செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

தோழர் பாலமுரளி அவர்களின் தந்தையார் கந்தசாமி படத்திறப்பு

இன்று(19.2.17) மாலை குன்றத்தூர் அருகிலுள்ள சோமங்கலம் என்ற ஊரில் க.பாலமுரளி அவர்களின் தந்தை ச.கந்தவேல் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. படத்தை மண்டல தலைவர் தி.இரா. இரத்தினசாமி அவர்கள் திறந்துவைத்தார். வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் உரையாற்றினார். தென் சென்னை மாவட்ட, ஆவடி மாவட்ட மற்றும் தாம்பரம் மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

வியாழன், 13 பிப்ரவரி, 2025

திராவிடர் கழக புதிய பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியல் (2025)


திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள்

விடுதலை நாளேடு
திராவிடர் கழகம்

 வ.எண் - கழக மாவட்டம் - மானமிகு தோழர்கள் 
1 வடசென்னை சி.வெற்றிசெல்வி, தங்க.தனலட்சுமி,  தி.செ.கணேசன்
2 திருவெற்றியூர் மு.மணி காளியப்பன், பா.பாலு
3 தென்சென்னை மோகனா வீரமணி,  கோவி.இராகவன்
4 தாம்பரம் பொ.சுமதி சு.மோகன்ராசு
5 சோழிங்கநல்லூர் பி.சி.ஜெயராமன்,  இரா.கலைச்செல்வன்
6 கும்மிடிப்பூண்டி மு.இராணி,  ந.கஜேந்திரன்
7 ஆவடி பூவை செல்வி,  சிவ.ரவிச்சந்திரன்
8 திருவள்ளூர் க.ஏ.மோகனவேலு  (ராஜா நகரம்)
9 காஞ்சிபுரம் ந.சிதம்பரநாதன்,  அ.ரேவதி
10 செங்கல்பட்டு பூ.சுந்தரம்,  அ.பா.கருணாகரன்
11 தருமபுரி க.கதிர்,  கி.சங்கீதா
12 அரூர் வே.தமிழ்ச்செல்வன்,  ஆ.இளங்கோ
13 கிருஷ்ணகிரி இல.ஆறுமுகம் (காவேரிப்பட்டணம்)  கி.முருகேசன் (மத்தூர்) ஜான்சிராணி  (போச்சம்பள்ளி)
14 ஓசூர் அ.செ.செல்வம்,  கோ.கண்மணி
15 சேலம் கமலம்,  வேலாயுதம்
16 மேட்டூர் சிந்தாமணியூர் சுப்பிரணியன், ஓமலூர் பெ.சவுந்தரராஜன்
17 திருப்பத்தூர் பெ.ரா.கனகராஜ்,  இரா.இராசேந்திரன்
18 வேலூர் ச.கலைமணி,  சி.லதா
19 இராணிப்பேட்டை கோ.சூரியகுமார், தீ.வேண்டா
20 நாமக்கல் பொத்தனூர் க.சண்முகம், க.பொன்னுசாமி, கு.சாந்தி
21 ஆத்தூர் தம்மம்பட்டி ஜெயராமன்,  வாழப்பாடி சு.அமிர்தம்
22 கடலூர் கோ.புத்தன்,  இரமாபிரபா ஜோசப்
23 கள்ளக்குறிச்சி தி.பாலன்,  பெ.பாலசண்முகம்
24 விழுப்புரம் செ.சக்ரவர்த்தி,  கி.கார்வண்ணன்
25 திண்டிவனம் ப.வில்லவன் கோதை,  விஜயலெட்சுமி தாஸ்
26 விருத்தாசலம் தங்க.இராசமாணிக்கம்,  பெரியார் மணி
27 சிதம்பரம் கோவி.பெரியார்தாசன், பா.ராஜசேகரன் (சேத்தியாதோப்பு)
28 செய்யாறு தி.காமராசு,  என்.வி.கோவிந்தன்
29 திருவண்ணாமலை பு.பஞ்சாட்சரம்,  ப.அண்ணாதாசன்
30 அரியலூர் ரத்தின.ராமச்சந்திரன்,  இராஜ.அசோகன் (மீன்சுருட்டி)
31 பெரம்பலூர் இரா.அரங்கராசன்,  சி.பிச்சைப்பிள்ளை
32 மயிலாடுதுறை வி.அன்பழகன்,  ச.சந்திரசேகரன்
33 திருவாரூர் பி.சுவாமிநாதன், கலைவாணி சித்தார்த்தன்
34 நாகப்பட்டினம் தே.செந்தில்குமார்,  ந.கமலம்
35 தஞ்சாவூர் தீ.வ.ஞானசிகாமணி,  வ.ஸ்டாலின்
36 பட்டுக்கோட்டை இரா.நீலகண்டன், வளர்மதி சேகர்
37 மன்னார்குடி ஆர்.எஸ்.அன்பழகன்,  சு.சிங்காரவேலர்
38 கும்பகோணம் ஆ.தமிழ்மணி, வழக்குரைஞர் சு.விஜயகுமார்
39 திருச்சி சி.கனகராஜ்,  ம.சங்கிலிமுத்து
40 லால்குடி செம்பறை ந.தருமராஜ், மண்ணச்சநல்லூர்  எம்.முத்துசாமி
41 துறையூர் பெ.பாலகிருஷ்ணன்,    இரா.நந்தகுமார்
42 கரூர் சே.அன்பு,  உ.வைரன்
43 ஈரோடு கு.சிற்றரசு,  கோ.பாலகிருஷ்ணன்
44 கோபி க.யோகானந்தம்,  அ.பாட்டுசாமி
45 தாராபுரம் கி.மயில்சாமி,  வழக்குரைஞர்  ந.சக்திவேல்
46 திருப்பூர் இல.பாலகிருஷ்ணன்,  இல.ஆறுமுகம்
47 பொள்ளாச்சி ஜெ.செழியன்,  வேட்டைக்காரன்புதூர்  சக்திவேல்
48 கோயம்புத்தூர் இலா.கிருஷ்ணமூர்த்தி,  முத்து.மாலையப்பன்,
49 மேட்டுப்பாளையம் வெ.சந்திரன், சி.அரங்கசாமி
50 நீலமலை ஆ.கருணாகரன், சி.இராவணன்
வ. கழக மாவட்டம் மானமிகு தோழர்கள் எண்
51 புதுக்கோட்டை சு.தேன்மொழி, மு.சேகர்
52 அறந்தாங்கி த.சவுந்தர்ராசன்,  வே.அமுதா
53 திண்டுக்கல் பெ.கிருட்டிணமூர்த்தி,  கிரியம்பட்டி க.சதாசிவம்
54 பழனி சி.இராதாகிருஷ்ணன்
55 சிவகங்கை மணிமேகலை சுப்பையா
56 காரைக்குடி ஜெயலெட்சுமி திராவிடமணி, பலவான்குடி ஆ.சுப்பையா
57 இராமநாதபுரம் கயல் கணேசன்,  சி.கிருஷ்ணவேணி,
58 மதுரை புறநகர் அ.மன்னர்மன்னன், ரோ.கணேசன் (விக்கிரமங்கலம்)
59 மதுரை மாநகர் இராக்கு தங்கம்,  சோ.சுப்பையா
60 தேனி மு.அன்புக்கரசன்,  பேபி சாந்தாதேவி
61 கம்பம் டி.பி.எஸ்.ஆர் ஜனார்த்தனம், வி.பாஸ்கரன் (என்.டி.பட்டி)
62 விருதுநகர் வெ.புகழேந்தி,   வெ.முரளி
63 இராஜபாளையம் வழக்குரைஞர்  இரா.பகீரதன்
64 தூத்துக்குடி ஆசிரியர் காசிராஜன்
65 தென்காசி அய்.ராமச்சந்திரன்,  வே.முருகன்
66 திருநெல்வேலி வள்ளியூர் ந.குணசீலன், இரா.பானுமதி
67 கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி மா.மணி, கோட்டாறு மு.ராஜசேகர்
68 புதுச்சேரி மாநிலம் விலாசினி ராசு, கி.அறிவழகன்,  லோ.பழனி
69 காரைக்கால் சந்திரா ஜெயபாலன், பேட்டை இராஜரெத்தினம்
70 கர்நாடக மாநிலம் வீ.மு.வேலு
குறிப்பு: 
1. தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் காப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் பொறுப்புவழி (ex-officio) பொதுக்குழுவில் இடம்பெறுவர்.
2. பொதுக்குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ள தோழர்கள் அனைவரும் 15.02.2025 சிதம்பரத்தில் நடைபெறும் பொதுக்குழுவில் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை நிலையம், 
திராவிடர் கழகம்

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

தென்சென்னை ஜாபர்கான் பேட்டையில் தந்தை பெரியார் புகழ் பேரணி



விடுதலை நாளேடு
தமிழ்நாடு

ஜாபர்கான்பேட்டை, பிப். 11- தென் சென்னை மாவட்டம், 139ஆவது வார்டு ஜாபர்கான்பேட்டை யில் அமைக்கப்பட்டிருந்த அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் சிலையை சில நாள்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த ஒருவர் அவமரியாதை செய்ததை கண்டித்து 7.2.2025 அன்று மாலை 6 மணி அளவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் மாமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் ப.சுப்பிரமணி அவர்களின் ஏற்பாட்டில் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை எடுத்து கூறுகின்ற வகையில் ஜாபர்கான்பேட்டையில் உள்ள காமராசர் சிலை அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கங்கையம்மன் கோயில் தெரு வழியாக, தந்தை பெரியாரின் புகழ் பெருமையை ஒலி முழக்கமிட்டும், தந்தை பெரியாரின் படங்களை கைகளில் ஏந்தியும் நூற்றுக் கணக்கானோர் சென்று தந்தை பெரியாரின் சிலை அருகில் குவிந்தனர்.
பொறுப்பாளர்களும் பொது மக்களும் அமைக்கப்பட்டிருந்த மேடை மீது ஏறி தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

முக்கிய பொறுப்பாளர்கள் தந்தை பெரியாரின் புகழை எடுத்துக்கூறி உரையாற்றினர்.
நிகழ்ச்சியின் முடிவில் தந்தை பெரியாரின் பெயரில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆய்வு மய்யச் செயலா ளர் வழக்குரைஞர் ஆவடி அந்திரி தாஸ், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மண்டல மாவட்ட கழக செயலாளர்கள் தென் சென்னை கிழக்கு க.கழக குமார், திருவள்ளூர் நெமிலிச்சேரி பாபு, வடசென்னை மேற்கு டி சி ராஜேந்திரன் காஞ்சிபுரம் ஜி கருணாகரன், மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு தென் சென்னை மாவட்ட செயலாளர் சிவா, குன்றத்தூர் 20 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மதன் குமார் மற்றும் ஜாபர்கான் பேட்டை தந்தை பெரியார் புகழ் பேரணியில் கலந்து கொண்ட கழக தோழர்கள் கழக தென் சென்னை மாவட்ட கழக செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்ட காப்பாளர் மு.ந.மதியழகன், மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், மாவட்டத் துணைச் செயலாளர் கரு. அண்ணாமலை, கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், ச.மாரியப்பன், இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, த.ராஜா, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், வழக்குரைஞர் வேலவன், வழக்குரைஞர் சுரேசு,வழக்குரைஞர் அ, அன்பரசன், வழக்குரைஞர் கார்த்திக், வழக்குரைஞர் ராஜன், வழக்குரைஞர் தமிழ், வழக்குரைஞர் சங்கர், வழக் குரைஞர் ரமேஷ், வழக்குரைஞர் க இளவரசன் க, சுப்பிரமணி, ஜெனார்தன், பெரியார் மணி மொழியன், கண்ணன், மூவேந்தன், திருநாவுக்கரசு, ராஜசேகர், குமார் மற்றும் தோழர்கள் கலந்து கொண் டனர்
மாவட்ட துணை செயலாளர் கரு, அண்ணாமலை தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கண்டன உரை நிகழ்த்தினார்.

புதன், 5 பிப்ரவரி, 2025

ஜாபர்கான்பேட்டையில் உள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் சிலைகளுக்கு கழக தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை


விடுதலை நாளேடு
Published February 5, 2025
தமிழ்நாடு
சென்னை ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள தந்தை பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டதற்குப் பதிலாக நேற்று (4..2.2025) மாலை 6.30 மணிக்கு தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வில்வநாதன் தலைமையில், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மு.மதியழகன், அரும்பாக்கம் சா.தாமோதரன், விருகை செல்வம், மூவேந்தன், கண்ணன், மு.ஜெயலட்சுமி, அன்பரசு, மணிமொழியன், ஆவடி மாவட்டக் கழக துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

தென் சென்னை மாவட்ட இளைஞரணி மற்றும் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்



விடுதலை நாளேடு
Published February 5, 2025
ஆசிரியர் உரை, திராவிடர் கழகம்

பகுதி தோறும் கிளைக் கழகங்களை புதுப்பித்தல், பரப்புரை கூட்டங்களை நடத்த முடிவு

சென்னை, பிப்.5 கடந்த 1.2.2025 அன்று மாலை 5.30 மணி அளவில் சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கத்தில் தென் சென்னை மாவட்ட இளைஞரணி மற்றும் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகப் பொன்முடி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் கூட்டத்தில், கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் கருத்துரை வழங்கினார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்.

தீர்மானங்கள்
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன :-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவரும், மேனாள் ஒன்றிய இணை அமைச்சரும், ஈரோடு சட்டமன்ற உறுப்பினரும், சுயமரியாதை வீரருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவிக்கிறது.
தென்சென்னை மாவட்ட கழக இளைஞரணி சார்பாக நகரங்கள். , கிளைக் கழகங்கள் முழுவதும் கழக இலட்சியக் கொடியை ஏற்றியும், புதிய கிளைக் கழகம் அமைத்தும் கழக இளைஞரணியை புதுப்பிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
தென்சென்னை மாவட்டத்தில் கழக இளைஞரணி சார்பில் ஏராளமான இடங்களில் தகவல் பலகை அமைத்தல், துண்டறிக்கை பிரச்சாரம் செய்தல், தெரு முனைப் பிரச்சாரம் செய்தல்.

பெரியார் பேசுகிறார் நிகழ்வினை தொடர்ச்சியாக நடத்துதல் என தீர்மானிக்கப்படுகிறது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளே டான ‘விடுதலை’ நாளேட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக மாவட்ட கழக இளைஞரணி சார்பில் அதிக அளவில் சந்தாக்களை வழங்கிடவும், பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நிதி வழங்கிடவும் முடிவு செய்யப்படுகிறது.
பிப்ரவரி 9 அன்று வடசென்னை மாவட்ட கழகம் சார்பில் தணிகாசலம் நகர் கொளத்தூரில் நடைபெறும் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் தென்சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் அதிக அளவில் பங்கேற்பது என தீர்மானிக்கப்படுகிறது.
பிப்ரவரி 15 இல் சிதம்பரத்தில் நடை பெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் மாவட்டம் சார்பில் பெருமளவில் தோழர்கள் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

புதிய பொறுப்பாளர்கள்
தென் சென்னை மாவட்ட இளை ஞரணி புதிய பொறுப்பாளர்கள் அறி விக்கப்பட்டனர்.
மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் மு. சண்முகப்பிரியன், சா. தாமோதரன், ச.மகேந்திரன், பெரியார் யுவராஜ், அ. அன்பு, வெ.விவேக், மாணவர் கழக சஞ்சய் ஆகியோர் கருத்துகளை கூறினர்.
கோ.வீ.ராகவன், இரா.ரவி, த.ராஜா மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். ச.மாரியப்பன் நன்றி கூறினார்.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

அறிஞர் அண்ணாவின் 56ஆம் ஆண்டு நினைவு நாள்! நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை



அண்ணா நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர்வளையம் வைத்து மரியாதை


Published February 3, 2025
ஆசிரியர் அறிக்கை, திராவிடர் கழகம்
ஆசிரியர் உரை, திராவிடர் கழகம்
சென்னை, பிப்.3 அறிஞர் அண்ணா அவர்களின் 56ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2025) காலை 10 மணியளவில் சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களின் நினை விடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ. சுரேஷ், சி. வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் மேலும் பங்கேற்று மரியாதை செலுத்தியோர்:

தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் வே. பாண்டு, வடசென்ைன மாவட்ட செயலாளர் சு. அன்புச்செல்வன், மயிலை சேதுராமன், கு. நா.ராமண்ணா, கோவீ. ராகவன், பூவை. தமிழ்செல்வன், உடுமலை வடிவேல், மயிலை அன்பு, மு. பவானி, ரா. அருள், மு.இரா. மாணிக்கம், மா. சந்தீப்குமார், மா. பூவரசன், வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் நா. பார்த்திபன், மரகதமணி, கொடுங்கையூர் தங்க. தனலட்சுமி, வெற்றி வீரன், தாம்பரம் மோகன்ராஜ், யுகேஷ், க.கலைமணி மற்றும் தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.