ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

தென்சென்னை மாவட்ட தி.க. இளைஞரணித் தலைவர் இரா. வில்வநாதன் - கா. வளர்மதி ஆகியோரின் வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழா


தென்சென்னை மாவட்ட தி.க. இளைஞரணித் தலைவரும், சென்னை கு.இராமசாமி_ பவுனம்மாள் ஆகியோரின் செல்வன் இரா.வில்வநாதனுக்கும், மு.காளியப்பன் _ ருக்மணி ஆகியோரின் செல்வி கா.வளர்மதிக்கும் 19.4.1998 அன்று மயிலையில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவை தலைமையேற்று நடத்தி வைத்தேன். விழாவையொட்டி மண்டப பகுதி முழுவதும் கழகக் கொடி மற்றும் பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மணமக்களை வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா உறுதி மொழியினைக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து விழாவினை நடத்தி வைத்தேன். விழாவில் உரை நிகழ்த்துகையில், “வில்வநாதன் அவர்கள் இந்த இயக்கத்தில் கட்டுப்பாடு மிக்க இராணுவத் தொண்டர் போல பணியாற்றக் கூடியவர், ‘அடக்கமானவர், அமைதியானவர்’. அந்தப் பெருமையின் காரணமாகத்தான் இந்த மணவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும், மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் விளக்கிக் கூறினேன். மணவிழாவிற்கு சென்னையைச் சேர்ந்த பல்வேறு கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி
- உண்மை இதழ், 16-28.2.22

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக