சென்னை மண்டலக் கழகக் கலந்துரையாடல்-


கழகப் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்வந்த - ஓய்வு பெற்ற அய்.ஓ.பி.யின் மேலாளர் மயிலாடுதுறை மாணிக்கம் அவர்களுக்குச் சால்வை போர்த்தி பாராட்டினார் கழகத் தலைவர். (15.9.2012 - பெரியார் திடல்)
சென்னை, செப்.17-ஆண்டுக்கு இருமுறையாவது சுயமரியாதைக் குடும்பங்களின் கலந்துரையாடலும் விருந்தும் நடத்தப்பட வேண்டும் என்றார் திராவி டர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை மண்டல திராவிடர் கழகக் கலந்துரை யாடல் கூட்டம், சென்னை பெரியார் திடலில் 15.9.2012 மாலை 5மணிக்கு அன்னை மணியம் மையார் அரங்கில் மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி அவர்கள் கூறிய கடவுள் மறுப்புடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடை பெற்றது.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங் குன்றன் தொடக்கமாக சில கருத்துக்களையும், தகவல்களையும் கூறினார்.
தொடர்ந்து ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பா.தென்னரசு, வடசென்னை மாவட்டக் கழகச் செயலாளர் கி.இராமலிங்கம், தென்சென்னை மாவட்ட கழகச் செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, கும்மிடிப்பூண்டி மாவட்ட கழகத் தலைவர் உதயகுமார், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் அனக ஆறுமுகம், மண்டல இளைஞரணி தலைவர் சுரேஷ், பொதுக் குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.திருமகள், க.பார்வதி, மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணியம்மை, மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.இரா.இரத் தினசாமி, செயலாளர் வெ.ஞானசேகரன், பகுத் தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன், திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை ஆகியோர் உரைக்குப் பின் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.
பெரியார் பெருந்தொண்டர் ஆலந்தூர் இராமச்சந்திரன் (வயது 93) அவர்களுக்கு கழகத் தலைவர் சால்வை போர்த்திச் சிறப்பு செய்தார்.
மாணவரணி சார்பில் மணியம்மை நன்றி கூறி, கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக முடிவுற்றது.
சென்னை மண்டலப் பகுதிகளில் கழகம் சிறப்பாக செயல்படுவது குறித்து தனது மகிழ்ச்சி யையும் பாராட்டுதல்களையும் கழகத் தலைவர் தெரிவித்தார். முதல் மண்டலக் கூட்டமே இந்த அளவிற்குச் சிறப்பாக நடைபெறுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
1.ஆண்டுக்கு இருமுறை சுயமரியாதைக் குடும் பங்களில் விருந்து நடைபெற வேண்டும். நம் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள், குழந்தைகள் ஓரிடத்தில் கூடி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் இடம் பெறச் செய்து பகுத்தறிவுச் சிந்தனைகளை இளம்வயதில் தூவ வேண்டும்.
2. பெரியார் பிஞ்சுகள், பெண்கள் வழியாகப் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பினால், உறுதியாக அதற்குரிய பலன்கள் கிடைக்கும்.
3. இசை மற்றும் கலைகள் மூலம் கருத்துகளைப் பரப்ப வேண்டும். கடந்த பொங்கலின் போது பெரியார் திடலில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
4. ஒற்றுமை, கட்டுப்பாடு, பொறாமையற்ற தன்மை, ஜெயிலுக்குப் போகத் துணிவு - இவை எந்தக் கட்சியில் (இயக்கத்தில்) இருந்தாலும், அந்தக் கட்சி வெற்றி பெறும் - என்றார் நமது அறிவு ஆசான் தந்தை பெரியார். (சேலம் 14 ஆவது சுயமரியாதை மாநாட்டில் 17.1.1943)
5. நமது கழக நிகழ்ச்சிகளை நடத்தும்போது கடைக்குக் கடை சென்று, வீட்டுக்கு வீடு சென்று நன்கொடை வசூல் செய்து அதன் மூலம் நிகழ்ச்சி களை நடத்தினால்தான் அது பொதுமக்களைச் சம்பந்தப்படுத்து ம்பொது நிகழ்ச்சியாக அமையும்.
6. பயிற்சி முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
7. நமது இயக்கம்தான் புத்தரின் இயக்கமாகும். அந்தப் புத்தம் என்ற நெறி மதமாக்கப்பட்ட பின் வெறியாக மூடச்சடங்குகளின் தொகுப்பாக மாறிவிட்டது.
மியான்மர், தாய்லாந்து, சீன நாடுகளுக்கு நான் சென்றிருந்தபோது பல புத்தக் கோயில்களுக்குச் சென்று பார்த்தேன். புத்தரின் பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமான நடவடிக்கைளைக் காண முடிந்தது.
தாய்லாந்தில் புத்தர் சிலைக்குப் பக்கத்தில் “BE WARE OF DOGS” என்று எழுதப்பட்டு இருந்தது.
ஆனால் நாம் நம்முடைய கொள்கைகளில் ஊடுருவலுக்கோ, திரிபுவாதத்துக்கோ இடம் கொடுக்க அனுமதிக்க மாட்டோம். நாம் கொஞ்சம் அசந்தால் பெரியார் சிலையையே கோயிலாகக் கூட மாற்றிவிடுவார்கள். அதனால் தான் பெரியார் சிலையின் பீடங்களில் மறக்காமல், கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்ற வாசகங்களைக் கல்வெட்டாகப் பொறித்துள்ளோம்.
8.புத்தகம் வழி பிரச்சாரம் என்பது மிகவும்  முக்கியமானது. தந்தை பெரியார் அவர்கள்  ஒரு பொதுக்கூட்டத்தில் நமது இயக்க ஏடுகள் விற்பனை செய்யப்படுவதை வைத்து அந்தக் கூட்டத்தை எடை போடுவார். கூட்டம் முடிந்து வேனில் ஏறியவுடன் முதலில் தந்தை பெரியார் கேட்கும் கேள்வி எவ்வளவுக்குப் புத்தகம் விற்றது என்பதுதான்.
அந்த வகையில் நமது இயக்கம் நூல்கள் விற்பனையை ஓர் இயக்கமாக நடத்தி வருகிறோம்.
(1) பகுத்தறிவுக் கரும்பலகைத் திட்டம்
(2) கிளைக் கழகம்தோறும் சுற்றுப்பயணத் திட்டம்
(3) கல்லூரி, விடுதிகளில் மாணவர் அமைப்பைத் தொடங்குவது
(4) மாதம் ஒருமுறை மண்டலப் பொறுப் பாளர்கள், மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் (பகுத்தறிவாளர் கழகம் உட்பட)கூடும்போது, அந்தந்த மாதங்களுக்கான திட்டங்களை வகுப்பது உள்ளிட்ட பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
புதிய தோழர்கள்
மடிப்பாக்கம் பகுதியிலிருந்து பொறியாளர் பிரபு, பொறியாளர் சதீஷ் ஆகிய இரு இளைஞர்கள் புதிய வரவாகக் கழகத் தலைவர் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டனர். கைகுலுக்கிக் கழகத் தலைவர் பாராட்டினார்.
தோழர் மாணிக்கம்
மயிலாடுதுறையைச் சேர்ந்த தோழரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான மாணிக்கம் அவர்களுக்குச் சால்வை போர்த்தி சிறப்பு செய்தார் கழகத் தலைவர்.
93 வயது இளைஞர்க்குப் பாராட்டு
93 வயது காணும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆலந்தூர் இராமச்சந்திரன் அவர்களுக்கு கழகத் தலைவர் சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தார்.
பெரியார் மாணாக்கன் - செல்வி நன்கொடை
விடுதலை வைப்பு நிதிக்காக தமது பங்களிப் பாக ஒரு லட்சம் ரூபாய் நிதி சேரும்வரை மாதம் ரூபாய் ஆயிரம் அளித்து வரும் பெரியார் மாணாக்கன் - செல்வி இணையர் ரூபாய் ஓராயி ரத்தைக் கழகத் தலைவரிடம் அளித்தார்.
உண்டியல் நிதி அளிப்பு
உண்டியல் மூலம் திரட்டிய பணத்தை உண்டிய லோடு கழகத் தலைவரிடம் வழங்கினார் - கழக மகளிரணி தோழியர் மீனாட்சி, துரைசிங்கம், அவரின் மகள் கண்ணம்மாளும்.
புதிய நிருவாகிகள்
புழல் நகரத் தலைவர் ஏழுமலை, நகர செயலாளர் டி.இருதயராஜ், புழல் நகர இளைஞரணி தலைவர் திராவிடத் தென்றல், நகர இளைஞரணி செயலாளர் கண்ணன்.
சென்னை மண்டலக் கழகக் கலந்துரையாடல்
தொடக்கக் கூட்டமே வெகு சிறப்பு - கழகத் தலைவர் பாராட்டு!
சுயமரியாதைக் குடும்ப விருந்துகளை நடத்த - கழகத் தலைவரின் கருத்துரை
விடுதலை,17.9.12

2 கருத்துகள்:

  1. State of Nevada, which legalised gaming including slots several of} a long time before N.S.W., had one hundred ninety,one hundred thirty five slots operating. In sure jurisdictions, corresponding to New Jersey, the EPROM has a tamper-evident 바카라 seal and might solely be changed within the presence of Gaming Control Board officials. Other jurisdictions, including Nevada, randomly audit slot machines guarantee that|to make sure that} they include solely permitted software program.

    பதிலளிநீக்கு
  2. They additionally support three,000+ video games on cell – aside from a number of} hundred slot machines, have the ability to|you possibly can} literally put months of entertainment in your again pocket. Then, if you decide to play for actual money, they’ll double your initial transaction a lot as} 1 BTC. As an added bonus, you’ll receive 180 카지노사이트 extra free spins over your first 9 days as model new} participant. Ducky Luck is reward of|gifting away} a hundred and fifty free spins along with your first deposit, but you can also also|you can even} spin via 400+ free slot machines earlier than diving into the action with your own money.

    பதிலளிநீக்கு