தென் சென்னை திராவிடர் கழகம்

நடவடிக்கை மற்றும் செயல்பாடு இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சிந்தனை செய்வோம்
  • தமிழ் மலர்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வெற்றிவலவன் பக்கம்
  • சமூக நீதி
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu

வெள்ளி, 4 நவம்பர், 2022

இந்திய அரசா - ஹிந்தி சமஸ்கிருத அரசா? சென்னை இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களிடையே கழக துணைத் தலைவர்



 November 04, 2022 • Viduthalai

எந்தப் போராட்டமாக இருந்தாலும் கடைசியில் எங்களுக்குத்தான் வெற்றி என்பது திராவிட இயக்கத்தின் வரலாறு - தந்தை பெரியாருடைய வரலாறாகும்!

சென்னை ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களிடையே கழக துணைத் தலைவர்

சென்னை, நவ.4 எங்களுடைய போராட்டங்கள், அது எந்தப் போராட்டமாக இருந்தாலும், கடைசியில் எங்களுக்குத்தான் வெற்றி என்பதுதான் திராவிட இயக்கத்தின் வரலாறு - தந்தை பெரியாருடைய வரலாறாகும் என்றார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.

இந்திய அரசா - ஹிந்தி சமஸ்கிருத அரசா? என்ற முழக்கத்துடன் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங் களில் இன்று (4.11.2022) காலை மாபெரும் கண்டன அற வழி ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு குடியரசுத் தலைவரிடம் கொடுத்த அறிக்கை - ஹிந்தித் திணிப்பில் பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய அரசு எவ்வளவு மூர்க்கத்தனமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

‘‘மத்திய பல்கலைக் கழகங்களிலும், அய்.அய்.டி., அய்.அய்.எம். முதலியவற்றிலும் ஹிந்தியே பயிற்று மொழியாக வேண்டுமாம். இந்திய அரசின் நிர்வாகப் பணிகள் அனைத்திலும் ஹிந்தியை மட்டும் பயன் படுத்தவேண்டுமாம்!

ஹிந்தியைப் பொது மொழியாக்கும் வகையில் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களிலும் ஹிந்தி மொழியே பயிற்று மொழியாக ஆக்கப்படவேண்டுமாம்!

ஹிந்தியை மட்டுமே முதன்மைப்படுத்தவேண்டுமாம்!

இளைஞர்களின் வேலை வாய்ப்பில் கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, ஹிந்தியை மட்டுமே முதன்மைப்படுத்தவேண்டும்'' என்று சொல்லப் பட்டுள்ளது. (ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்களின் கதி என்ன?)

தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசு அலுவலகங்களில், ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்கள் எப்படி பணியாற்ற முடியும்?

ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாத பல மாநிலங்களிலும், ஹிந்தி எதிர்ப்பு எரிமலை நெருப்பைக் கக்க ஆரம்பித்துவிட்டது.

பா.ஜ.க. ஒன்றிய அரசின் இந்த ஹிந்தி திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப்பின்படி இன்று (4.11.2022) தமிழ்நாடு முழுவதும் கழக மாவட்ட தலைநகரங்களில் திராவிட மாணவர் கழகத் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்ற மாபெரும் கண்டன அறப்போர் ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,

எச்சரிக்கை! எச்சரிக்கை!

ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை!

ஹிந்தி-சமஸ்கிருதத்தைத் திணிக்காதே!

இந்திய ஒற்றுமையைக் குலைக்காதே!

பா.ஜ.க.வே! ஆர்.எஸ்.எஸ்.சே!

மொழித் திணிப்பின் பேராலே

பண்பாட்டைச் சிதைக்காதே!

சமஸ்கிருதத்தைத் திணிக்காதே!

சமத்துவத்தைச் சிதைக்காதே!

மத்தியப் பல்கலைக்கழகங்களில்

ஹிந்தி மட்டும் பயிற்றுமொழியா?

ஒன்றிய அரசின் வேலைகளுக்கு

ஆங்கிலத்துக்குப் பதில் ஹிந்தி மொழியா?

ஹிந்தி அல்லாத மொழி பேசுவோருக்கு

உரிமைப் பறிப்பா? உரிமைப் பறிப்பா?

குடியரசுத் தலைவரே!

நிராகரியுங்கள்! நிராகரியுங்கள்!

அமித்ஷா குழுவின் அறிக்கையை

நிராகரியுங்கள்! நிராகரியுங்கள்!

ஏற்க மாட்டோம்! ஏற்க மாட்டோம்!

ஹிந்தித் திணிப்பை ஏற்க மாட்டோம்!

ஏற்க மாட்டோம்! ஏற்க மாட்டோம்!

சமஸ்கிருதத் திணிப்பை ஏற்க மாட்டோம்!

என ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சென்னையில்...

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து இன்று (4.11.2022) காலை 10.30 மணியளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் கண்டன அறவழி ஆர்ப்பாட்டம் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் நடைபெற்றது.

திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் (பொறியியல் கல்லூரி) வி.தங்கமணி வரவேற்புரையாற்ற, சி.அறிவுமதி, ரா.அன்புமதி, ம.பூவரசன், பா.நதியா, ஆகாஷ், வே.வேலவன், நர்மதா, வி.யாழ்ஒளி, 

லோ.அறிவுமணி, சு.அறிவுச்செல்வன், பெ.அன்பரசன், பா.அறிவழகன், பா.கவிமலர், ஏ.ஜெகன் ஆகிய திராவிட மாணவர் கழகத் தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தொடக்க வுரையாற்ற, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, மாநில மகளிரணி அமைப்பாளர் குடியாத்தம் தேன்மொழி, மகளிரணி சி.வெற்றிச்செல்வி  மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.ஜெயராமன், டாக்டர் கருணாகரன், முனைவர் இராசசேகரன், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், தோழர்கள் பங்கேற்றனர்.

கழகத் துணைத்தலைவர் 

கலி.பூங்குன்றன் உரை

கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

அனைவருக்கும் வணக்கம். திராவிட மாணவர் கழகத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்றைய நாள் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒரு நூற்றாண்டு காலமாக ஹிந்தித் திணிப்பை எதிர்த்து திராவிடர் கழகம் போராட்டம்!

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது இன்று நேற்று ஏற்பட்ட எதிர்ப்பல்ல. தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக ஹிந்தியை எதிர்த்து திராவிடர் கழகம், தந்தை பெரியார்  தலைமையில் தமிழறிஞர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள்.

1926 ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் அவர்கள், ‘குடிஅரசு' ஏட்டிலே ‘‘ஹிந்தியின் ரகசியமும், தமிழுக்குத் துரோகமும்'' என்ற தலைப்பிலே கட்டுரை எழுதினார்.

பிறகு 1937 ஆம் ஆண்டு இராஜாஜி அவர்கள் சென்னை மாநில பிரதமராக (அப்பொழுது பிரதமர் என்று பெயர்) இருந்தபொழுது, முதன்முதலாக ஹிந்தியைக் கல்வி நிறுவனங்களில் திணித்தார்.

2500 பள்ளிக்கூடங்களை இழுத்து மூடினார். லயோலா கல்லூரியில் உரையாற்றும்பொழுது அவர் ஒரு கருத்தைப் பதிவு செய்தார். ‘‘படிப்படியாக சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்குத்தான்  ஹிந்தியை முதற்கட்டமாகக் கொண்டு வந்திருக்கின்றேன்'' என்று சொன்னார்.

கோணிப் பையிலிருந்த பூனைக்குட்டி வெளியில் வந்தது போல, அவருடைய உள்ளார்ந்த எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

அப்பொழுது தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே பொங்கி எழுந்தது. எங்கே பார்த்தாலும் பெருங்கிளர்ச்சிகள் நடைபெற்றன.

அதற்கிடையிலேயே இராஜாஜி அவர்கள் பதவியை விட்டு வெளியேறிய சூழ்நிலையில், ஹிந்தித் திணிப்பு கைவிடப்பட்டது. தொடர்ந்து ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

தேசியக் கொடியை எரிப்பேன் என்றார் 

தந்தை பெரியார்!

ஒரு கட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள், ‘‘பள்ளிக்கூடங்களில் ஹிந்தியைத் திணித்தால், தேசியக் கொடியை எரிப்பேன்'' என்கிற ஒரு போராட்டத்தை அறிவித்தார். 1955 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி.

அப்பொழுது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் பச்சைத் தமிழர் காமராசர் அவர்கள். இந்தியாவின் பிரதமராக இருந்தவர் பண்டித ஜவகர்லால் நேரு இருந்தார்.

பிரதமர் நேரு அவர்கள், முதலமைச்சர் காமராசர் அவர்களிடம், ‘‘உங்களுடைய நண்பர்தானே ஈ.வெ.இராமசாமி, அந்தப் போராட்டத்தை நீங்கள் தடுக்கக்கூடாதா?'' என்று கேட்டார்.

பிரதமர் நேருவின் உறுதிமொழி!

முதலமைச்சர் காமராசர் அவர்கள், ‘‘ஈ.வெ.ரா. அவர்கள் எனக்கு நண்பர்தான். ஆனால், ஹிந்தி அவருக்கு நண்பரல்ல'' என்று சொன்னார்.

கடைசியாக,  பிரதமர் சார்பாக முதலமைச்சர் காமராசர் அவர்கள், ‘‘ஹிந்தித் திணிக்கப்படாது'' என்ற உறுதிமொழியைக் கொடுத்ததின் அடிப்படையில், தந்தை பெரியார் அவர்கள் அப்பொழுதுகூட, போராட்டத்தை நிறுத்திவிட்டோம் என்று சொல்லவில்லை; போராட்டத்தினை ஒத்தி வைக்கின்றோம் என்று சொன்னார்.

அதற்குப் பிறகு, 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்கள்பற்றி உங்களுக்குத் தெரியும்.

வெறும் மொழிப் போராட்டம் அல்ல;

இது ஒரு இனப் போராட்டமாகும்

இப்படி தொடர்ந்து ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது வெறும் மொழிப் போராட்டம் அல்ல. இது ஒரு இனப் போராட்டமாகும்.

இனப் போராட்டம் என்கிறபொழுது, சமஸ்கிருதம், ஹிந்தி என்பது ஆரியர்களுடைய தாய்மொழி. அவர்களுடைய மொழியைத் திணிப்பதன்மூலமாக, அவர்களுடைய பண்பாட்டை  திராவிடர்கள்மீது திணிக்கிறார்கள் என்பதுதான் அடிப்படையான செய்தி.

அந்த வகையில்தான் தொடர்ந்து இந்தப் போராட்டத்தினை நாமும் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி 

தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற 

ஹிந்தி எழுத்து அழிப்புப் போராட்டம்!

கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதிகூட, சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிக்கின்ற போராட்டம், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு வீரமணி தலைமையில் நடைபெற்றது என்பதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.

இப்பொழுது என்ன திடீரென்று போராட்டம் - பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன என்று சொன்னால், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமையில் உள்ள நிலைக்குழு, சில பரிந்துரைகளைத் தயாரித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது.

அதில், ஹிந்திக்கு மிகமிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

மத்திய பல்கலைக் கழகங்களில் இனி ஹிந்திதான் பயிற்று மொழி என்று சொல்லியிருக்கிறார்கள். மத்திய பல்கலைக் கழகங்கள் இந்தியா முழுவதும் இருக்கின்றன. அங்கே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து படிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஹிந்திதான் பயிற்று மொழி என்றால், ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத மற்ற மாணவர்களுடைய நிலைமை என்னாகும்? என்பது ஒரு கேள்விக் குறி.

தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரிந்த 

மாணவர்களின் நிலைமை என்னாகும்?

இன்றைக்கு மருத்துவக் கல்லூரிகளில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அகில இந்திய அளவிலே அளிக்கப்பட்டு இருக்கிறது.

இங்கே இருக்கிற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம். ஆனால், ஹிந்தியில்தான் படிக்கவேண்டும் என்று சொன்னால், தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மாணவரின் நிலைமை என்னாகும்?

இப்படியாக, அவர்கள் ஹிந்தியைத் திணிப்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸினுடைய கொள்கை என்பது, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்ற அடிப்படையில்தான், இந்த ஒரே மொழி கலாச்சாரத்தைப் புகுத்துவதற்காகத்தான் இந்த ஏற்பாட்டினை செய்கிறது ஒன்றிய அரசு.

திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் இந்தப் போராட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கிறது

ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்ற எண்ணத்தின் அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையைத் திணிப்பதற்காக காய்கள் நகர்த்தப்படுகின்றன. அதனை முறியடிப்பதற்குத்தான், அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பினை முறியடிப்பதற்குத்தான் திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் இந்தப் போராட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கிறது.

இது முடிவல்ல; அவர்கள் மேலும் மேலும் ஹிந்தித் திணிப்பிலே ஆர்வம் காட்டினால், இதைவிட கடுமையான போராட்டங்களை நடத்துவதற்குத் திராவிடர் கழகமும், ஒத்தக் கருத்துள்ள மற்றவர்களும் இணைந்து பெரும் போராட்டத்தினை நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருப்போம்!

அண்ணா முதலமைச்சரான நிலையில், தமிழ்நாட்டில் தமிழும், ஆங்கிலமும்தான் என்று சட்டம் இயற்றிய பிறகு, தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிப்பது சட்ட விரோதமாகும்.

கடைசியில் எங்களுக்குத்தான் வெற்றி!

ஹிந்தியைத் திணித்து, இந்தியாவின் ஒற்றுமையைப்பற்றி பேசுகிறார்கள்; ஹிந்தியைத் திணிப்பதன்மூலமாக இந்தியாவின் ஒற்றுமையை அவர்கள் சிதைக்கிறார்கள்; பிரிவினையை விதைக்கிறார்கள் என்பதை ஒன்றிய அரசிற்கு இந்த நேரத்தில் தெரிவித்து, எங்களுடைய போராட்டங்கள், அது எந்தப் போராட்டமாக இருந்தாலும், கடைசியில் எங்களுக்குத்தான் வெற்றி என்பதுதான் திராவிட இயக்கத்தின் வரலாறு - தந்தை பெரியாருடைய வரலாறாகும்.

அந்த வகையில், இந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் நாங்கள் வெற்றி பெறுவோம், பெறுவோம் என்று கூறி, விடைபெறுகின்றேன் என்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

ஹிந்தி எதிர்ப்புக் குறித்து தமிழினியன் கவிதை வாசித்தார்.

நிறைவாக திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம் நன்றி கூறினார்.

-------+++++++-----++++---+-++++----++++--+-
பா.ஜ.க. ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் திராவிட மாணவர் கழகத்தின் எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம்!
  November 04, 2022 • Viduthalai

சென்னை இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில்

             -----++++-----++++++--------
ஹிந்தித் திணிப்பை எதிர்த்து நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்
  November 04, 2022 • Viduthalai


ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
  November 05, 2022 • Viduthalai

சென்னை, நவ. 5- ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து நேற்று (4.11.2022) காலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அரு கில் திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்:

பொதுக்குழு உறுப்பினர் காரைக்குடி சாமி திராவிடமணி, கோபி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சென்னியப் பன், பெரியார் களம் இறைவி, சி.சித்தார்த்தன், சி.காமராஜ், சென்னை மண்டல செயலாளர் கொடுங்கையூர் தே.செ.கோபால், 

தென்சென்னை

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் அரும்பாக்கம் தாமோதரன், துணைத் தலைவர் மயிலை டி.ஆர்.சேதுராமன், அமைப்பாளர் சைதை மு.ந.மதியழகன், 

வடசென்னை

வடசென்னை மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணேசன், மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், கண்ணதாசன் நகர் கு.ஜீவா, இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செய லாளர்கள் இரா.சதீசு, சு.அரவிந்த்குமார், க.கலைமணி, நா.பார்த்திபன், பா.பார்த் திபன், பி.பாலு, திராவிடன், துரைராஜ்,

கும்மிடிப்பூண்டி மாவட்டம்

மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன், பொன்னேரி அருள், வடகரை உதயக் குமார், வடகரை ஜெகத்விசயகுமார், சோழவரம் பா.சக்கரவர்த்தி, சோழவரம் கஜேந்திரன், பொன்னேரி சுதாகர்,

ஆவடி மாவட்டம்

க.தமிழ்ச்செல்வன், சு.வேல்சாமி, வேல் முருகன், வை.கலையரசன், தமிழ்மணி, பெரியார் மாணாக்கன், இளவரசு, முகப் பேர் முரளி, உடுமலை வடிவேல், வஜ்ர வேலு, கே.சுந்தர் ராஜன், முருகேசன், அம்பத்தூர் ராமலிங்கம், பா.முத்தழகு, பூவை.செல்வி,

தாம்பரம் மாவட்டம்

மண்ணிவாக்கம் ப.அருணா, சுமதி, தாம்பரம் சு.மோகன்ராஜ், ராமாபுரம் ஜெனார்த்தனம், மாடம்பாக்கம் கருப் பையா, கரைமாநகர் தே.சுரேஷ்,

சோழிங்கநல்லூர் மாவட்டம்

வேலூர் பாண்டு, தமிழினியன், ஆதம் பாக்கம் தே.சவரியப்பன், எஸ்.டி.செல்வ ராஜ்,

மாணவர் கழகம் 

பர்தீன், வேலவன், நித்திய குமார், வி.தங்கமணி, தமிழ்ச்செல்வன், பூவரசன், பா.பார்த்திபன்,

செ.பெ.தொண்டறம்,  ரா.அன்புமதி, சி.அன்புமணி, சி.அறிவுமதி, எம்.சுவாதி, தமிழினி தாணு, மோனிஷ், பெ.அன்பர சன், பூவரசன்,

பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் செல்லப்பன், ஆலந்தூர் செல்வ ராஜ், கவி.முத்தமிழன், ச.சனார்த்தனன்,
உணர்வெனும் அனலில்...
  November 05, 2022 • Viduthalai

அனல் பட்டது

புழுவானால் பொசுங்கும்

மெழுகானால் உருகும்

உணர்வெனும் அனல்பட்டது

தேமதுரத்தமிழானால் தீய்க்கும்

அன்று பதுங்கிய இந்தி 

இன்று பாய்ந்து வருகிறது சிந்தி

மூலநிதியிலா இந்தி 

நம் முன்னேற்றம் முடக்கும் நந்தி 

முட்டுக்கொடுக்கும் பார்ப்பனத்தொந்தி

நெட்டிமுறிக்கும் ஆர்எஸ்எஸ் மந்தி

எட்டி உதைப்போம் பார் எந்தி 

வெட்டிமுறிப்போம் அதை முந்தி!

மருத்துவத்திலும் இந்தி 

ஒருமொழிப்பாடம் என்கிறான் 

போட்டித் தேர்வுகள் அனைத்தும் 

இந்தி ஆங்கிலம் என்கிறான்

ஒன்றிய அரசு வேலைக்கு 

இந்தி வேண்டும் என்கிறான்

பள்ளிப் பிள்ளைக்கும் 

இந்தி கட்டாயம் என்கிறான்

இந்தி பேசாதவன் 

தேச துரோகி என்கிறான்

இந்தி தெரியாத மீனவனை 

பூட்சு காலால் மிதிக்கிறான்

விட்டால் மனைவியைக் கொஞ்சுதற்கும் 

இந்தியைக் கொண்டுவருவான்

மழலை தாய்ப்பால் குடிப்பதற்கும்

இந்திவேண்டுமென்பான்

விடாதீர்.....

நம்மொழியை நம்மை 

வெட்டிச்சாய்ப்பதன்றி வேறில்லை கண்டீர் 

அடிமை வாழ்வு வாழ இங்கு 

தமிழனில்லை என்பீர்!

என்மொழி நாளை சாகுமானால்

நான் இன்று சாவேன் 

நடராசன் தாளமுத்துகள் என்றாவேன்...! 

பொறுத்ததுபோதுமென பொங்கி எழுவேன் 

பொல்லாத இந்தி சமற்கிருத 

நூலர்களின் தோலுரிப்பேன்

எல்லாம் சொல்லிப் பார்த்தாச்சி... 

வேண்டாம் உந்தன் பேயாட்சி.... 

ஈவிரக்கமிலா கொடுங்கோலாட்சி... 

அன்று கேட்டது மாநிலசுயாட்சி.... 

இனி கேட்கப்போவது தனியாட்சி...!

உணர்வெனும் அனல்

குறையாதெங்கள் குருதி 

கட்டுக்குலையாதெங்கள் உறுதி 

இதுவே உனக்கு இறுதி 

மூண்டிடும்பார் பெருந் தீ..!

- தமிழினியன் வாசித்த கவிதை



இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:08 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆர்ப்பாட்டம், இந்திய எதிர்ப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

திராவிடம் வெல்லும்

திராவிடம் வெல்லும்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்
உறுதிமொழி ஏற்பு - பெரியமேடு

பகுத்தறிவும் மாணவர்களும்’சிறப்புக்கூட்டம்

பகுத்தறிவும் மாணவர்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு பகுத்தறிவு உரையாற்றினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவின் படி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, பகுத்தறிவும் மாணவர்களும் எனும் தலைப்பில் நேற்று (9.9.2024) மாலை 6.30 மணிக்கு, சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் ஜீவானந்தா சாலையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரு.அண்ணாமலையின் தலைமையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா. தீபக், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ,அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வில் இணைப்புரை வழங்கி நெறிப்படுத்தினார். துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தலைமை நிலைய அமைப்பாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி. செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன்,வழக்குரைஞர் துரை அருண், ந.மணிதுரை, பெரியார் யுவராஜ், வி.வளர்மதி, மு.பவானி, வி.தங்கமணி, ச.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Wikipedia

தேடல் முடிவுகள்

சிறப்புடைய இடுகை

திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்' பார்வையில்..

"பிஜேபி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!" "பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்க...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16
தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில்-அறநிலையத்துறை-நுங்கம்பாக்கம்
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • 'முகம்' மாமணி
  • 1000 ஆவது நிகழ்ச்சி
  • 1000ஆவது நிகழ்ச்சி
  • 13மாவட்டம்
  • 1985
  • 2020
  • 2021
  • 2022
  • 2025
  • 2053
  • 6 மாவட்டங்கள்
  • 90வயது
  • 9ஆவது அட்டவணை
  • அ.பாபு
  • அகற்றம்
  • அசோக் நகர்
  • அஞ்சலா
  • அஞ்சாமை
  • அடையாறு
  • அண்ணா
  • அண்ணா நினைவு நாள்
  • அண்ணா பிறந்தநாள்
  • அண்ணாநகர்
  • அதிரடி அன்பழகன்
  • அம்பேத்கர்
  • அம்பேத்கர் பாலம்
  • அமுதவள்ளி
  • அமைச்சர்
  • அமைதிப்பேரணி
  • அமைந்தகரை
  • அமைப்பு
  • அய்ந்தாம் பயணக்குழு
  • அய்யாவின் அடிச்சுவட்டில்
  • அய்ஸ் அவுஸ்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சுனன்
  • அரங்கண்ணல்
  • அரங்கநாதன்
  • அரங்கம்
  • அரியலூர்
  • அரும்பாக்கம்
  • அரும்பாக்கம்< சா. தாமோதரன்
  • அருள்
  • அருள்மொழி
  • அவ்வை நடராசன்
  • அவமதிப்பு
  • அழிப்பு
  • அளிப்பு
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிப்பு
  • அறிவிப்பு
  • அறிவிப்பு பலகை
  • அறிவுக்கரசு
  • அன்பளிப்பு
  • அன்பு
  • அனகை ஆறுமுகம்
  • அனைத்து கட்சி
  • அனைத்து ஜாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் பிறந்தநாள்
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியருக்கு பாராட்டு
  • ஆசைத்தம்பி
  • ஆட்சியர் அலுவலகம்
  • ஆடிட்டர் ராமச்சந்திரன்
  • ஆண்டு சந்தா
  • ஆண்டு மலர்
  • ஆதித்தமிழர்
  • ஆதித்தனார்
  • ஆம்ஸ்ட்ராங்
  • ஆயிரம் விளக்கு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரம் வீரப்பன்
  • ஆலந்தூர்
  • ஆவடி
  • ஆளுநர்
  • இசையின்பன்
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டைக் காக்க
  • இடஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு ஆணை
  • இடிப்பு
  • இணையதளம்
  • இணையேற்பு
  • இணையேற்பு நாள்
  • இதழ்
  • இதழ் வெளியீடு
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்தித் திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மாணவர் சங்கம்
  • இந்திரா நகர்
  • இந்திராநகர்
  • இயக்க நிதி
  • இரங்கல்
  • இரண்டாம் கட்டம்
  • இரயில் நிலையம்
  • இராசவேலு
  • இராமநாதபுரம்
  • இராயப்பேட்டை
  • இராஜரத்தினம் ஸ்டேடியம்
  • இராஜா அண்ணாமலைபுரம்
  • இருசக்கர வண்டி
  • இல்லத் திறப்பு
  • இலங்கைத் தூதரகம்
  • இலயோலா
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இளைஞர் அணி மாநாடு
  • இளைஞர்அணி
  • இளைஞரணி
  • இளைஞரணி மாநில மாநாடு
  • இறப்பு
  • இறுதி மரியாதை
  • இறுதி முழக்கம்
  • இறுதிப் பேட்டி
  • இறுதிப் பேருரை
  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை
  • ஈக்காட்டுத்தாங்கல்
  • ஈரோட்டுத் தீர்மானம்
  • ஈரோடு
  • ஈரோடு. சிறப்புத் தீர்மானம்
  • ஈழப்போராட்டம்
  • ஈழம்
  • உடல் நலன்
  • உடல்நலம்
  • உண்ணா நிலை
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உதயநிதி ஸ்டாலின்
  • உதவி
  • உயர்நீதிமன்றம்
  • உரை
  • உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
  • உறுதி முழக்கம்
  • உறுதிமொழி
  • உறுப்பினர் சேர்க்கை
  • ஊடகவியலாளர்
  • எத்திராஜ்
  • எத்திராஜன்
  • எதிர்ப்பு
  • எம் பி பாலு
  • எம்.பி பாலு
  • எம்.பி.பாலு
  • எம்.ஜி.ஆர். நகர்
  • எம்.ஜி.ஆர்.நகர்
  • எம்பி பாலு
  • எம்ஜிஆர் நகர்
  • எரிப்பு
  • எழிலன்
  • எழுச்சி மாநாடு
  • எழுத்தாளர் மன்றம்
  • எழும்பூர்
  • ஏழுமலை
  • ஏற்புரை
  • ஒழிப்பு
  • ஒளிப்படக் கண்காட்சி
  • ஒளிபெருக்கி
  • ஓசூர்
  • ஓட்டேரி
  • ஓபிசி வாய்ஸ்
  • க.தனசேகரன்
  • க.பார்வதி
  • கடலூர்
  • கடற்கரை
  • கடை அடைப்பு
  • கடை வசூல்
  • கண்டண போராட்டம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டன உரை
  • கண்டனக் கூட்டம்
  • கண்டனம்
  • கண்மதியன்
  • கந்தவேல்
  • கம்யூனிஸ்ட்
  • கருத்தரங்கம்
  • கருப்புக் கொடி
  • கருப்புக்கொடி
  • கரூர்
  • கரோனா
  • கல்வி
  • கல்வெட்டு
  • கலந்துரை
  • கலந்துரையாடல்
  • கலைஞர்
  • கலைஞர் நகர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிதை
  • கவிதைப் பித்தன்
  • கழக கொடி
  • கழக நிகழ்வுகள்
  • கழக போராட்டம்
  • கற்போம் பெரியாரியம்
  • கன்சிராம்
  • கனகரத்தினம்
  • கனடா
  • கனிமொழி
  • காஞ்சி
  • காட்டுப்பாக்கம்
  • காணொலி
  • காமராசர்
  • காமராசர் அரங்கம்
  • காமராஜ்
  • காரல் மார்க்ஸ்
  • கால்டுவெல்
  • காலச்சுவடு
  • காவிரி
  • கி வீரமணி
  • கி. இராமலிங்கம்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கிரிதரன்
  • கிளைக் கழகங்கள்
  • கிளைக்கழகம்
  • கு.க.செல்வம்
  • குட்டிமணி
  • குடந்தை
  • குடியரசுத்தலைவர்
  • குடியுரிமை
  • குடும்ப விழா
  • கும்பகோணம்
  • கும்மிடிப்பூண்டி
  • குமார்
  • குமாரி
  • குலக்கல்வி
  • குழந்தை நாதன்
  • குழு
  • குளக்கரை
  • குளித்தலை
  • கூட்டம்
  • கூடல் மாநாடு
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளம்
  • கைது
  • கையெழுத்து
  • கொடி ஏற்றம்
  • கொடியேற்றம்
  • கொடும்பாவி எரிப்பு
  • கொலை முயற்சி
  • கோ.சாமிதுரை
  • கோ.பா.சாரதி
  • கோ.வீ. ராகவன்
  • கோட்சே
  • கோட்டூர்
  • கோட்டூர்புரம்
  • கோடம்பாக்கம்
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோவிந்தசாமி
  • கோவில்
  • கோவில்பட்டி
  • கோவை
  • சக்திதாசன்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சட்டமன்றம்
  • சடுகுடு
  • சண்முகநாதன்
  • சண்முகப்பிரியன்
  • சத்யராஜ்
  • சந்தா
  • சந்தா வழங்கல்
  • சந்திப்பு
  • சந்திப்புக் கூட்டம்
  • சந்திரா
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சனாதனம்
  • சா. தாமோதரன்
  • சா.தாமோதரன்
  • சாதி ஒழிப்பு
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாமிநாதன்
  • சி.பா.ஆதித்தனார்
  • சி.பி.அய் – எம்
  • சிகாமணி
  • சிட்டிபாபு
  • சித்த மருத்துவர்கள்
  • சிதம்பரம்
  • சிந்தனை பலகை
  • சிந்தாதிரிப்பேட்டை
  • சிந்தாதிரிபேட்டை
  • சிலை திறப்பு
  • சிவகங்கை
  • சிறப்புக்கூட்டம்
  • சின்மயா நகர்
  • சு.குமாரதேவன்
  • சுதாகர்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
  • சுயமரியாதை இயக்கம்
  • சுவர் எழுத்து
  • சுவரெழுத்து
  • சுழலும் சொற்போர்
  • சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • சூளைமேடு
  • சூளைமேடு நன்கொடை
  • செங்கல்பட்டு
  • செங்கற்பட்டு
  • செங்குட்டுவன்
  • செங்கை
  • செந்தில்வேல்
  • செந்துறை
  • செயல்முறை
  • செயலவைத் தலைவர்
  • செயற்குழு
  • செயற்குழுக் கூட்டம்
  • செல்வப்பெருந்தகை
  • சென்னை
  • சென்னை அசோக் நகர்
  • சென்னை காஞ்சி
  • சென்னை பல்கலைக்கழகம்
  • சென்னை மண் டலம்
  • சென்னை மண்டலம்
  • சேகர்
  • சேத்துப்பட்டு
  • சேதுராமன்
  • சேலம்
  • சைதாப்-பேட்டை
  • சைதாப்பேட்டை
  • சைதை
  • சைதை எம்.பி பாலு
  • சைதை எம்.பி.பாலு
  • சைதை துரைசாமி
  • சைதை பாலு
  • சைதை மேற்கு
  • சோமங்கலம்
  • சோமு கனிமொழி
  • சோழிங்கநல்லூர்
  • டி கே நடராஜன்
  • டி.ஆர். சேதுராமன்
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டில்லி பெரியார் மய்யம்
  • டெய்சி
  • த.க.நடராசன்
  • த.புகழேந்தி
  • த.வீரசேகரன்
  • தங்கம்
  • தஞ்சாவூர்
  • தஞ்சை
  • தஞ்சை மாநாடு
  • தட்சிணாமூர்த்தி
  • தட்ஷணாமூர்த்தி
  • தடை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலைக்கு மாலை
  • தந்தை பெரியார் பிறந்த நாள்
  • தமிழ்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் வார விழா
  • தமிழ்ச்செல்வன்
  • தமிழ்நாடு முதல்வர் உரை
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் புலிகள்
  • தமிழச்சி
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழின எழுச்சி நாள்
  • தரமணி
  • தலைமை கழகம்
  • தலைமை செயற்குழு
  • தலைமைக் கழகம்
  • தலைமைச் செயற்குழு
  • தலையங்கம்
  • தாக்குதல்
  • தாம்பரம்
  • தாமோதரன்
  • தாராபுரம்
  • தி.தொ.க.
  • தி.மு.க. மாணவர்
  • திசை
  • திட்டங்கள்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமுக
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் கலையரங்கம்
  • தியாகராயர் நகர்
  • தியாகராயர் பிறந்த நாள்
  • திராவிட மகளிர்
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடக் கொள்கை அறிக்கை 
  • திராவிடர் எழுச்சி மாநாடு
  • திராவிடர் எழுச்சி மாநாடு!
  • திராவிடர் கழக மகளிரணி
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திராவிடர்கழகம்
  • திரிபுரா
  • திருச்சி
  • திருத்தணிகாசலம்
  • திருத்தம்
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமண நாள்
  • திருமண வரவேற்பு
  • திருமணநாள்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருவண்ணாமலை
  • திருவல்லிக்கேணி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் சிலை
  • திருவான்மியூர்
  • திருவிழா
  • திருவெற்றியூர்
  • திருவொற்றியூர்
  • திரைப்படம்
  • திவாகரன்
  • திறந்தவெளி மாநாடு
  • திறப்பு
  • தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
  • தீர்மான விளக்கம்
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துண்டறிக்கை
  • துப்பாக்கிசூடு
  • துயர் துடைப்பு
  • துரை.அருண்
  • துரைமுத்து
  • தூத்துக்குடி
  • தெருமுனை
  • தெருமுனை கூட்டம்
  • தெருமுனைக் கூட்டம்
  • தென் சென்னை
  • தென்சென்னை
  • தென்றல்
  • தென்னரசு
  • தே.செ.கோபால்
  • தேர்தல்
  • தேர்தல் பரப்புரை
  • தேனாம்பேட்டை
  • தேனி
  • தொலைக்காட்சி
  • தொலைக்காட்சி நிலையம்
  • தொழிலாளர்
  • தொழிலாளர் அணி
  • தொழிலாளர் அமைச்சர்
  • தொழிலாளரணி மாநாடு
  • தொழிற்சங்கம்
  • தோழர்
  • நடராசன்
  • நடராஜன்
  • நடவடிக்கைகள்
  • நரிமணம்
  • நலம் விசாரிப்பு
  • நன்கொடை
  • நன்னன்
  • நன்னன் குடில்
  • நன்னன் மகள்
  • நன்னிலம்
  • நாகநாதன்
  • நாகப்பன்
  • நாகர்கோயில்
  • நிதி
  • நிவாரணப் பணி
  • நிவாரணம்
  • நினைவகம்
  • நினைவகம் திறப்பு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவு நாள் கூட்டம்
  • நினைவுநாள்
  • நினைவேந்தல்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீட் ஒழிப்பு
  • நீட் தேர்வு
  • நீட் தேர்வு எதிர்ப்பு
  • நீட் விலக்கு
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதிகள்
  • நீதிபதிகள் தீர்ப்பு
  • நீதிபதிகள் நியமனம்
  • நீதிமன்றம்
  • நீலகண்டன்
  • நுங்கம்பாக்கம்
  • நுழைவுத் (CUET) தேர்வு
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு நிறைவு விழா
  • நேர்காணல்
  • நொச்சி நகர்
  • ப.க
  • பக்தவச்சலம்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுதி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சாட்சரம்
  • பட்டம்மாள்
  • பட்டாளம்
  • பட்டியல்
  • பட்ஜெட்
  • பட்ஜெட்டைக் கண்டித்து
  • படத் திறப்பு
  • படத்திறப்பு
  • படிப்பகம்
  • படுகொலை
  • பணி நிறைவு
  • பணிநிறைவு
  • பயணக் குழுவிற்கு வரவேற்பு
  • பயணம்
  • பயனாடை
  • பயிலரங்கம்
  • பயிற்சி
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சிப் பட்டறை
  • பரப்புரை
  • பரப்புரை பயணம்
  • பல்கலைக்கழகம்
  • பவழ விழா
  • பவழ விழா மாநாடு
  • பள்ளி
  • பா. தென்னரசு
  • பா.தட்சிணாமூர்த்தி
  • பாக்கியம்
  • பாடல் தொகுப்பு
  • பாத பூஜை
  • பாதுகாப்பு மாநாடு
  • பாம்குரோ
  • பார்த்தசாரதி
  • பார்வதி
  • பாரத் ஓவர்சீஸ் வங்கி
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுரை
  • பாலகிருஷ்ணன்
  • பாவாணர் மகன்
  • பாஸ்கர்
  • பி பி சிங்
  • பிரச்சார பயணம்
  • பிரச்சாரப் பயணம்
  • பிரபாகரன்
  • பிரேமா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பினராய் விஜயன்
  • புகழ் பேரணி
  • புகார்
  • புத்தகக்காட்சி
  • புத்தாண்டு
  • புதிய பொறுப்பாளர்
  • புதிய பொறுப்பாளர்கள்
  • புதிய பொறுப்பு
  • புதுக்கோட்டை
  • புதுப்பேட்டை
  • புதுமை இலக்கிய தென்றல்
  • புதுமை இலக்கியத் தென்றல்
  • புரசை
  • புரசைவாக்கம்
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சிக்கவிஞர் விருது
  • புரட்சிக்கவிஞர் விழா
  • புரடசிக்கவிஞர்
  • புழல்
  • பூவிருந்தவல்லி
  • பெரியார்
  • பெரியார் ஆயிரம்
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் பிஞ்சு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் பிறந்தநாள்
  • பெரியார் பெருந்தொண்டர்
  • பெரியார் மேளா
  • பெரியார் யுவராஜ்
  • பெரியார் விருது
  • பெலா மு. சந்திரா
  • பேட்டி
  • பேரணி
  • பேரமனூர்
  • பொதுக் குழு
  • பொதுக் கூட்டம்
  • பொதுக்-கூட்டம்
  • பொதுக்குழு
  • பொதுக்குழு உறுப்பினர்
  • பொதுக்கூட்டம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பாளர் கலந்துரையாடல்
  • பொறுப்பாளர்கள்
  • பொறுப்பு
  • பொன்.மாடசாமி
  • பொன்முடி
  • பொன்விழா
  • பொன்னேரி
  • போராட்டம்
  • மகளிர்
  • மகளிர் அணி
  • மகளிர் பாசறை
  • மகளிர்ப் பாசறை
  • மகளிரணி
  • மகளிரணி கலந்துரையாடல்
  • மஞ்சநாதன்
  • மண்டல் குழு பரிந்துரை
  • மண்டல் பரிந்துரை
  • மண்டல கலந்துரை
  • மண்டல கலந்துரையாடல்
  • மண்டல மாநாடு
  • மண்டலம்
  • மண நாள்
  • மணநாள்
  • மணவிழா
  • மணவிழா வரவேற்பு
  • மணி அம்மையார்
  • மணிப்பூர்
  • மணியம்மையார்
  • மதியழகன்
  • மதிவதனி
  • மதுரை
  • மந்தவெளி
  • மந்தைவெளி
  • மம்தா
  • மயக்க பிஸ்கட்டுகள்
  • மயிலாப்பூர்
  • மயிலை
  • மயிலை த.வேலு
  • மயிலை முரளி
  • மரியாதை
  • மருத்துவக் கல்லூரி
  • மல்யுத்த வீராங்கனை
  • மலர் வளையம்
  • மலையாளிகள்
  • மறியல்
  • மறைவு
  • மன்றல்
  • மனித சங்கிலி
  • மனுதர்ம எரிப்பு
  • மா. சுப்பிரமணியன்
  • மா.பா.அன்புதுரை
  • மாசு
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாணவர் இயக்கம்
  • மாணவர் எழுச்சி மாநாடு
  • மாணவர் கழகம்
  • மாணவர் நகலகம்
  • மாணவர் பேரணி
  • மாணவரணி
  • மாணவரணி கூட்டம்
  • மாணிக்கம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநில இளைஞரணி
  • மாநில கலந்துரை
  • மாநில கலந்துரையாடல்
  • மாநில பொறுப்பாளர்
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாநிலக் கல்லூரி
  • மாலை
  • மாலை அணிவிப்பு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மாவட்டக் கழகம்
  • மாவட்டம்
  • மின்சாரம்
  • மீனம்பாக்கம்
  • மீனா முத்தையா
  • மு.இரா.மாணிக்கம்
  • மு.சண்முகப்பிரியன்
  • முகம் மாமணி
  • முத்தரசன்
  • முதல்வர்
  • மும்பை
  • முழக்கம்
  • முழு அடைப்பு
  • முற்றுகை போராட்டம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூர்த்தி
  • மெமோரியல் ஹால்
  • மோட்டார் சைக்கிள்
  • யுவராஜ்
  • யூஜிசி
  • ரகுராமன்
  • ரயில்
  • ரயில் மறியல்
  • ராமேசுவரம்
  • ராயப்பேட்டை
  • ராயல்டி
  • ராஜரத்தினம் அரங்கம்
  • ரிசர்வ் வங்கி
  • ரெக்கார்ட்ஸ்
  • லக்னோ
  • லெனின்
  • வ.உ.சி.
  • வ.கோட்டம்
  • வங்கி
  • வங்கிகள்
  • வங்கிப் பணி
  • வட சென்னை
  • வடசென்னை
  • வண்டி பரப்புரை
  • வர்ணாசிரம எதிர்ப்பு
  • வரவேற்பு
  • வரவேற்பு விழா
  • வருணாசிரம எதிர்ப்பு
  • வருமானவரம்பாணை
  • வழக்குரைஞர்
  • வழக்குரைஞரணி
  • வழகுரைஞர்
  • வள்ளியம்மாள்
  • வள்ளுவர் கோட்டம்
  • வள்ளுவர்கோட்டம்
  • வளசரவாக்கம்
  • வளர்ச்சி நிதி
  • வன்னி அரசு
  • வாசுதேவன்
  • வாழ்த்து
  • வி.சி.க.
  • வி.பி.சிங்
  • வி.ஜி.பி.
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை சிறுத்தைகள்
  • விடுதலை நிதி
  • விடுதலை90
  • விடுதலைச் சந்தா
  • விருது
  • வில்சன்
  • வில்வநாதன்
  • விலைவாசி
  • விழா
  • விழிப்புணர்வுப் பிரச்சார பயணம்
  • விழுப்புரம்
  • விளக்கம்
  • விளம்பரம்
  • விளையாட்டுப் போட்டி
  • வீரசேகரன்
  • வீரமர்த்தினி
  • வீரர்
  • வீரவணக்கம்
  • வெளியீடு
  • வெற்றி
  • வே.சிறீதர்
  • வேட்பாளர்
  • வேலை வாய்ப்பு
  • வேலைத் திட்டம்
  • வேழவேந்தன்
  • வைக்கம்
  • வைகோ
  • ஜனநாதன்
  • ஜனநாயக விரோதம்
  • ஜனவரி2024
  • ஜாதி ஒழிப்பு மாநாடு
  • ஜாபர்
  • ஜாபர்கான் பேட்டை
  • ஸ்டாலின்
  • ஹிந்தி எதிர்ப்பு

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயர் எழுதிட போராட்டம்
    திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அ...
  • நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் மறைவு
                                                                                வருந்துகிறோம் தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகு...
  • சூளைமேட்டில் 43வது மாநாடு-9.2.15
    விடுதலை,6.2.15 விடுதலை,8.2.15,பக்கம்-3
  • மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடை
    பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்காக ரூ.5000, பெரியார் நூலக வாச...
  • கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி நன்கொடை
     சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைக...
  • ச.துணைவேந்தன் - மு. உமா இணையேற்பு விழா
    சுயமரியாதை திருமண விழா நாள்: 10.2.2019 ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள் இடம்: பத்மாவதி திருமண மண்டபம், சூனாம்பேடு மணமக்கள்:...
  • இனமானப் பேராசிரியர் அன்பழகன் இறுதி ஊர்வலம்
    மறைந்த இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்...
  • நடிகர் எம்.ஏ.கிரிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு  நினைவுநாளையொட்டி நன்கொடை!
    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, சிக்கல்நாய்க்கன் பேட்டை அஞ்சல் கிளிமங்கலத்தைச் சேர்ந்த பிச்சைமணியின் மகள் பி.முத்துச்செல்வி அவர...
  • திராவிட மாணவர் கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் அறிவியல் பரப்புரைக் கூட்டங்கள்
    01-02-2019 சொற்பொழிவாளர்  ஊர் அதிரடி அன்பழகன்                               துறையூர் இரா.பெரியார் செல்வன்                      காரைக...
  • பட்டினப்பாக்கம் மு.குணசுந்தரி மறைவுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை
    தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன்  சகோதரியும், பெரியார் திடல் பணித் தோழர் மு.பவானியின் தாயாருமான மு.குணசுந்தரி (வயது 62) அவர்...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (46)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (9)
  • ►  2024 (177)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (22)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (40)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (10)
  • ►  2023 (164)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (14)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (13)
  • ▼  2022 (180)
    • ►  டிசம்பர் (28)
    • ▼  நவம்பர் (8)
      • தென் சென்னையில் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இ...
      • அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் மேனாள...
      • பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பைக் கண்டித்து தி...
      • பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பைக் கண்டித்து தி...
      • 'மயிலாப்பூரி'ல் நடைபெற உள்ள, ஜாதி ஒழிப்புப் போராட்...
      • இனியவள்' 6ஆவது (03.11.2022) பிறந்தநாள் மகிழ்வாக வ...
      • தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம், தமிழ் மாநில சித்த வைத்...
      • இந்திய அரசா - ஹிந்தி சமஸ்கிருத அரசா? சென்னை இந்தி ...
    • ►  அக்டோபர் (23)
    • ►  செப்டம்பர் (13)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (25)
    • ►  ஜூன் (23)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (9)
  • ►  2021 (119)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (14)
    • ►  பிப்ரவரி (24)
    • ►  ஜனவரி (18)
  • ►  2020 (66)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (12)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (11)
  • ►  2019 (119)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (123)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (6)
  • ►  2017 (81)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (46)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (84)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (5)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.