வியாழன், 9 நவம்பர், 2023

திராவிடர் கழக மகளிரணியின் மேனாள் மாநிலச் செயலாளர் க. பார்வதி அவர்களுக்கு கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் இறுதி மரியாதை


உடல் அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது

1213

'சுயமரியாதை சுடரொளி' க. பார்வதி அம்மையாரின் உடலுக்கு கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் கழகக் கொடிப் போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார். அம்மையாரின் குடும்பத்தாருக்கு தமிழர் தலைவர் ஆறுதலை தெரிவித்தார்.

சென்னை,நவ.9- திராவிடர் கழக மகளிரணியின் தொடக்க காலத்திலிருந்து பொறுப்பாளராக பணியாற்றி கழக மகளிரணியின் மேனாள் மாநில செயலாளராக தொண் டாற்றியவரும், கழகக் காப்பாளருமாகிய க.பார்வதி (வயது 77)  நேற்று (8.11.2023) இரவு சென்னை தாழம்பூரிலுள்ள அவர் மகன் இல்லத்தில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மறைவுற்றார். 

கழகத் தலைமையின் நம்பிக்கையைப் பெற்று பல்வேறு பொறுப்புகளை ஏற்று தொண்டாற்றியவர். கழகத்தில் மகளிர் தோழர்களை அரவணைத்து களப்பணிகளில் தீவிரமாக இறங்கிப் பணியாற்ற பெரிதும் ஊக்கமளித்ததுடன் தானும் அயராது பணியாற்றிய தொண்டறச் செம்மலாகத் திகழ்ந்தவர்.

விழிக்கொடை

சென்னை எழும்பூர் கண்மருத்துவமனை கண் வங்கிக்கு அவரது விழிகள் கொடையாக வழங்கப்பட்டன.

அவரது உடல் சென்னை பெரியார் திடலில் இன்று (9.11.2023) காலை வைக்கப்பட்டது.  அவரது உடலுக்கு கழகக்கொடி போர்த்தி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மோகனா அம்மையார், கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மரியாதை செலுத்தினர். 

கழகப்பொறுப்பாளர்கள், மகளிர் தோழர்கள் பெரியார் திடலில் திரண்டு அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

9
 கழக குடும்பத்தினர் கொள்கை வீராங்கனைக்கு இறுதி மரியாதை

இறுதி ஊர்வலம்10

மறைந்த க. பார்வதியம்மையாரின் உடல் அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது இறுதி ஊர்வலத்தில் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர் 

பகல் 12.45 மணிக்கு பார்வதி அம்மையார் உடல் மருத்துவ அவசர ஊர்தியில் ஏற்றப்பட்டன.

பெரியார் திடலிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு, பெரியார் ஈவெ.ரா.நெடுஞ்சாலையில் அன்னை மணியம்மையார் சிலைக்கு முன்பாக தமிழர் தலைவர் தலைமையில் மகளிரணி தோழர்கள் வீரவணக்கம் முழக்கமிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

பார்வதி அம்மையாரது வேண்டுகோள்படி மாலைக்குப்பதிலாக உண்டியல் அமைக்கப்பட்டு, தோழர்கள் பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கினர்.

உடற்கொடை

சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அவர்து உடல் கொடையாக அளிக்கப்பட்டது.

மகன்கள் க.மணிமாறன்-இந்திராதேவி, க.செல்வமணி-அறிவுச்சுடர், மகள் க.மேகலா, கவுதமன், மருமகன் சின்னதுரை மற்றும் பேரப்பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆறுதலைத் தெரிவித்தார்.

திமுக மகளிரணி விஜயா தாயன்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழகத் துணைப்பொதுச்செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தலைமைக்கழக அமைப்பாளர் தே.செ.கோபால்,  இளைஞரணி மாநில துணை செயலாளர் சோ.சுரேஷ், மருத்துவர் மீனாம்பாள், சி.வெற்றிசெல்வி, டெய்சி மணியம்மை, பெரியார் செல்வி, பண்பொளி கண்ணப்பன், இறைவி, மாட்சி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன், பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், க.ஜெயகிருஷ்ணன், பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், மு.கலைவாணன், நீதிபதி பரஞ்சோதி, பேராசிரியர் டாக்டர் சாந்தா, நெய்வேலி ஞானசேகரன், பேராசிரியர் நம்.சீனுவாசன், கழகப்பொறுப்பாளர்கள் ஆர்.டி.வீரபத்திரன், தாம்பரம் ப.முத்தையன், வெ.மு.மோகன், தளபதி பாண்டியன், வெ.கார்வேந்தன், செ.ர.பார்த்தசாரதி,கோ.நாத்திகன், க.இளவரசன், தே.ஒளிவண்ணன் மற்றும் கழகப்பொறுப்பாளர்கள், மகளிர் தோழர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் பெண்ணுரிமை சிந்தனைகளையும் பகுத்தறிவு கொள்கைகளையும்  மகளிரணியின் மூலம் கொண்டு சென்ற சிறந்த கொள்கைப் போராளி !

மனிதநேயத்துடன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டு கொள்கை வீராங்கனை மரியாதைக்குரிய மானமிகு பார்வதி அம்மா பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பில் வீரவணக்கம்!

------++++++--------+++++------++++--------

 

திராவிடர் கழக மகளிரணி மேனாள் மாநில செயலாளர் மானமிகு க.பார்வதிக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!

15

திராவிடர் கழக மகளிரணியின் மேனாள் மாநிலச் செயலாளர் சகோதரி மானமிகு க.பார்வதி (வயது 77) அவர்கள் நேற்று இரவு  (8.11.2023) அவரது மகன் இல்லத்தில் மறைவுற்றார் என் பதை அறிவிக்கப் பெரிதும் வருந்துகிறோம்.

50 ஆண்டுகளுக்கு மேலாகக் கழக வீராங்கனையாக, கழகம் நடத்திய அத்தனைப் போராட் டங்களிலும் தவறாமல் பங்கேற் றவர் - சிறை ஏகியவர்!

தமிழ்நாடு முழுவதும் சக மகளிரணி பொறுப் பாளர்களுடன் சுற்றிச் சுற்றி வந்து கழக மகளிரணியை மாவட்டம் தோறும் அமைத்ததில் அவரின் பங்கு மகத்தானது!

அவரது வாழ்விணையர் கணேசன் (மறைவு) அவர்களுடன் இணைந்தும் ஓய்வில்லாமல் கழகப் பணியே தன் உயிர் மூச்சாகக் கொண்டு உழைத்த ஒப்பற்ற ஒரு சகோதரியை கழகம் இழந்து தவிக்கிறது!

தன் பிள்ளைகளுக்கெல்லாம் ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்திக் காட்டிய கொள்கை வீராங்கனை!

தனது மரணத்திற்குப் பின் விழிக்கொடை வழங்கப்பட்ட நிலையில் சென்னை பெரியார் திடலில் தன் உடலைக் கொண்டு சென்று, அங்கு சில மணி நேரம் வைத்து,   மருத்துவமனையில் தனது உடலையும்  கொடையாக ஒப்படைக்க  வேண்டும் என்றும், உடலுக்கு மாலை ஏதும் அணிவிக்காமல் உண்டியல் வைத்து, மாலைக் குப் பதில் பணம் போட்டு, அந்தத் தொகையைப் பெரியார் உலகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் மரணத்திலும் தனது கொள்கை முத்திரையைப் பொறித்தவர்.

அவர் இழப்பு அவர்தம் குருதிக் குடும்பத் தினருக்கு மட்டுமல்ல; கழகக் கொள்கைக் குடும்பத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அவரின் அளப்பரிய கழகத் தொண்டுக்குக் கழகத்தின் சார்பில் வீர வணக்கம் செலுத் துகிறோம். அவர் மறைவால் துயருறும் குடும்பத் தினருக்கும்,  கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர், 
திராவிடர் கழகம்
சென்னை
9.11.2023  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக