திங்கள், 21 டிசம்பர், 2020

கழகத் தோழர்களுக்குப் பாராட்டு!


பிறந்த நாள் விழா காணும் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வநாதன் அவர்களுக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

சட்டக் கல்லூரி தேர்வில் வெற்றி பெற்று, அடுத்து எம்.எல். படிக்கப் போகும் திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ. மதிவதனிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து சால்வையும் அணிவித்தார் கழகத் தலைவர்.

ஒரு கால கட்டத்தில் மகளிர் வழக்குரைஞர் என்றால் நமது பிரச்சார செயலாளர் அருள்மொழியைத்தான் தெரியும். இப்பொழுது மணியம்மை, மதிவதனி, அருள்மொழி தளபதி என்று ஒரு பட்டியல் வளர்ந்து கொண்டு போவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் கழகத் தலைவர்.

(தலைமைச் செயற்குழு கூட்டத்தில், 12.12.2020)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக