ஞாயிறு, 17 மே, 2026

கழக ‘உரையாடல் குடிலில்’ நிரந்தர கழக நெகிழித்திரை வைக்கப்பட்டது (அய்ஸ் அவுஸ் பகுதி)

 

திருவல்லிக்கேணி – அய்ஸ் அவுஸ் பகுதி கழகத்தின் சார்பில் 12.5.2026 மாலை 6:00 மணி அளவில் அன்னி பெசன்ட் சாலை, இருசப்ப தெரு சந்திப்பில்  (பார்த்தசாரதி கோவில் தெற்கு நுழைவு வாயில் எதிரில்) பகுதி கழக ‘உரையாடல் குடிலில்’ நிரந்தர கழக நெகிழித்திரை வைக்கப்பட்டது. தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, ,மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.அன்பு, எம்.டி.சி. செல்வம், தர்மா, உதயா  ஆகியோர் கலந்து கொண்டனர்.

- விடுதலை நாளேடு,17.05.26

சனி, 16 மே, 2026

இந்தியா முழுமையும் ‘நீட்’ ஒழிக்கப்படும்வரை போராட்டம் தொடரும்! மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் முழக்கம்!


திராவிடர் கழகம்

தமிழ்நாட்டில் தொடங்கிய எந்தப் போராட்டமும்,
இதுவரையில் தோற்றதாக வரலாறே கிடையாது!

திராவிடர் கழகம்

சென்னை, மே 16 ‘‘மாணவர் உரிமை காக்க, மாநில உரிமை காக்க, அரசியலமைப்புச் சட்டத் திரிபுவாதத்தைத் தடுக்க ‘இந்தியா முழுமையும் ‘நீட்’ தேர்வையே முற்றாக ரத்து செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (16.5.2026) தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மருத்துவக் கல்விக்கான தகுதித் தேர்வு என்ற பெயரில், ‘நீட்’ என்ற தேர்வு திணிக்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளில், அரியலூர் மாணவி அனிதா தொடங்கி இந்தியா முழுவதும் பல நூறு உயிர்கள் பலியாகியுள்ளன. பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கனவு பறிக்கப்பட்டது.

ஆனால், அதன் உண்மை முகம் அநீதியானது என்பது தொடர்ந்து அம்பலப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. ஆனாலும், விடாப்பிடியாக ஒன்றிய
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு ‘நீட்’ தேர்வைத் திணித்துக் கொண்டே இருக்கிறது. ‘நீட்’ நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை என்ற தனி அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் 2026–2027ஆம் கல்வியாண்டில் மருத்துவம் – இளநிலை (எம்.பி.பி.எஸ்.), பல் மருத்துவம் – இளநிலை (பிடிஎஸ்) உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்றது.

நாடு முழுவதும் 552 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 இடங்களிலும் தேர்வு  நடைபெற்றது. மொத்தம் 5,432 மய்யங்களில் தேர்வு நடைபெற்றுள்ளது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

இந்நிலையில், அந்தத் தேர்வின் வினாத்தாள், தேர்வு நடக்கும் முன்பே ராஜஸ்தானில் கசிந்து விட்டதாகப் புகார் எழுந்து, அதை விசாரித்த சி.பி.அய்., வினாத்தாள் கசிந்ததை உறுதி செய்ததையடுத்து, மே 3ஆம் தேதி நடைபெற்ற ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.  மீண்டும் ஒரு தேர்வு (மறு தேர்வு) ஜூன் 21 அன்று நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இது முதல் முறை அல்ல; ‘நீட்’ தேர்வு என்பது, அதைக் கட்டாயப்படுத்திய பா.ஜ.க. அரசு சொன்னதுபோல, ‘தகுதி – திறமையின் அடையாளம்’ அல்ல; மாறாக ஊழலின் ஊற்றுக் கண் என்பதற்கு 10 ஆண்டுகளில் 89 முறை வினாத்தாள் கசிவுகள், 48  முறை மறுதேர்வுகள் நடந்துள்ளன என்பதே சான்று அல்லவா?

இப்போது மீண்டும் ஒரு மறுதேர்வா? ஏறத்தாழ 23 லட்சம் மாணவர்கள் நாடு முழுக்க அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டார்களே, மீண்டும் அந்த நிலை தொடரப் போகிறதா? மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதற்குத்தான் இப்படிப்பட்ட தண்டனைகளா?

இந்த முறைகேடுகள் நடந்ததை ஒப்புக் கொண்டு தேசியத் தேர்வு முகமை இந்தஆண்டு மே 3 அன்று நடைபெற்ற ‘நீட்’ தேர்வை ரத்து செய்துள்ளது. ஒன்றிய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் 22.80 லட்சம் மாணவர்கள், குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.

ரத்து செய்யப்பட வேண்டியது இந்த ஒரு நாள் நடந்த ‘நீட்’ தேர்வு அல்ல; ஒட்டு மொத்தமாகவே ‘நீட் தேர்வு’ ரத்து செய்யப்பட வேண்டும். மருத்துவக் கல்வி நுழைவுக்கு அந்தந்த மாநிலங்கள் தேர்ந்தெடுக்கும் முறையே அரசியலமைப்புச் சட்டப்படியானது. இந்த குரலை அழுத்தமாக, உரக்க எழுப்ப வேண்டிய கால கட்டம் இது!

இதை வலியுறுத்தி இன்று (16.5.2026) தமிழ்நாடு தழுவிய அளவில் மாவட்டத் தலை நகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஒத்த கருத்துடையோர்களை ஓரணியில் திரட்டி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழகம்

தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளை யாட்டரங்கம் அருகில் இன்று (16.5.2026) காலை 10 மணியளவில்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:

நீட் ஒரு நீண்ட கால நோய். தமிழ்நாட்டினுடைய கல்வியை மட்டுமல்ல, இந்திய நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுடைய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமுதாய மக்களின் கல்வியைப் பறிப்பது உள்பட, அதாவது உயர்ஜாதிக்காரர்கள் மட்டுமே பயன்படக் கூடிய, அவர்களைப் பாதுகாக்கக்கூடிய ஒரு கல்வி முறை மீண்டும் உருவாக்கப்படவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஒன்றுதான், நீட் தேர்வாகும்.

மருத்துவக் கல்வியில், தொழிற் கல்வியில் தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அது இந்தியாவிலேயே வியப்படைக்கூடிய மாநிலமாக இருக்கிறது. திராவிடம் அதனைச் செய்து வருகிறது; ‘திராவிட மாடல்’ ஆட்சி இன்னும் வேகமாக அதனை உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது என்பதையெல்லாம் கண்டு, பொறுக்க முடியாதவர்கள் – தந்தை பெரியார் மண்ணிலே மனுதர்மத்திற்கு இடமில்லை; இங்குக் குலதர்மக் கல்வியை இடம்பெறா மல் தடுத்த மண், இந்த மண் என்பதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, நீட் என்ற ஒரு கண்ணி வெடியைப் புதைத்து, நம்முடைய இளம் பிள்ளை களுடைய கனவுகளையெல்லாம் தகர்த்து வரக்கூடியதை எதிர்த்து, இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது காலத்தின் கட்டாயம். அதுமட்டுமல்ல, இதுதான் சரித்திரத்தில் திருப்பு மய்யமும்கூட. தமிழ்நாட்டில் தொடங்கிய எந்தப் போராட்டமும், இதுவரையில் தோற்றதாக வரலாறே கிடையாது. 1952 இல், வகுப்புவாரி உரிமை என்பதை ரத்து செய்கிறோம் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்புக் கொடுத்த பிறகும்கூட, தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா போன்றவர்களும்,  தனித்து திராவிட இயக்கம்தான் நின்று, இந்தியாவிலே, அதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே இருந்த சமூகநீதி, இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கக்கூடிய அளவிற்குப் பரவலான பலன்  கிடைத்தது.

இங்கே அரசியலுக்கு அப்பாற்பட்டு, அரசியல் நிலைப்பாடுகள் எல்லாம் ஒரு பக்கத்தில் இருந்தாலும், கொள்கைக் கூட்டணி என்பதுதான் மிக முக்கியம். கொள்கைக்காகத்தான் கூட்டணியே தவிர, பதவிக்காக கூட்டணி அல்ல என்பதை உணர்ந்து, திராவிடர் கழகம் வேண்டுகோள் விடுத்த நிலையில், மிகக்குறுகிய காலத்தில் நடைபெறுகின்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் எல்லோரும் பங்கேற்று இருக்கின்றார்கள்.

இவ்வார்ப்பாட்டம் சென்னை தலைநகரிலே மட்டும் நடைபெறவில்லை தோழர்களே, தமிழ்நாடு முழுக்க நடைபெறுகிறது. திருத்தணியில் தொடங்கி, கன்னியாகுமரி வரையில் நடைபெறுகின்றது.

இங்கே எத்தனைக் கட்சித் தோழர்கள் கலந்துகொள்கிறார்களோ, அதேபோல, தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, இப்போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் ஒலி முழக்கங்கள் எழுப்பட்டன. திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதினி வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, பொருளாளர் வீ. குமரேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி, திராவிடர் கழக சட்டத்துறை தலைவர் வழக்குரைஞர் த. வீரசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.செ. கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், மாநில இளைஞரணி இணை செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ்,  மாவட்டத் தலைவர்கள் இரா. வில்வநாதன், எண்ணூர் வெ.மு. மோகன், தாம்பரம், ப.முத்தையன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன், புழல் த. ஆனந்தன், வே. பாண்டு, வெ. கார்வேந்தன், மாவட்ட ச் செயலாளர்கள் செ.ர. பார்த்தசாரதி, ந. இராசேந்திரன், கோ. நாத்திகன், புரசை சு. அன்புச்செல்வன், ஜெ. பாஸ்கரன், க. இளவரசன், க. தமிழினியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

தொடக்க உரை

ஆர்ப்பாட்டத்தின் தொடக்க உரையை திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆற்றினார்.

கண்டன உரை

திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் உமா, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில துணைச் செயலாளர் அரிமா அசாருதீன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.கே ஹரீம், மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். யாக்கூப், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் நிஜாமுதின், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே. சிவா, ம.திமுக.வின் அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் ஆவடி அந்திரிதாஸ்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  பொருளாளரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்புக் குழு தலைவர் மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ஆகியோர் ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்றியதை தொடர்ந்து ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்ட பின்னர் நிறைவாக ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச. பிரின்ஸ் என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்க, தென் சென்னை மாவட்டத்தலைவர் இரா. வில்வநாதன் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு, பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பேராசிரியர் ச.இராஜசேகரன், கவிஞர் கண்மதியன் மற்றும்  திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, எஸ்.டி.பி.அய்., பொதுப் பள்ளிக்கான மாநில மேடை, திராவிட இயக்க தமிழர் பேரவை ஆகிய கட்சிகளின் அனைத்து அணிகளைச் சேர்ந்த தோழர்களும், பொது மக்களும் பெருமளவில் கொடியுடன்  ‘நீட்’ தேர்வை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி எழுச்சி முழக்கமிட்டு பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ள ‘‘நீட்’’ தகுதி திறமையின் அடையாளமா? ஊழலின் ஊற்றுக்கண்ணா?’’ என்ற புதிய புத்தகம் ஆர்ப்பாட்டத்தில் வெளியிடப்பட்டது.

 -விடுதலை நாளேடு, 16.05.2026

'நீட்' தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அளவில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் சென்னையில் பங்கேற்ற கழகத் தோழர்கள்

சென்னை, மே 17- “மாணவர் உரிமை காக்க, உரிமை காக்க, அரசியலமைப்புச் சட்டத் திரிபுவத்தைத் தடுக்க இந்தியா முழுமையும் 'நீட்' தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் சார்பில் 16.5.2026 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் எழும்பூர் இராசரத்தினம் விளையாட் டரங்கம் அருகில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற கழகத் தோழர்கள் விவரம் வருமாறு:-

தென் சென்னை

இரா.வில்வநாதன் (மாவட்ட கழகத் தலைவர்), செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்), கோ.வீ.ராகவன் (பொதுக்குழு உறுப்பினர்), டி.ஆர்.சேதுராமன்(துணைத்தலைவர்), பா.இராசேந்திரன்,எம்..டி.சி., ந.மணிதுரை (மாவட்ட இளைஞரணி தலைவர்), பெரியார் யுவராஜ் (இளைஞரணி இளைஞரணி செயலாளர்), பெரியார் யுவராஜ் (இளைஞரணி செயலாளர்) துணைத்தலைவர்), அ.அன்பு (மாவட்ட இளைஞ ராணி துணைத்தலைவர்), கோ.அரிகரன் (இராயப்பேட்டை பகுதி தலைவர்), க.விஜயராஜா (மயிலாப்பூர்), ம.தி.பெரியார் ஆதவன் (மாணவர் கழகம்), ம.தி.பெரியார் இனியன் (மாணவர் கழகம்), மு. ஆனந்தன்.

வட சென்னை

வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட கழகத் தலைவர்), புரசை சு.அன்புச் செல்வன் (மாவட்ட செயலாளர்), நா.பார்த்திபன் (துணைத் தலைவர்), ச.சஞ்சய் (மாணவர் கழகம்), தி.செ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்), ப.கோபாலகிருஷ்ணன், தமிழமு தன், சி.வாசு, கோ.தங்கமணி, யாழ்.பார். அ.செந்தமிழ். வ.கலைச்செல்வன்

தாம்பரம் மாவட்டம்

ப.முத்தையன் (மாவட்ட கழகத் தலைவர்), நாகவள்ளி, ஆ.கருப்பையா, இரா.சு.உத்ரா, மா.குணசேகரன், பொய்யாமொழி, மு.மதியழகன், கண்ணதாசன், சந்திரசேகர் (படப்பை), உத்திரகுமார் (ஊரப்பாக்கம்), சீர்காழி ராமண்ணா, லட்சுமணன் (கிளாம்பாக்கம்), சுரேஷ்

சென்னை மேற்கு மாவட்டம்

கரு.அண்ணாமலை (மாவட்ட கழகத் தலைவர்), க.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர்), ஜெனார்த்தன், அரும்பாக்கம் சா.தாமோதரன், சங்குநாதன், வழக்குரைஞர் டி.ராஜா, வழக்குரைஞர் அ.அன்பரசன், வழக்குரைஞர் தம்பி சேகுவாரா, அபிநயா, சேகர், மு.ரா.மாணிக்கம், அய்யாதுரை, ஏ.

சோழிங்கநல்லூர் மாவட்டம்

ஆர்.டி.வீரபத்திரன் (காப்பாளர்), வேலூர் பாண்டு (மாவட்ட கழகத் தலைவர்), தமிழினியன் (மாவட்ட செயலாளர்) ஆர்.கலைச்செல்வன் (துணைத் தலைவர்), வே.பா.அறிவன் (வழக்குரைஞர் அணி)

ஆவடி மாவட்டம்

கார்வேந்தன் (மாவட்ட கழகத் தலைவர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்), அ.வெ.நடராசன், துரை.முத்து கிருஷ்ணன், ஆவடி சுந்தரராஜன், வேல்முருகன், கொரட்டூர் பன்னீர்செல்வம், பாடி இராவணன், மணிவண்ணன், அம்பத்தூர் சரவணன், ரகுபதி, அருள்தாஸ், ரவிச்சந்திரன், சங்கர், சமத்துவ, சங்கர், மணி உயிராட்சல், திராவிடமணி, வெங்கடேசன், வேல்சாமி, ஆவடி தமிழ்மணி, பிரதாப், முருகன், கார்த்திகேயன், பூவை மாணாக்கன்,

மகளிரணி

ச.இன்பக்கனி, இறைவி, பெரியார்செல்வி, அஜந்தா, செ.பெ.தொண்டறம், தேவ.நர்மதா, கவுரி, ரம்யா, தமிழ்ச்செல்வி, தனுசிறி, ஜெனிதா, மனோஜ், த.மரகதமணி, ஆனந்தி, மெர்சி, அமலசுந்தரி, கவிநிஷா, பாக்கிய லட்சுமி, அன்பு, மணி, வி. பசும்பொன், வெற்றி, பூவை.செல்வி, குயில்மொழி, கா.சமிக்ஷா, கா.செம்மொழி, சமத்துவமணி, தேன்மொழி, அன்புச்செல்வி.

 -விடுதலை நாளேடு, 17.05.2026


நீட் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் 
                                                               யூ டியூப் காணொலி


நீட் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் 

16.05.26

கலந்துகொண்ட தென் சென்னை மாவட்டத் தோழர்கள் பட்டியல் 


இரா.வில்வநாதன், (மாவட்ட தலைவர்)

செ.ர.பார்த்தசாரதி ,(மாவட்ட செயலாளர்)) 

கோ.வீ.ராகவன்(பொதுக்குழு உறுப்பினர்),

டி.ஆர்.சேதுராமன்(துணைத்தலைவர்)

பா.இராசேந்திரன்,எம்..டி.சி.

ந.மணிதுரை (மாவட்ட இளைஞரணி தலைவர் ) 

பெரியார் யுவராஜ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)

ச.மகேந்திரன் (மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ) 

அ.அன்பு (மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ) 

கோ.அரிகரன்(இராயப்பேட்டை,பகுதி தலைவர்)

க. விஜயராஜா (மயிலாப்பூர்)

வி.வளர்மதி,(மாவட்ட மகளிரணி தலைவர்)

மு.பவானி,(மாவட்ட மகளிர் பாசறை தலைவர்)

பி.அஜந்தா (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்) 

ம.தி.பெரியார் ஆதவன் (மாணவரணி)

ம.தி.பெரியார் இனியன்(மாணவரணி)

மு. ஆனந்தன்


வியாழன், 14 மே, 2026

டாக்டர் ஜி.ராஜூ மறைவு – ஆசிரியர் கி.வீரமணி இறுதி மரியாதை


மறைவு

சென்னை, மே 14- மறைந்த டாக்டர் ராஜூ (வயது-94) அவர்களின் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மரியாதை செலுத்தினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களோடு பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை ஒன்றாகப் படித்த ஆசிரியரின் நண்பர் (கடலூர்க்காரர்) மறைந்த டாக்டர் ஜி.ராஜூ (வயது-94) அவர்கள் நேற்று (13.5.2026) மறைவுற்றார். அவரது உடல் நுங்கம்பாக்கம் பள்ளி சாலையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களும் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

டாக்டர் ஜி.ராஜூ அவர்களின்  துணைவியாரிடமும், மகன் ரா.பிரபாகரிடமும், குடும்பத்தாரிடமும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரங்கலும் ஆறுதலும் கூறினார்.

உடன் தென் சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, எம். வரதன் ஆகியோர் இருந்தனர்.

- விடுதலை நாளேடு, 14.05.26


திங்கள், 11 மே, 2026

அன்னை நாகம்மையார் நினைவு நாள் – தமிழர் தலைவர் மலர்தூவி மரியாதை



சென்னை, மே 11 அன்னை நாகம்மையார் அவர்களின் 93ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று அவரது படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போதே, அவர் நடத்திய தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களிலும், கள்ளுக்கடை மறியலிலும் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் முன்னின்று போராடியவர்.

தந்தை பெரியார் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோது, வைக்கம் போராட்டத்தை நடத்திய பெருமைக்குரியவர் அன்னை நாகம்மையார் ஆவார்.

இவ்வளவு பெருமைக்குரிய அன்னை நாகம்மையார் அவர்களின் நினைவு நாளான இன்று (11.5.2026) காலை 11 மணியளவில் சென்னை பெரியார் திடலில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன தலைவர் பொத்தனூர் க. சண்முகம் ஆகியோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். அதே போன்று அன்னை நாகம்மையார் படத்திற்கு கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திராவிடர் கழகம்

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஊ. ஜெயராமன், வி. பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.சே. கோபால், வழக்குரைஞர் சு. குமாரதேவன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற   மாநில துணைத் தலைவர் கோ. ஒளிவண்ணன், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் க. அன்பழகன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ. சுரேஷ், ஆடிட்டர் ஆர். இராமச்சந்திரன், பேராசிரியர் ப. சுப்பிரமணி, சி. வெற்றிச்செல்வி, தங்க. தனலட்சுமி, பசும்பொன்   தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர்  முத்தைய்யன், செயலாளர்
கோ.நாத்திகன், சு.மோகன் ராஜ், இரா.குணசேகரன், நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், விடுதலை நகர் பி.சி. ஜெயராமன், மயிலை சேதுராமன், வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் புரசை அன்புச்செல்வன், சி.ஜான்சன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கருப்பைய்யா, கொடுங்கையூர் கோ. தங்கமணி தி.செ. கணேசன்,ப. கோபாலகிருஷ்ணன்,  பெரியார் மாணாக்கன், மு. செல்வி, கற்பகம் மற்றும் பெரியார் திடல் பணிமனைத் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

புதன், 6 மே, 2026

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் படங்கள் இரா.வில்வநாதன் திறந்து வைத்தார்

திராவிடர் கழகம்

திருவல்லிக்கேணி கழக ஏற்பாட்டில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் அன்னி பெசன்ட் சாலை, இருசப்ப தெரு மற்றும் கஜபதி தெரு சந்திப்பில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் படங்கள் அடங்கிய சுவர் விளம்பர ஓவியத்தை, காரல் மார்க்ஸின் பிறந்த நாளான 05.05.2026 ஆம் நாள் மாலை 5.30 மணி அளவில் தென் சென்னை மாவட்ட கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தலைமையில், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் திறந்து வைத்தார். பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ. ராகவன், மாவட்டத் துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், சூளைமேடு நல். இராமச்சந்திரன், எம்.டி.சி. இராஜேந்திரன், ஆட்டோ சேகர், தர்மா, உதயா, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.அன்பு மற்றும் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

- விடுதலை நாளேடு, 06.05.2026


செவ்வாய், 5 மே, 2026

மாமேதை கார்ல்மார்க்ஸ் சிலைக்கு மாலை அணிவித்தபின் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

 

திராவிடர் கழகம்

பெரியார் மண்ணில் பொதுவுடைமை, மனிதநேயம், மதச் சார்பின்மை பூக்கச் செய்வோம்!

திராவிடர் கழகம்

மாமேதை காரல் மார்க்ஸ் சிலைக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மரியாதை செலுத்திவிட்டு, பத்திரிகை யாளர்களை சந்தித்துப் பேசினார்.

‘‘புதியதோர் உலகு செய்வோம்! கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்! பொதுவுைடமைக் கொள்கைகளை உயிரெனக் காப்போம்’’ என்று அந்த தத்துவத்தைக் தந்த கார்ல்மார்க்ஸ் அவர்களின் பிறந்த நாளில், நாம் மதச்சார்பற்ற, மனிதநேயக்  கொள்கைகளை உருவாக்குவோம். அதே நேரத்திலே மதவெறியை மாய்த்து, மனிதநேயத்தை என்றென்றைக்கும் மனித சமுதாயத்தில் தழைப்பதற்கான பணியை நம்முடைய அன்றாடத் தொண்டறமாகச் செய்வோம். அதற்குரிய மண்தான், இந்த பெரியார் மண்! இந்தக் கொள்கைக்காக வாழ்ந்த மாபெரும் தலைவர்தான் கார்ல் மார்க்ஸ். எந்த  ஆட்சிகள்  மலர்ந்தாலும், அதை ஏற்க வேண்டும் என்று நாம் வற்புறுத்துவோம். அது நமது கடமை’’ என்று தெரிவித்தார்.

முன்னதாகப் பொதுவுடைமை மாமேதை கார்ல்மார்க்ஸின் 109ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலக வாயிலில்  அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையின் பீடத்தில் வைக்கப்பட்டிருந்த படத்துக்குத் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மாலை அணிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன், மே 17 இயக்கத்தலைவர் திருமுருகன் காந்தி, கழக மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ. சுரேஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட செயலாளர் அன்புச்செல்வன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன்   மரகதமணி, கலைமணி, விஜய், சிவகுமார், முரளிகிருஷ்ணன், உடுமலை,  பரிதின், புகழேந்தி உள்ளிட்ட தோழர்கள் மரியாதை செலுத்தினர்.

- விடுதலை நாளேடு, 05.05.2026


வியாழன், 30 ஏப்ரல், 2026

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 136-ஆவது பிறந்த நாள் அவரின் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை!

ஆசிரியர், திராவிடர் கழகம்

சென்னை, ஏப்.29- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 136ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2026) காலை 10.30 மணியளவில் சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ்,  பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், சி.வெற்றிச்செல்வி, அ.சுதா அன்புராஜ், தங்க.தனலட்சுமி, த. இளவரசி, மரகதமணி, மு.பவானி, திராவிட இலக்கியா, திராவிட எழில், பூவை செல்வி, தங்கமணி, பெரியார் இனியா,  பெரியார் ஆதவன்.

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வழக்குரைஞர் சண்முகப்பிரியன், சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் கரு.அண்ணாமலை, செயலாளர் சுப்பிரமணியன், அரும்பாக்கம் சா.தாமோதரன்,  பழனிபாலு, அய்ஸ் அவுஸ் அன்பு, எம்.ஆர்.மாணிக்கம், பெரியார் மாணாக்கன், சூளைமேடு பி.டி.சி.ராஜேந்திரன், சூளைமேடு சேகர், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்தின்.

கொடுங்கையூர் கோ.தங்கமணிகோவர்த்தன்.கோபாலகிருஷ்ணன்செல்லப்பன்கவிஞர் வீரமுத்துமுரளிமகேஷ்தமிழ்ச்செல்வன்தாம்பரம் சு.மோகன்ராஜ்மகேந்திரன்சுப்பிரமணியன்அப்துல்லா மற்றும் பெருந்திரளான கழகத் தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

- விடுதலை நாளேடு, 29.04.26