திங்கள், 5 பிப்ரவரி, 2018

கழக தோழர்களால் கொண்டாடப்பட்ட தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் விழா



சென்னை, ஜன.20 திராவிடர் திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா கழகத் தோழர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

விவரம் வருமாறு:

அரும்பாக்கம்

14.1.2018 முற்பகல் 11 மணி அளவில் அரும்பாக்கம் பெரியார் நெடுஞ்சாலையில் தென்சென்னை மாவட்ட துணைச்செயலாளர் சா.தாமோதரன் தலைமையில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா நடை பெற்றது.

மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிட முன்னேற்றக் கழக 105ஆவது வட்ட செய லாளர் அதியமான் விழாவை தொடங்கி வைத்தார். இனிப்புப் பொங்கல் வழங்கப்பட்டது.

மாவட்ட துணைச்செயலாளர் கோ.வீ.ராகவன், க. தமிழ்செல்வன், க.பாலமுரளி, மு.டில்லிபாபு, க.திருச் செல்வம், த.அண்ணாதுரை, எம்.பிரகாசம், ஏ.சுந்தர், கு.பா.அறிவழகன், பா.கவுதம் சித்தார்த்தன், ந.அதியமான் (தி.மு.க.) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோயம்பேடு

14.1.2018 முற்பகல் 11.45 மணி அளவில் தென் சென்னை கோயம்பேடு பகுதியில் திராவிடர் கழகமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்களும் இணைந்து தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை கொண்டாடினர்.

- விடுதலை நாளேடு,20.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக