வியாழன், 4 ஜூன், 2026

மந்தைவெளி பகுதியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் மற்றும் திராவிடர் கழக கொடி ஏற்றம்


திராவிடர் கழகம்

சென்னை, ஜூன் 4– 3.6.2026 அன்று முற்பகல் 11:30 மணி அளவில் முத்தமி ழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மந்தைவெளி, விசாலாட்சி தோட்டம், செயின்ட் மேரிஸ் பாலம் அருகில், மந்தைவெளி பகுதி திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அப்படியே திராவிடர் கழகக் கொடி கம்பத்தில் தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து தலைமையில், தென் சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி. மாவட்டத் துணைத் தலைவர்கள்
டி.ஆர். சேதுராமன், மு.சண்முகப்பிரியன், இளைஞர் அணி மாவட்டத் தலைவர்
ந. மணிதுரை ஆகியோர் முன்னிலையில், தென் சென்னை மாவட்டத் தலைவர்
இரா.வில்வநாதன் கொடி ஏற்றி வைத்தார்.
திமுக இளைஞரணி பகுதி அமைப் பாளர் திவான், திமுக வட்ட துணைச் செயலாளர் தினேஷ், ரஞ்சித் மற்றும் திமுக பொறுப்பாளர்களும், தோழர்கள் ராஜேஷ், சதீஷ், சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

- விடுதலை நாளேடு, 04.06.2026


புதன், 3 ஜூன், 2026

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆம் ஆண்டு பிறந்தநாள்



– திராவிடர் கழகத்தின் சார்பில்
தமிழர் தலைவர் தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிப்பு

திராவிடர் கழகம்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் – திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப்பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வீரமர்த்தினி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். (சென்னை, 3.6.2026)

கலைஞர் பிறந்த நாளில், சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

கலைஞர் பிறந்த நாளில், சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

கலைஞர் பிறந்த நாள் என்பது ஒரு தனி மனிதருடைய பிறந்த நாள் அல்ல; ஒரு தத்துவத்தினுடைய பாதுகாப்புப் பீடம்!
முதலமைச்சரின் திருச்சி உரை – மற்றவர்களால் முகம் சுழிக்கப்படுவது மட்டுமல்ல,
அரசியல் தெளிவுள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் அல்ல!

திராவிடர் கழகம்



கலைஞர் பிறந்த நாள் என்பது ஒரு தனி மனிதருடைய பிறந்த நாள் அல்ல; ஒரு தத்துவத்தினுடைய பாதுகாப்புப் பீடம்!
முதலமைச்சரின் திருச்சி உரை – மற்றவர்களால் முகம் சுழிக்கப்படுவது மட்டுமல்ல,
அரசியல் தெளிவுள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் அல்ல!

திராவிடர் கழகம்


சென்னை,  ஜூன் 3 ‘‘கலைஞர் பிறந்த நாள் என்பது ஒரு தனி மனிதருடைய பிறந்த நாள் அல்ல; ஒரு தத்துவத்தினுடைய பாதுகாப்புப் பீடம்! முதலமைச்சரின் திருச்சி உரை – பொதுவானவர்களால் முகம் சுழிக்கப்படுவது மட்டுமல்ல, அரசியல் தெளிவுள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் அல்ல!’’ என்று செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆம் ஆண்டு பிறந்த நாள்: அவரது சிலைக்கு மாலை அணிவிப்பு

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2026) அவரது சிலைக்குத்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து, பிறகு   செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்’’

தன்னைப்பற்றி ஒரு வரியில் விமர்சனம் செய்து கொள்ளுங்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்’’ என்று தெளிவாகப் பிரகடனப்படுத்தினார்!

தந்தை பெரியார் அவர்களுடைய ஈரோடு ‘குடிஅரசு’ குருகுலத்தில் சிறப்பாகப் பயின்று, எழுத்தாற்றல், பேச்சாற்றல், கருத்தாற்றல், அரசியல் ஆளுமை ஆற்றல், போராட்டக் களத்தில் நின்று வென்று காட்டக்கூடிய அறப்போர் களத்தினுடைய ஆற்றல் இப்படிப் பல்வகையான ஆற்றல்களைத் தன்னகத்தே அடக்கி, தானே ஒரு வரலாறாக, அந்தத் தலைமுறைக்கு மட்டுமல்லாமல், இனி வரக்கூடிய தலைமுறைக்கும் ஆக்கிய ஓர் அற்புதமான சீரிய பகுத்தறிவுவாதி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

அண்ணா, கலைஞருக்குப் பிறகு ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ தொடர்ந்து செய்தார்!

தந்தை பெரியார் அவர்களால், மாணவப் பருவந்தொட்டு ஈர்க்கப்பட்டவர். அப்படிப்பட்ட அந்த  உணர்வை, அவர் இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில் விடாதது மட்டுமல்ல, அவருக்குப் பிறகும், இந்த இயக்கம், எப்படி அண்ணாவிற்குப் பிறகு, கலைஞர் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பான வரலாற்றை உருவாக்கினார்களோ, அதுபோல, கலைஞருக்குப் பிறகு, ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைத்து நம்முடைய அருமைத் தளபதி ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகராக’ வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் அவர்கள் அதனைச் செய்தார்கள்.

எந்த ஆட்சி வந்தாலும், ‘திராவிட மாடல்’ ஆட்சி யினுடைய திட்டங்களைப் புறந்தள்ளி, ஆட்சியைச் செய்ய முடியாது என்று சொல்லக் கூடிய அளவிற்கு, அகில இந்தியா மட்டுமல்ல, உலகத்தினுடைய பல பகுதிகளிலும் அந்தத் திட்டங்கள் பரவியுள்ளன.

பல ஆண்டுகால வரலாறு!

‘கலைஞர்’ என்ற, ‘திராவிடம்’ என்ற பெரிய ஆலமரத்திற்கு பல ஆண்டுகால வரலாறு உண்டு. நீதிக்கட்சியில் தொடங்கி, திராவிடர் கழகம், திராவிடர் இயக்கம், சுயமரியாதை இயக்கம் என்றெல்லாம் அதற்கு ஒரு பாரம்பரியம் உண்டு.

இன்றைக்கு சிலர்  நினைக்கிறார்கள், ‘திராவிடம் இல்லாமல் போய்விட்டது; காணாமல் போய்விட்டது’’ என்று அலட்சியமாக நுனிப் புல் மேய்கிறார்கள்.

திராவிடத்தை ஒருபோதும் அழிக்க முடியாது. திராவிடம் என்றும் வாழும்; அதை வரலாறு என்றும் சொல்லும்!

கலைஞரின் 103 ஆம் ஆண்டு பிறந்த நாள் – ‘திராவிடர் எழுச்சி நாளாக’’ கொண்டாடப்படுகிறது!

ஆகவேதான், தாய்க்கழகமான திராவிடர் கழகம், இன்றைக்கு இங்கே மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும், கலைஞர் அவர்களுடைய 103 ஆம் ஆண்டு பிறந்த நாளினை, ‘‘திராவிடர் எழுச்சி நாளாக’’ தமிழ்நாடு மட்டுமல்ல, கருநாடக மாநிலத்திலும், மராட்டியத்திலும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது.

அதேபோல, திராவிட முன்னேற்றக் கழகம் வழக்கம்போல பரப்புரை விழா நடத்துகிறது. தமிழின உணர்வாளர்களும், திராவிடப் பற்றாளர்களும் ஓரணியில் திரண்டு இதைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

எனவேதான், இது முழுக்க முழுக்க ஆழமான, அழுத்தம் கொண்ட, பல கொள்கை விழுதுகளை, பழுதில்லா விழுதுகளைக் கொண்ட ஆலமரம் போன்ற ஒரு திராவிடத் தத்துவம்!

தனி மனிதருடைய பிறந்த நாள் அல்ல;
ஒரு தத்துவத்தினுடைய பாதுகாப்புப் பீடம்!

ஆகவே, கலைஞருடைய பிறந்த நாள் என்பது, ஒரு தனி மனிதருடைய பிறந்த நாள் அல்ல. ஒரு தத்துவத்தினுடைய பாதுகாப்புப் பீடம் என்பதைத் தெளிவாகச் சொல்லி, கலைஞர் வாழ்க! திராவிடம் வெல்க! என்ற உறுதியோடு, தாய்க்கழகமான திராவிடர் கழகம் தன்னுடைய பயணத்தைத் தொடர்கிறது.

அரசியல் தெளிவுள்ளவர்களால்
ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல!

செய்தியாளர்: திருச்சியில் முதலமைச்சர்  ஜோசப் விஜய் பேசிய பேச்சைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: முதலமைச்சருடைய முதல் பேச்சு, திருச்சியில் தொடங்கியது. ஆனால், இதில் வருத்தப்படக் கூடிய செய்தி என்னவென்று சொன்னால், அவர், தன்னை ‘‘முதலமைச்சர்’’ என்பதை நினைவில் கொள்ளாமல், முழுக்க முழுக்க தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதைப்போலவே அவர் பேசியிருப்பது, மற்றவர்களால் முகம் சுழிக்கப்படுவது மட்டுமல்ல, அரசியல் தெளிவுள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் அல்ல.

முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், இதுபோன்ற தன்னுடைய பேச்சு முறையை மாற்றிக் கொள்ளவேண்டும். அரசியல் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, கொள்கைத் தெளிவுள்ளவர்களுக்கும் அவருடைய உரை ஏற்புடையதல்ல.

முதலமைச்சருடைய முக்கியமான கடமை என்ன?

இது ஒரு கட்சியினுடைய அறிவுரையோ, விமர்சனமோ அல்ல. ஆளுங்கட்சியாக இருந்த ஒரு கட்சி, ‘‘ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக இருப்போம்’’ என்று சொல்லும்போது, எதிர்க்கட்சிகள் என்னென்ன குறைகளைச் சொல்கிறார்கள் என்பதை நுணுகி ஆராய்ந்து, அதற்குரிய பதிலையும், தம் ஆட்சியின் கொள்கை என்ன என்பதையும் மக்களுக்கு விளக்குவதுதான், முதலமைச்சருடைய முக்கியமான கடமையாகும்.

ஆனால், அவருடைய திருச்சி பேச்சு, மாற்றத்தைத் தரவில்லை, ஏமாற்றத்தையே தந்திருக்கின்றது.

செய்தியாளர்: தி.மு.க. கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள், அடுத்தடுத்து த.வெ.க.விற்கு ஆதரவு தெரிவிக்கக்கூடிய நிகழ்வைப் பார்க்க முடிகிறது; இது சரியான நகர்வுதானா?

தமிழர் தலைவர்: இது அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி. எங்களிடம் அல்ல!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

- விடுதலை நாளேடு, 03.06.2026

திங்கள், 1 ஜூன், 2026

இராயப்பேட்டையில் பா.ஜ.க. அரசை கண்டித்து நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட விளக்கக் கூட்டம்

 

ஒன்றிய அரசு பணிகளில் பிற்ப்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை நிரப்ப மறுக்கும் பாஜக வை கண்டித்து மார்ச் 03 ம் தேதி திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை விளக்கி 27.02.26 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இராயப்பேட்டை நடேசன் சாலை மற்றும் வி.பி.இராமன் சாலை சந்திப்பில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில், தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ச.மகேந்திரன் தலைமையில்
தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ,மாவட்ட துணைத்தலைவர்
மு.சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை,
மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் யுவராஜ், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் அ.அன்பு ,
அரும்பாக்கம் சா.தாமோதரன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.

மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் தொடக்கவுரையாற்றினார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் குமாரதேவன் மற்றும்
துணைப்பொதுச்செயலாளர்
வழக்குரைஞர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

முன்னதாக அறிவுமானன் அவர்களின் கொள்கை பாடல்கள் அடங்கிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

ச.மாரியப்பன், கோடம்பாக்கம்
வி.வளர்மதி,(மாவட்ட மகளிரணி தலைவர்)
பி.அஜந்தா (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்) 
வி.தங்கமணி, (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) 
வி.யாழ்ஒளி, மாணவரணி 
ஜெ.சொப்பனசுந்தரி, நொச்சி நகர் 
மு.பாரதி, நொச்சி நகர்
த.பாரதி, மயிலாப்பூர்
வீ.லீலாவதி
சு. சூரியா
உதயசூரியன், அய்ஸ் அவுஸ்
ம.தி.பெரியார்ஆதவன்(மாணவரணி)
ம.தி.பெரியார்இனியன்(மாணவரணி)
கா.சுந்தர்
எஸ்.செல்வம்,எம்.டி.சி.திருவல்லிக்கேணி
ம. பூவரசன் 
த.மு. யாழ்திலீபன் 
எஸ்.கே.தேவன் 
தினேஷ்குமார் 
ரா.அஸ்தின்
எஸ்.ஏழுமலை
ஓட்டேரி கார்த்திக்(வடசென்னை) ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டார்

கூட்ட இறுதியில் ச.தாஸ்(கோட்டூர்புரம்) நன்றி கூறினார்.

அறிவுமானன் அவர்களின் கொள்கை பாடல்கள் அடங்கிய இசை நிகழ்ச்சி
மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தொடக்க உரை
தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் குமாரதேவன் சிறப்புரை


துணைப்பொதுச்செயலாளர்
வழக்குரைஞர் பிரின்சு என்னாரெசு பெரியார்  சிறப்புரை


செவ்வாய், 26 மே, 2026

தென்சென்னை மாவட்டக் கழகம் சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்த தீர்மானம்

திராவிடர் கழகம்

தென்சென்னை, மே 21– தென்சென்னை மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 19.05.2026 அன்று மாலை 6 மணியளவில் இளைஞரணி துணைச்செயலாளர் மாரிமுத்து உணவகத்தில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ் தலைமையில் மாவட்ட கழக தலைவர் இரா.வில்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது.

தேர்தலுக்கு பிந்தைய களச்சூழல், அடுத்தகட்ட செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைவரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

தீர்மானங்கள்

மாதம் ஒரு தெருமுனை பிரச் சாரக் கூட்டம் நடத்துவது.

சுவர் விளம்பரம் செய்வது.

மாதம் ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

- விடுதலை நாளேடு, 21.05.26


திங்கள், 18 மே, 2026

தாம்பரம் முத்தையன்! (வாழ்க்கை குறிப்பு)



கட்டுரை, ஞாயிறு மலர்

வி.சி.வில்வம்

கட்டுரை, ஞாயிறு மலர்

சிலருக்கு மட்டுமே பெயரோடு, ஊரும் ஒட்டிக் கொள்ளும். அந்த வகையில் ‘முத்தையன்’ என்பதைவிட, ‘தாம்பரம் முத்தையன்’ என்றாலே அனைவருக்கும் தெரியும். அதுவும் மன்னார்குடியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பைங்காநாடு கிராமத்தில் பிறந்து வளர்ந்து, அங்கிருந்து சென்னை வந்து, அனைவரையும் அரவணைக்கும் பண்பு கொண்ட தாம்பரம் முத்தையன் குறித்து இந்த வாரம் பார்ப்போம்!

அய்யா வணக்கம்!  நீங்கள் சென்னை வந்த கதையைக் கூறுங்கள்?

பக்கிரிசாமி-குஞ்சம்மாள் ஆகியோருக்கு 1960ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தேன். இப்போது 65 வயதாகிறது. ஒன்பதாம் வகுப்பு முடித்த நிலையில், வேலை தேடி சென்னை, தாம்பரத்திற்கு 1975ஆம் ஆண்டு வந்தேன். நான் வந்த போது மன்னார்குடி – சென்னை பயணச்சீட்டு 18 ரூபாய். இங்கு வந்ததும் தெரிந்தவர் மூலம் வெற்றிலை சீவல் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். மாத ஊதியம் ரூ.30. கடைக்குப் பொருட்கள் வாங்க வரும் கிறிஸ்டோபர் எனும் ஆசிரியருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. இறுதிவரை நல்ல ஆலோசனைகளையும், பொருளாதார உதவிகளையும் அவர் செய்தார். நான்கு ஆண்டுகள் வேலை பார்த்த நான், 1979ஆம் ஆண்டு, 19ஆம் வயதில் சொந்தமாகக் கடை வைத்தேன்.

அப்போதெல்லாம் நீங்கள் கொள்கையில் இருந்தீர்களா?

இல்லை. அதேநேரம் 1978, 1979 கால கட்டங்களில் நோன்பு இருந்து அய்யப்பன் கோயிலுக்குச் செல்வேன். இந்நிலையில் எங்கள் ஊர்க்காரர் ஒருவர், அமைச்சராக இருந்த
எஸ்.டி.சோமசுந்தரம் அவர்களைப் பார்க்க தலைமைச் செயலகம் வந்திருந்தார். என்னையும் அழைத்துக் கொண்டு போனார். நான் மாலையிட்டு சென்றதைப் பார்த்து அமைச்சர், “இங்கே இல்லாத கடவுளா? ஏன் கேரளாவிற்குச் செல்கிறீர்கள்? பெரியார் புத்தகங்களை வாங்கிப் படியுங்கள்”, என்று கூறினார்.

ஒரு அமைச்சரே இப்படிச் சொல்கிறாரே என எனக்கு வியப்பாக இருந்தது. எங்கள் கடைக்கு அருகில் “தங்கமணி பேப்பர் ஸ்டோர்” எனப் பிரபலமான ஒரு கடை இருந்தது. அங்கு ‘விடுதலை’ நாளிதழ் விற்பனைக்குக் கிடைத்தது. அதை வாங்கிப் படிக்கத் தொடங்கினேன்.‌ அதில் திராவிடர் கழகப் புத்தகங்களின் பட்டியலும் இருந்தது. அதையும் அந்தக் கடைக்காரர் மூலமே வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். இப்படி தொடர்ச்சியான வாசிப்பு என்னைப் பகுத்தறிவாளராக மாற்றியது.‌

இயக்க அறிமுகம் எப்போது கிடைத்தது?

எங்கள் அப்பா கிராமத்தில் தலையாரியாக இருந்தார்கள். கணக்குப் பிள்ளையாக பார்ப்பனர் ஒருவர் இருந்தார். பெரியார் புத்தகங்களை நான் படிக்கிற போது, எங்கள் கிராமத்தில் நடைபெறும் ஜாதிக் கொடுமைகள், பார்ப்பனர்கள் காட்டும் வேறுபாடுகள் நினைவிற்கு வந்தது. இந்நிலையில் நான் படித்த நூல்கள் என்னுள் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தன. அப்போது எனக்கு 22 வயது இருக்கும். அதன் பிறகும் தொடர்ந்து பகுத்தறிவு நூல்களை வாசித்து வந்தேன். எனது 26ஆவது வயது வரை இயக்க ரீதியாக நான் செயல்படவில்லை.

இதற்கிடையில் தி.ரா.இரத்தினசாமி அவர்கள் எங்கள் கடைக்குப் பொருட்கள் விற்பனை செய்ய வருவார். அவரின் இருசக்கர வாகனத்தில் “மனிதன் கண்டுபிடித்தது மின்சக்தி, மடையன் கண்டுபிடித்தது ஓம்சக்தி” என எழுதியிருக்கும். அவர் மூலம்தான் திராவிடர் கழக அமைப்பு எனக்கு அறிமுகமானது. அதன்பின்னர் தாம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் ஒன்றில், கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கலந்து கொண்டார். அந்த மேடையில் ஏறி, என்னைத் திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொண்டேன்.

உங்கள் திருமணம் எப்போது நடைபெற்றது?

1988ஆம் ஆண்டு, எனது 28ஆவது வயதில் முதன் முதலில் பெரியார் திடலுக்குப் போனேன்.‌ அன்று முதல் இன்று வரை கருப்புச் சட்டைதான் அணிகிறேன். 1990ஆம் ஆண்டு ஆசிரியர் தலைமையில் எங்களுக்குத் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன்பு கூட்டங்களில் மட்டுமே பார்த்த ஆசிரியர் அவர்களை, திருமண அழைப்புக் கொடுக்கும் போது நேரில் பார்த்தேன். தாம்பரத்தில் நடைபெற்ற எங்கள் திருமணத்தில் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டார்கள். தி.ரா.இரத்தினசாமி, ஆவடி மனோகரன், கிரிதரன் உள்ளிட்டோர் திருமணத்தில் பேசினர். எனக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியர் கிறிஸ்டோபர், இத்திருமணத்திற்குப் பெரும் உதவியாக இருந்தார். குடும்ப நண்பராகவும் இருந்த அவர், பின்னாளில் மறைந்து போனார்.

எனது இணையர் பெயர் நாகவள்ளி. அவரும் மன்னார் குடியைச் சேர்ந்தவர். தொடக்கத்தில் ஆத்திகராக இருந்தார். பின்னாளில், திராவிடர் கழகத்தில் இணைந்து, தற்போது கழகத்தில் நன்றாகச் செயல்பட்டு வருகிறார். மாவட்ட மகளிரணித் தலைவராக உள்ளார். அண்மையில் மும்பையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிலும் பங்கேற்றார். எங்கள் மகள் கனிமொழி சைனாவில் மருத்துவம் படித்தவர். அவரின் இணையர் பெயர் சிறீஜித். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரும் மருத்துவர். இருவருமே கேரளாவில் பணிபுரிகிறார்கள். தன்விருப்பத் திருமணம் செய்து கொண்டவர்கள்.

மகன் மணிமாறன் சென்னையில் இயந்திரவியல் துறையில் பணி செய்கிறார். பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த குடியாத்தம் அருள்மொழி அவர்களின் மகள் ஓவியாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். எனது திருமணத்திற்குத் தலைமையேற்ற ஆசிரியர்தான், மகன் திருமணத்திற்கும் தலைமையேற்று நடத்தி வைத்தார். “எங்கள் குடும்பங்களின் தலைவர்” என்று நாங்கள் சொல்வதற்கு, இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? சற்றொப்ப 3 ஆயிரம் பேர் பங்கேற்று, மாநாடு போல நடந்தது அந்தத் திருமணம்!

என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள்?  வெளியூர் நிகழ்ச்சிகளுக்குப் போவதுண்டா?

தாம்பரம் நகரத் தலைவர், கோட்ட செயலாளர் பொறுப்பு களில் இருந்தேன். தற்போது 25 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்டத் தலைவராக இருக்கிறேன். தி.ரா.இரத்தினசாமி அய்யா மகன் இராமசாமி மாவட்டத் தலைவராக இருந்தார். அதன்பிறகு அந்தப் பொறுப்பிற்கு நான் நியமிக்கப்பட்டேன். சென்னையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்வேன். பெரியார் திடல் நிகழ்ச்சி என்றால் கண்டிப்பாகப் போய்விடுவேன்.

மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தோழர்களுடன் இணைந்து நானும் ஒருங்கிணைத்தேன்.

தவிர தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பெரிய நிகழ்ச்சிகள் மற்றும் மாநாடுகளுக்குச் சென்றுவிடுவேன். பெரும்பாலும் என் இணையரும் கலந்து கொள்வார்கள். திடலில் நடைபெறும் பெரிய நிகழ்ச்சிகளின் போது “கேண்டீன்” நடத்துவேன். திருச்சி, சிறுகனூரில் நடைபெற்ற மாநாட்டில் பிரியாணி தயார் செய்து விற்பனை செய்தோம். இந்தியாவில் பெங்களூரு, டில்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும், ஜெர்மன், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். சொந்தப் பணியாக மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கும் சென்றுள்ளேன். அங்கும் தோழர்களைச் சந்தித்துள்ளேன். குறிப்பாக ஆசிரியர் மலேசிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, நானும் அங்கிருந்தேன். அப்போது மலேசியா நாணயம் “ரிங்கிட்” கணக்கு செய்து நூல்கள் விற்பனை செய்துள்ளேன். அதேபோல அமெரிக்காவில் “டாலர்” மதிப்பிலும் நூல்கள் விற்பனை செய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

பிறந்த ஊர் மன்னார்குடி என்றாலும், சொந்த ஊர் தாம்பரம் என்றானது. ஆசிரியரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். அந்த அனுபவத்தைக் கூறுங்கள்?

இந்த இயக்கம் இருப்பதற்கு ஒரே காரணம் ஆசிரியர் மட்டுமே! எத்தனையோ பேர் வந்திருக்கலாம், போயிருக்கலாம், ஆனால், இந்த  இயக்கமும், சொத்துக்களும் பாதுகாக்கப்பட்டது நமது தலைவரால் தான்! ஆசிரியரின் சிந்தனையும், உழைப்புமே அனைத்து முன்னேற்றத்திற்கும் காரணம்! சலிப்பும், ஓய்வும் கூடாது என்பதற்கு ஆசிரியரே முன்னோடி. 1995ஆம் ஆண்டு காலத்தில் “பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை” எனும் வாகனம் தமிழ்நாடு முழுக்கச் சென்றது. அந்த வாகனத்தைத் தாம்பரத்தில் வைத்துப் புத்தகங்களை விற்பனை செய்தோம். மூன்றே நாளில் ஒரு இலட்சம் ரூபாய் விற்பனை ஆனது.

அதைக் கருத்தில் கொண்டு தாம்பரத்தில் ஒரு புத்தகக் கடைத் திறக்க வேண்டும் என ஆசிரியர் முடிவு செய்தார்கள். அதன் விளைவாகத் தாம்பரம் பேருந்து நிலையத்தில் புத்தகக் கடைக்கென்றே ஓர் இடமும் பெறப்பட்டது. அதனை ஆசிரியர் அவர்களும், அமைச்சர் கே.என்.நேரு அவர்களும் திறந்து வைத்தார்கள்.

தொடர்ந்து பெரியார் வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டு, ஆசிரியரின் பிறந்தநாளான 2ஆம் தேதி, மாதந்தோறும் கூட்டம் நடத்தி வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு தலைப்புகளில், பல்வேறு பேச்சாளர்கள் உரை நிகழ்த்தியுள்ளனர்.‌ மாலை 6 மணிக்குத் தொடங்கி நிகழ்ச்சி 8 மணிக்கு நிறைவு பெறும்.

நான் முன்பு தொடங்கிய வெற்றிலை, பீடா கடையோடு இப்போது பேன்சி ஸ்டோர், கரும்புச்சாறு விற்பனை நிலையமும் இருக்கிறது. ஒரு கூடுதல் செய்தி என்னவென்றால், “தமிழ்நாட்டில் ‘பெரியார் நகர்’ என்பது 1946ஆம் ஆண்டு தாம்பரத்தில் தான்  முதன்முதலில் அமைக்கப்பட்டது” எனவும் முத்தையன் அவர்கள் தம் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

ஞாயிறு, 17 மே, 2026

கழக ‘உரையாடல் குடிலில்’ நிரந்தர கழக நெகிழித்திரை வைக்கப்பட்டது (அய்ஸ் அவுஸ் பகுதி)

 

திராவிடர் கழகம்

திருவல்லிக்கேணி – அய்ஸ் அவுஸ் பகுதி கழகத்தின் சார்பில் 12.5.2026 மாலை 6:00 மணி அளவில் அன்னி பெசன்ட் சாலை, இருசப்ப தெரு சந்திப்பில்  (பார்த்தசாரதி கோவில் தெற்கு நுழைவு வாயில் எதிரில்) பகுதி கழக ‘உரையாடல் குடிலில்’ நிரந்தர கழக நெகிழித்திரை வைக்கப்பட்டது. தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, ,மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.அன்பு, எம்.டி.சி. செல்வம், தர்மா, உதயா  ஆகியோர் கலந்து கொண்டனர்.

- விடுதலை நாளேடு,17.05.26