வெள்ளி, 3 ஜூலை, 2020

தென்சென்னை மாவட்டத்தின் "விடுதலை விளைச்சல்" நிகழ்ச்சி






தென்சென்னை மாவட்டத்தின் "விடுதலை விளைச்சல்" நிகழ்ச்சி

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக விடுதலையின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறப்பு "விடுதலை விளைச்சல்" காணொலி விழா. 16.06.2020 (செவ்வாய்க்கிழமை) மாலை 7.00 மணி அளவில் ஜூம் செயலி மூலமாக மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார். சென்னைைை மண்டல தலைவர் தி.இரா.இரத்தினசாமி, சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் தொடக்க உரையாற்றினார்.

துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி வாழ்த்துரை வழங்கியதற்கு பின் மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
சிறப்புரையில் கழகம் கடந்து வந்த பாதை தந்தை பெரியார் ஆற்றிய முக்கிய பணிகள் விடுதலை ஏட்டின் மூலமாக நடைபெற்ற சாதனைகள் தந்தை பெரியாரின் வழியில் தமிழர் தலைவர் அவர்கள் வழிநடத்திச் செல்லும் பாங்கு மற்றும் ஈழப் பிரச்சினையில் கழகம் எடுத்த சரியான அணுகுமுறைகள் போன்றவற்றை விளக்கிக் கூறி தெளிவுபடுத்தினார். விடுதலை நாளேடு பரப்பும் வழிமுறைகளை எடுத்துக் கூறினார்.

மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.

மாவட்ட அமைப்பாளர் மு.ந. மதியழகன், துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.மு. மாணிக்கம், ஆ.வீரமர்த்திணி, ச. துணைவேந்தன், வடசென்னை ப.சேரலாதன், மயிலை ஈ.குமார், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், தர்மபுரி ஊமை. ஜெயராமன், தகடூர் தமிழ்ச்செல்வி, இளைஞரணி செயலாளர் ந.மணித்துரை, மு.சண்முகப்பிரியன், குன்றத்தூர் மு.திருமலை, தாம்பரம் மோகன்ராஜ், நாத்திகன், சீனிவாசன், சோழிங்கநல்லூர் பாண்டு, சோழவரம் சக்கரவர்த்தி, ம. வீ. அருள்மொழி, பெரம்பூர் வெங்கடேசன் பூ.சோமசுந்தரம் மாணவரணி வி.தங்கமணி மற்றும் பலர் கலந்து கொண்டு கருத்துக்களையும் கூறினர்.
நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட துணை செயலாளர் சா.தாமோதரன் காணொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு, 1.7.20 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக