சனி, 13 செப்டம்பர், 2025

பெரியார் யுவராஜ் விடுதலை சந்தா வழங்கினார்

சந்தா தொகை

மாநில இளைஞரணிப் பொறுப்பாளர்கள் கலந்துரை யாடல் கூட்டத்தில் தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் யுவராஜ் ‘விடுதலை’ சந்தா ரூ.11,500 தொகையை கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கினார். (சென்னை, 7.9.2025)
-விடுதலை நாளேடு, 12.09.2025

செவ்வாய், 9 செப்டம்பர், 2025

சென்னையில் திராவிட மாணவர் கழகம் (DSF) நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கழகத் துணைத் தலைவர் கண்டன உரையாற்றினார்


திராவிடர் கழகம்

ஒன்றிய பா.ஜ.க. அரசின் யூ.ஜி.சி. (UGC) வெளியிட்டுள்ள (LOCF) காவி வரைவு அறிக்கையைக் கண்டித்து

சென்னை, செப்.8 ஒன்றிய பா.ஜ.க. அரசின் யூ.ஜி.சி. (UGC) வெளியிட்டுள்ள  (LOCF) காவி வரைவு அறிக்கையைக் கண் டித்து சென்னையில் திராவிட மாணவர் கழக (DSF) நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கண்டன உரையாற்றினார்.

ஒன்றிய பாஜக அரசின் யூ.ஜி.சி. (UGC)  வெளியிடப்பட்டுள்ள எல்.ஓ.சி.எஃப் (LOCF) காவி வரைவு அறிக்கையைக் கண்டித்து இன்று (8-9-2025) காலை 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசு திணித்த தேசியக் கல்விக் கொள்கையின் விளைவாக நாளும் கல்வித்துறையின் மீது தாக்குதல்கள் நடைெபற்ற வண்ணம் இருக்கின்றன.

திராவிடர் கழகம்

அண்மையில் பல்கலைக்கழக மானியக் குழுவால் (‘UGC – University Grants Commission’) வெளியிடப்பட்ட LOCF எனப்படும் ‘கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் கட்டமைப்பு’ வரைவு பாரம்பரிய பாரத அறிவை முன்னிறுத்துதல் என்ற பெயரில் பிற்போக் குத்தனமான காவிக் கொள்கையின் கூறுகளை வெளிப்படையாகக் கொண்டி ருக்கிறது. ‘‘இந்தப் பாடத்திட்டத்தில் சூரிய சித் தாந்தம் போன்றவற்றைக் கொண்டு வந்து, யுகங்கள், கல்பங்கள் முதல் பிரம்மாவின் நாள் (பிரம்ம வர்சா) வரையிலான அண்ட காலச் சுழற்சிகளையும், விஷ்ணு வர்சா, சிவ வர்சா போன்ற தெய்வீக சுழற்சிகளையும் விளக்கும் பாடங்கள் இடம் பெறுமாம். இடம்பெற வேண்டுமாம்.

‘ஜோதிடம் அறிவியல் அல்ல’ என்று நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டனரே!  இன்றும் அறிவியல்படி நிரூபிக்க முடியாத முட்டாள்தனத்தின் முடைநாற்றம் வீசும் மோசடியை மாணவர்களுக்குத் திணிக்கப்போகிறார்களா? சில ஆண்டுகளுக்கு முன்னால் நோபல் பரிசு பெற்றவரான அறிவியல் அறிஞர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், ஜோதிடம் என்பது போலித்துறை என்று வெளிப் படையாக அறிவித்தாரே! அதைத்தான் இந்த 21ஆம் நூற்றாண்டில் மாணவர்களுக்குக் கற்றுத்தரப் போகிறார்களா?

அண்மையில் இந்தியாவின் சுதந்திர நாள் விழாவின் போதும், இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட காந்தியார், சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் ஆகியோருடைய படங்களுக்கு மேல் சாவர்க்கரின் படத்தைப் போட்டு தங்களது ஹிந்துத்துவ புத்தியை காட்டிக் கொண்டனர் ஒன்றியத்தை ஆளும் பாஜகவினர்.

எனவே இந்த ஒன்றிய பாஜக அரசின் எல்.ஓ.சி.எப் வரைவு அறிக்கையை கண்டித்து திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், சென்னை, விழுப்புரம், சேலம், திருச்சி, மதுரை, தஞ்சை ஆகிய தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் 8.9.2025 அன்று நடை பெறும்’’ என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 4.9.2025 அன்று அறிவித்தார். அதன்படி இன்று (8.9.2025) மேற்கண்ட முக்கிய நகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திராவிடர் மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, மகளிர் பாசறைத் தோழர்கள் உள்பட அனைத்து அணிகளின் தோழர் – தோழியர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று ஒன்றிய பாஜக அரசின் காவிக் கொள்கை திணிப்பைக் கண்டித்து ஒலி முழக்கமிட்டனர்.

கழக துணைத் தலைவர் கண்டன உரை நிகழ்த்தினார்

இந்த ஆர்ப்பாட்ட விளக்க கண்டன உரையை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நிகழ்த்தினார். பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தேவ.நர்மதா  ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்  தே.செ.கோபால் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பெரியார் யுவராஜ் வரவேற்புரையாற்றினார்.

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், செயலாளர் ந.இராஜேந்திரன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், ஆவடி மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், கும்முடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன், செயலாளர் ஜெ.பாஸ்கரன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் செம்பியன், மாவட்டச் செயலாளர் நரசிம்மன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வே. பாண்டு, செயலாளர் உ.விஜய் உத்தமன்ராஜ், மாநில மகளிரணி துணைச் செயலாளர்கள் இறைவி, பெரியார் செல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன்  ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, திராவிட மகளிர் பாசறை ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்ட நிறைவில் வடசென்னை மாவட்ட மகளிர்  பாசறைத் தலைவர் த.மரகதமணி நன்றியுரையாற்றினார்.

விடுதலை நாளேடு; 8.9.25


சென்னை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்

தென்சென்னை: இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, மு.சண்முகப்பிரியன்,  கரு.அண்ணாமலை, சா.தாமோதரன், பெரியார் யுவராஜ், இரா.மாரிமுத்து, அ.அன்பரசன், மு.இரா.மாணிக்கம், ந.மணித்துரை.

வடசென்னை: தே.சே.கோபால், புரசை சு.அன்புச்செல்வன், புகழேந்தி, வழக்குரைஞர் மு.வேலவன், சு.துரை ராஜ், கோபால கிருஷ்ணன், ச.ராஜேந்திரன்,  தி.செ.கணேசன், கோ.தங்கமணி, சி.காமராஜ், இராமு, அருள், மகேஷ் மற்றும் கி.தளபதிராஜ் (மயிலாடுதுறை),

தாம்பரம் மாவட்டம்: ப.முத்தையன், கோ.நாத்திகன், சு.மோகன்ராஜ், குணசேகரன், மறைமலைநகர் சிவக்குமார், கூடுவாஞ்சேரி இராசு,

கும்முடிப்பூண்டி மாவட்டம்: புழல் த.ஆனந்தன், சோழவரம் ப.சக்கரவர்த்தி, பொன்னேரி அருள், வடகரை உதயகுமார், ஓவியர் ஜனாதிபதி, ந.கஜேந்திரன்,

ஆவடி மாவட்டம்: வெ.கார்வேந்தன், க.இளவரசன், இரணியன், திராவிடமணி அ.வெ.நடராசன், முகப்பேர் முரளி, ஆவடி ஜெயராமன், சுந்தராஜ், வஜிரவேல்,  புஷ்பா, திருநின்றவூர் ரகுபதி, அம்பத்தூர் கு.சங்கர், கொரட்டூர் இரா.கோபால், ஆவடி தமிழ்மணி, அம்பத்தூர் முத்துகிருஷ்ணன், சரவணன், ராமலிங்கம், தேவேந்திரபாபு, உடுமலை வடிவேல், பெரியார் மாணாக்கன்,

மகளிரணி: இறைவி, பெரியார் செல்வி, மு.பசும்பொன்,  புஷ்பா, அமலாசுந்தரி, நர்மதா, மணிமொழி, இராணி, வெண்ணிலா, முகப்பேர் செல்வி, ராணி ரகுபதி, பூவை செல்வி, மு.செல்வி, த.மரகதமணி, வி.வளர்மதி, பி.அஜந்தா, இளவரசி, தங்க.தனலட்சுமி, செ.பெ.தொண்டறம்.

விடுதலை நாளேடு; 9.9.25


யூடியூப் காணொலி




செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

சூளைமேட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்



திராவிடர் கழகம்

செங்கல்பட்டு, மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர். அதன் விவரம் வருமாறு:-

சூளைமேடு, சென்னை

தென்சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் 23.08.2025 அன்று மாலை 6.30 மணி அளவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்; சூளைமேடு, சவுராஷ்டிரா நகர், முதல் தெருவில் சூளைமேடு பகுதி கழகத் தலைவர் நல்.இராமச்சந்திரன் தலைமையிலும், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை, மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை மற்றும் மாவட்ட இளை ஞரணி செயலாளர்  பெரியார் யுவ ராஜ் ஆகியோர் முன்னிலையிலும் நடை பெற்றது.

பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தொடக்க உரையாற்றினார்.முன்னதாக மாலை 5.30 மணி அளவில் அறிவு மாணனின் கொள்கைப் பாடல்களுடன் ‘இசை நிகழ்ச்சி’ நடைபெற்றது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 112ஆவது வட்ட செயலாளர் த.பரி சிறிது நேரம் உரையாற்றினார்.

மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்ததின் விளைவால் ஏற்பட்ட பயன்களை எடுத்துக் கூறி உரையாற்றினார்.

அடுத்து உரையாற்றிய திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் பா.மணியம்மை சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி மற்றும் திராவிடர் கழகம் போன்றவை மக்களுக்காக ஆற்றிய பணிகளை பட்டியலிட்டு கூறினார்.

திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் தந்தை பெரியாரின் தொண்டினையும், தந்தை பெரியார் அவர்கள் இட ஒதுக்கீட்டிற்காக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய தையும், தந்தை பெரியாரின் இட ஒதுக்கீடு கொள்கையை நீதிக் கட்சி ஏற்றத்தையும், இட ஒதுக்கீட்டிற்கான அடித்தளத்தை அமைத்ததையும், முத்தையா அவர்கள் இட ஒதுக்கீட்டை சட்டம் ஆக்கியதையும் எடுத்துக் கூறி, இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பட்ட தடைகளையும், போராட்டங்களையும், இட ஒதுக்கீட்டிற் காக இந்திய அரசியல் சட்டம்  திருத்தப் பட்டதையும், படிப்படியாக இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்ட வரலாற்றையும் கூறி, ஆசிரியருக்கு கி.வீரமணி அவர் களால்  69% இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு பாது காக்கப்பட்டதையும் விரிவாக எடுத்துக் கூறி  செங்கல்பட்டு மாநாடு வெற்றி அடைய அனைவருக்கும் அழைப்பு விடுத்து சிறப்பு உரையாற்றினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின்  109 ‘அ’ வட்ட செயலாளர் டேவிட் இன்பராஜ், பொன்சீலன், கிருஷ்ணன், 109 ‘அ’ வட்ட பகுதி பிரதிநிதி ஆர்.சேகர், நீலகண்டன், சிவா, போஸ்டல் பாஸ்கர், பரமேஸ்வரி, சாந்தி, தென்சென்னை மாவட்ட கழக மகளிர் அணி தலைவர் வி. வளர்மதி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி, செயலாளர் பி.அஜந்தா, ஆர். தமிழ்ச்செல்வி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, ஆவடி மாவட்ட கழகத் துணை தலைவர் வை. கலையரசன், எம்ஜிஆர் நகர் வெ.கண்ணன், அரங்க.ராசா, வடசென்னை க.செல்லப்பன், அய்ஸ் அவுஸ் உதயா, சூளைமேடு ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இறுதியாக எம்.டி.சி.பா.இராஜேந் திரன் நன்றியுரையாற்றினார்.

-விடுதலை நாளேடு, 26.08.2025


புதன், 20 ஆகஸ்ட், 2025

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு இராயப்பேட்டையில் விளக்கப் பொதுக்கூட்டம்



தமிழ்நாடு

ஆசிரியரின் வழிகாட்டுதல் எங்களுக்குப் பெரிய பலமும், பாதுகாப்புமாகும்!
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு உரை கழகத் துணைத் தலைவர் சிறப்புரையாற்றினார்

சென்னை, ஆக.20 ஆசிரியரின் வழி காட்டுதல் எங்களுக்குப் பெரிய பலமும், பாதுகாப்புமாகும் என்று மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தில் கூறினார்.

தென் சென்னை மாவட்ட கழ கத்தின் சார்பில், இராயப்பேட்டை, வி.பி.ராமன் சாலை மற்றும் டாக்டர் நடேசன் சாலை சந்திப்பில், 17.08.2025, ஞாயிறு, மாலை 6.30 மணி அளவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தென் சென்னை மாவட்டத் தலை வர் இரா.வில்வநாதன் தலைமை யிலும், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன்  ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

கொள்கைப் பாடல்களுடன் ‘இசை நிகழ்ச்சி!’

முன்னதாக மாலை 5.30 மணி அளவில் அறிவுமானனின் கொள்கைப் பாடல்களுடன் ‘இசை நிகழ்ச்சி’ நடை பெற்றது. மாவட்ட இளைஞரணி செயலாளர்  பெரியார் யுவராஜ் வர வேற்புரை ஆற்றினார். மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன் தொடக்க உரையாற்றினார்.

சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு உரை

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு கலந்து கொண்டு, சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும், சுயமரியாத இயக்க கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முனைப்புடன் செயல்படுவதை குறிப்பிட்டும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அணுகுமுறை எங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது. அவர் துணையாக இருந்து வழி காட்டுவது எங்களுக்கு பெரிய பலமும், பாதுகாப்பும் ஆகும்’ என்று சிறிது நேரம் பேசிவிட்டு விடை பெற்றுச் சென்றார்.

செயலவைத் தலைவர்

கழக செயலவைத் தலைவர் வழக்கு ரைஞர் ஆ.வீரமர்த்தினி, ‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு’ நடைபெறுவதற்கான காரணங்களை விளக்கிக் கூறி உரை யாற்றினார்.

துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சுயமரி யாதை இயக்கத்தின் வரலாற்றை எடுத்துரைத்தார்.

சுயமரியாதை இயக்கம் தோன்று வதற்கு முன், திராவிட சமுதாயம் எப்படி எல்லாம் அடிமைப்பட்டுக் கிடந்தது என்பதை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியும், தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி, திராவிட சமுதாயத்தை மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக மாற்றி, சுயமரி யாதையுடன் வாழ்வதற்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தந்தார். அதன் வழியில் திராவிடர் கழகம் பயணித்துப் போராடி பல உரிமைகளை பெற்றுத் தந்து கொண்டுள்ளது.

இன்றைய நிலையில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், திராவிடர் இயக்க அரசியல் கட்சி களுக்கு அறிவுரைகளை வழங்கி, பல சாதனைகளைப் படைத்து வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் நடைபெற உள்ள ‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை’ சிறப்பாக நடத்தி வெற்றி அடைய செய்வோம் என்று விளக்கிக் கூறி சிறப்புரையாற்றினார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் 85 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்குத் தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் தோழர்கள் பய னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பங்கேற்றோர்

நந்தனம் மதி (தி.மு.க.பகுதி கழகச் செயலாளர்), மாமன்ற உறுப்பினர், கிருஷ்ணமூர்த்தி (121ஆவது வட்ட செயலாளர், தி.மு.க.), இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர் ச.மகேந்திரன், இளைஞர் அணி துணைச் செயலாளர், இரா.மாரிமுத்து, திருவல்லிக்கேணி அப்துல்லா, தரமணி ம.ராஜு, எம். டி .சி. இராஜேந்திரன், மாவட்ட மகளிரணி தலைவர் வி. வளர்மதி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி, ஆவடி மாவட்ட துணை செயலாளர் க.தமிழ்ச்செல்வன், தாம்பரம் மோகன்ராஜ், சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, ஜெ. சொப்பன சுந்தரி, சங்கரி, சகானா பிரியா, வினோத் குமார், உதயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதிலிருந்தே மழை பெய்து கொண்டிருந்தபோதும் கூட்டத்தின் கருத்து மழையை பொது மக்கள் கேட்டு தெளிவு பெற்றனர்.

நிறைவாக மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.அன்பு நன்றி யுரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 20.08.2025


செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலுவின் வாழ்விணையர் மறைவு : தமிழர் தலைவர் இறுதி மரியாதை



திராவிடர் கழகம்

தி.மு.க. பொருளாளர் டி. ஆர்.பாலு அவர்களின்  வாழ்விணையர்  –  தொழில்துறை அமைச்சர்
டி.ஆர்.பி. ராஜா அவர்களின் தாயார் பா. ரேணுகாதேவி அவர்கள் இன்று (19.8.2025) மறைவுற்றார் என்பதற்கு வருந்துகிறோம். கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்கள் அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.  டி.ஆர். பாலு அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கலும், ஆறுதலும்  தெரிவித்தார்.

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்,  தாம்பரம் மாவட்டக் கழகத்  தலைவர் ப.முத்தையன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, தாராசுரம் வை .இளங்கோவன், பொறியாளர் கரிகாலன், தோழர்கள் சூளைமேடு இராமச்சந்திரன், கோவி.ராகவன், பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு. மோகன்ராஜ்,  ராமு, அரும்பாக்கம் சா.தாமோதரன், த. மரகதமணி, உடுமலை வடிவேல், பூவரசன், கணேசன், புகழேந்தி ஆகியோர் கழகத்தலைவருடன் சென்று மரியாதை செலுத்தினர். (சென்னை – 19.8.2025)

- விடுதலை நாளேடு, 19.08.25


சனி, 16 ஆகஸ்ட், 2025

நாகாலாந்து ஆளுநர் மறைவு தமிழர் தலைவர் மரியாதை


விடுதலை நாளேடு
திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

நாகாலாந்து ஆளுநரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான இல.கணேசன் அவர்கள் மறைவிற்கு கழக தலைவர் ஆசிரியர் அவர்கள் நேரில் சென்று மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.  உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்ட துணை செயலாளர் கரு. அண்ணாமலை, வழக்குரைஞர் துரை அருண் ஆகியோர் உள்ளனர். தமிழர் தலைவரை சந்தித்த பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இல. கணேசன் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். (சென்னை, 16.8.2025)


வியாழன், 7 ஆகஸ்ட், 2025

முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தில் கழகத் தலைவர் தலைமையில் கழகத் தோழர்கள் புடைசூழ மரியாதை (சென்னை, 7.8.2025)


திராவிடர் கழகம்

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2025) கலைஞரின் நினைவிடத்தில், மருத்துவப் பயனாளியாக பயன்பெற்றுத் திரும்பிய நிலையில், முதன்முதலாக தோழர்கள் புடைசூழ மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஒரத்தநாடு இரா.குணசேகரன்,
ஊமை.ஜெயராமன், வி.பன்னீர்செல்வம் மற்றும் தோழர்கள் உள்ளனர்.

முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாள் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை

சென்னை, ஆக.7 முத்தமிழறிஞர் கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முத்தமிழறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2025) காலை 10 மணியளவில் சென்னை கடற்கரை  காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், மருத்துவப் பயனாளியாகப் பயன் பெற்றுத் திரும்பிய நிலையில், முதன் முதலான நிகழ்ச்சியாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பெருந்திரளான கழகத் தோழர்களுடன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி,, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உரத்தநாடு இரா. குணசேகரன், ஊமை ஜெயராமன், வி. பன்னீர்செல்வம், துணைப் ெபாதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில தொழிலாளரணி செயலாளர் திருச்சி மு.சேகர், கலைஞர் அவர்களின் சிறப்பு உதவியாளர் முத்துவாவாசி, மல்லை சத்யா,  மாநில கிராமப்புற பிரச்சார செயலாளர் முனைவர் க. அன்பழகன். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ. சுரேசு, மாநில மகளிரணி துணைச் செயலாளர் க. இறைவி, மாநில விளையாட்டு அணி அமைப்பாளர் ம. பூவரசன்,  சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, துணைத் தலைவர் சு. இமயவரம்பன், மகளிரணி செயலாளர் வாசந்தி,  தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நெல்லுப்பட்டு அ. இராமலிங்கம், உரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் லெனின், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், அரும்பாக்கம் சா. தாமோதரன், அய்ஸ்அவுஸ் அ. அன்பு எம். ரங்கநாதன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப. முத்தையன், தொழிலாளரணித் தலைவர் மா. குணசேகரன், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்ட காப்பாளர் கி. இராமலிங்கம், துணைத் தலைவர் நா. பார்த்திபன், பொதுக் குழு உறுப்பினர்கள் தி.செ. கணேசன், தங்க.தனலட்சுமி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் த. மரகதமணி,  மாணவர் கழகத் தலைவர் ச.சஞ்சய், தொழிலாளரணித் தலைவர் ஆ.துரைராவணன்,  கொடுங்கையூர் கழகத் தலைவர் கோ. தங்கமணி, செம்பியம் கழகத் தலைவர் ப. கோபாலகிருட்டிணன், பூம்புகார் நகர் கழக அமைப்பாளர் ச. இராசேந்திரன், கண்ணதாசன் நகர் கழக அமைப்பாளர் க. துரை, அண்ணாநகர் ப.சேரலாதன், மகளிரணி கோ. அன்புமணி, திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், செயலாளர் ந. இராசேந்திரன், ஜீவானந்த் மனோகரன், நெய்வேலி வெ. ஞானசேகரன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே. பாண்டு, பொதுக்குழு உறுப்பினர்கள் பி.சி. ஜெயராமன், கலைச்செல்வன், ஆவடி மாவட்ட செயலாளர் க. இளவரசன், துணைச் செயலாளர் பூவை. க. தமிழ்ச்செல்வன், உடுமலை வடிவேல், ஆவடி நகர துணைத் தலைவர் வஜ்ஜரவேலு, பூவை பகுதி தலைவர் க.ச. பெரியார் மாணாக்கன், க. கலைமணி, ஆளந்தன், மகேஷ் கணேசன், முகப்பேர் தி. முரளி, அயப்பாக்கம் அரிகிருஷ்ணன், திருநின்றவூர் இராசேந்திரன், மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலைஞர் நினைவிடத்திற்கு வந்திருந்து மரியாதை செலுத்தினர்.

- விடுதலை நாளேடு,7.8.2025