்நாடு ஆளுநர் பதவி நீட்டிப்பு செய்யப்படவில்லை. ஆகவே அவர் பதவியில் இருப்பதே தவறு. ஆகவே,  அவருக்கு சம்பளம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். நீட்டிப்பு செய்யாமல் தொடரும் காலத்திலிருந்து அவருக்குக் கொடுத்த ஊதியத்தை திரும்பப் பெறவேண்டும்” என்று தன்னுடைய கருத்தையும் ஒரு தீர்மானம் போல சொல்லி, அதற்கும் பார்வையாளர்களிடம் பலத்த கைதட்டல் பெற்றார். மேடையில் பங்கேற்றோருக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் துண்டு அணி விக்கப்பட்டது. இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கமும், எழுச்சியும் ‘இதே போல் மற்ற சென்னை மண்டல பகுதிகளிலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யவேண்டும்’ என்று தோழர்கள் பேசியவாறே கலைந்து சென்றனர்.

கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்!

செயலவைத் தலைவர் ஆ. வீரமர்த்தினி,, தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், சோழிங்கநல்லூர் மாவட்டக் காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் பாண்டு, ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் க.தமிழ்ச்செல்வன், உடு மலை வடிவேலு, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், பொதுக்குழு உறுப்பினர் சு.மோகன்ராஜ், நெய்வேலி ஞானசேகரன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் சு.அன்புச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் தங்க.தனலட்சுமி, புதுமை இலக்கியத் தென்றல் செயலாளர் வை, கலையரசன், பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் இயக்குநர் பசும்பொன், வடசென்னை கு.தங்கமணி, ஓட்டேரி பாஸ்கர், அயன்புரம் துரை ராசு, வழக்குரைஞர் மு.வேலவன், பகுத்தறிவு ஊடகப் பிரிவு மாநில செயலாளர் ஆவடி முருகேசன்,  செங்கல்பட்டு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அ.பா. கருணாகரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தென்சென்னை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி, வடசென்னை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் த.பர்தீன், அரும்பாக்கம் பகுதி மு. டில்லிபாபு, ,த. இராஜா, ஏ.மோகன், சி.முருகன்,
ஏ சுந்தர், சி.ரவி, த.சொ. சுப்பிரமணியன், அ.சி. சின்னப்பத்தமிழர், ஆவடி மாவட்டத் தோழர்கள் சிவகுமார், சி.ஜெயந்தி, க.ச.பெரியார் மாணக்கன், சு.வெங்கடேசன், தி.மணிமாறன், சுந்தர் ராஜன், ச.சுரேஷ், சைதை தென்றல், தஞ்சை ஏ.வி.என். குணசேகரன்,
அய்.சரவணன், சே.கோபாலகிருஷ்ணன், பா.இராஜேந்திரன், ந.இராமச்சந்திரன், சு.சிவகுமார், க.சுந்தரராஜன்,
வே.பன்னீர்செல்வம், க.செல்லப்பன்,
க. வஜ்ர வேலு, ஆ.வெ. நடராசன், சேத்பட் அ. நாகராசன்,  சா.இராஜேந்திரன், கருமலை கோ. மணிகண்டன், வெ. சித்தார்த்தன், அ.கருப்பையா, ஆ. துரைராவணன், இரா.முருகேசன், ஆனந்த மனோகர்,
சா. ஆனந்தகுமார், வெற்றிச்செல்வன்,
செ. இராகிலாதேவி, இராகவி, ஜி. சுரேஷ், எஸ். மகேஸ்வரன், குமரன் (புரட்சிகர இளைஞர் முன்னணி), கு. இளமாறன், பி. விக்ரம், ஒ.சுந்தரம்(தி.மு.க),, தி. முரளி, எழும்பூர் சி. செல்வராஜி,, இரா. கயல்விழி, ஆல்பர்ட், எஸ்.ஜெயராமன், ஆனந்தன், சு. நாகராஜன், எ. பிச்சைசாமி, ச.ரவி,
சு. வெற்றிச்செல்வன்

உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அனைவரது உரைகளையும் கேட்டு பயன்பெற்றனர்.

அரும்பாக்கத்தில் நடைபெற்ற ‘சுழலும் சொற்போர்’ நிகழ்வின் மகிழ்வாக அரும்பாக்கம் பகுதி கழக சார்பில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ 2000/-  வழங்கப்பட்டது.

வியாழன், 17 ஏப்ரல், 2025

ஒன்றிய அரசின் மும்மொழித் திணிப்பை கண்டித்தும், கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் மாற்றிட வலியுறுத்தியும் மயிலாப்பூரில் நடைபெற்ற கழகப் பொதுக் கூட்டம்

 

விடுதலை நாளேடு

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ஒன்றிய அரசின் மும்மொழித் திணிப்பை கண்டித்தும், கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் மாற்றிட வலியுறுத்தியும் நடைபெற்ற கழகப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு அவர்களுக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பயனாடை அணிவித்தார். தி.மு.க. தென் மேற்கு மாவட்ட செயலாளரும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த. வேலு சிறப்புரையாற்றினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் மதிவதினி, கழகப் பேச்சாளர் தே. நர்மதா, மயிலை கிழக்கு பகுதி செயலாளர் எஸ். முரளி, சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ரேவதி, இந்திய கம்யூனிஸ்ட் எஸ்.கே.சிவா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மய்யக் குழு உறுப்பினர் பி. சாரநாத், தி.மு.க. வட்ட செயலாளர் அ. தவநேசன், மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாநில ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் யுவராஜ், மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன் ஆகியோர் உள்ளனர். (மயிலை, 3.4.2025)

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருக! மயிலாப்பூரில் கழகப் பொதுக்கூட்டம்


திராவிடர் கழகம்

மயிலாப்பூர், ஏப். 17- தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் இளைஞர் அணி சார்பில் 03.04.2025 அன்று மாலை 6.30 மணி அளவில் மயிலாப்பூர், டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகில், மாவட்ட இளைஞர் அணி செயலாளர், பெரியார் யுவராஜ் தலைமையில் ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை திணிப்பை கண்டித்து, கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் மாற்றிட வலியுறுத்தி மாபெரும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், மாவட்டத் துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை, மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

மாவட்டத் துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன் தொடக்க உரையாற்றினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மய்யக் குழு மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் வி. சாரநாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர்
எஸ்.கே.சிவா, கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.
மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரை யாற்றினார். கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, கழக பேச்சாளர் தே.நர்மதா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
துணை பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றும் போது; இந்த மயிலாப்பூர் பகுதி சிறப்பு வாய்ந்த பகுதியாகும். இங்கேதான் இரண்டு வகையான மக்கள் குடி இருக்கிறார்கள். இங்கே இருக்கக்கூடிய டீகடை வைத்திருப்பவர்கள், மளிகைக்கடை வைத்திருப்பவர்கள், காய்கறி கடை வைத்திருப்பவர்கள், தள்ளுவண்டி வைத்திருப்பவர்களில் அனைவரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களே ஆகும். டீக்கடை நடத்தும், மளிகைக்கடை நடத்தும், தள்ளு வண்டியிலே காய்கறி விற்பனை செய்யும், ஆட்டோ ஓட்டும் எந்த நபராவது பார்ப்பனர்களாக இருக் கிறார்களா? இருக்க மாட்டார்கள்! அவர்கள் உயர் பதவிகளிலே தான் இருப்பார்கள்.

திராவிடர் கழகம்

நாம் கேட்கிறோமா?
ஒன்றிய அரசே பட்டியல் வெளி யிட்டுள்ளது. அதில் நூற்றுக்கு மூன்று பேராக இருக்கக்கூடிய பார்ப்பனர்கள், நூற்றுக்கு 97 விழுக்காடு உயர் பதவி களில் இருக்கிறார்கள். இதை யார் கேட்க வேண்டும்? தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவரான நாம்தான் கேட்க வேண்டும். ஆனால் நாம் கேட்கிறோமா?
தந்தை பெரியார் ஒருவர் தான் போர்க் குரலை உயர்த்தினார். எந்த உயர் பதவிகளையும் வகிக்காமல் சாதனைகளை செய்து காட்டினார்.
அன்று கல்வி ஒரு சிலருக்கு மட்டுமாகவே, அதுவும் பார்ப்பனர்களுக்கு மட்டுமாகவே இருந்தது. கிறித்தவ மதம் கல்வியில் ஒரு மாற்றத்தை உண்டாக்கியது.
தந்தை பெரியாரின் பகுத்தறிவு பரப்புரையின் காரணமாக மக்கள் விழிப்படைந்து கல்வியில் பெரும் முன் னேற்றத்தைக் கண்டு சமூக தர நிலையை பெற்றனர்.

குலக்கல்வித் திட்டம் விரட்டப்பட்டது
தந்தை பெரியார் என்ன செய்து விட்டார் என்று சிலர் கேட்கிறார்கள்;
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியில் முன்னேறுவதை தடுப்ப தற்காக அப்பொழுது முதலமைச்சராக இருந்த இராஜகோபாலாச்சாரியார் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். தந்தை பெரியார் போராட்டங்களை முன்னெடுத்து குலக் கல்வி திட்டத்தை விரட்டியடித்தார்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோ ரின் கல்வி வேலைவாய்ப்புக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை தடை செய்த போது; தந்தை பெரியார் வெகுண்டெழுந்து போராட்டங்களை நடத்தி, இந்திய அரசமைப்புச் சட்டத் தையே முதல் முதலாக திருத்த வைத்தவர் தந்தை பெரியாரும்,திராவிடர் கழகமும்தான்.
69 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆபத்து வந்தபோது, பார்ப்பனர்களான பிரதமர், குடியரசுத் தலைவர், முதலமைச்சர் ஆகியோரைக் கொண்டே சட்டத்தை திருத்த வைத்து பாதுகாப்பைப் பெற்று தந்தது திராவிடர் கழகம்! தமிழர் தலைவர் ஆசிரியர்! யாரோ ஒருவர் மட்டுமே படித்துக் கொண்டிருந்த போது; அதாவது பார்ப்பனர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்தபோது; எல்லா மக்களும் படிக்க வேண்டும் என்று போராடியது தான் திராவிடர் கழகம் – பெரியார்!
தமிழர்கள் படிக்க கூடாது என்பதற் காகவே திட்டமிட்டு அன்றைய முதலமைச்சர் இராஜகோபாலாச்சாரியார் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தார்; தந்தை பெரியார் போராடியதன் பயனாக இராஜகோபாலாச்சரியை ஒடவிட்டு, குலக்கல்வியை விரட்டி அடித்து அனைவரும் படிக்க வழி வகுத்தது திராவிடர் கழகம்!’நான் தமிழை ஆதரிப்பதற்கு காரணம், தமிழர்களின் முற்போக்குக்கு தமிழ் பயன்படுவதால் தான்’ என்றார் பெரியார்.

உயர்கல்வியில் முதலிடம்
ஆங்கிலம், ஆங்கிலேயர்களின் மொழி; ஆனால் ஆங்கிலம் நம்மை அந்நியப்படுத்திய மொழி அல்ல. ஹிந்தியும், சமஸ்கிருதமும் தான் நம்மை அடிமைப்படுத்தியது, அந்நிய படுத்தியது.
தமிழையும் ஆங்கிலத்தையும் மட்டுமே படித்த தமிழ்நாடு எந்த வகையில் தாழ்ந்து போனது! இந்தியாவிலேயே தமிழ்நாடு தானே, உயர்கல்வியில் முதல் இடத்தில் உள்ளது. இதை ஒன்றிய அரசே பட்டியலிட்டு கூறியுள்ளதே!
இன்று வக்பு திருத்த சட்டம் மூலம் இசுலாமியர்களிடம் கை வைத்திருக்கிறார்கள். நாளை கிறித்தவர்கள் மீது கை வைப்பார்கள் அதற்கு அடுத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் மீது கை வைப்பார்கள். ஆகையால் அனைவரும் விழிப்புடன் இருந்து பிஜேபி யை எதிர்க்க வேண்டும். வலிமை வாய்ந்த திராவிடர் கழகம் சொல்கிறது; ஒத்திசைவு பட்டியலுக்கு எடுத்துச் சென்ற கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.

ஒழிக்கும் வரை ஓய்வில்லை
திராவிடர் கழகத்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அம்பேத்கர் இயக்கங்களையும், பொதுவுடைமை இயக்கத்தையும் நசுக்க நினைத்தால், உங்களை ஒழிக்கும் வரை ஓய மாட்டோம்!
நீட் தேர்வை தீவிரமாக எதிர்த்து போராடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும்,திராவிட மாடல் அரசையும் வெகுவாக பாராட்டுகிறோம்’ என்று கூறி எழுச்சியுரையாற்றி முடித்தார்.

பங்கேற்றோர்
மாமன்ற திமுக உறுப்பினர் அ.ரேவதி, மயிலாப்பூர் கிழக்கு பகுதி திமுக செயலாளர் எஸ்.முரளி, மயிலாப்பூர் மேற்கு பகுதி திமுக செயலாளர், நந்தனம் மதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் கி.குமரப்பா, மண்டல செயலாளர் ரூதர்,கார்த்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் து.கா. பகலவன் ஆகியோர் பங்கேற்றனர்.
125ஆவது வட்ட திமுக செயலாளர் அ.தவநேசன் நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
சா.தாமோதரன், ச.மாரியப்பன், இராயப்பேட்டை கோ.அரிஹரன், ஈ.குமார், ச.மகேந்திரன், அய்ஸ் அவுஸ் அன்பு, அ.அன்பரசன், ச.துணைவேந்தன், ச.சந்தோஷ், வி.வளர்மதி, ஜெ. சொப்பன சுந்தரி, க.விசயராசா, பி.அஜந்தா, மு.பவானி, மு.பாரதி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி,ஜெயசங்கரி, பெரியார் மணிமொழியன், டைலர் கண்ணன், உதயா, மயிலாப்பூர் பாலு, கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, வே.பாண்டு, க. தமிழ்ச் செல்வன், சு.மோகன்ராஜ், சோ. சுரேஷ், வை.கலையரசன், மு.பசும்பொன், மு.செல்வி, செ.பெ. தொண்டறம், பெரியார் மாணாக்கன், உடுமலை வடிவேல், சு.அன்புச்செல்வன், பா.சிவகுமார், ச.தாஸ், சி.சண்முகம், சி.மெர்சி ஆஞ்சலாமேரி, சு.திலீபன், சோ.பாலு, அ.நாகராஜன், பரணி, கோ.தர்மன்,
ந. அய்யனார், ஆவடி நாகராசன், மேனாள் மாமன்ற உறுப்பினர் மு. தம்பிதுரை, ஆர். கிருஷ்ணவேணி, வி. சவுமியா, எ.லலிதா, ஜி.சோமு,ஆர். ஞானபிரபு, கே. சுகுமார், எ.குமாரி, தெ.கோ. வேலன், எம்.புகழேந்தி, கே. நித்தியானந்தம்,
கே.பாஷா, அ.மாதன்குமார், ம.நவந்துன், விசு, ஜி.சண்முகம், சி.தங்கசாமி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஹிந்தி திணிப்பு, மும்மொழித்திணிப்பு மற்றும் கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதற்கான விளக்கங்களை செவிமடுத்து எழுச்சியுடன் சென்றனர். முன்னதாக அறிவுமானனின் சிறப் பானதொரு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து நன்றியுரையாற்றினார்.
ஆங்காங்கே நெகிழித்திரைகளும், பரவலாக கழகக்கொடிகளும் நடப் பட்டிருந்தன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி ஆதலால் பயணிப்போர் செவிமடுத்துச் சென்றனர்.


-பொதுக்கூட்டம்,03.04.2025,மாலை 6.00 மணி, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர்.

திங்கள், 14 ஏப்ரல், 2025

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் உறுதிமொழி இது! தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை

 

விடுதலை நாளேடு
இரங்கல் அறிக்கை

அண்ணல் அம்பேத்கரை அணைத்து அழிக்கப் பார்க்கிறார்கள்;
நாம் எச்சரிக்கையாக இருந்து அதனை முறியடிப்போம்!

புத்த மார்க்கத்தை அணைத்து அழித்ததுபோல, அண்ணல் அம்பேத்கரையும் ஆரிய சக்திகள் அணைத்து அழிக்கப் பார்க்கின்றன. எச்சரிக்கையாக இருந்து அதனை முறியடிப்போம் – இதுவே, அவரின் பிறந்த நாளில் நாம் எடுக்கும் உறுதிமொழி என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

உலகத் தலைவர் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (14.4.2025).

உலகமெங்கும் உள்ள சமத்துவ விரும்பிகளும், சமூகநீதிப் போராளிகளும் தங்களது வழிகாட்டிகளாக தந்தை பெரியார், ‘பாபா சாகேப்’ அம்பேத்கரை ஏற்று, இன்றைய உரிமைப் போராட்டங்களுக்கு அவர்க ளையே வலிமைமிக்க பேராயுதங்களாக, போர்க் கருவிகளாகக் கொண்டு களப் பணிகளை மிகுந்த உற்சாகத்துடன் நடத்தி மகிழ்கிறார்கள்!

காரணம், பல்லாயிரம் ஆண்டு பழைமையான ஸநாதனத்தினை எதிர்த்து, சமத்துவ, சகோதரத்துவ, சுதந்திர அறிவுள்ள மக்கள் சமூகத்தினை ஒருங்கிணைக்க இவ்விரு புரட்சியாளர்களை விட்டால், விடியலுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் (மகளிர் உள்பட) உரிமைக்கு வேறு யாரும் கிடைக்கவே மாட்டார்கள் என்பது கல்லுப் போன்ற உண்மையாகும்!

பவுத்தத்தையே அணைத்து
அழித்தவர்கள் எச்சரிக்கை!

புரட்சியாளர் அம்பேத்கரை எதிர்த்து அழிக்க முடியாத காரணத்தால், ஆரியம் அதற்கே உரிய சூழ்ச்சித் திட்டமாகிய அணைத்து, புகழ்ந்து அழித்து விட ஆயத்தமாகி நிற்கும் பேரபாயம் நம்முன்னே உள்ளது!

எதிரிகளின் புகழ் வார்த்தைகள் – பாராட்டுரைகளை அம்பேத்கரின் உண்மைச் சீடர்கள் நம்பினால், இறுதியில் ஏமாற்றம்தான் மிஞ்சும்; தலைசிறந்த ஒழுக்க அறிவு மார்க்கமான பவுத்தத்தினை அணைத்து அழித்த வரலாற்றை – இந்திய மண்ணிலிருந்து விரட்டிய கொடுமையை – அதனை எவரே மறக்க முடியும்?

எனவே, ‘பாராட்டுகிறவர்கள்’ யார் என்பதை அறிந்து, அவர்களின் பாசாங்குத்தனத்தினைப் புரிந்து அம்பேத்கரை பரப்புவதைவிட முக்கியம் – தத்துவம், கொள்கை, லட்சிய ரீதியாக பாதுகாப்பதே முக்கியம்! வெகுமுக்கியம்!!

அண்ணலின் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தவர் நமது முதலமைச்சர்!

‘திராவிட மாடல்’ அரசின் ஒப்பற்ற நமது முதல மைச்சர், அம்பேத்கரின் பிறந்த நாளை ‘‘சமத்துவ நாளாக‘‘ அறிவித்து, உறுதிமொழி ஏற்கச் செய்துள்ள சாதனைக்கு – வரலாறு அவருக்கும், அவரது சிறப்புமிகு ஆட்சிக்கும் என்றென்றும் வாழ்த்துக் கூறும் என்பது நிச்சயம் – காரணம், அது ‘திராவிட ஆட்சியின் லட்சியம்’ அல்லவா! திராவிடர் இயக்க வரலாற்றில் இது ஒரு மைல்கல்!!

இருவரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தானே!!!

வாழ்க அம்பேத்கர்! வாழ்க பெரியார்!

 

 

       கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
14.4.2025   

அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது ஆண்டு பிறந்த நாள் தமிழர் தலைவர் தலைமையில் சிலைக்கு மாலை – உறுதிமொழி ஏற்பு

சனி, 5 ஏப்ரல், 2025

இராஜா அண்ணாமலைபுரத்தில் தமிழ்நாடு அரசாணைக்கு எதிராக கட்டப்பட்டுள்ள கோவிலை இடித்து அப்புறப்படுத்தக் கோரி புகார் மனு!

தமிழ்நாடு அரசாணைக்கு எதிராக கட்டப்பட்டுள்ள கோவிலை இடித்து அப்புறப்படுத்தக் கோரி புகார் மனு!

ஞாயிறு மலர், தமிழ்நாடு
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த இராஜா அண்ணாமலைபுரம் முதன்மை சாலையில் அமைந்துள்ள ‘தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலைய வளா’கத்திற்குள் மதச்சார்பின்மைக்கு எதிராகவும், சட்ட விரோதமாகவும், தமிழ்நாடு அரசின் அரசாணையை மதிக்காமலும் இந்து மத கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இக் கோவிலை இடித்து அப்புறப்படுத்தக் கோரி, தென் சென்னை மாவட்ட கழக இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து 28.03.2025ஆம் நாள் சென்னை மாநகராட்சிக்கு இணைய வழியில் (ஆன் லைனில்) புகார் அளித்துள்ளார்.
இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.