தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கடற்கரை அருகில் உள்ள நொச்சி நகர்ப் பகுதியில் 23.3.2020 மாலை 5.00 மணி அளவில் கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கப்பட்டது. கைகளை சோப்புப் போட்டு கழுவிக் கொள்வதற்காக 750 பேருக்கு 'லைபாய்' சோப்பு வழங்கப்பட்டது. இதில் 400 சோப்புகள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது. மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத்தலைவர் டி.ஆர். சேதுராமன், துணைச் செயலாளர் கோ.வீ. ராகவன், ஈ. குமார், மு.சண்முகப்பிரியன், மு.பவானி மற்றும் சொப்னா ஆகியோர் இத் தொண்டறப் பணியில் பங்கேற்றனர்.
- விடுதலை நாளேடு, 25.3.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக