ஞாயிறு, 12 ஜூன், 2016

நுழைவுத் தேர்வை எதிர்த்து திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்

“மத்திய அரசே அவசர சட்டம் கொண்டு வா, கொண்டு வா!”

நுழைவுத் தேர்வை எதிர்த்து கொளுத்தும் வெயிலில்
சென்னையில் திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்

நீதித்துறையிலும் இடஒதுக்கீடு வந்தால்தான் சமூகநீதிக்குப் பாதுகாப்பு கிடைக்கும் - தோழர்கள் முழக்கம்
சென்னை, மே7_ மருத்துவக் கல்லூரியில் சேருவ தற்கு நுழைவுத் தேர்வு கொண்டு வருவதை எதிர்த்து திராவிடர் மாணவர் கழகம் சார்பில் - கொளுத்தும் வெயிலில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. நீதித்துறையிலும் இடஒதுக்கீடு வந்தால் சமூகநீதிக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்று தோழர்கள் வலியுறுத்தினர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (7.5.2016) காலை 11 மணியளவில் மருத்துவக் கல்லூரி பொது நுழைவுத் தேர்வை திணிப்பதைக் கண்டித்தும், பொதுநுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் மாணவர் கழகம் மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை வகித்தார். திராவிடர் மாணவர் கழக சென்னை மண்டல செய லாளர் பா.மணியம்மை வரவேற்றார்.

திராவிடர் மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் நா.பார்த்திபன், சென்னை மண்டல, மாவட்டங்களின் இளைஞரணி, மாணவரணி பொறுப்பாளர்கள் ச.மகேந்திரன், சு.அன்புச்செல்வன், பா.தளபதி பாண்டியன், மங்களபுரம் பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி தொடக்கவுரை ஆற்றினார்.

கண்டன உரையாற்றியோர்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை  பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, புதிய குரல் எழுத்தாளர் ஓவியா, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்க நிர்வாகி நா.வீரபெருமாள், அகில இந்திய டாக்டர் அம்பேத்கர் மாணவர் சங்க பொறுப்பாளர் சாக்கிய சக்தி, கிராமப்புற மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் அமுதரசன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார்கள்.

துணைத் தலைவர் உரை

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரையில் குறிப்பிடும்போது,

தந்தை பெரியார் அவர்கள் கூறும்போது, வருங்காலத்தில் ஆட்சி அதிகாரம் என்பது தாழ்த்ப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் கையில் வரும். அந்த நேரத்தில் ஆட்சி நிர்வாகத்துக்கு மேலாக  நீதி மன்றம் என்பது பார்ப்பனீய அமைப்பாக இருந்து கொண்டு அரசுகள் கொண்டுவரும் சட்டங்களை முடக்கும் என்று சொல்வார். அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு பிரச்சினையில் வழக்கு நீதிமன்றத்தில் இருந்தால், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில்கூட கூறிவிடுவார்கள். ஆனால், நீதிமன்றத்தில் பிரச்சினை இருக்கும்போது, நுழைவுத் தேர்வு நடத்த நீதிபதிகள் தீர்ப்பு அளிப்பது எப்படி?

சமூக நீதிக்கான நம்முடைய போராட்டம் அடுத்த கட்டமாக நீதிமன்றங்களிலும் இடஒதுக்கீடு தேவை என்பதை வலியுறுத்தும் போராட்டமாக இருக்கும்.  அரசமைப்பு சட்டம் முதல்முறையாகத் திருத்தப் பட்டதும்  நம்முடைய போராட்டத்தால்தான்.

முதல்வராக இருந்தபோது குஜராத்தில் மோடி நுழைவுத் தேர்வு குறித்து கூறும்போது, நுழைவுத் தேர்வு என்பது மாநில அரசின்மீது திணிப்பதாகும் என்றார். கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமானது என்றார். அவர் முதல்வராக இருந்தபோது ஒரு பேச்சு. அவரே இப்போது பிரதமராக இருக்கும்போது செயல்படுவது வேறாக இருக்கிறது. நேற்று தமிழ்நாட்டுக்கு வந்த மோடி  நுழைவுத் தேர்வு பிரச்சினைகுறித்து,   அறிவு நாணயத்துடன் பேசியிருக்க வேண்டாமா? நுழைவுத் தேர்வு ஒழிக்கப்படும்வரை போராட்டம் ஓயாது.
_இவ்வாறு துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி

முன்னதாக ஆர்ப்பாட்ட தொடக்க உரையில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி பேசும்போது,
இந்த நாட்டில் பல்வேறு கல்வி முறைகள் உள்ளன. பல்வேறு தாய்மொழிகளைக் கொண்டுள்ள மாணவர்களிடையே இந்தி மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் மட்டும் ஒரே மாதிரியான  நுழைவுத் தேர்வு நடத்துவதில் என்ன அடிப்படை உள்ளது? ஏன் இந்த அவசரம்?

2006ஆம் ஆண்டில் திமுக தலைவர் கலைஞர் தமிழகத்தில் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று சட்டம் கொண்டுவந்தார். கலைஞர் கொண்டு வந்த சட்டத்தின்மூலமாக தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லாமல் 1200 பேர் பொதுப்பட்டியலில் தேர்வானார்கள். அவர்களில் 430பேர் தாழ்த்தப்பட்ட மாணவர்கள், தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் 85 பேர் பொதுப்பட்டியலில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தார்கள். இப்படி தமிழ்நாட்டில் அருமையாக இருந்தமுறையை ஒழித்துக்கட்ட மோடி அரசு நினைக்கிறது. 2013ஆம் ஆண்டு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

ஒரே மாதிரியான தேர்வு சாத்தியமில்லை என்று    - அப்பொழுது தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார். தகுதி வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நகர்ப்புறங்களில் இருந்து மட்டுமே மாணவர்கள் மருத்துவர்களாக தேர்வானால், கிராமப்புறங்களில் சேவையாற்ற முன்வரமாட்டார்கள். மக்களுக்கு சேவை ஆற்றும் மருத்துவர்கள் வேண்டும் என்றால், கிராமப்புற மாணவர்கள் வரவேண்டும் என்று நீதிபதி 2013இல் குறிப்பிட்டிருந்தார். இப்பொழுது நடைபெறும் வழக்கில் செய்யலாம் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் மே முதல் நாள் அன்றே தேர்வு நடத்த உத்தரவிட்டது ஏன்?

மூன்று நீதிபதிகளுக்கு மேலாக 5 நீதிபதிகள் உத்தரவு உண்டு என்றாலும், தீர்ப்பை மே 9ஆம் தேதி அளிப்பதாகக்கூறி, மே ஒன்றாம் தேதி தேர்வு நடத்த வேண்டிய அவசியம் என்ன?

இந்தி, ஆங்கிலம் இரண்டு மொழிகளில் மட்டும், அதுவும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின்படி  நடத்த வேண்டிய அவசியம் என்ன? இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். இதில் ஆழமான சதி உள்ளது.

தமிழ்நாட்டைப்போன்றே வட கிழக்கு மாநிலத்தில் நுழைவுத் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்திலேயே நுழைவுத்தேர்வுகுறித்து பிரச்சினை எழுப்பியுள்ளார். அசாம் மாநிலத்தில் மருத்துவர்கள் குறைவாக இருக்கிறார்கள். இந்நிலையில் நுழைவுத்தேர்வின்மூலமாக வேறு மாநிலத்தவர் படித்துவிட்டு சென்று விடுவார்கள். அசாம் மாநிலத்தில் மாணவர்களுக்கு மருத்துவர் வாய்ப்பு கிட்டாது. மேலும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு நுழைவுத்தேர்வு எதிரானது என்று கூறியுள்ளார்.
தென் இந்தியாவில் திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எச்சரிக்கையால்தான், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மட்டும் கலந்தாய்வு என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தியா முழுவதும் நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்திட அனைவரும் முன்வரவேண்டும்
_இவ்வாறு கோ.கருணாநிதி தொடக்க உரையில் குறிப்பிட்டார்.
பிரின்சு கஜேந்திரபாபு உரை

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை  பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசும்போது குறிப்பிட்டதாவது:

இந்திய உச்சநீதிமன்றம் இதுவரை செய்திராத கொடும் தவறை செய்திருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும். ஆளுகின்ற பாஜகவின் வழக்குரைஞர்  நீதிமன்றத்துக்கு சென்று, இந்திய மருத்துவக்கவுன்சில், இந்திய அரசு இந்த நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று தயாராக இருக்கின்றது என்று கூறுகிறார். அப்போதுதான் இதில் உச்சநீதிமன்றம் தானாக தீர்க்க கூடியதா? மோடியின் தலைமையில் இருக்கக்கூடிய பாஜகவின் மத்திய அரசாங்கத்தின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும் என்று தீர்ப்பு கொடுக்கிறது. அதைத்தான் நாம் உணரவேண்டும். கல்வித்திட்டம், பாடத்திட்டம் என்று வந்தால், நிபுணர் குழு அமைத்து கருத்து கேட்காமல், மத்திய அரசின் வழக்குரைஞர் கருத்தைக் கேட்டுக்கொண்டு, நீதிபதி தீர்ப்பு வெளியாகிறது. சென்னை அய்.அய்.டி 50 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. அங்கே 800 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால், தமிழர்கள்தான் என்றில்லாவிட்டாலும், தமிழ்நாட்டிலிருந்து வெறும் 10 விழுக்காட்டினர் மட்டுமே படிக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் யார் என்றால் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதற்கு காரணம் அகில இந்திய அடிப்படையில் சிபிஎஸ்இ அடிப்படையிலான நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. காரணம். கோவையில்  தனியார் கல்லூரிக்கு 80 இலட்சம் கேட்டபோது, அரசு சார்பில் கல்லூரி அமைத்தால்தான் ஏழை மாணவர்கள் படிக்க முடியும் என்று மருத்துவக் கல்லூரியைத் திறந்தார் காமராசர்.

தஞ்சையிலே தொடங்கி, தருமபுரி, கன்னியாதகுமரியில் இருந்த மருத்துவக்கல்லூரி,  சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை பொது மருத்துவக் கல்லூரி இவையெல்லாம் தமிழ்நாட்டில் தமிழர்கள் படிப்பதற்காக உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள்.  காமராசரை உயிரோடு இருந்த போது கொளுத்தி கொல்ல முயன்று, இப்போது காமராசர் கொள்கைக்கு சமாதி கட்ட பாஜக முயற்சிக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் நவோதயா பள்ளி கட்டமைப்பையும், ஆதிதிராவிடர் நலப்பள்ளியின் கட்டமைப்பையும் பார்க்க வேண்டாமா? இரண்டும் ஒரே கட்டமைப்பு கொண்டுள்ளதா? அப்படி இல்லாதபோது சம வாய்ப்பு கொடுக்காமல் போட்டி போடச் செய்கிறது மோடி அரசு, உச்சநீதிமன்றம் துணைபோகின்றது.
_இவ்வாறு பிரின்சு கஜேந்திரபாபு பேசினார்.
புதிய குரல் எழுத்தாளர் ஓவியா உரை

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கும் ஒற்றைச்சாளர முறையில் என்று நுழைவுத் தேர்வு என்கிற சதித்திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்படுகிறது. நம்முடைய எதிர்ப்பால் இந்த ஆண்டு கிடையாது என்கிறார்கள். மாணவர்களிடையே தேர்வு முறையிலேயே மாற்றம் வரவேண்டும் என்கிற இந்த காலத்தில், 12ஆம் வகுப்புரை படித்தது மட்டுமல்லாமல் நுழைவுத் தேர்வும் கொண்டு வந்து சித்திரவதைக் கூடமாக ஆக்க வேண்டுமா? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே கலாச்சாரமா? ஒரே உடையா? பழக்கங்கள் ஒரே மாதியாக உண்டா? பலதரப்பட்ட மக்களுக்கு ஒரே நுழைவுத் தேர்வு ஏன்?

நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்  தமிழ்நாடு, கேரளா இந்தியாவுடன் இல்லாமல் இருந்தால் மிகப்பெரிய வளர்ச்சி பெற்ற நாடுகளாக இருந்திருக்கும் என்றார்.

கலப்பு பொருளாதாரம்குறித்து தந்தை பெரியார்  மட்டும்தான் சொன்னார்கள். அவர் கூறும்போது,  கலப்பு பொருளதாரம் என்று சொல்வது எதற்கு என்றால், இன்னும் போதிய அளவுக்கு இவர்கள் ரயில்வே நடத்தும் அளவுக்கு, போஸ்டல் நறடத்தும் அளவுக்கு வளரவில்லை. தனியாரிடம் விட்டுவிடுவார்கள் என்றார். இன்று அது நடக்கிறதா இல்லையா? அதேமாதிரிதான் இன்று நம்முடைய மக்கள் பகுத்தறிவு பெற்று, வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் இவர்கள் சொல்கின்ற எந்த தகுதி திறமை என்று எதுவும் மற்றவர்களிடம் கிடையாது.  இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ள திராவிடர் கழகத்துக்கு நன்றி.
_இவ்வாறு எழுத்தாளர் ஓவியா பேசியபோது குறிப்பிட்டார்.
பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்

ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்றிய கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பேசும்போது குறிப்பிட்டதாவது:

இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பம்தான். அண்மையில் வந்துள்ள  டைம்ஸ் ஆப் இந்தியாவில்   அய்.அய்.டி.யில் சேரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிக்கு 45 நாள்களுக்கு ரூபாய் 22ஆயிரத்து 500 என்று  கூறுகிறது. அதாவது ஒரு மணி நேரத்துக்கு ரூபாய் 1,500 என்று நிர்ணயித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. நினைத்துப்பாருங்கள் இதில் கிராமப்புறத்தில் இருப்பவர்கள் பயன்பெற முடியுமா?  இது யாருக்காக செய்யப்படுகின்ற சூழ்ச்சி? சாதாரண மாணவர்கள் இதில் நுழைய முடியுமா?  நுழைவுத் தேர்வு கொண்டுவருகின்ற மோடியரசின் சூழ்ச்சியை முறியடிப்போம். இவ்வாறு  பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பேசினார்.
ஆர்ப்பாட்ட முடிவில் சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவசாமி நன்றி கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, சென்னை மண்டல தலைவர் தி.இரா.இரத்தினசாமி, சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் செ.உதயகுமார், வட சென்னை  மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், தென் சென்னை  மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கும்மிடிப்பூண்டி மாவட்ட செயலாளர் புழல் த.ஆனந்தன், மாநில திராவிடர் கழக இளைஞரணி துணைச் செயலாளர் பொழிசை கண்ணன், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் கெ.விஜயகுமார்

தென் சென்னை: இரா.பிரபாகரன், கோ.மஞ்சநாதன், டி.ஆர்.சேதுராமன், சா.தாமோதரன், மயிலை பாலு, க.வெற்றிவீரன், ச.மகேந்திரன், சி.செங்குட்டுவன், கு.சோம சுந்தரம், வீ.வளர்மதி, பி.அஜந்தா, மு.பவானி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, வி.நிலா, மு.ஈழமுகிலன், கு.செல்வேந்திரன், க.எழில், அ.அருண், மு.சண்முகப்பிரியன், ந.மணித்துரை, ச.அருண், ச.மாரியப்பன்.
பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள்: சென் னையில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி கல்வி பயிலும் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் சக்திவேல், வெங்கடேசன், சின்னராஜா, சென்னை பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள் ஆறுமுகம், வேந்தன், ராணிமேரி கல்லூரி ஆராய்ச்சி மாணவி கண்மணி, கிருத்துவ கல்லூரி மாணவி பிரியா ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

வட சென்னை: தே. ஒளிவண்ணன், த. மரகதமணி, பசும்பொன் செந்தில்குமாரி, சீர்த்தி, கலைமதி,  பெரியார் திடல் சுரேஷ், சா.தாமோதரன், தங்க.தனலட்சுமி, பாஸ்கர் மங்களபுரம், நதியா, பா.பார்த்திபன்,

வ.கலைச்செல்வன், சிவராமன், க.பார்வதி, பா.வெற்றிச் செல்வி, ஜெ.கோபி, இரா.சரவணன், இராஜேந்திரன், பெரியார் பிஞ்சு ஆ.கிஷோர், மோ.யாழினி, தளபதி பாண்டியன், பெ.செல்வராசு, பெரு. இளங்கோ, கா.எழில் (அமைந்தகரை), புரூனோ, தமிழ்மணி.

தாம்பரம்: மா.ராசு, சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், கடப்பேரி சோமசுந்தரம், மேடவாக்கம் விஜயஆனந்த், ஆர்.டி.வீரபத்திரன், தே.சுரேஷ், தாம்பரம் மு.மணிமாறன், அர்ச்சுனன்,
கே.எம்.சிகாமணி, ராமாபுரம் ஜனார்த்தனன், ராஜன், நடராஜன், நாகரத்தினம், விஜயகுமார், கீழ்க்கட்டளை த.பாண்டியன்

கும்மிடிப்பூண்டி:  விசயகுமார், சு. நாகராஜ், க.ச.க. இரணியன், ராஜ்குமார், மு. சுதாகர், க. சுதன், பழனி. சோ. பாலு, ஏ. முரளி, புழல் ஏழுமலை, வ. இரவி, கோ. முருகன், ந. கசேந்திரன், காந்திநகர் இராசேந்திரன், வி. கனிமொழி, இரா. சோமு.

ஆவடி: உ. கார்த்திக், அருண், கி. ஏழுமலை, மோகன ப்ரியா, க. கலைமணி, கனகசபை, பெரியார் மாணாக்கன், தொண்டறம், செல்வி, நந்தகோபால், வெ. கார்வேந்தன், உடுமலை வடிவேல், கொரட்டூர் கோபால், வை.கலையரசன்.

திருவள்ளூர்: டில்லிபாபு, ஸ்டாலின்.

வேலூர்: வேலூர் மண்டல தலைவர் வி. சடகோபன், மகளிரணி பொறுப்பாளர்; ஈஸ்வரி, போளூர் பன்னீர் செல்வம்.

செங்கல்பட்டு: பூ. சுந்தரம், செல்வமணி.

வேழவேந்தன், அம்பேத், ஆறுமுகம், வெங்கடேசன், கண்மணி, சின்னராஜா, பிரியா உள்ளிட்ட தோழர்கள்.

தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்க மாவட்ட செயலாளர் ஜமாலுதீன், சீனிவாசன், கிராமப்புற மாணவர்கள் சங்கம் அருள், புதிய குரல் முனைவர் பரிமளா, இதயச் சிற்பி, அகில இந்திய டாக்டர் அம்பேத்கர் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்கள்

போராட்டம் போராட்டம்
சமூகநீதிப் போராட்டம்
போராட்டம் போராட்டம்
மருத்துவக் கல்விக்கு
நுழைவுத் தேர்வா
நுழைவுத் தேர்வா?
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
நுழைவுத் தேர்வை
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
நுழைவுத் தேர்வா
நுழைவுத் தேர்வா?
உயர் ஜாதிக் கூட்டம்
உள்ளே நுழைய
தந்திரத் திட்டமா
தந்திரத் திட்டமா?
)    நுழைவுத் தேர்வா நுழைவுத் தேர்வா?
கிராமப்புற மக்களை
கிராமப்புற மக்களை
உள்ளே நுழையவிடாமல்
உள்ளே நுழையவிடாமல்
தடுத்திடும்
சூழ்ச்சித் திட்டமா சூழ்ச்சித் திட்டமா?
பொதுப்பட்டியலிலிருந்து
கல்வியை கல்வியை
மாநிலப் பட்டியலுக்கு
கொண்டுவா, கொண்டுவா!
மத்திய அரசே மத்திய அரசே!
பறிக்காதே, பறிக்காதே!
மாநில உரிமையை
பறிக்காதே, பறிக்காதே!
திணிப்பா திணிப்பா?
நுழைவுத் தேர்வு
திணிப்பா - திணிப்பா
பறிப்பா - பறிப்பா?
இட ஒதுக்கீடு
பறிப்பா - பறிப்பா?
தேவை தேவை     அவசர சட்டம்
தேவை தேவை
நுழைவுத் தேர்வை நீக்கி
அவசர சட்டம்
தேவை தேவை
மத்திய அரசே மத்திய அரசே!
கொண்டுவா, கொண்டு வா!
அவசர சட்டம்
கொண்டுவா, கொண்டு வா!
போராட்டம் போராட்டம்
சமூகநீதி சமூகநீதி
போராட்டம், போராட்டம்!
அனுமதியோம், அனுமதியோம்
நுழைவுத் தேர்வை,
அனுமதியோம், அனுமதியோம்
போராடுவோம் போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம் போராடுவோம்
உயரட்டும் உயரட்டும்!
கோரிக்கை நிறைவேற
கோடிக்கைகள்
உயரட்டும் - உயரட்டும்!
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
மாணவர் போராட்டம்
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
ஒடுக்கப்பட்டோர்
போராட்டம்
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
கிராம மக்கள்
போராட்டம்
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
பணி முடிப்போம், பணி முடிப்போம்
தமிழர் தலைவர் வீரமணி
தலைமையிலே
பணி முடிப்போம், பணி முடிப்போம்
தந்தை பெரியார்
பணி முடிப்போம், பணி முடிப்போம்
ஒன்றிடுவோம், ஒன்றிடுவோம்
வென்றிடுவோம், வென்றிடுவோம்!
வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க, வெல்க வெல்கவே!
சமூகநீதி சமூகநீதி
வெல்க வெல்கவே!
- திராவிடர் மாணவர் கழகம்
-விடுதலை,7.5.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக