வெள்ளி, 12 ஜூன், 2026

மயிலாப்பூர் நொச்சி நகர்ப் பகுதியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்


திராவிடர் கழகம்

மயிலை, ஜூன் 12- முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 103ஆவது பிறந்தநாள் விழா  பொதுக்கூட்டம், 06.06.2026 அன்று மாலை 6.30 மணி அளவில் மயிலாப்பூர் நொச்சி நகர், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சாலை (லூப் சாலையில், தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன் தலைமையிலும், பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன், மாவட்ட இளைஞரணித் தலைவர் ந.மணிதுரை, மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பெரியார் யுவராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.

தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தொடக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரையாற்றினார்.

மாவட்டத் துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம் பேச்சாளர் கோகுல் என்கிற குயிலன் ஆகியோர் உரையாற்றினர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மயிலாப்பூர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இறுதியில் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி சிறப்புரை ஆற்றினார். எஸ்.முரளி (மயிலாப்பூர் கிழக்கு பகுதி செயலாளர், தி.மு.க), அ.தவநேசன் (125ஆவது வட்டச் செயலாளர், தி.மு.க.), மற்றும் திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக அறிவுமானனின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சாலையின் இரு மருங்கிலும் கழகக் கொடிகள் கட்டப்பட்டு சிறப்பான முறையில் நிகழ்ச்சி விளம்பரப்படுத்தப்பட்டது.

இரா.பிரபாகரன், ஈ.குமார், ச.மகேந்திரன், அய்ஸ் அவுஸ் அ.அன்பு (இளைஞர் அணி துணைத் தலைவர்கள்), இரா.மாரிமுத்து (மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர்) வி.வளர்மதி (மகளிர் அணித் தலைவர்), பி.அஜந்தா, மு.பவானி (மகளிர் பாசறைத் தலைவர்), ஜெ.சொப்பன சுந்தரி, செய.குசேலன், வி.தங்கமணி, சா. தாமோதரன், வை. கலையரசன், மு. பசும்பொன், செ.பெ.தொண்டறம், சு.தமிழினி தானு, ஜெயசங்கரி, ஆர் ராதா, கு ரதியா, பார்வதி, எஸ்.வசந்தி, விஜயா, ஜி.ரேவதி, கவிதா, இனியன் சம்பத், மயிலை தா.தீபன்,ம.தி. பெரியார் இனியன், ம.தி. பெரியார் ஆதவன், சி. மதியழகன், அய். முனுசாமி, எம். ஜெய்கர், க. சதீஷ்,ஆர். கிருஷ்ணவேணி, சு. பரமசிவன், வே. நடராஜன், ஆர். அழகேந்திரன், நாராயணசாமி, நந்தகுமார், சி. சுப்பிரமணி, ஆர். கோவிந்தசாமி, வெங்கடேசன்,மோ.திருமலை மற்றும் கலந்து கொண்டனர்.

-விடுதலை நாளேடு, 12.06.2026





ஞாயிறு, 7 ஜூன், 2026

மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் குளம் அருகில் திராவிடர் கழக கொடி ஏற்றப்பட்டது

மாலை அணிவித்து மரியாதை

திராவிடர் கழகம்

3.6.2026 நண்பகல் 12:00 மணி அளவில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் குளம் அருகில், தெற்கு மாட வீதி மற்றும் இராமகிருஷ்ண மடம் சாலை சந்திப்பில், தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட திராவிடர் கழக கொடி கம்பத்தில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் தென் சென்னைமாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தலைமையில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டத் துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், இளைஞர் அணி மாவட்டத் தலைவர் ந.மணிதுரை ஆகியோர் முன்னிலையில் மாவட்டத் துணைத் தலைவர் டி. ஆர். சேதுராமன் கொடி ஏற்றி வைத்தார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

- விடுதலை நாளேடு, 06.06.2026


வியாழன், 4 ஜூன், 2026

மந்தைவெளி பகுதியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் மற்றும் திராவிடர் கழக கொடி ஏற்றம்


திராவிடர் கழகம்

சென்னை, ஜூன் 4– 3.6.2026 அன்று முற்பகல் 11:30 மணி அளவில் முத்தமி ழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மந்தைவெளி, விசாலாட்சி தோட்டம், செயின்ட் மேரிஸ் பாலம் அருகில், மந்தைவெளி பகுதி திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அப்படியே திராவிடர் கழகக் கொடி கம்பத்தில் தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து தலைமையில், தென் சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி. மாவட்டத் துணைத் தலைவர்கள்
டி.ஆர். சேதுராமன், மு.சண்முகப்பிரியன், இளைஞர் அணி மாவட்டத் தலைவர்
ந. மணிதுரை ஆகியோர் முன்னிலையில், தென் சென்னை மாவட்டத் தலைவர்
இரா.வில்வநாதன் கொடி ஏற்றி வைத்தார்.
திமுக இளைஞரணி பகுதி அமைப் பாளர் திவான், திமுக வட்ட துணைச் செயலாளர் தினேஷ், ரஞ்சித் மற்றும் திமுக பொறுப்பாளர்களும், தோழர்கள் ராஜேஷ், சதீஷ், சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

- விடுதலை நாளேடு, 04.06.2026


புதன், 3 ஜூன், 2026

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆம் ஆண்டு பிறந்தநாள்



– திராவிடர் கழகத்தின் சார்பில்
தமிழர் தலைவர் தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிப்பு

திராவிடர் கழகம்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் – திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப்பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வீரமர்த்தினி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். (சென்னை, 3.6.2026)

கலைஞர் பிறந்த நாளில், சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

கலைஞர் பிறந்த நாளில், சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

கலைஞர் பிறந்த நாள் என்பது ஒரு தனி மனிதருடைய பிறந்த நாள் அல்ல; ஒரு தத்துவத்தினுடைய பாதுகாப்புப் பீடம்!
முதலமைச்சரின் திருச்சி உரை – மற்றவர்களால் முகம் சுழிக்கப்படுவது மட்டுமல்ல,
அரசியல் தெளிவுள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் அல்ல!

திராவிடர் கழகம்



கலைஞர் பிறந்த நாள் என்பது ஒரு தனி மனிதருடைய பிறந்த நாள் அல்ல; ஒரு தத்துவத்தினுடைய பாதுகாப்புப் பீடம்!
முதலமைச்சரின் திருச்சி உரை – மற்றவர்களால் முகம் சுழிக்கப்படுவது மட்டுமல்ல,
அரசியல் தெளிவுள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் அல்ல!

திராவிடர் கழகம்


சென்னை,  ஜூன் 3 ‘‘கலைஞர் பிறந்த நாள் என்பது ஒரு தனி மனிதருடைய பிறந்த நாள் அல்ல; ஒரு தத்துவத்தினுடைய பாதுகாப்புப் பீடம்! முதலமைச்சரின் திருச்சி உரை – பொதுவானவர்களால் முகம் சுழிக்கப்படுவது மட்டுமல்ல, அரசியல் தெளிவுள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் அல்ல!’’ என்று செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆம் ஆண்டு பிறந்த நாள்: அவரது சிலைக்கு மாலை அணிவிப்பு

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2026) அவரது சிலைக்குத்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து, பிறகு   செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்’’

தன்னைப்பற்றி ஒரு வரியில் விமர்சனம் செய்து கொள்ளுங்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்’’ என்று தெளிவாகப் பிரகடனப்படுத்தினார்!

தந்தை பெரியார் அவர்களுடைய ஈரோடு ‘குடிஅரசு’ குருகுலத்தில் சிறப்பாகப் பயின்று, எழுத்தாற்றல், பேச்சாற்றல், கருத்தாற்றல், அரசியல் ஆளுமை ஆற்றல், போராட்டக் களத்தில் நின்று வென்று காட்டக்கூடிய அறப்போர் களத்தினுடைய ஆற்றல் இப்படிப் பல்வகையான ஆற்றல்களைத் தன்னகத்தே அடக்கி, தானே ஒரு வரலாறாக, அந்தத் தலைமுறைக்கு மட்டுமல்லாமல், இனி வரக்கூடிய தலைமுறைக்கும் ஆக்கிய ஓர் அற்புதமான சீரிய பகுத்தறிவுவாதி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

அண்ணா, கலைஞருக்குப் பிறகு ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ தொடர்ந்து செய்தார்!

தந்தை பெரியார் அவர்களால், மாணவப் பருவந்தொட்டு ஈர்க்கப்பட்டவர். அப்படிப்பட்ட அந்த  உணர்வை, அவர் இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில் விடாதது மட்டுமல்ல, அவருக்குப் பிறகும், இந்த இயக்கம், எப்படி அண்ணாவிற்குப் பிறகு, கலைஞர் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பான வரலாற்றை உருவாக்கினார்களோ, அதுபோல, கலைஞருக்குப் பிறகு, ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைத்து நம்முடைய அருமைத் தளபதி ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகராக’ வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் அவர்கள் அதனைச் செய்தார்கள்.

எந்த ஆட்சி வந்தாலும், ‘திராவிட மாடல்’ ஆட்சி யினுடைய திட்டங்களைப் புறந்தள்ளி, ஆட்சியைச் செய்ய முடியாது என்று சொல்லக் கூடிய அளவிற்கு, அகில இந்தியா மட்டுமல்ல, உலகத்தினுடைய பல பகுதிகளிலும் அந்தத் திட்டங்கள் பரவியுள்ளன.

பல ஆண்டுகால வரலாறு!

‘கலைஞர்’ என்ற, ‘திராவிடம்’ என்ற பெரிய ஆலமரத்திற்கு பல ஆண்டுகால வரலாறு உண்டு. நீதிக்கட்சியில் தொடங்கி, திராவிடர் கழகம், திராவிடர் இயக்கம், சுயமரியாதை இயக்கம் என்றெல்லாம் அதற்கு ஒரு பாரம்பரியம் உண்டு.

இன்றைக்கு சிலர்  நினைக்கிறார்கள், ‘திராவிடம் இல்லாமல் போய்விட்டது; காணாமல் போய்விட்டது’’ என்று அலட்சியமாக நுனிப் புல் மேய்கிறார்கள்.

திராவிடத்தை ஒருபோதும் அழிக்க முடியாது. திராவிடம் என்றும் வாழும்; அதை வரலாறு என்றும் சொல்லும்!

கலைஞரின் 103 ஆம் ஆண்டு பிறந்த நாள் – ‘திராவிடர் எழுச்சி நாளாக’’ கொண்டாடப்படுகிறது!

ஆகவேதான், தாய்க்கழகமான திராவிடர் கழகம், இன்றைக்கு இங்கே மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும், கலைஞர் அவர்களுடைய 103 ஆம் ஆண்டு பிறந்த நாளினை, ‘‘திராவிடர் எழுச்சி நாளாக’’ தமிழ்நாடு மட்டுமல்ல, கருநாடக மாநிலத்திலும், மராட்டியத்திலும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது.

அதேபோல, திராவிட முன்னேற்றக் கழகம் வழக்கம்போல பரப்புரை விழா நடத்துகிறது. தமிழின உணர்வாளர்களும், திராவிடப் பற்றாளர்களும் ஓரணியில் திரண்டு இதைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

எனவேதான், இது முழுக்க முழுக்க ஆழமான, அழுத்தம் கொண்ட, பல கொள்கை விழுதுகளை, பழுதில்லா விழுதுகளைக் கொண்ட ஆலமரம் போன்ற ஒரு திராவிடத் தத்துவம்!

தனி மனிதருடைய பிறந்த நாள் அல்ல;
ஒரு தத்துவத்தினுடைய பாதுகாப்புப் பீடம்!

ஆகவே, கலைஞருடைய பிறந்த நாள் என்பது, ஒரு தனி மனிதருடைய பிறந்த நாள் அல்ல. ஒரு தத்துவத்தினுடைய பாதுகாப்புப் பீடம் என்பதைத் தெளிவாகச் சொல்லி, கலைஞர் வாழ்க! திராவிடம் வெல்க! என்ற உறுதியோடு, தாய்க்கழகமான திராவிடர் கழகம் தன்னுடைய பயணத்தைத் தொடர்கிறது.

அரசியல் தெளிவுள்ளவர்களால்
ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல!

செய்தியாளர்: திருச்சியில் முதலமைச்சர்  ஜோசப் விஜய் பேசிய பேச்சைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: முதலமைச்சருடைய முதல் பேச்சு, திருச்சியில் தொடங்கியது. ஆனால், இதில் வருத்தப்படக் கூடிய செய்தி என்னவென்று சொன்னால், அவர், தன்னை ‘‘முதலமைச்சர்’’ என்பதை நினைவில் கொள்ளாமல், முழுக்க முழுக்க தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதைப்போலவே அவர் பேசியிருப்பது, மற்றவர்களால் முகம் சுழிக்கப்படுவது மட்டுமல்ல, அரசியல் தெளிவுள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் அல்ல.

முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், இதுபோன்ற தன்னுடைய பேச்சு முறையை மாற்றிக் கொள்ளவேண்டும். அரசியல் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, கொள்கைத் தெளிவுள்ளவர்களுக்கும் அவருடைய உரை ஏற்புடையதல்ல.

முதலமைச்சருடைய முக்கியமான கடமை என்ன?

இது ஒரு கட்சியினுடைய அறிவுரையோ, விமர்சனமோ அல்ல. ஆளுங்கட்சியாக இருந்த ஒரு கட்சி, ‘‘ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக இருப்போம்’’ என்று சொல்லும்போது, எதிர்க்கட்சிகள் என்னென்ன குறைகளைச் சொல்கிறார்கள் என்பதை நுணுகி ஆராய்ந்து, அதற்குரிய பதிலையும், தம் ஆட்சியின் கொள்கை என்ன என்பதையும் மக்களுக்கு விளக்குவதுதான், முதலமைச்சருடைய முக்கியமான கடமையாகும்.

ஆனால், அவருடைய திருச்சி பேச்சு, மாற்றத்தைத் தரவில்லை, ஏமாற்றத்தையே தந்திருக்கின்றது.

செய்தியாளர்: தி.மு.க. கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள், அடுத்தடுத்து த.வெ.க.விற்கு ஆதரவு தெரிவிக்கக்கூடிய நிகழ்வைப் பார்க்க முடிகிறது; இது சரியான நகர்வுதானா?

தமிழர் தலைவர்: இது அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி. எங்களிடம் அல்ல!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

- விடுதலை நாளேடு, 03.06.2026

திங்கள், 1 ஜூன், 2026

இராயப்பேட்டையில் பா.ஜ.க. அரசை கண்டித்து நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட விளக்கக் கூட்டம்

 

ஒன்றிய அரசு பணிகளில் பிற்ப்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை நிரப்ப மறுக்கும் பாஜக வை கண்டித்து மார்ச் 03 ம் தேதி திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை விளக்கி 27.02.26 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இராயப்பேட்டை நடேசன் சாலை மற்றும் வி.பி.இராமன் சாலை சந்திப்பில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில், தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ச.மகேந்திரன் தலைமையில்
தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ,மாவட்ட துணைத்தலைவர்
மு.சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை,
மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் யுவராஜ், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் அ.அன்பு ,
அரும்பாக்கம் சா.தாமோதரன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.

மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் தொடக்கவுரையாற்றினார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் குமாரதேவன் மற்றும்
துணைப்பொதுச்செயலாளர்
வழக்குரைஞர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

முன்னதாக அறிவுமானன் அவர்களின் கொள்கை பாடல்கள் அடங்கிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

ச.மாரியப்பன், கோடம்பாக்கம்
வி.வளர்மதி,(மாவட்ட மகளிரணி தலைவர்)
பி.அஜந்தா (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்) 
வி.தங்கமணி, (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) 
வி.யாழ்ஒளி, மாணவரணி 
ஜெ.சொப்பனசுந்தரி, நொச்சி நகர் 
மு.பாரதி, நொச்சி நகர்
த.பாரதி, மயிலாப்பூர்
வீ.லீலாவதி
சு. சூரியா
உதயசூரியன், அய்ஸ் அவுஸ்
ம.தி.பெரியார்ஆதவன்(மாணவரணி)
ம.தி.பெரியார்இனியன்(மாணவரணி)
கா.சுந்தர்
எஸ்.செல்வம்,எம்.டி.சி.திருவல்லிக்கேணி
ம. பூவரசன் 
த.மு. யாழ்திலீபன் 
எஸ்.கே.தேவன் 
தினேஷ்குமார் 
ரா.அஸ்தின்
எஸ்.ஏழுமலை
ஓட்டேரி கார்த்திக்(வடசென்னை) ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டார்

கூட்ட இறுதியில் ச.தாஸ்(கோட்டூர்புரம்) நன்றி கூறினார்.

அறிவுமானன் அவர்களின் கொள்கை பாடல்கள் அடங்கிய இசை நிகழ்ச்சி
மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தொடக்க உரை
தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் குமாரதேவன் சிறப்புரை


துணைப்பொதுச்செயலாளர்
வழக்குரைஞர் பிரின்சு என்னாரெசு பெரியார்  சிறப்புரை


செவ்வாய், 26 மே, 2026

தென்சென்னை மாவட்டக் கழகம் சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்த தீர்மானம்

திராவிடர் கழகம்

தென்சென்னை, மே 21– தென்சென்னை மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 19.05.2026 அன்று மாலை 6 மணியளவில் இளைஞரணி துணைச்செயலாளர் மாரிமுத்து உணவகத்தில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ் தலைமையில் மாவட்ட கழக தலைவர் இரா.வில்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது.

தேர்தலுக்கு பிந்தைய களச்சூழல், அடுத்தகட்ட செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைவரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

தீர்மானங்கள்

மாதம் ஒரு தெருமுனை பிரச் சாரக் கூட்டம் நடத்துவது.

சுவர் விளம்பரம் செய்வது.

மாதம் ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

- விடுதலை நாளேடு, 21.05.26