திங்கள், 27 ஏப்ரல், 2026

வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரின் பிறந்த நாளான இன்று – திராவிடர் உரிமைக்கு உறுதியேற்போம்! செய்தி விவரம்


ஆசிரியர் அறிக்கை

வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரின் பிறந்த நாளான இன்று – திராவிடர் உரிமைக்கு உறுதியேற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

ஆசிரியர் அறிக்கை

தென்னிந்தியாவில் முதன்முதலாக 110 ஆண்டு களுக்கு முன்பாக, ‘பார்ப்பனரல்லாதார் இயக்கம்’ (The Non- Brahmin Movement) என்ற அமைப்பினை உருவாக்கியதற்கு மூல முக்கிய தலைவர்கள் மூவர்.

  1. சர். பிட்டி. தியாகராயர்
  2. டாக்டர் டி.எம்.நாயர்
  3. டாக்டர் சி.நடேசனார்

சமூக மாற்றத்திற்கான
சாதனை சரித்திரம் படைத்த இயக்கம்

1916 இல் அதற்கு அரசியல் வடிவம் தந்து, ‘தென்னிந்திய மக்கள் நல உரிமைச் சங்கம்’ என்று பெயர் தந்து, பதிவு செய்து, பணி தொடங்கி, வர்ண தர்ம ஜாதியால், அடிமைத்தளையினால் கட்டுண்டு கிடந்த பல கோடி உழைக்கும் ஒடுக்கப்பட்ட திராவிட மக்கள் உரிமை பெற்றிட, கல்வி, வேலை வாய்ப்பு, சமூக, பொருளாதார அரசியல் விடுதலை அடைந்திட, விடியல் எழுச்சிக்கு வித்திட்டு, 1920 ஆம் ஆண்டு சென்னை ராஜதானியின் (மாநில) ஆட்சியையே தேர்தல்மூலம் கைப்பற்றி, கல்விக் கண் திறந்து, வேலை வாய்ப்பு, சமூகநீதிக்குத் தொடக்க விழா செய்து, சுமார் 17 ஆண்டுகள் ஆட்சி செய்து – பெண்ணுரிமைக் காக்கும் வகையில், 1921 ஆம் ஆண்டிலேயே மகளிருக்கு வாக்கு அளிக்கும் உரிமையைத் தந்து, அவர்களது அதிகாரப் பங்களிப்பை உறுதி செய்த ஒரு சமூக மாற்றத்திற்கான சாதனை சரித்திரம் படைத்த இயக்கம்.

சர். பிட்டி. தியாகராயர் ஒரு பெருவணிகர். தனது வருவாயில் பெரும் பகுதியை பொதுத் தொண்டிற்குச் செலவழித்து, ‘ஈதல் இசைபட’ வாழ்ந்த பெருந்தகையாளர்.

இன்றைய இளைய சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்!

முதலாவது தேர்தலில் (1920 ஆம் ஆண்டு) அவர் கண்ட அந்த திராவிடர் இயக்கமாம் ‘ஜஸ்டிஸ் கட்சி’யென வெகுமக்களால் பெரிதும் அழைக்கப்பட்ட இயக்கம் வெற்றி பெற்ற நிலையில், (1920 இல்) அவரை ஆட்சிப் பொறுப்பேற்க வெள்ளைக்கார கவர்னர்கள் விரும்பி அழைத்தபோது, அப்பதவியை தான் ஏற்க மறுத்து, அப்பதவியை, கடலூர் சுப்பராயலு (ரெட்டியார்) அவர்களை ஏற்கச் செய்த தியாகச் சீலர் நமது தியாகராயர்! பதவி வெறிப் படமெடுத்தாடும் இன்றைய காலகட்டத்தில் இளைய சமூகம் இதனை அறிந்து, புரிந்துகொள்ளவேண்டும்!

வெள்ளுடை வேந்தர், சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் (மேயர்) ஆனபோது, அதனையொட்டி, அதிகார அரசியல் நிமித்தமாக வெள்ளைக்கார கவர்னர் மாளிகைக்குச் சென்று, அவரைச் சந்திக்க அழைக்கப்பட்டார். சந்திப்பின்போது உடை மாற்றி வருவது மரபு; எனவே, வேட்டி, சட்டை உடையை மாற்றி, ‘சூட்’டில் வரும்படி அழைத்தவுடன், அதனை மறுத்து, ‘‘இதே உடையில் சந்திக்க விருப்பமாயின் வருவேன்; இன்றேல், வேறு யாரையாவது அனுப்புவேன்’’ என்று கூறி, வென்றவர் அந்தப் பண்பாளர்!

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வெற்றி பெற்ற வித்தகப் பெருமான்!

‘பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை’ (Non Brahmin Manifesto)யை வெளியிட்டு, தக்கப் புள்ளி விவரத்தினை, பார்ப்பன மேலாண்மைப் பகற்கொள்ளை யைப் பாரறியப் பறைசாற்றி, தமது மக்களுக்குச் சமூகநீதி இன்றியமையாமைபற்றிய, விழிப்புணர்வை ஏற்படுத்தி வெற்றி பெற்ற வித்தகப் பெருமான் அவர்!

ஆரிய – திராவிட உரிமைப் போரில், முதல் முழக்கத்தைப் படைத்தவர். அவருடைய தலைமையில் டாக்டர் டி.எம்.நாயர் என்ற ‘திராவிட லெனின்’ (தந்தை பெரியார் தந்த பெயர்) அதேபோல், 1912 முதலே பார்ப்பனரல்லாத மக்களுக்குக் கல்விக் கண் கிடைக்க திருவல்லிக்கேணியில் தனி விடுதி (Hostel) நடத்தி, புதிய கல்விப் புரட்சியைத் தொடங்கிய கல்வி வள்ளல் டாக்டர் சி.நடேசனார் ஆகியோர் கட்டிய அடிக்கட்டுமானம்தான் – அறிஞர் அண்ணா, கலைஞர், இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் படைத்த, படைக்கும், படைக்கப் போகும் சாதனைச் சரித்திரத்தின் தொடக்கமும் அதுதான்!

வலிவோடும், பொலிவோடும் காத்து,
கடமையாற்ற சூளுரைப்போம்!

நன்றி மறக்காது, நமது மூத்தோர், முன்னோடிகள் அமைத்த உரிமை மாளிகையைப் பாதுகாப்பதும், புதுப்பிப்பதும் மட்டுமல்ல, அதனை மேலும் வலி வோடும், பொலிவோடும் காத்து, கடமையாற்றச் சூளுரைப்போம்!

தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன், நீதிக்கட்சியை – சுயமரியாதை இயக்கத்தினை இணைத்து, திராவிடர் கழகமாக 1944 இல் உருவாக்கினார்.

அதன் அரசியல் அணி – அங்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். தி.மு.க. – தி.க. என்ற இரட்டைக்குழல். இன எதிரிகள் உயர்த்திப் பிடிக்கும் மதவெறி, ஜாதி வெறி அரசியல் ஆதிக்க வெறியை விரட்டி அடிக்க உறுதியேற்போம்!

வென்று காட்ட வீறுகொண்டு உழைப்போம்!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை    

27.4.2026   


வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி. தியாகராயர் பிறந்த நாள்-தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஏப். 27- ‘வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர் அவர் களின் பிறந்த நாளான இன்று (27.4.2026) அவரது சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் சென்னையில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வள்ளல், சென்னை மாநகர முதல் மேயர், ‘வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் 175ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (27.4.2026) காலை 10.30 மணியவில் சென்னை மாநகராட்சி மன்றம் (ரிப்பன் பில்டிங்) முகப்பில் உள்ள அவரின் சிலைக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், இராமு, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கோவீ.ராகவன், மேற்கு சென்னை  மாவட்ட தலைவர் கரு. அண்ணாமலை, வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், சி.வெற்றிச்செல்வி, உமா செல்வாஜ், பசும்பொன் செந்தில்குமாரி, தங்க.தனலட்சுமி, த.மரகதமணி, அரும்பாக்கம் சா.தாமோதரன், திருவொற்றியூர் செல்வராஜ், செல்லப்பன், பி.சி.ஜெயராமன், தாம்பரம் மோகன்ராஜ், க.தமிழ்ச்செல்வன், சீர்காழி இராமண்ணா, தி.செ.கணேசன், பெரியார் இனியன், பெரியார் ஆதவன், மகேந்திரன், சோளிங்கநல்லூர் ராஜேந்திரன், சூளைமேடு ராஜேந்திரன், மு.சேகர், கலைச்செல்வன், கோ.தங்கமணி, அய்ஸ்அவுஸ் அன்பு, ஜனார்த்தனன், பா.கோபாலகிருஷ்ணன், பொன்.மாடசாமி, மகேஷ், வை.கலையரசன், மு.இரா.மாணிக்கம், இராவணன், இளவரசன், சுப்பிரமணியன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

சென்னை கோட்டை – தி.மு.க. கூட்டணிக்கு; மனக்கோட்டை – மற்ற அணிகளுக்கு!


சர். பிட்டி. தியாகராயருக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மாலையிடும்!
அந்த மாலைதான், ‘‘மீண்டும் ஸ்டாலின் கோட்டையில்’’ என்பதற்கான அடையாளம்!

சென்னை, ஏப்.27  சர். பிட்டி. தியாகராயருக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மாலையிடும். அந்த மாலைதான், ‘‘மீண்டும் ஸ்டாலின் கோட்டையில்’’ என்பதற்கான அடையாளம். சென்னை கோட்டை – தி.மு.க. கூட்டணிக்கு; மனக் கோட்டை  – மற்ற அணிகளுக்கு! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்

இன்று (27.4.2026) வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரின் பிறந்த நாள். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமறு:


சென்னை கோட்டை – தி.மு.க. கூட்டணிக்கு; மனக்கோட்டை – மற்ற அணிகளுக்கு!

4 Min Read

சர். பிட்டி. தியாகராயருக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மாலையிடும்!
அந்த மாலைதான், ‘‘மீண்டும் ஸ்டாலின் கோட்டையில்’’ என்பதற்கான அடையாளம்!

சென்னை, ஏப்.27  சர். பிட்டி. தியாகராயருக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மாலையிடும். அந்த மாலைதான், ‘‘மீண்டும் ஸ்டாலின் கோட்டையில்’’ என்பதற்கான அடையாளம். சென்னை கோட்டை – தி.மு.க. கூட்டணிக்கு; மனக் கோட்டை  – மற்ற அணிகளுக்கு! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்

இன்று (27.4.2026) வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரின் பிறந்த நாள். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமறு:

‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்!’

‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்ற திராவிடர் இயக்கம் முதன்முதலாக உருவாவதற்குத் தலைமை யேற்ற, வெள்ளுடை வேந்தர் என்று உலகத்தாரால் அறிமுகப்படுத்தப்பட்ட, வரலாற்றுப் பெருமை மிகுந்த ஒரு வாழ்வை அமைத்த  சர். பிட்டி. தியாகராயர் அவர்களுடைய பிறந்த நாள் இன்று!

‘திராவிட மாடல்’ ஆட்சி இன்றைக்கு உலகம் போற்றக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறது.   ‘பார்ப்பனரல்லாதார் இயக்கம்’ என்று தொடங்கப் பெற்று, அது ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்று பதிவு செய்யப்பட்டு, ‘ஜஸ்டிஸ்’ கட்சி என்று மக்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் இயக்கத்தினுடைய முப்பெரும் தலைவர்களில், சர்.பிட்டி தியாகராயர் அவர்கள்தான் தலைமையேற்றவர். திராவிடர் ஆட்சியை அமைப்பதற்கு வழிகாட்டியவர்கள். அதனுடைய அடித்தளம் ஆனவர்கள்.

‘பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை!’

1916 ஆம் ஆண்டு ‘பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை’ (Non Brahmin Manifesto) என்று உருவாக்கி, அதன்மூலம் கல்வி, உத்தியோகத் துறைகளில், எப்படியெல்லாம் நம்முடைய உரிமைகள், வாய்ப்புகள் மறுக்கப்பட்டன என்பதை புள்ளி விவர ரீதியாக எடுத்துச் சொல்லி, தெளிவுபடுத்தி, ஒரு பெரிய இயக்கத்தை உருவாக்கிய பெருமை, அவருக்கும், அவரைச் சார்ந்த தளபதிகளாக இருந்த டி.எம்.நாயர் அவர்களுக்கும், சி.நடேசனார் அவர்களுக்கும் உரியது.

அந்த அடித்தளத்தின்படி – அதற்குப் பிறகு 17 ஆண்டுகள் நீதிக்கட்சி ஆட்சி நடந்தது. பல ஆண்டுகள் கழிந்தும் கூட, மற்றவர்கள் சொன்னார்கள், ‘நீதிக்கட்சியைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டோம்’’ என்று.

அதற்குப் பிறகு பேரறிஞர் அண்ணா அவர்கள், 1967 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மிகத் தெளிவாக   ‘‘நீதிக்கட்சியின் பேரனான நான் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறேன்’’ என்றார்.

அதைத் தொடர்ந்து கலைஞர் அவர்கள், அந்த ஆட்சி யினுடைய பெருமைகளை, சாதனைகளை உயர்த்தினார்.

இந்தியாவே திரும்பிப் பார்க்கக்கூடிய ஓர் அற்புதமான ஆட்சி – ‘திராவிட மாடல்’ ஆட்சி!

அவருக்குப் பிறகு, அதனை மேலும் ‘திராவிட மாடல்’ ஆட்சியாக்கி, இன்றைக்கு இந்தியாவே திரும்பிப் பார்க்கக்கூடிய ஓர் அற்புதமான ஆட்சியை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்து வருகிறார்.

சிலையாக மட்டுமல்ல, நமக்கெல்லாம் வழிகாட்டக்கூடிய சீலமாகவும் விளங்குகிறார்!

எனவே, ஒரு நீண்ட பாரம்பரியத்திற்கு அடித்தளமாக, காரணமாக இருந்து அடிக்கட்டுமானத்தை உருவாக்கிய அந்த மாபெரும் தலைவருடைய பிறந்த நாள்.  தந்தை பெரியார் அவர்கள் அதனை ஒருங்கிணைந்து, நீதிக்கட்சியையும் – சுயமரியாதை இயக்கத்தையும் இணைத்து ‘திராவிடர் கழகமாகி’ – திராவிடர் கழகம் பிறகு இரட்டைக் குழல் துப்பாக்கியாக – திராவிடர் கழகம் – திராவிட முன்னேற்றக் கழகமாக வளர்ந்த ஓர் அரசியல் சரித்திரத்தின் தொடக்கத்திற்கு உரியவர்தான் இன்றைக்குச் சிலையாக மட்டுமல்ல, நமக்கெல்லாம் வழிகாட்டக்கூடிய சீலமாகவும் இருக்கக்கூடிய சர். பிட்டி தியாகராயர் அவர்கள்.

அவருடைய பிறந்த நாளை, நாம் ஒவ்வொரு ஆண்டும் சடங்காக, சம்பிரதாயமாகவோ கடைப்பிடிப்பதில்லை – சரித்திர அடையாள நாளாகக் கடைப்பிடித்து, அதன்மூலமாகத் தமிழ்நாடு யாருக்கும் அடிமையாக்கப்படக் கூடாத ஒன்று – உரிமை முழக்கம் செய்யவேண்டிய ஒன்று என்பதை நாம் தொடர்ந்து அனைவருக்கும் விளக்கவேண்டும்.

கல்வி, வேலை வாய்ப்புகள், சமூகநீதி என்ற அந்தத் தொடக்கவுரையை அவர்தான் உருவாக்கி வைத்தார். அந்த எழுச்சியை இன்றைக்குப் பார்க்கிறோம்.

வீறுநடை – வேக நடை போட்டு எழுச்சியை உருவாக்குவோம்!

தேர்தல்கள் ஒரு களம், அவ்வளவுதான்.பண் பாட்டுப் புரட்சியை அந்தத் தலைவர்கள் தெளிவாக உருவாக்கினார்கள். அதைத் தொடர்வோம், சூளுரைப்போம், சுயமரியாதை உணர்வைப் பெறுவோம்!  அவர் வழியில் என்றென்றைக்கும் வீறுநடை – வேக நடை போட்டு எழுச்சியை உருவாக்குவோம்.

செய்தியாளர்: மே 4 ஆம் தேதி வெளிவரக்கூடிய தேர்தல் முடிவை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? 2006 ஆம் ஆண்டு விஜயகாந்த் வாக்குகளைப் பிரித்தது போன்று, 2026 ஆம் ஆண்டு விஜய் வாக்குகளைப் பிரிப்பார். தனிப்பெரும்பான்மை என்பது எந்தக் கட்சிக்கும் கிடைக்காது. கூட்டணி ஆட்சிக்குத்தான் வாய்ப்பு என்று சொல்கிறார்களே?

1971 ஆம் ஆண்டு நிலை –
மே 4 ஆம் தேதிக்குப் பிறகு வரும்
!

தமிழர் தலைவர்: 2006 ஆம் ஆண்டோடு நிறுத்தி யிருக்கிறார்கள். அதற்கு முன்பு அவர்கள் போகவேண்டும். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 184 இடங்களைப் பெற்று தி.மு.க. வரலாறு படைத்தது.

‘‘இதோடு முடிந்தது. இனி தி.மு.க. ஆட்சிக்கு வராது’’ என்று ஆருடம் கணித்தவர்கள் எல்லாம், அடையாளம் தெரியாமல் ஓடிவிட்டார்கள் –  துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று!  1971 ஆம் ஆண்டு நடைபெற்ற அதே நிலை, மே 4 ஆம் தேதிக்குப் பிறகும் வரும்.

இதே இடத்திற்கு வந்து, சர். பிட்டி. தியாகராயருக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மாலையிடும். அந்த மாலைதான், ‘‘மீண்டும் ஸ்டாலின் கோட்டையில்’’ என்பதற்கான அடையாளம்.

அதை நீங்கள் விரைவில் காணுவீர்கள்.

சென்னை கோட்டை – தி.மு.க. கூட்டணிக்கு;

மனக்கோட்டை  – மற்ற அணிகளுக்கு!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

- விடுதலையின் நாளேடு, 27.04.2026

செவ்வாய், 21 ஏப்ரல், 2026

சைதாப்பேட்டை,விருகம்பாக்கம் தொகுதிகளில் கழகத் தலைவர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பரப்புரை!


என்னுடைய ‘கால்வலி’யை விட தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் ‘தலைவலி’க்குத்தான் முக்கியத்துவம்! ஒரு பக்கம் தேர்தல் போராட்டத்தை நடத்தினாலும் உரிமைப் போராட்டத்தையும் நடத்தத் தவற மாட்டோம்! சைதாப்பேட்டை, 

சைதை, ஏப். 19- சைதாப்பேட்டையில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள், “பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, காலில் அடிபட்டு வலியோடு மேடையேறி வந்திருக்கிறார்” என்று, வருத்தப்பட்டு பேசினார். அதற்கு, கழகத் தலைவர் பேசும் போது, “என்னுடைய ‘கால் வலி’யை விட, தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் ‘தலைவலி’ தான் முக்கியம். தொகுதி மறு வரையறை பிரச்சினை நடந்திருக்க கூடிய சூழலில் தேர்தல் போராட்டத்தில் மட்டுமல்ல உரிமைப் போராட்டத்தையும் நடத்தத் தவற மாட்டோம்” என்று, சுயநலம் பொதுநலம் என்பதற்கான எளிமையான விளக்கத்தை வாழ்வியலாகவே உணர்த்தி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டார்.

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் பொதுக்கூட்டம் 15.04.2026, புதன்கிழமை அன்று, மாலை 5 மணிக்கு பூந்தமல்லி நெடுஞ்சாலை ஈக்காட்டுத்தாங்கலில், கங்கை அம்மன் கோயில் அருகில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், தி.மு.க. மாமன்ற உறுப்பினர் இரா.துரைராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஞானசேகரன், ஆடிட்டர் இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். முன்னதாக திராவிடர் கொள்கை இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

என்னுடைய வலி பெரிதல்ல

வேட்பாளரும், அமைச்சருமான மா.சுபிரமணியம், கழகத் தலைவருடன் இணைந்து மேடைக்கு வருகை தந்தார். அமைச்சர் கழகத் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். இந்தியா கூட்டணியின் பொறுப்பாளர்கள், தோழர்கள் கழகத் தலைவருக்கு பயனாடை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் மரியாதை செய்து மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து, அமைச்சர் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து சுருக்கமாக உரையாற்றினார். அதில், “இந்த 93 வயதிலும், காலில் அடிபட்டு கடும் வலி ஏற்பட்டுள்ள நிலையிலும், பெருமதிப்பிற்குரிய அய்யா ஆசிரியர் அவர்கள், பரப்புரை செய்வதற்காக மேடை ஏறி வந்ததைக் கண்டு, தான் மிகவும் சங்கடம் அடைந்ததாக குறிப்பிட்டு அமர்ந்தார்.  நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார். அவர் தமது உரையின் தொடக்கத்தில், “அமைச்சர் அவர்கள், எனக்கு காலில் அடிபட்டு வலியோடு வந்திருக்கிறேன் என்றும், அதைக் கண்டு தான் சங்கடப்பட்டதாகவும் சொன்னார். தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் தலைவலியை விட, என்னுடைய வலி பெரிதல்ல” என்று அமைச்சருக் கும், மக்களுக்கும் பதில் அளித்துவிட்டு தனது பரப்பு ரையை தொடர்ந்தார்.

இப்போது வீசுவது ஸ்டாலின் அலை

அவர் தமது உரையில், “கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் தாய்மார்களும், பெரியோர்களும் வருகை தந்திருக்கிறீர்கள். இந்த எழுச்சியை காணும் போது, மே 4 ஆம் தேதிக்குப் பிறகு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் மறுபடியும் முதலமைச்சர் ஆவார் என்பது உறுதியாகத் தெரிகிறது” என்று பலத்த கைதட்டல்களுக்கும், ஆரவாரங்களுக்கும் இடையில் குறிப்பிட்டார். மேலும் அவர்,  “சைதாப்பேட்டை கலைஞர்  நின்ற தொகுதி” என்ற ஒரு வரலாற்று குறிப்பை மக்களுக்கு நினைவு படுத்தினார். மக்கள் தன்னிச்சையாக மகிழ்ந்து கைகளைத் தட்டினர். மக்களின் உற்சாகத்தைக் கண்டு கழகத் தலைவர், “இப்போது வீசுவது ஸ்டாலின் அலை” என்றார். மேலும் அவர், தொகுதி வரையறை பற்றி நினைவூட்டி,  “ஒரு பக்கம் தேர்தல் போராட்டம் நடைபெற்றாலும், உரிமைப் போராட்டத்தையும் நடத்தத் தவற மாட்டோம்” என்று உரக்கச் சொன்னார். அதே உணர்ச்சியை தாங்களும் பெற்றதை, கைதட்டல்கள் மூலம் மக்கள் வெளிப்படுத்தினர். மேலும் அவர், “இந்த தொகுதி வரையறை என்பது எல்லோருக்கும் சமமாக நடக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்டவர்கள் சொல்வது, இனிப்பு பூசிய விஷ உருண்டை போன்றது” என்று உவமித்து, பளிச்சென்று விளங்க வைத்தார். அடுத்து, பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு, “அதில் மக்கள் நலத்திற்காக எந்தவொரு திட்டமும் இல்லை” என்பதை அம்பலப்படுத்தினார். பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தை, விவசாயிகளின் நெல் உற்பத்திக்கு தமிழ்நாடு அரசு அளித்து வரும் ஊக்கத்தொகை குறித்த அவர்களின் நிலைப்பாட்டையும், வெளிப்படையாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம், ‘வரப்புயர நீர் உயர’ என்று அவ்வையார் பாடலைப் பாடி, விவசாயிகளை ஏமாற்ற முயல்வதையும் சுட்டிக்காட்டி பேசினார். அடுத்து, அப்படிப்பட்ட பா.ஜ.க.வுடன், அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்வதையும் சுட்டிக்காட்டி, “இதிலிருந்து தமிழ்நாடு மீளவும், கடந்த  5 ஆண்டுகளில் நடைமுறையில் இருக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரவும், மா.சுப்பிரமணியம் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

விருகம்பாக்கம்

தி.மு.க.வின் ‘காட்பாதர்’ ஆசிரியர்

அதைத் தொடர்ந்து, அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு, விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர் பிரபாகர ராஜா அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க புறப்பட்டார். சென்னை மேற்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், இரவு 8 மணிக்கு மேல், கலைஞர் கருணாநிதி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் கரு.அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற, இக்கூட்டத்தில் சுப்பிரமணியன், ஜெயசீலன், தி.மு.க.கண்ணன் MC, கதிரேசன், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். முன்னதாக கிராமப் பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் க.அன்பழகன் தொடக்க உரையாற்றினார். வேட்பாளர் பிரபாகர ராஜா வருகை தந்து வாகனத்தின் மீதிருந்து, “தி.மு.க.வின் ‘காட் பாதர்’ ஆசிரியர் அய்யா, எனக்கு வாக்கு கேட்டு வந்திருப்பதை நான் என்றென்றும் மறவேன்” என்று பேசி தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார்.

ஆசிரியர் பிரச்சாரம் – எனக்கு கிடைத்த பேறு!

“பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள், மேடைக்கு வரும்போது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. செங்குத்தான படிகள். ஆசிரியர் அய்யா அவர்களின் முட்டியில் அடிபட்டு, கால் கன்னிப் போயிருக்கிறது. அவருடைய வயது 93. இந்த வயதிலும் முட்டியில் ஏற்பட்ட வலியுடன் மேடைக்கு வந்திருக்கிறார். சிலர் சொல்கின்றனர். ‘நான் வலியை தாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன்’ என்று, நான் யாரைச் சொல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். ஆசிரியர் அய்யாவுக்கு ஏற்பட்டிருக்கும் வலியை விட, இந்த திராவிடர் இனத்திற்கு வேறு எந்த வலியும் வந்து விடக்கூடாது என்று, தன்னுடைய 93 வயதிலும் உழைக்கின்ற ஆசிரியர் அய்யா அவர்கள், சைதாப்பேட்டை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்பது என்பது, எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு ஆகும்”
– சைதாப்பேட்டை பொதுக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம். 15.04.2026

எந்த தேர்தலிலும் இல்லாத மகிழ்ச்சி…

அவர் தமது உரையில், 1952 க்கு முன்னால் ஒரு தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தல் உட்பட, இந்த 17 ஆம் சட்டப்பேரவை தேர்தலுடன் 18 தேர்தல்களை நான் பார்த்திருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். வேறு எந்த தேர்தலிலும் இல்லாத மகிழ்ச்சி, மக்களிடம் குறிப்பாக மகளிரிடம் இருக்கிறது” என்று குறிப்பிட்டு விட்டு, “இதே மகளிரைத்தான் 100 ஆண்டுகளுக்கு முன்பு, ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு?’ என்றனர் சிலர். இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறி இருக்கின்றது. இந்த மாற்றம் எப்படி வந்தது? அந்த மாற்றத்தை தந்த இயக்கம் தான், திராவிடர் இயக்கம்! அதன் தொடர்ச்சியாகத் தான், விருகம்பாக்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பிரபாகர ராஜாவுக்கு நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்!” என்று திமுகவின் நீண்ட… நெடி…ய கொள்கை வரலாற்றுப் பின்னணியை சுருக்கமான நேரத்தில் விவரித்தார். தொடர்ந்து, திராவிட மாடல் அரசின் சாதனைகளை பட்டியலிடத் தொடங்கினார். அடுத்து, செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு 2,533 கோடி ரூபாயும், தமிழ் உட்பட 5 செம்மொழிகளுக்கும் சேர்ந்து 145 கோடி ரூபாய்தான் ஒதுக்கி இருக்கிறார்கள்” என்ற ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையை அம்பலத்தில் ஏற்றி வைத்தார். தொடர்ந்து, பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு விளக்கினார். அதில், “ஒரு மதத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கின்றது” என்பதைச் சுட்டிக்காட்டி, “பன் மதங்கள், பல கலாச்சாரங்கள் இருக்கின்ற ஒரு நாட்டில் கலவரத்தை தூண்டும் முயற்சி இது” என்றும் கண்டித்தார். மேலும் அவர், வேட்பாளரின் தந்தை வணிகர் சங்க பொறுப்பாளர் விக்கிரம ராஜா அவர்களை நினைவூட்டி, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் உள்ள இல்லத்தரசிகள் திட்டத்தைப் பற்றி பேசினார். அதாவது, இந்தத் திட்டமும் இல்லத்தரசிகளுக்கு மட்டும் பயன்படும் திட்டமாகவே பார்க்கப்படுவதையும், அதனுடைய இன்னொரு பக்கமாக வியாபாரிகளின் கண்ணோட்டத்தில் மிகச்சிறந்த திட்டமாகவும், உள்ளூர் பொருளாதாரம் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சி அடையும் என்பதை, வணிகர் சங்கத் தலைவர் விக்ரம ராஜா குறிப்பிட்டதை மக்களுடன் பகிர்ந்து, திராவிட மாடல் அரசின் திட்டங்களின் ஆக்கத்தையும், தாக்கத்தையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து, பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. பற்றிய விமர்சனங்களை முன்வைத்து, “திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடர்வதற்காக, விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கூறி, தனது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்வில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் தோழர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கழகத் தலைவரின உரையை கண்டும், கேட்டும் பயன் பெற்றனர்.

- விடுதலையின் நாளேடு, 19.04.2026

வெள்ளி, 17 ஏப்ரல், 2026

சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு தமிழர் தலைவர் வாக்கு சேகரித்து உரையாற்றினார்


திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

எங்கெங்கு காணினும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் –
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலையே வீசுகிறது!

திராவிடர் கழகம்

சைதை தொகுதி ஈக்காட்டுத்தாங்கலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க நடைபெற்ற கலை நிகழ்ச்சி.

- விடுதலை நாளேடு, 16.04.2026

வியாழன், 16 ஏப்ரல், 2026

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கருப்புக் கொடி ஏற்றி – கருப்புச் சட்ட நகலை எரித்தார்



தமிழ்நாடு, திராவிடர் கழகம்

சென்னை, ஏப். 16- இன்று (16.4.2026) காலை 11 மணியளவில் திராவிடர் கழக அலுவலகத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாகக் கொண்டு வருகின்ற சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றியும், கருப்புச் சட்டத்தின் நகலை எரித்தும் முழக்கமிடப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஒழித்துக் கட்டி மனுஸ்மிருதியைச் சட்ட மாக்கும் பேராபத்துக்கான அடித்தளமே இன்று (16.4.2026) நாடாளுமன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் தொகுதி மறு சீரமைப்பு சட்டத் திருத்தம்.

இதைக் கொண்டு வரும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியை முறியடிக்கும் உரிமைப் போரின் பெரு முழக்கமாக இன்று (16.4.2026) காலை 11 மணியளவில் சென்னை வேப்பேரியில் திராவிடர் கழக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் கருப்புக் கொடி ஏற்றிய கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியாரின் சிலைக்கு முன்பாக கருப்புச் சட்ட மசோதாவின் நகலை தீ வைத்து எரித்தார்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடாளு மன்றத்தில் தொகுதி மறுவறையறை தொடர்பாக கொண்டு வரப்படும் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்து கண்டன ஒலி முழக்கமிடப்பட்டது.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், பொன்னேரி வி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், இராமு, திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, இணைச் செயலாளர் சோ.சுரேஷ், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், த.சீ.இளந்திரையன்,

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

வடசென்னை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், திருவொற்றியூர் கணேசன், கோ.தங்கமணி, ப.கோபாலகிருஷ்ணன், சி.காமராஜ், பேராசிரியர் பெரியார் செல்வி, பசும்பொன், கவுதமி, த.மரகதமணி, மு.பவானி, தங்க.தனலட்சுமி, இறைவி, உத்திரா, த.இளவரசி, த.திராவிட இலக்கியா, தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, அரும் பாக்கம் சா.தாமோதரன், ஆவடி மாவட்டக் கழகத் தலைவர் கார்வேந்தன், செயலாளர் இளவரசன், சரவணன், சீனு நடராசன், முத்துகிருஷ்ணன், மேற்கு சென்னை மாவட்ட கழகத் தலைவர் கரு.அண்ணாமலை, தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் இரா.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், கருப்பைய்யா, குணசேகரன், மதியழகன், சீர்காழி ராமண்ணா, சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், தலைவர் வே.பாண்டு, செயலாளர் நா.தமிழினியன், மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்று கண்டன ஒலி முழக்கங்களை எழுப்பினர்.

-விடுதலை நாளேடு, 16.04.26


சென்னை, ஏப். 16- இன்று (16.4.2026) காலை 11 மணியளவில் திராவிடர் கழக அலுவலகத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாகக் கொண்டு வருகின்ற சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றியும், கருப்புச் சட்டத்தின் நகலை எரித்தும் முழக்கமிடப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஒழித்துக் கட்டி மனுஸ்மிருதியைச் சட்ட மாக்கும் பேராபத்துக்கான அடித்தளமே இன்று (16.4.2026) நாடாளுமன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் தொகுதி மறு சீரமைப்பு சட்டத் திருத்தம்.

இதைக் கொண்டு வரும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியை முறியடிக்கும் உரிமைப் போரின் பெரு முழக்கமாக இன்று (16.4.2026) காலை 11 மணியளவில் சென்னை வேப்பேரியில் திராவிடர் கழக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் கருப்புக் கொடி ஏற்றிய கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியாரின் சிலைக்கு முன்பாக கருப்புச் சட்ட மசோதாவின் நகலை தீ வைத்து எரித்தார்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடாளு மன்றத்தில் தொகுதி மறுவறையறை தொடர்பாக கொண்டு வரப்படும் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்து கண்டன ஒலி முழக்கமிடப்பட்டது.

திங்கள், 30 மார்ச், 2026

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் ‘அஞ்சா நெஞ்சன் அழகிரியின் 77 ஆவது நினைவு நாள் மற்றும் ‘ஏன் திமுக ஆட்சி மீண்டும் வரவேண்டும்?’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் பரப்பரை பொதுக்கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டம்
திராவிடர் கழகம்

சென்னை, மார்ச் 30– தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:

மயிலாப்பூர் – தென் சென்னை

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் ‘அஞ்சா நெஞ்சன் அழகிரியின் 77 ஆவது நினைவு நாள் மற்றும் ‘ஏன் திமுக ஆட்சி மீண்டும் வரவேண்டும்?’ என்ற தலைப்பில் மாபெரும் பரப்பரை பொதுக்கூட்டம்  28.03.2026 மாலை 6:00 மணி அளவில் நடைபெற்றது.

திராவிடர் கழகம்

தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் டி .ஆர். சேதுராமன் தலைமை யேற்றார்.  தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார். தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தொடக்க உரையாற்றினார்.

கோ.வீ.ராகவன் (பொதுக்குழு உறுப்பினர்), ந.மணிதுரை (மாவட்ட இளைஞரணித் தலைவர்), பெரியார் யுவராஜ் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்), ச. மகேந்திரன் (இளைஞர் அணி துணைத் தலைவர்) ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் வீ.கே.ஆர். பெரியர் செல்வி, முருகன் (விசிக), பி.சாரநாத் (விசிக), எஸ்.கே.சிவா (சி.பி.அய்), எஸ்.குமார் (சி.பி.அய்.எம்) ஆகியோர் உரையாற்றினர்.

திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் வீ. அன்புராஜ் சிறப்புரை ஆற்றினார்கள்.

முன்னதாக அறிவுமானனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு அவர்கள் நிகழ்ச்சியின் இறுதியில் வருகை தந்து வேட்பாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு உரையாற்றினார்.

அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் பயனாடை அணிவிக்கப்பட்டது.

கழக பொதுச் செயலாளர்
வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்து பாராட்டினார். பிறகு தோழமைக் கட்சி தோழர்கள் பயனாடை அணிவித்து பாராட்டினர்.

எஸ்.முரளி (மயிலாப்பூர் கிழக்கு பகுதி செயலாளர்,திமுக), அ.தவநேசன் (திமுக, 125ஆவது வட்டச் செயலாளர்), அ.ரேவதி (125ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர், திமுக) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கழகத் தோழர்களான அ.அன்பு (துணைத் தலைவர், மாவட்ட இளைஞரணி), வி. வளர்மதி (தலைவர், மகளிர் அணி), பி. அஜந்தா, வி. தங்கமணி, ஜெ. சொப்பன சுந்தரி, வி. சகானப் பிரியா, ஆர். கோமதி, வி.நிலா, கு.ரேவதி, ச. மாரியப்பன், அ.அன்பு, திருவல்லிக்கேணி அப்துல்லா, ஈ. குமார், எம்.டி.சி. இராஜேந்திரன், தாம்பரம் சு.மோகன்ராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), க. தமிழ்ச்செல்வன் (துணைச் செயலாளர் ஆவடி மாவட்டம்), குன்றத்தூர் மு. திருமலை, சி.காமராஜ்,

கரு. அண்ணாமலை (மாவட்ட கழகத் தலைவர், மேற்கு சென்னை) க.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர், மேற்கு சென்னை), ம.தி. பெரியார் ஆதவன், ம.தி. பெரியார் இனியன், தர்மா ஆகியோரும்;

தோழமைக் கட்சியினரான எஸ். வெங்கடேசன் (124ஆவது வட்டப் பகுதி பிரதிநிதி), வி. விஜய் வெங்கடேசன் (மாவட்ட செயலாளர், திமுக இலக்கிய அணி), மயிலை தீபன் (பகுதி இளைஞரணி துணைச் செயலாளர்), எம்.புகழேந்தி (125 வது வட்டம்), ஆர்.‌‌சிறீ. செல்வி, கே. கலையரசி (திமுக 125 ஆவது வட்ட துணைச் செயலாளர்), அகல்யா (திமுக பகுதி துணைச் செயலாளர்), குமாரி மாவட்ட கிழக்கு பகுதி துணைச் செயலாளர்), கோ. கண்ணன் (126 ஆவது வட்ட திமுக), மா.பா. அன்பு (124(அ)வட்டப் பொறுப்பாளர், திமுக), தலித் கமல் (மாவட்டத் துணைச் செயலாளர்), சூ.க.சார்லஸ் (மாவட்டத் துணைச் செயலாளர்),கே. மணிகண்டன், சீமென்.கோ.அன்பு, ஜி. இராமச்சந்திரன்( விசிக, 121ஆவது வட்ட செயலாளர்), ஆ.க. எழிலன் (மாவட்டத் துணைச் செயலாளர், விசிக), ப. சரவணன், ந. வீர பெருமாள், இரா. தேன் (விசிக), எஸ். பாலாஜி (விசிக), பிரசன்ன குமார் மற்றும் பெருவாரியான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

எதிர்பாராத வகையில் மயிலை தொகுதி மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் அறிமுக கூட்டமாக மாறிவிட்டதால் அப்பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

இரா.மாரிமுத்து (மாவட்ட இளை ஞரணி துணைச் செயலாளர்) நன்றி உரையாற்றினார்.

                                        - விடுதலை நாளேடு, 30.03.2026

                                                      யு டியூப் காணொலி


                                                                   ஒளிப் படங்கள்



வியாழன், 19 மார்ச், 2026

தொல்லியல் ஆய்வாளர் சர் ஜான் மார்ஷலின் 150 ஆவது பிறந்த நாள்: தமிழர் தலைவர் ஆசிரியர் மலர்தூவி மரியாதை

திராவிடர் கழகம்

சர்.ஜான் மார்ஷல் 150ஆம் பிறந்த நாள் : சிலைக்கு மாலை அணிவித்தபின் தமிழர் தலைவர் பேட்டி


அகழ்வாய்வு நடந்தால் மட்டும் போதாது,
கீழடி அறிக்கையையும் வெளியிட வேண்டும்!
இதுதான் எங்களது கோரிக்கை – அதற்காக திராவிடர் கழகம் போராட்டம் நடத்தவும் தயார்!

திராவிடர் கழகம்

சென்னை, மார்ச் 19  அகழ்வாய்வு நடந்தால் மட்டும் போதாது, கீழடி அறிக்கையையும் வெளியிட வேண்டும்.  இல்லை யென்றால், அதற்காக திராவிடர் கழகம் போராட்டம் நடத்தவும் தயார் என்று செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

இன்று (19.3.2026) தொல்பொருள் ஆராய்ச்சியாளர்  சர்.ஜான் மார்ஷலின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாளாகும். சென்னை எழும்பூரில் உள்ள அருங்கட்சியகம் முன்பு அமைந்துள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

சர். ஜான் மார்ஷல் பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக  வந்து,  சிறப்பாக தொல் பொருள் ஆய்வை மேற்கொண்ட நேரத்திலே, இந்த நாகரிகம் என்பது திராவிட நாகரிகம் என்பதை தன்னுடைய ஆய்வுத் திறத்தால் நிறுவினார். ‘வேதகால நாகரிகத்தை விட அதற்கும்  முன்பு ஏற்பட்ட பழம்பெரும் நாகரிகம் திராவிட நாகரிகம்.  ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்றவற்றில் இருந்த கட்டுமானங்களும், கழிவுநீர் வடிகால் வசதிகளும் சிறந்ததொரு நாகரிகம் என்பதற்கு முதன்மையான சான்றுகளாகக் கிடைக்கின்றன’ என்று சொன்ன சர்.ஜான் மார்ஷல் அவர்களின் 150 ஆம் பிறந்த நாள் இன்று.

‘திராவிட மாடல்’ ஆட்சியில்
சர்.ஜான் மார்ஷலுக்குச் சிலை திறப்பு!

‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய ஒப்பற்ற நம்முடைய முதலமைச்சரான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பெருமையோடு உச்சரிக்கக் கூடிய ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் அவர்கள், அவருக்கென்று இங்கே சிலை எடுத்தார்கள்.  இலக்கியவாதிகளும் சிலை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். தொல்பொருள் ஆய்வாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் வற்புறுத்திய நிலையில், அதற்கு அறிவிப்பு கொடுத்தது மட்டுமல்ல, ‘சொன்னதைச் செய்வோம்’ என்று மிகத் தெளிவாக காட்டக்கூடிய வகையில் இந்த சிலையையும் கடந்த ஆண்டு திறந்தார்கள். அது பாராட்டி வரவேற்கக் கூடிய ஒன்றாகும்.

அதுமட்டுமல்லாமல், இரண்டு நாட்களுக்கு முன்னால், ‘திராவிட மாடல்’ ஆட்சி தொடர்ந்து போராடிக் கொண்டிருந்த அடிப்படையிலான ஒரு செய்தி – கீழடி நாகரிகம் என்பது திராவிட நாகரிகத்திற்கு உடன்பாடானது மட்டுமல்ல, அதற்கும் மூத்தது என்று தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். அந்த நாகரிகத்தினுடைய அறிக்கைகள், அதற்குரிய தரவுகள் ஆகியவற்றை வெளியிடக்கூடாது என்று ஒன்றிய அரசு, ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. மோடி அரசு, திட்டமிட்டு அதை வெளியிடாமலேயே வைத்திருக்கிறார்கள்.

அந்த ஆய்வில் ஈடுபாடோடு இருக்கக்கூடிய அதிகாரிகளையும் தொல்லை கொடுத்து மாற்றி இருக்கின்ற நேரத்திலே, 8 இடங்களில் மேலும் அகழ்வாய்வு செய்வதற்கு அனுமதி தராமல் மறுத்து வைத்திருந்தார்கள். தொடர்ந்து முதலமைச்சருடைய போராட்டத்தினாலே அதற்கு அனுமதி கொடுத்து, அதனை நேற்று (18.3.2026) முதலமைச்சர் தெளிவாக்கி இருக்கிறார். 8 அகழ்வாராய்ச்சிகள் நடந்தால் மட்டும் போதாது. கீழடி அறிக்கையும் வெளியிடப்பட வேண்டும் என்பதை முதலமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார்கள். சர்.ஜான் மார்ஷல் அவர்களுடைய 150 ஆம் பிறந்தநாள் விழாவிலே, இதுதான் எங்களுடைய கோரிக்கையாக மட்டுமல்ல, அடுத்த போராட்டமாகவும் இருக்கும்.

– இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கலந்து கொண்டோர்

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், கழக மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத் தலைவர் மயிலை சேதுராமன், அன்பு, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்டச் செயலாளர் புரசை
சு. அன்புச்செல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் ஆர்.டி. வீரபத்திரன், மாவட்டத் தலைவர் வேலூர்  பாண்டு, செயலாளர் தமிழினியன், கொடுங்கையூர் கோ. தங்கமணி, தங்க தனலட்சுமி, அரும்பாக்கம் சா.தாமோதரன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், ஜனார்த்தனன், செல்லப்பன்,மாணிக்கம், இளவரசி, பூங்குழலி, அருள், உத்ரா, யுகேஷ், பூவை தமிழ்செல்வன், மகேந்திரன், தன்ராஜ், பெரியார் பிஞ்சுகள் திராவிட எழில்,யாழ் தமிழ், பெரியார் சம்பத், உடுமலை வடிவேல், பா. சிவக்குமார், புகழேந்தி, ச.விஜய், மதுரவாயல் தமிழ்ச்செல்வன், பிரகாஷ், க. கலைமணி, கணேசன், டெய்சன், அசோக்குமார் உள்ளிட்ட பெருந்திரளான தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

- விடுதலை நாளேடு, 19.03.26

புதன், 18 மார்ச், 2026

அன்னை மணியம்மையார் 48ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை


திராவிடர் கழகம்

சென்னை, மார்ச் 16- தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (16.3.2026) காலை, அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் வாழவைத்த தொண்டறத்தாய் அன்னை மணியம்மையாரின் 48ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (16.3.2026) காலை 10.30 மணியளவில் சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழகத் தோழர் – தோழியர்கள் பெருந்திரளாக சென்று மலர் மாலை அணிவிக் கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, தந்தை பெரியார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவுத் தூண் ஆகிய இடங்களில் மலர் வளையம் வைக்கப்பட்டது. பின்னர் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது

அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிட தொழிலாளரணி, பெரியார் மருத்துவமனை, திராவிடன் நிதி, பெரியார் நூலகர் வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், ஆடிட்டர் ஆர்.இராமச்சந்திரன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், நெய்வேலி ஞானசேகரன், மருத்துவர் டாக்டர் தர்ஷினி ஆனந்து, சி.வெற்றிச்செல்வி, பேராசிரியர் க.பெரியார் செல்வி, பொறியாளர் ச.இன்பக்கனி தங்க.தனலட்சுமி, பசும்பொன் செந்தில்குமாரி, இளவரசி, உமா, பூவை செல்வி, மு.செல்வி, வி.வளர்மதி, க.சுமதி, க.வெண்ணிலா, இளவேனில், பூங்குழலி, உத்ரா, வாணி, தேவி, விசாலாட்சி, வெண்ணிலா கதிரவன், க.அழகுமணி, வளர்மதி, மோகனப்பிரியா, பிரசீனா, அன்புமணி, மரகத மணி, ஆதிலட்சுமி, கலைவாணி, பெரியார் பிஞ்சு அதிரா.

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் மயிலை சேதுராமன், ஆயிரம் விளக்கு சேகர், காரைக்குடி பிராட்லா, மயிலாடுதுறை கி.தளபதிராஜ், வழக்குரைஞர் துரை அருண், தொழிலாளரணி செல்வராஜ், ஜனார்த்தனம், பெரியார் மாணாக்கன், சி.காமராஜ், எண்ணூர் மோகன், நங்கநல்லூர் தமிழினியன், கலைமணி, ஆனந்த், அசோக், டெய்சன், ராமு மற்றும் திரளான கழகத் தோழர்கள், பெரியார் திடல் பணித் தோழர்கள் அனைவரும் பங்கேற்று மரியாதை செலுத் தினர்.