செவ்வாய், 21 ஏப்ரல், 2026

சைதாப்பேட்டை,விருகம்பாக்கம் தொகுதிகளில் கழகத் தலைவர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பரப்புரை!


என்னுடைய ‘கால்வலி’யை விட தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் ‘தலைவலி’க்குத்தான் முக்கியத்துவம்! ஒரு பக்கம் தேர்தல் போராட்டத்தை நடத்தினாலும் உரிமைப் போராட்டத்தையும் நடத்தத் தவற மாட்டோம்! சைதாப்பேட்டை, 

சைதை, ஏப். 19- சைதாப்பேட்டையில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள், “பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, காலில் அடிபட்டு வலியோடு மேடையேறி வந்திருக்கிறார்” என்று, வருத்தப்பட்டு பேசினார். அதற்கு, கழகத் தலைவர் பேசும் போது, “என்னுடைய ‘கால் வலி’யை விட, தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் ‘தலைவலி’ தான் முக்கியம். தொகுதி மறு வரையறை பிரச்சினை நடந்திருக்க கூடிய சூழலில் தேர்தல் போராட்டத்தில் மட்டுமல்ல உரிமைப் போராட்டத்தையும் நடத்தத் தவற மாட்டோம்” என்று, சுயநலம் பொதுநலம் என்பதற்கான எளிமையான விளக்கத்தை வாழ்வியலாகவே உணர்த்தி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டார்.

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் பொதுக்கூட்டம் 15.04.2026, புதன்கிழமை அன்று, மாலை 5 மணிக்கு பூந்தமல்லி நெடுஞ்சாலை ஈக்காட்டுத்தாங்கலில், கங்கை அம்மன் கோயில் அருகில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், தி.மு.க. மாமன்ற உறுப்பினர் இரா.துரைராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஞானசேகரன், ஆடிட்டர் இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். முன்னதாக திராவிடர் கொள்கை இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

என்னுடைய வலி பெரிதல்ல

வேட்பாளரும், அமைச்சருமான மா.சுபிரமணியம், கழகத் தலைவருடன் இணைந்து மேடைக்கு வருகை தந்தார். அமைச்சர் கழகத் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். இந்தியா கூட்டணியின் பொறுப்பாளர்கள், தோழர்கள் கழகத் தலைவருக்கு பயனாடை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் மரியாதை செய்து மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து, அமைச்சர் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து சுருக்கமாக உரையாற்றினார். அதில், “இந்த 93 வயதிலும், காலில் அடிபட்டு கடும் வலி ஏற்பட்டுள்ள நிலையிலும், பெருமதிப்பிற்குரிய அய்யா ஆசிரியர் அவர்கள், பரப்புரை செய்வதற்காக மேடை ஏறி வந்ததைக் கண்டு, தான் மிகவும் சங்கடம் அடைந்ததாக குறிப்பிட்டு அமர்ந்தார்.  நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார். அவர் தமது உரையின் தொடக்கத்தில், “அமைச்சர் அவர்கள், எனக்கு காலில் அடிபட்டு வலியோடு வந்திருக்கிறேன் என்றும், அதைக் கண்டு தான் சங்கடப்பட்டதாகவும் சொன்னார். தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் தலைவலியை விட, என்னுடைய வலி பெரிதல்ல” என்று அமைச்சருக் கும், மக்களுக்கும் பதில் அளித்துவிட்டு தனது பரப்பு ரையை தொடர்ந்தார்.

இப்போது வீசுவது ஸ்டாலின் அலை

அவர் தமது உரையில், “கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் தாய்மார்களும், பெரியோர்களும் வருகை தந்திருக்கிறீர்கள். இந்த எழுச்சியை காணும் போது, மே 4 ஆம் தேதிக்குப் பிறகு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் மறுபடியும் முதலமைச்சர் ஆவார் என்பது உறுதியாகத் தெரிகிறது” என்று பலத்த கைதட்டல்களுக்கும், ஆரவாரங்களுக்கும் இடையில் குறிப்பிட்டார். மேலும் அவர்,  “சைதாப்பேட்டை கலைஞர்  நின்ற தொகுதி” என்ற ஒரு வரலாற்று குறிப்பை மக்களுக்கு நினைவு படுத்தினார். மக்கள் தன்னிச்சையாக மகிழ்ந்து கைகளைத் தட்டினர். மக்களின் உற்சாகத்தைக் கண்டு கழகத் தலைவர், “இப்போது வீசுவது ஸ்டாலின் அலை” என்றார். மேலும் அவர், தொகுதி வரையறை பற்றி நினைவூட்டி,  “ஒரு பக்கம் தேர்தல் போராட்டம் நடைபெற்றாலும், உரிமைப் போராட்டத்தையும் நடத்தத் தவற மாட்டோம்” என்று உரக்கச் சொன்னார். அதே உணர்ச்சியை தாங்களும் பெற்றதை, கைதட்டல்கள் மூலம் மக்கள் வெளிப்படுத்தினர். மேலும் அவர், “இந்த தொகுதி வரையறை என்பது எல்லோருக்கும் சமமாக நடக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்டவர்கள் சொல்வது, இனிப்பு பூசிய விஷ உருண்டை போன்றது” என்று உவமித்து, பளிச்சென்று விளங்க வைத்தார். அடுத்து, பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு, “அதில் மக்கள் நலத்திற்காக எந்தவொரு திட்டமும் இல்லை” என்பதை அம்பலப்படுத்தினார். பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தை, விவசாயிகளின் நெல் உற்பத்திக்கு தமிழ்நாடு அரசு அளித்து வரும் ஊக்கத்தொகை குறித்த அவர்களின் நிலைப்பாட்டையும், வெளிப்படையாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம், ‘வரப்புயர நீர் உயர’ என்று அவ்வையார் பாடலைப் பாடி, விவசாயிகளை ஏமாற்ற முயல்வதையும் சுட்டிக்காட்டி பேசினார். அடுத்து, அப்படிப்பட்ட பா.ஜ.க.வுடன், அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்வதையும் சுட்டிக்காட்டி, “இதிலிருந்து தமிழ்நாடு மீளவும், கடந்த  5 ஆண்டுகளில் நடைமுறையில் இருக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரவும், மா.சுப்பிரமணியம் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

விருகம்பாக்கம்

தி.மு.க.வின் ‘காட்பாதர்’ ஆசிரியர்

அதைத் தொடர்ந்து, அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு, விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர் பிரபாகர ராஜா அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க புறப்பட்டார். சென்னை மேற்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், இரவு 8 மணிக்கு மேல், கலைஞர் கருணாநிதி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் கரு.அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற, இக்கூட்டத்தில் சுப்பிரமணியன், ஜெயசீலன், தி.மு.க.கண்ணன் MC, கதிரேசன், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். முன்னதாக கிராமப் பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் க.அன்பழகன் தொடக்க உரையாற்றினார். வேட்பாளர் பிரபாகர ராஜா வருகை தந்து வாகனத்தின் மீதிருந்து, “தி.மு.க.வின் ‘காட் பாதர்’ ஆசிரியர் அய்யா, எனக்கு வாக்கு கேட்டு வந்திருப்பதை நான் என்றென்றும் மறவேன்” என்று பேசி தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார்.

ஆசிரியர் பிரச்சாரம் – எனக்கு கிடைத்த பேறு!

“பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள், மேடைக்கு வரும்போது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. செங்குத்தான படிகள். ஆசிரியர் அய்யா அவர்களின் முட்டியில் அடிபட்டு, கால் கன்னிப் போயிருக்கிறது. அவருடைய வயது 93. இந்த வயதிலும் முட்டியில் ஏற்பட்ட வலியுடன் மேடைக்கு வந்திருக்கிறார். சிலர் சொல்கின்றனர். ‘நான் வலியை தாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன்’ என்று, நான் யாரைச் சொல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். ஆசிரியர் அய்யாவுக்கு ஏற்பட்டிருக்கும் வலியை விட, இந்த திராவிடர் இனத்திற்கு வேறு எந்த வலியும் வந்து விடக்கூடாது என்று, தன்னுடைய 93 வயதிலும் உழைக்கின்ற ஆசிரியர் அய்யா அவர்கள், சைதாப்பேட்டை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்பது என்பது, எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு ஆகும்”
– சைதாப்பேட்டை பொதுக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம். 15.04.2026

எந்த தேர்தலிலும் இல்லாத மகிழ்ச்சி…

அவர் தமது உரையில், 1952 க்கு முன்னால் ஒரு தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தல் உட்பட, இந்த 17 ஆம் சட்டப்பேரவை தேர்தலுடன் 18 தேர்தல்களை நான் பார்த்திருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். வேறு எந்த தேர்தலிலும் இல்லாத மகிழ்ச்சி, மக்களிடம் குறிப்பாக மகளிரிடம் இருக்கிறது” என்று குறிப்பிட்டு விட்டு, “இதே மகளிரைத்தான் 100 ஆண்டுகளுக்கு முன்பு, ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு?’ என்றனர் சிலர். இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறி இருக்கின்றது. இந்த மாற்றம் எப்படி வந்தது? அந்த மாற்றத்தை தந்த இயக்கம் தான், திராவிடர் இயக்கம்! அதன் தொடர்ச்சியாகத் தான், விருகம்பாக்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பிரபாகர ராஜாவுக்கு நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்!” என்று திமுகவின் நீண்ட… நெடி…ய கொள்கை வரலாற்றுப் பின்னணியை சுருக்கமான நேரத்தில் விவரித்தார். தொடர்ந்து, திராவிட மாடல் அரசின் சாதனைகளை பட்டியலிடத் தொடங்கினார். அடுத்து, செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு 2,533 கோடி ரூபாயும், தமிழ் உட்பட 5 செம்மொழிகளுக்கும் சேர்ந்து 145 கோடி ரூபாய்தான் ஒதுக்கி இருக்கிறார்கள்” என்ற ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையை அம்பலத்தில் ஏற்றி வைத்தார். தொடர்ந்து, பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு விளக்கினார். அதில், “ஒரு மதத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கின்றது” என்பதைச் சுட்டிக்காட்டி, “பன் மதங்கள், பல கலாச்சாரங்கள் இருக்கின்ற ஒரு நாட்டில் கலவரத்தை தூண்டும் முயற்சி இது” என்றும் கண்டித்தார். மேலும் அவர், வேட்பாளரின் தந்தை வணிகர் சங்க பொறுப்பாளர் விக்கிரம ராஜா அவர்களை நினைவூட்டி, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் உள்ள இல்லத்தரசிகள் திட்டத்தைப் பற்றி பேசினார். அதாவது, இந்தத் திட்டமும் இல்லத்தரசிகளுக்கு மட்டும் பயன்படும் திட்டமாகவே பார்க்கப்படுவதையும், அதனுடைய இன்னொரு பக்கமாக வியாபாரிகளின் கண்ணோட்டத்தில் மிகச்சிறந்த திட்டமாகவும், உள்ளூர் பொருளாதாரம் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சி அடையும் என்பதை, வணிகர் சங்கத் தலைவர் விக்ரம ராஜா குறிப்பிட்டதை மக்களுடன் பகிர்ந்து, திராவிட மாடல் அரசின் திட்டங்களின் ஆக்கத்தையும், தாக்கத்தையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து, பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. பற்றிய விமர்சனங்களை முன்வைத்து, “திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடர்வதற்காக, விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கூறி, தனது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்வில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் தோழர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கழகத் தலைவரின உரையை கண்டும், கேட்டும் பயன் பெற்றனர்.

- விடுதலையின் நாளேடு, 19.04.2026

வெள்ளி, 17 ஏப்ரல், 2026

சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு தமிழர் தலைவர் வாக்கு சேகரித்து உரையாற்றினார்


திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

எங்கெங்கு காணினும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் –
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலையே வீசுகிறது!

திராவிடர் கழகம்

சைதை தொகுதி ஈக்காட்டுத்தாங்கலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க நடைபெற்ற கலை நிகழ்ச்சி.

- விடுதலை நாளேடு, 16.04.2026

வியாழன், 16 ஏப்ரல், 2026

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கருப்புக் கொடி ஏற்றி – கருப்புச் சட்ட நகலை எரித்தார்



தமிழ்நாடு, திராவிடர் கழகம்

சென்னை, ஏப். 16- இன்று (16.4.2026) காலை 11 மணியளவில் திராவிடர் கழக அலுவலகத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாகக் கொண்டு வருகின்ற சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றியும், கருப்புச் சட்டத்தின் நகலை எரித்தும் முழக்கமிடப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஒழித்துக் கட்டி மனுஸ்மிருதியைச் சட்ட மாக்கும் பேராபத்துக்கான அடித்தளமே இன்று (16.4.2026) நாடாளுமன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் தொகுதி மறு சீரமைப்பு சட்டத் திருத்தம்.

இதைக் கொண்டு வரும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியை முறியடிக்கும் உரிமைப் போரின் பெரு முழக்கமாக இன்று (16.4.2026) காலை 11 மணியளவில் சென்னை வேப்பேரியில் திராவிடர் கழக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் கருப்புக் கொடி ஏற்றிய கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியாரின் சிலைக்கு முன்பாக கருப்புச் சட்ட மசோதாவின் நகலை தீ வைத்து எரித்தார்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடாளு மன்றத்தில் தொகுதி மறுவறையறை தொடர்பாக கொண்டு வரப்படும் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்து கண்டன ஒலி முழக்கமிடப்பட்டது.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், பொன்னேரி வி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், இராமு, திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, இணைச் செயலாளர் சோ.சுரேஷ், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், த.சீ.இளந்திரையன்,

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

வடசென்னை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், திருவொற்றியூர் கணேசன், கோ.தங்கமணி, ப.கோபாலகிருஷ்ணன், சி.காமராஜ், பேராசிரியர் பெரியார் செல்வி, பசும்பொன், கவுதமி, த.மரகதமணி, மு.பவானி, தங்க.தனலட்சுமி, இறைவி, உத்திரா, த.இளவரசி, த.திராவிட இலக்கியா, தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, அரும் பாக்கம் சா.தாமோதரன், ஆவடி மாவட்டக் கழகத் தலைவர் கார்வேந்தன், செயலாளர் இளவரசன், சரவணன், சீனு நடராசன், முத்துகிருஷ்ணன், மேற்கு சென்னை மாவட்ட கழகத் தலைவர் கரு.அண்ணாமலை, தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் இரா.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், கருப்பைய்யா, குணசேகரன், மதியழகன், சீர்காழி ராமண்ணா, சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், தலைவர் வே.பாண்டு, செயலாளர் நா.தமிழினியன், மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்று கண்டன ஒலி முழக்கங்களை எழுப்பினர்.

-விடுதலை நாளேடு, 16.04.26


சென்னை, ஏப். 16- இன்று (16.4.2026) காலை 11 மணியளவில் திராவிடர் கழக அலுவலகத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாகக் கொண்டு வருகின்ற சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றியும், கருப்புச் சட்டத்தின் நகலை எரித்தும் முழக்கமிடப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஒழித்துக் கட்டி மனுஸ்மிருதியைச் சட்ட மாக்கும் பேராபத்துக்கான அடித்தளமே இன்று (16.4.2026) நாடாளுமன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் தொகுதி மறு சீரமைப்பு சட்டத் திருத்தம்.

இதைக் கொண்டு வரும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியை முறியடிக்கும் உரிமைப் போரின் பெரு முழக்கமாக இன்று (16.4.2026) காலை 11 மணியளவில் சென்னை வேப்பேரியில் திராவிடர் கழக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் கருப்புக் கொடி ஏற்றிய கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியாரின் சிலைக்கு முன்பாக கருப்புச் சட்ட மசோதாவின் நகலை தீ வைத்து எரித்தார்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடாளு மன்றத்தில் தொகுதி மறுவறையறை தொடர்பாக கொண்டு வரப்படும் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்து கண்டன ஒலி முழக்கமிடப்பட்டது.

திங்கள், 30 மார்ச், 2026

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் ‘அஞ்சா நெஞ்சன் அழகிரியின் 77 ஆவது நினைவு நாள் மற்றும் ‘ஏன் திமுக ஆட்சி மீண்டும் வரவேண்டும்?’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் பரப்பரை பொதுக்கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டம்
திராவிடர் கழகம்

சென்னை, மார்ச் 30– தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:

மயிலாப்பூர் – தென் சென்னை

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் ‘அஞ்சா நெஞ்சன் அழகிரியின் 77 ஆவது நினைவு நாள் மற்றும் ‘ஏன் திமுக ஆட்சி மீண்டும் வரவேண்டும்?’ என்ற தலைப்பில் மாபெரும் பரப்பரை பொதுக்கூட்டம்  28.03.2026 மாலை 6:00 மணி அளவில் நடைபெற்றது.

திராவிடர் கழகம்

தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் டி .ஆர். சேதுராமன் தலைமை யேற்றார்.  தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார். தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தொடக்க உரையாற்றினார்.

கோ.வீ.ராகவன் (பொதுக்குழு உறுப்பினர்), ந.மணிதுரை (மாவட்ட இளைஞரணித் தலைவர்), பெரியார் யுவராஜ் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்), ச. மகேந்திரன் (இளைஞர் அணி துணைத் தலைவர்) ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் வீ.கே.ஆர். பெரியர் செல்வி, முருகன் (விசிக), பி.சாரநாத் (விசிக), எஸ்.கே.சிவா (சி.பி.அய்), எஸ்.குமார் (சி.பி.அய்.எம்) ஆகியோர் உரையாற்றினர்.

திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் வீ. அன்புராஜ் சிறப்புரை ஆற்றினார்கள்.

முன்னதாக அறிவுமானனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு அவர்கள் நிகழ்ச்சியின் இறுதியில் வருகை தந்து வேட்பாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு உரையாற்றினார்.

அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் பயனாடை அணிவிக்கப்பட்டது.

கழக பொதுச் செயலாளர்
வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்து பாராட்டினார். பிறகு தோழமைக் கட்சி தோழர்கள் பயனாடை அணிவித்து பாராட்டினர்.

எஸ்.முரளி (மயிலாப்பூர் கிழக்கு பகுதி செயலாளர்,திமுக), அ.தவநேசன் (திமுக, 125ஆவது வட்டச் செயலாளர்), அ.ரேவதி (125ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர், திமுக) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கழகத் தோழர்களான அ.அன்பு (துணைத் தலைவர், மாவட்ட இளைஞரணி), வி. வளர்மதி (தலைவர், மகளிர் அணி), பி. அஜந்தா, வி. தங்கமணி, ஜெ. சொப்பன சுந்தரி, வி. சகானப் பிரியா, ஆர். கோமதி, வி.நிலா, கு.ரேவதி, ச. மாரியப்பன், அ.அன்பு, திருவல்லிக்கேணி அப்துல்லா, ஈ. குமார், எம்.டி.சி. இராஜேந்திரன், தாம்பரம் சு.மோகன்ராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), க. தமிழ்ச்செல்வன் (துணைச் செயலாளர் ஆவடி மாவட்டம்), குன்றத்தூர் மு. திருமலை, சி.காமராஜ்,

கரு. அண்ணாமலை (மாவட்ட கழகத் தலைவர், மேற்கு சென்னை) க.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர், மேற்கு சென்னை), ம.தி. பெரியார் ஆதவன், ம.தி. பெரியார் இனியன், தர்மா ஆகியோரும்;


தோழமைக் கட்சியினரான எஸ். வெங்கடேசன் (124ஆவது வட்டப் பகுதி பிரதிநிதி), வி. விஜய் வெங்கடேசன் (மாவட்ட செயலாளர், திமுக இலக்கிய அணி), மயிலை தீபன் (பகுதி இளைஞரணி துணைச் செயலாளர்), எம்.புகழேந்தி (125 வது வட்டம்), ஆர்.‌‌சிறீ. செல்வி, கே. கலையரசி (திமுக 125 ஆவது வட்ட துணைச் செயலாளர்), அகல்யா (திமுக பகுதி துணைச் செயலாளர்), குமாரி மாவட்ட கிழக்கு பகுதி துணைச் செயலாளர்), கோ. கண்ணன் (126 ஆவது வட்ட திமுக), மா.பா. அன்பு (124(அ)வட்டப் பொறுப்பாளர், திமுக), தலித் கமல் (மாவட்டத் துணைச் செயலாளர்), சூ.க.சார்லஸ் (மாவட்டத் துணைச் செயலாளர்),கே. மணிகண்டன், சீமென்.கோ.அன்பு, ஜி. இராமச்சந்திரன்( விசிக, 121ஆவது வட்ட செயலாளர்), ஆ.க. எழிலன் (மாவட்டத் துணைச் செயலாளர், விசிக), ப. சரவணன், ந. வீர பெருமாள், இரா. தேன் (விசிக), எஸ். பாலாஜி (விசிக), பிரசன்ன குமார் மற்றும் பெருவாரியான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


- விடுதலை நாளேடு, 30.03.2026



வியாழன், 19 மார்ச், 2026

தொல்லியல் ஆய்வாளர் சர் ஜான் மார்ஷலின் 150 ஆவது பிறந்த நாள்: தமிழர் தலைவர் ஆசிரியர் மலர்தூவி மரியாதை

திராவிடர் கழகம்

சர்.ஜான் மார்ஷல் 150ஆம் பிறந்த நாள் : சிலைக்கு மாலை அணிவித்தபின் தமிழர் தலைவர் பேட்டி


அகழ்வாய்வு நடந்தால் மட்டும் போதாது,
கீழடி அறிக்கையையும் வெளியிட வேண்டும்!
இதுதான் எங்களது கோரிக்கை – அதற்காக திராவிடர் கழகம் போராட்டம் நடத்தவும் தயார்!

திராவிடர் கழகம்

சென்னை, மார்ச் 19  அகழ்வாய்வு நடந்தால் மட்டும் போதாது, கீழடி அறிக்கையையும் வெளியிட வேண்டும்.  இல்லை யென்றால், அதற்காக திராவிடர் கழகம் போராட்டம் நடத்தவும் தயார் என்று செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

இன்று (19.3.2026) தொல்பொருள் ஆராய்ச்சியாளர்  சர்.ஜான் மார்ஷலின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாளாகும். சென்னை எழும்பூரில் உள்ள அருங்கட்சியகம் முன்பு அமைந்துள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

சர். ஜான் மார்ஷல் பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக  வந்து,  சிறப்பாக தொல் பொருள் ஆய்வை மேற்கொண்ட நேரத்திலே, இந்த நாகரிகம் என்பது திராவிட நாகரிகம் என்பதை தன்னுடைய ஆய்வுத் திறத்தால் நிறுவினார். ‘வேதகால நாகரிகத்தை விட அதற்கும்  முன்பு ஏற்பட்ட பழம்பெரும் நாகரிகம் திராவிட நாகரிகம்.  ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்றவற்றில் இருந்த கட்டுமானங்களும், கழிவுநீர் வடிகால் வசதிகளும் சிறந்ததொரு நாகரிகம் என்பதற்கு முதன்மையான சான்றுகளாகக் கிடைக்கின்றன’ என்று சொன்ன சர்.ஜான் மார்ஷல் அவர்களின் 150 ஆம் பிறந்த நாள் இன்று.

‘திராவிட மாடல்’ ஆட்சியில்
சர்.ஜான் மார்ஷலுக்குச் சிலை திறப்பு!

‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய ஒப்பற்ற நம்முடைய முதலமைச்சரான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பெருமையோடு உச்சரிக்கக் கூடிய ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் அவர்கள், அவருக்கென்று இங்கே சிலை எடுத்தார்கள்.  இலக்கியவாதிகளும் சிலை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். தொல்பொருள் ஆய்வாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் வற்புறுத்திய நிலையில், அதற்கு அறிவிப்பு கொடுத்தது மட்டுமல்ல, ‘சொன்னதைச் செய்வோம்’ என்று மிகத் தெளிவாக காட்டக்கூடிய வகையில் இந்த சிலையையும் கடந்த ஆண்டு திறந்தார்கள். அது பாராட்டி வரவேற்கக் கூடிய ஒன்றாகும்.

அதுமட்டுமல்லாமல், இரண்டு நாட்களுக்கு முன்னால், ‘திராவிட மாடல்’ ஆட்சி தொடர்ந்து போராடிக் கொண்டிருந்த அடிப்படையிலான ஒரு செய்தி – கீழடி நாகரிகம் என்பது திராவிட நாகரிகத்திற்கு உடன்பாடானது மட்டுமல்ல, அதற்கும் மூத்தது என்று தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். அந்த நாகரிகத்தினுடைய அறிக்கைகள், அதற்குரிய தரவுகள் ஆகியவற்றை வெளியிடக்கூடாது என்று ஒன்றிய அரசு, ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. மோடி அரசு, திட்டமிட்டு அதை வெளியிடாமலேயே வைத்திருக்கிறார்கள்.

அந்த ஆய்வில் ஈடுபாடோடு இருக்கக்கூடிய அதிகாரிகளையும் தொல்லை கொடுத்து மாற்றி இருக்கின்ற நேரத்திலே, 8 இடங்களில் மேலும் அகழ்வாய்வு செய்வதற்கு அனுமதி தராமல் மறுத்து வைத்திருந்தார்கள். தொடர்ந்து முதலமைச்சருடைய போராட்டத்தினாலே அதற்கு அனுமதி கொடுத்து, அதனை நேற்று (18.3.2026) முதலமைச்சர் தெளிவாக்கி இருக்கிறார். 8 அகழ்வாராய்ச்சிகள் நடந்தால் மட்டும் போதாது. கீழடி அறிக்கையும் வெளியிடப்பட வேண்டும் என்பதை முதலமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார்கள். சர்.ஜான் மார்ஷல் அவர்களுடைய 150 ஆம் பிறந்தநாள் விழாவிலே, இதுதான் எங்களுடைய கோரிக்கையாக மட்டுமல்ல, அடுத்த போராட்டமாகவும் இருக்கும்.

– இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கலந்து கொண்டோர்

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், கழக மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத் தலைவர் மயிலை சேதுராமன், அன்பு, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்டச் செயலாளர் புரசை
சு. அன்புச்செல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் ஆர்.டி. வீரபத்திரன், மாவட்டத் தலைவர் வேலூர்  பாண்டு, செயலாளர் தமிழினியன், கொடுங்கையூர் கோ. தங்கமணி, தங்க தனலட்சுமி, அரும்பாக்கம் சா.தாமோதரன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், ஜனார்த்தனன், செல்லப்பன்,மாணிக்கம், இளவரசி, பூங்குழலி, அருள், உத்ரா, யுகேஷ், பூவை தமிழ்செல்வன், மகேந்திரன், தன்ராஜ், பெரியார் பிஞ்சுகள் திராவிட எழில்,யாழ் தமிழ், பெரியார் சம்பத், உடுமலை வடிவேல், பா. சிவக்குமார், புகழேந்தி, ச.விஜய், மதுரவாயல் தமிழ்ச்செல்வன், பிரகாஷ், க. கலைமணி, கணேசன், டெய்சன், அசோக்குமார் உள்ளிட்ட பெருந்திரளான தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

- விடுதலை நாளேடு, 19.03.26

புதன், 18 மார்ச், 2026

அன்னை மணியம்மையார் 48ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை


திராவிடர் கழகம்

சென்னை, மார்ச் 16- தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (16.3.2026) காலை, அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் வாழவைத்த தொண்டறத்தாய் அன்னை மணியம்மையாரின் 48ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (16.3.2026) காலை 10.30 மணியளவில் சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழகத் தோழர் – தோழியர்கள் பெருந்திரளாக சென்று மலர் மாலை அணிவிக் கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, தந்தை பெரியார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவுத் தூண் ஆகிய இடங்களில் மலர் வளையம் வைக்கப்பட்டது. பின்னர் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது

அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிட தொழிலாளரணி, பெரியார் மருத்துவமனை, திராவிடன் நிதி, பெரியார் நூலகர் வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், ஆடிட்டர் ஆர்.இராமச்சந்திரன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், நெய்வேலி ஞானசேகரன், மருத்துவர் டாக்டர் தர்ஷினி ஆனந்து, சி.வெற்றிச்செல்வி, பேராசிரியர் க.பெரியார் செல்வி, பொறியாளர் ச.இன்பக்கனி தங்க.தனலட்சுமி, பசும்பொன் செந்தில்குமாரி, இளவரசி, உமா, பூவை செல்வி, மு.செல்வி, வி.வளர்மதி, க.சுமதி, க.வெண்ணிலா, இளவேனில், பூங்குழலி, உத்ரா, வாணி, தேவி, விசாலாட்சி, வெண்ணிலா கதிரவன், க.அழகுமணி, வளர்மதி, மோகனப்பிரியா, பிரசீனா, அன்புமணி, மரகத மணி, ஆதிலட்சுமி, கலைவாணி, பெரியார் பிஞ்சு அதிரா.

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் மயிலை சேதுராமன், ஆயிரம் விளக்கு சேகர், காரைக்குடி பிராட்லா, மயிலாடுதுறை கி.தளபதிராஜ், வழக்குரைஞர் துரை அருண், தொழிலாளரணி செல்வராஜ், ஜனார்த்தனம், பெரியார் மாணாக்கன், சி.காமராஜ், எண்ணூர் மோகன், நங்கநல்லூர் தமிழினியன், கலைமணி, ஆனந்த், அசோக், டெய்சன், ராமு மற்றும் திரளான கழகத் தோழர்கள், பெரியார் திடல் பணித் தோழர்கள் அனைவரும் பங்கேற்று மரியாதை செலுத் தினர்.


தமிழர் தலைவர் தலைமையில், அன்னை மணியம்மையாரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து சூளுரை!



அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரின் 48 ஆவது நினைவு நாள் இன்று!
பிரியா விடை கொடுத்தோம் – அன்று; பிரியாமலேயே
நம்மை வழிநடத்தும் உணர்வாக உள்ளார் இன்றும்!

அன்னை மணியம்மையாருக்குப் பிரியா விடை கொடுத்தோம் – அன்று; பிரியாமலேயே நம்மை வழிநடத்தும் உணர்வாக உள்ளார் இன்றும்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரின் 48 ஆவது நினைவு நாள் இன்று (16.3.2026).

நினைவு நாள் என்பது
ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்!

இந்நாளில்தான் நாம் அனைவரும் அன்னை அவர்களை நினைவு கூர்கிறோம்; தொண்டறத்தாயின் ஒப்பில்லாத் தொண்டினைப் பாராட்டிப் பெருமிதம் கொள்கிறோம் என்பது மட்டுமல்ல.

அவர்களை என்றும் நாம் மறந்தோமில்லை; இன்று மட்டும் நினைவு என்பதற்கு! இந்நாள் – நினைவு நாள் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள், அவ்வளவே!

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் என்ற பேரி யக்கத்தைத், தன்னுடைய ஈடற்ற தொண்டால், தொய்வில்லாப் பணியால் 95 ஆண்டு வாழ வைத்த அரும்பெரும் தன்னல மறுப்பாளர் அருமை அன்னையார்!

தொண்டறம் –

மிக எளிய வாழ்வு இவைதான் அன்னையார்!

கைவிடப்பட்ட குழந்தைகளுக்குத் தாயாகி, தாலாட்டி, வளர்த்து வாழ்வளித்துக் காப்பாற்றி, இறக்கைகள் முளைக்கும் வரை பாதுகாத்து வளர்த்த தாய்ப்பறவை அவர்!

ஆசிரியர் அறிக்கை

பொதுத் தொண்டுக்கான பாடநூல் ஆசிரியர் அவர் – இன்றும், என்றும்!

மானுடம் என்பது ஒரு சுயநல வட்டம் அல்ல; எல்லையற்ற (மானிட) பெரும் நெஞ்சுரம் கொண்ட வர்களைக் களப் போராளிகளாக்கி, இலட்சியத்தை வென்றெடுத்து, அவனிக்குப் பொதுவாழ்வு – ‘‘பொதுத் தொண்டுக்கான பாடநூல் ஆசிரியராகத்’’ திகழ்பவர் அவர் – இன்றும், என்றும்! கூடுதலாக ‘விடுதலை’யின் அதிகாரப்பூர்வ ஆசிரியராகப் பல ஆண்டுகள் திகழ்ந்தவர்!

நம்மையெல்லாம் ‘நெருக்கடி காலம்’ என்ற ஓர் இருண்ட அடக்குமுறை காலத்திலும், கண்ணை இமை காப்பதைப்போல்  கழகத்தைக் காப்பாற்றிட, தனது நலவாழ்வைப் பற்றிக்கூட கவலைப்படாது, சுற்றிச் சுழன்று, பாதுகாப்புக் கவசமாய்த் திகழ்ந்தவர்.

வேலூர் தந்த வீராங்கனை அவர்!

பல்லாண்டு, பெரும் அவமானத்தையே வெகு மானமாகப் பெற்ற காலத்திலும்கூட, நிலைகுலையாமல், தலைதாழாமல் வென்றெடுத்த வேலூர் தந்த வீராங்கனை அவர்!

எல்லாவற்றையும் தாண்டி, தம்மிடம் இருந்த சொத்துகளை – நம் தந்தையைப்போல பொதுத் தொண்டுக்குரியதாக்கி, பொல்லாங்கு சொன்னவர்களை வெட்கித் தலைகுனிய வைத்து, பெரும் கொள்கைப் பிழம்பாய் வெளிச்சம் தந்த விடிவெள்ளி அவர்!

அதனால், வீட்டுக்குள் அடைபட்ட பெண்களின் மூளை விலங்கினை உடைத்து, முன்னேற, பல்கலைக் கழகமும், கல்லூரிகளும், அவர் பெயரில் வெளிச்சம் பாய்ச்சும் கல்விக் கலங்கரை விளக்கமாகி ஓளிவீசி நிற்கின்றன!

நம்மை வழிநடத்தும் உணர்வாக உள்ளார்!

பிரியா விடை கொடுத்தோம் – அன்று!

பிரியாமலேயே நம்மை வழிநடத்தும் உணர்வாக உள்ளார் இன்றும்! என்றும்!!

வாழ்க தொண்டறத்தாய்!

 கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை

16.3.2026