ஞாயிறு, 21 ஜனவரி, 2024

திருவள்ளுவர் நாளில் சிலைக்கு தென்சென்னை மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவிப்பு


விடுதலை நாளேடு 
Published January 20, 2024

16.01.2024 செவ்வாய்கிழமை திருவள்ளு வர் நாளினை முன்னிட்டு தென்சென்னை மாவட்டம் மயிலாப்பூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு கழக இளைஞரணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யபட்டது. கழக துணை பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் மாலை அணிவித்தார். மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன்,
மாவட்டச் செயலாளர் செ. ர. பார்த்த சாரதி, மாவட்ட துணை தலைவர்கள் டி.ஆர்.சேதுராமன், சா.தாமோதரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு. சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ந. மணிதுரை, மாவட்ட இளை ஞரணி துணைச் செயலாளர் இரா. மாரி முத்து, கழக பகுதி செயலாளர் பொறியாளர் ஈ. குமார், மாணவர் கழகப் பொறுப்பாளர் அறிவழகன், பெரியார் பிஞ்சு மா.இனியவள், ஆகியோர் கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக