சனி, 18 ஜூலை, 2020

அடிப்படை உரிமை கோரி அறப் போராட்டம்






தென் சென்னை நுங்கம்பாக்கத்தில் அறப்போராட்டம்

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் செ.ர.பார்த்தசாரதி இல்லத்தின் எதிரே 15.7.20 முற்பகல் 10 மணி அளவில் நீட் தேர்வை நிறுத்தக் கோரியும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு கோரியும், சட்டப்படியான இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரியும் மருத்துவத்தை அடிப்படை உரிமையாக்கக் கோரியும் அறப் போராட்டம் நடைபெற்றது. 

செ.ர. பார்த்தசாரதி, கோ.குமாரி, கு.பா.கவிமலர், கு.பா.அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






தென் சென்னை மயிலாப்பூரில் அறப்போராட்டம்
திராவிடர் கழக மாநில மாணவரணி துணைச் செயலாளர் வி. தங்கமணி தலைமையில் விவேகானந்தா கல்லூரி மற்றும் குருநானக் கல்லூரி மாணவர்கள் மயிலாப்பூர் கடற்கரையை ஒட்டிய லூப் சாலையில் இன்று முற்பகல் 10.30 மணி அளவில்நீட் தேர்வை நிறுத்தக் கோரியும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு கோரியும், சட்டப்படியான இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரியும் மருத்துவத்தை அடிப்படை உரிமையாக்கக் கோரியும் அறப் போராட்டம் நடத்தினர்.

















அரும்பாக்கம் பெரியார் ஈவெரா நெடுஞ்சாலையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் வடசென்னை மாவட்ட இளைஞரணி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கழகத் தோழர்கள் வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன் தென்சென்னை மாவட்ட துணை செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன் எம் பிரகாசம் க.திருசெல்வம் அண்ணாநகர் ஆகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்




மயிலாப்பூர் லஸ் முனை பேருந்து நிறுத்தம் அருகில் 15.7.20 முற்பகல் 11 மணி அளவில்நீட் தேர்வை நிறுத்தக் கோரியும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு கோரியும், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை முழுமையாக வழங்கக்கோரியும் மருத்துவம் நல வாழ்வு வழங்குதலை அடிப்படை உரிமையாக்கக் கோரியும் அறப் போராட்டம் நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், இளைஞரணி செயலாளர் நா. மணித் துரை, ஈ.குமார், மு.சண்முகப்பிரியன் ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக