சனி, 16 மே, 2026

இந்தியா முழுமையும் ‘நீட்’ ஒழிக்கப்படும்வரை போராட்டம் தொடரும்! மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் முழக்கம்!


திராவிடர் கழகம்

தமிழ்நாட்டில் தொடங்கிய எந்தப் போராட்டமும்,
இதுவரையில் தோற்றதாக வரலாறே கிடையாது!

திராவிடர் கழகம்

சென்னை, மே 16 ‘‘மாணவர் உரிமை காக்க, மாநில உரிமை காக்க, அரசியலமைப்புச் சட்டத் திரிபுவாதத்தைத் தடுக்க ‘இந்தியா முழுமையும் ‘நீட்’ தேர்வையே முற்றாக ரத்து செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (16.5.2026) தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மருத்துவக் கல்விக்கான தகுதித் தேர்வு என்ற பெயரில், ‘நீட்’ என்ற தேர்வு திணிக்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளில், அரியலூர் மாணவி அனிதா தொடங்கி இந்தியா முழுவதும் பல நூறு உயிர்கள் பலியாகியுள்ளன. பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கனவு பறிக்கப்பட்டது.

ஆனால், அதன் உண்மை முகம் அநீதியானது என்பது தொடர்ந்து அம்பலப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. ஆனாலும், விடாப்பிடியாக ஒன்றிய
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு ‘நீட்’ தேர்வைத் திணித்துக் கொண்டே இருக்கிறது. ‘நீட்’ நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை என்ற தனி அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் 2026–2027ஆம் கல்வியாண்டில் மருத்துவம் – இளநிலை (எம்.பி.பி.எஸ்.), பல் மருத்துவம் – இளநிலை (பிடிஎஸ்) உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்றது.

நாடு முழுவதும் 552 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 இடங்களிலும் தேர்வு  நடைபெற்றது. மொத்தம் 5,432 மய்யங்களில் தேர்வு நடைபெற்றுள்ளது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

இந்நிலையில், அந்தத் தேர்வின் வினாத்தாள், தேர்வு நடக்கும் முன்பே ராஜஸ்தானில் கசிந்து விட்டதாகப் புகார் எழுந்து, அதை விசாரித்த சி.பி.அய்., வினாத்தாள் கசிந்ததை உறுதி செய்ததையடுத்து, மே 3ஆம் தேதி நடைபெற்ற ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.  மீண்டும் ஒரு தேர்வு (மறு தேர்வு) ஜூன் 21 அன்று நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இது முதல் முறை அல்ல; ‘நீட்’ தேர்வு என்பது, அதைக் கட்டாயப்படுத்திய பா.ஜ.க. அரசு சொன்னதுபோல, ‘தகுதி – திறமையின் அடையாளம்’ அல்ல; மாறாக ஊழலின் ஊற்றுக் கண் என்பதற்கு 10 ஆண்டுகளில் 89 முறை வினாத்தாள் கசிவுகள், 48  முறை மறுதேர்வுகள் நடந்துள்ளன என்பதே சான்று அல்லவா?

இப்போது மீண்டும் ஒரு மறுதேர்வா? ஏறத்தாழ 23 லட்சம் மாணவர்கள் நாடு முழுக்க அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டார்களே, மீண்டும் அந்த நிலை தொடரப் போகிறதா? மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதற்குத்தான் இப்படிப்பட்ட தண்டனைகளா?

இந்த முறைகேடுகள் நடந்ததை ஒப்புக் கொண்டு தேசியத் தேர்வு முகமை இந்தஆண்டு மே 3 அன்று நடைபெற்ற ‘நீட்’ தேர்வை ரத்து செய்துள்ளது. ஒன்றிய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் 22.80 லட்சம் மாணவர்கள், குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.

ரத்து செய்யப்பட வேண்டியது இந்த ஒரு நாள் நடந்த ‘நீட்’ தேர்வு அல்ல; ஒட்டு மொத்தமாகவே ‘நீட் தேர்வு’ ரத்து செய்யப்பட வேண்டும். மருத்துவக் கல்வி நுழைவுக்கு அந்தந்த மாநிலங்கள் தேர்ந்தெடுக்கும் முறையே அரசியலமைப்புச் சட்டப்படியானது. இந்த குரலை அழுத்தமாக, உரக்க எழுப்ப வேண்டிய கால கட்டம் இது!

இதை வலியுறுத்தி இன்று (16.5.2026) தமிழ்நாடு தழுவிய அளவில் மாவட்டத் தலை நகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஒத்த கருத்துடையோர்களை ஓரணியில் திரட்டி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழகம்

தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளை யாட்டரங்கம் அருகில் இன்று (16.5.2026) காலை 10 மணியளவில்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:

நீட் ஒரு நீண்ட கால நோய். தமிழ்நாட்டினுடைய கல்வியை மட்டுமல்ல, இந்திய நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுடைய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமுதாய மக்களின் கல்வியைப் பறிப்பது உள்பட, அதாவது உயர்ஜாதிக்காரர்கள் மட்டுமே பயன்படக் கூடிய, அவர்களைப் பாதுகாக்கக்கூடிய ஒரு கல்வி முறை மீண்டும் உருவாக்கப்படவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஒன்றுதான், நீட் தேர்வாகும்.

மருத்துவக் கல்வியில், தொழிற் கல்வியில் தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அது இந்தியாவிலேயே வியப்படைக்கூடிய மாநிலமாக இருக்கிறது. திராவிடம் அதனைச் செய்து வருகிறது; ‘திராவிட மாடல்’ ஆட்சி இன்னும் வேகமாக அதனை உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது என்பதையெல்லாம் கண்டு, பொறுக்க முடியாதவர்கள் – தந்தை பெரியார் மண்ணிலே மனுதர்மத்திற்கு இடமில்லை; இங்குக் குலதர்மக் கல்வியை இடம்பெறா மல் தடுத்த மண், இந்த மண் என்பதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, நீட் என்ற ஒரு கண்ணி வெடியைப் புதைத்து, நம்முடைய இளம் பிள்ளை களுடைய கனவுகளையெல்லாம் தகர்த்து வரக்கூடியதை எதிர்த்து, இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது காலத்தின் கட்டாயம். அதுமட்டுமல்ல, இதுதான் சரித்திரத்தில் திருப்பு மய்யமும்கூட. தமிழ்நாட்டில் தொடங்கிய எந்தப் போராட்டமும், இதுவரையில் தோற்றதாக வரலாறே கிடையாது. 1952 இல், வகுப்புவாரி உரிமை என்பதை ரத்து செய்கிறோம் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்புக் கொடுத்த பிறகும்கூட, தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா போன்றவர்களும்,  தனித்து திராவிட இயக்கம்தான் நின்று, இந்தியாவிலே, அதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே இருந்த சமூகநீதி, இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கக்கூடிய அளவிற்குப் பரவலான பலன்  கிடைத்தது.

இங்கே அரசியலுக்கு அப்பாற்பட்டு, அரசியல் நிலைப்பாடுகள் எல்லாம் ஒரு பக்கத்தில் இருந்தாலும், கொள்கைக் கூட்டணி என்பதுதான் மிக முக்கியம். கொள்கைக்காகத்தான் கூட்டணியே தவிர, பதவிக்காக கூட்டணி அல்ல என்பதை உணர்ந்து, திராவிடர் கழகம் வேண்டுகோள் விடுத்த நிலையில், மிகக்குறுகிய காலத்தில் நடைபெறுகின்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் எல்லோரும் பங்கேற்று இருக்கின்றார்கள்.

இவ்வார்ப்பாட்டம் சென்னை தலைநகரிலே மட்டும் நடைபெறவில்லை தோழர்களே, தமிழ்நாடு முழுக்க நடைபெறுகிறது. திருத்தணியில் தொடங்கி, கன்னியாகுமரி வரையில் நடைபெறுகின்றது.

இங்கே எத்தனைக் கட்சித் தோழர்கள் கலந்துகொள்கிறார்களோ, அதேபோல, தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, இப்போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் ஒலி முழக்கங்கள் எழுப்பட்டன. திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதினி வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, பொருளாளர் வீ. குமரேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி, திராவிடர் கழக சட்டத்துறை தலைவர் வழக்குரைஞர் த. வீரசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.செ. கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், மாநில இளைஞரணி இணை செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ்,  மாவட்டத் தலைவர்கள் இரா. வில்வநாதன், எண்ணூர் வெ.மு. மோகன், தாம்பரம், ப.முத்தையன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன், புழல் த. ஆனந்தன், வே. பாண்டு, வெ. கார்வேந்தன், மாவட்ட ச் செயலாளர்கள் செ.ர. பார்த்தசாரதி, ந. இராசேந்திரன், கோ. நாத்திகன், புரசை சு. அன்புச்செல்வன், ஜெ. பாஸ்கரன், க. இளவரசன், க. தமிழினியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

தொடக்க உரை

ஆர்ப்பாட்டத்தின் தொடக்க உரையை திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆற்றினார்.

கண்டன உரை

திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் உமா, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில துணைச் செயலாளர் அரிமா அசாருதீன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.கே ஹரீம், மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். யாக்கூப், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் நிஜாமுதின், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே. சிவா, ம.திமுக.வின் அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் ஆவடி அந்திரிதாஸ்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  பொருளாளரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்புக் குழு தலைவர் மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ஆகியோர் ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்றியதை தொடர்ந்து ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்ட பின்னர் நிறைவாக ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச. பிரின்ஸ் என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்க, தென் சென்னை மாவட்டத்தலைவர் இரா. வில்வநாதன் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு, பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பேராசிரியர் ச.இராஜசேகரன், கவிஞர் கண்மதியன் மற்றும்  திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, எஸ்.டி.பி.அய்., பொதுப் பள்ளிக்கான மாநில மேடை, திராவிட இயக்க தமிழர் பேரவை ஆகிய கட்சிகளின் அனைத்து அணிகளைச் சேர்ந்த தோழர்களும், பொது மக்களும் பெருமளவில் கொடியுடன்  ‘நீட்’ தேர்வை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி எழுச்சி முழக்கமிட்டு பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ள ‘‘நீட்’’ தகுதி திறமையின் அடையாளமா? ஊழலின் ஊற்றுக்கண்ணா?’’ என்ற புதிய புத்தகம் ஆர்ப்பாட்டத்தில் வெளியிடப்பட்டது.

 -விடுதலை நாளேடு, 16.05.2026


நீட் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் 
                                                               யூ டியூப் காணொலி


நீட் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் 

16.05.26

கலந்துகொண்ட தென் சென்னை மாவட்டத் தோழர்கள் பட்டியல் 


இரா.வில்வநாதன், (மாவட்ட தலைவர்)

செ.ர.பார்த்தசாரதி ,(மாவட்ட செயலாளர்)) 

கோ.வீ.ராகவன்(பொதுக்குழு உறுப்பினர்),

டி.ஆர்.சேதுராமன்(துணைத்தலைவர்)

பா.இராசேந்திரன்,எம்..டி.சி.

ந.மணிதுரை (மாவட்ட இளைஞரணி தலைவர் ) 

பெரியார் யுவராஜ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)

ச.மகேந்திரன் (மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ) 

அ.அன்பு (மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ) 

கோ.அரிகரன்(இராயப்பேட்டை,பகுதி தலைவர்)

க. விஜயராஜா (மயிலாப்பூர்)

வி.வளர்மதி,(மாவட்ட மகளிரணி தலைவர்)

மு.பவானி,(மாவட்ட மகளிர் பாசறை தலைவர்)

பி.அஜந்தா (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்) 

ம.தி.பெரியார் ஆதவன் (மாணவரணி)

ம.தி.பெரியார் இனியன்(மாணவரணி)

மு. ஆனந்தன்


வியாழன், 14 மே, 2026

டாக்டர் ஜி.ராஜூ மறைவு – ஆசிரியர் கி.வீரமணி இறுதி மரியாதை


மறைவு

சென்னை, மே 14- மறைந்த டாக்டர் ராஜூ (வயது-94) அவர்களின் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மரியாதை செலுத்தினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களோடு பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை ஒன்றாகப் படித்த ஆசிரியரின் நண்பர் (கடலூர்க்காரர்) மறைந்த டாக்டர் ஜி.ராஜூ (வயது-94) அவர்கள் நேற்று (13.5.2026) மறைவுற்றார். அவரது உடல் நுங்கம்பாக்கம் பள்ளி சாலையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களும் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

டாக்டர் ஜி.ராஜூ அவர்களின்  துணைவியாரிடமும், மகன் ரா.பிரபாகரிடமும், குடும்பத்தாரிடமும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரங்கலும் ஆறுதலும் கூறினார்.

உடன் தென் சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, எம். வரதன் ஆகியோர் இருந்தனர்.

- விடுதலை நாளேடு, 14.05.26


திங்கள், 11 மே, 2026

அன்னை நாகம்மையார் நினைவு நாள் – தமிழர் தலைவர் மலர்தூவி மரியாதை



சென்னை, மே 11 அன்னை நாகம்மையார் அவர்களின் 93ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று அவரது படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போதே, அவர் நடத்திய தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களிலும், கள்ளுக்கடை மறியலிலும் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் முன்னின்று போராடியவர்.

தந்தை பெரியார் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோது, வைக்கம் போராட்டத்தை நடத்திய பெருமைக்குரியவர் அன்னை நாகம்மையார் ஆவார்.

இவ்வளவு பெருமைக்குரிய அன்னை நாகம்மையார் அவர்களின் நினைவு நாளான இன்று (11.5.2026) காலை 11 மணியளவில் சென்னை பெரியார் திடலில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன தலைவர் பொத்தனூர் க. சண்முகம் ஆகியோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். அதே போன்று அன்னை நாகம்மையார் படத்திற்கு கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திராவிடர் கழகம்

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஊ. ஜெயராமன், வி. பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.சே. கோபால், வழக்குரைஞர் சு. குமாரதேவன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற   மாநில துணைத் தலைவர் கோ. ஒளிவண்ணன், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் க. அன்பழகன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ. சுரேஷ், ஆடிட்டர் ஆர். இராமச்சந்திரன், பேராசிரியர் ப. சுப்பிரமணி, சி. வெற்றிச்செல்வி, தங்க. தனலட்சுமி, பசும்பொன்   தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர்  முத்தைய்யன், செயலாளர்
கோ.நாத்திகன், சு.மோகன் ராஜ், இரா.குணசேகரன், நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், விடுதலை நகர் பி.சி. ஜெயராமன், மயிலை சேதுராமன், வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் புரசை அன்புச்செல்வன், சி.ஜான்சன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கருப்பைய்யா, கொடுங்கையூர் கோ. தங்கமணி தி.செ. கணேசன்,ப. கோபாலகிருஷ்ணன்,  பெரியார் மாணாக்கன், மு. செல்வி, கற்பகம் மற்றும் பெரியார் திடல் பணிமனைத் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

புதன், 6 மே, 2026

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் படங்கள் இரா.வில்வநாதன் திறந்து வைத்தார்

திராவிடர் கழகம்

திருவல்லிக்கேணி கழக ஏற்பாட்டில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் அன்னி பெசன்ட் சாலை, இருசப்ப தெரு மற்றும் கஜபதி தெரு சந்திப்பில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் படங்கள் அடங்கிய சுவர் விளம்பர ஓவியத்தை, காரல் மார்க்ஸின் பிறந்த நாளான 05.05.2026 ஆம் நாள் மாலை 5.30 மணி அளவில் தென் சென்னை மாவட்ட கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தலைமையில், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் திறந்து வைத்தார். பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ. ராகவன், மாவட்டத் துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், சூளைமேடு நல். இராமச்சந்திரன், எம்.டி.சி. இராஜேந்திரன், ஆட்டோ சேகர், தர்மா, உதயா, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.அன்பு மற்றும் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

- விடுதலை நாளேடு, 06.05.2026


செவ்வாய், 5 மே, 2026

மாமேதை கார்ல்மார்க்ஸ் சிலைக்கு மாலை அணிவித்தபின் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

 

திராவிடர் கழகம்

பெரியார் மண்ணில் பொதுவுடைமை, மனிதநேயம், மதச் சார்பின்மை பூக்கச் செய்வோம்!

திராவிடர் கழகம்

மாமேதை காரல் மார்க்ஸ் சிலைக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மரியாதை செலுத்திவிட்டு, பத்திரிகை யாளர்களை சந்தித்துப் பேசினார்.

‘‘புதியதோர் உலகு செய்வோம்! கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்! பொதுவுைடமைக் கொள்கைகளை உயிரெனக் காப்போம்’’ என்று அந்த தத்துவத்தைக் தந்த கார்ல்மார்க்ஸ் அவர்களின் பிறந்த நாளில், நாம் மதச்சார்பற்ற, மனிதநேயக்  கொள்கைகளை உருவாக்குவோம். அதே நேரத்திலே மதவெறியை மாய்த்து, மனிதநேயத்தை என்றென்றைக்கும் மனித சமுதாயத்தில் தழைப்பதற்கான பணியை நம்முடைய அன்றாடத் தொண்டறமாகச் செய்வோம். அதற்குரிய மண்தான், இந்த பெரியார் மண்! இந்தக் கொள்கைக்காக வாழ்ந்த மாபெரும் தலைவர்தான் கார்ல் மார்க்ஸ். எந்த  ஆட்சிகள்  மலர்ந்தாலும், அதை ஏற்க வேண்டும் என்று நாம் வற்புறுத்துவோம். அது நமது கடமை’’ என்று தெரிவித்தார்.

முன்னதாகப் பொதுவுடைமை மாமேதை கார்ல்மார்க்ஸின் 109ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலக வாயிலில்  அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையின் பீடத்தில் வைக்கப்பட்டிருந்த படத்துக்குத் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மாலை அணிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன், மே 17 இயக்கத்தலைவர் திருமுருகன் காந்தி, கழக மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ. சுரேஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட செயலாளர் அன்புச்செல்வன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன்   மரகதமணி, கலைமணி, விஜய், சிவகுமார், முரளிகிருஷ்ணன், உடுமலை,  பரிதின், புகழேந்தி உள்ளிட்ட தோழர்கள் மரியாதை செலுத்தினர்.

- விடுதலை நாளேடு, 05.05.2026


வியாழன், 30 ஏப்ரல், 2026

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 136-ஆவது பிறந்த நாள் அவரின் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை!

ஆசிரியர், திராவிடர் கழகம்

சென்னை, ஏப்.29- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 136ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2026) காலை 10.30 மணியளவில் சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ்,  பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், சி.வெற்றிச்செல்வி, அ.சுதா அன்புராஜ், தங்க.தனலட்சுமி, த. இளவரசி, மரகதமணி, மு.பவானி, திராவிட இலக்கியா, திராவிட எழில், பூவை செல்வி, தங்கமணி, பெரியார் இனியா,  பெரியார் ஆதவன்.

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வழக்குரைஞர் சண்முகப்பிரியன், சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் கரு.அண்ணாமலை, செயலாளர் சுப்பிரமணியன், அரும்பாக்கம் சா.தாமோதரன்,  பழனிபாலு, அய்ஸ் அவுஸ் அன்பு, எம்.ஆர்.மாணிக்கம், பெரியார் மாணாக்கன், சூளைமேடு பி.டி.சி.ராஜேந்திரன், சூளைமேடு சேகர், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்தின்.

கொடுங்கையூர் கோ.தங்கமணிகோவர்த்தன்.கோபாலகிருஷ்ணன்செல்லப்பன்கவிஞர் வீரமுத்துமுரளிமகேஷ்தமிழ்ச்செல்வன்தாம்பரம் சு.மோகன்ராஜ்மகேந்திரன்சுப்பிரமணியன்அப்துல்லா மற்றும் பெருந்திரளான கழகத் தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

- விடுதலை நாளேடு, 29.04.26

திங்கள், 27 ஏப்ரல், 2026

வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரின் பிறந்த நாளான இன்று – திராவிடர் உரிமைக்கு உறுதியேற்போம்! செய்தி விவரம்


ஆசிரியர் அறிக்கை

வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரின் பிறந்த நாளான இன்று – திராவிடர் உரிமைக்கு உறுதியேற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

ஆசிரியர் அறிக்கை

தென்னிந்தியாவில் முதன்முதலாக 110 ஆண்டு களுக்கு முன்பாக, ‘பார்ப்பனரல்லாதார் இயக்கம்’ (The Non- Brahmin Movement) என்ற அமைப்பினை உருவாக்கியதற்கு மூல முக்கிய தலைவர்கள் மூவர்.

  1. சர். பிட்டி. தியாகராயர்
  2. டாக்டர் டி.எம்.நாயர்
  3. டாக்டர் சி.நடேசனார்

சமூக மாற்றத்திற்கான
சாதனை சரித்திரம் படைத்த இயக்கம்

1916 இல் அதற்கு அரசியல் வடிவம் தந்து, ‘தென்னிந்திய மக்கள் நல உரிமைச் சங்கம்’ என்று பெயர் தந்து, பதிவு செய்து, பணி தொடங்கி, வர்ண தர்ம ஜாதியால், அடிமைத்தளையினால் கட்டுண்டு கிடந்த பல கோடி உழைக்கும் ஒடுக்கப்பட்ட திராவிட மக்கள் உரிமை பெற்றிட, கல்வி, வேலை வாய்ப்பு, சமூக, பொருளாதார அரசியல் விடுதலை அடைந்திட, விடியல் எழுச்சிக்கு வித்திட்டு, 1920 ஆம் ஆண்டு சென்னை ராஜதானியின் (மாநில) ஆட்சியையே தேர்தல்மூலம் கைப்பற்றி, கல்விக் கண் திறந்து, வேலை வாய்ப்பு, சமூகநீதிக்குத் தொடக்க விழா செய்து, சுமார் 17 ஆண்டுகள் ஆட்சி செய்து – பெண்ணுரிமைக் காக்கும் வகையில், 1921 ஆம் ஆண்டிலேயே மகளிருக்கு வாக்கு அளிக்கும் உரிமையைத் தந்து, அவர்களது அதிகாரப் பங்களிப்பை உறுதி செய்த ஒரு சமூக மாற்றத்திற்கான சாதனை சரித்திரம் படைத்த இயக்கம்.

சர். பிட்டி. தியாகராயர் ஒரு பெருவணிகர். தனது வருவாயில் பெரும் பகுதியை பொதுத் தொண்டிற்குச் செலவழித்து, ‘ஈதல் இசைபட’ வாழ்ந்த பெருந்தகையாளர்.

இன்றைய இளைய சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்!

முதலாவது தேர்தலில் (1920 ஆம் ஆண்டு) அவர் கண்ட அந்த திராவிடர் இயக்கமாம் ‘ஜஸ்டிஸ் கட்சி’யென வெகுமக்களால் பெரிதும் அழைக்கப்பட்ட இயக்கம் வெற்றி பெற்ற நிலையில், (1920 இல்) அவரை ஆட்சிப் பொறுப்பேற்க வெள்ளைக்கார கவர்னர்கள் விரும்பி அழைத்தபோது, அப்பதவியை தான் ஏற்க மறுத்து, அப்பதவியை, கடலூர் சுப்பராயலு (ரெட்டியார்) அவர்களை ஏற்கச் செய்த தியாகச் சீலர் நமது தியாகராயர்! பதவி வெறிப் படமெடுத்தாடும் இன்றைய காலகட்டத்தில் இளைய சமூகம் இதனை அறிந்து, புரிந்துகொள்ளவேண்டும்!

வெள்ளுடை வேந்தர், சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் (மேயர்) ஆனபோது, அதனையொட்டி, அதிகார அரசியல் நிமித்தமாக வெள்ளைக்கார கவர்னர் மாளிகைக்குச் சென்று, அவரைச் சந்திக்க அழைக்கப்பட்டார். சந்திப்பின்போது உடை மாற்றி வருவது மரபு; எனவே, வேட்டி, சட்டை உடையை மாற்றி, ‘சூட்’டில் வரும்படி அழைத்தவுடன், அதனை மறுத்து, ‘‘இதே உடையில் சந்திக்க விருப்பமாயின் வருவேன்; இன்றேல், வேறு யாரையாவது அனுப்புவேன்’’ என்று கூறி, வென்றவர் அந்தப் பண்பாளர்!

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வெற்றி பெற்ற வித்தகப் பெருமான்!

‘பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை’ (Non Brahmin Manifesto)யை வெளியிட்டு, தக்கப் புள்ளி விவரத்தினை, பார்ப்பன மேலாண்மைப் பகற்கொள்ளை யைப் பாரறியப் பறைசாற்றி, தமது மக்களுக்குச் சமூகநீதி இன்றியமையாமைபற்றிய, விழிப்புணர்வை ஏற்படுத்தி வெற்றி பெற்ற வித்தகப் பெருமான் அவர்!

ஆரிய – திராவிட உரிமைப் போரில், முதல் முழக்கத்தைப் படைத்தவர். அவருடைய தலைமையில் டாக்டர் டி.எம்.நாயர் என்ற ‘திராவிட லெனின்’ (தந்தை பெரியார் தந்த பெயர்) அதேபோல், 1912 முதலே பார்ப்பனரல்லாத மக்களுக்குக் கல்விக் கண் கிடைக்க திருவல்லிக்கேணியில் தனி விடுதி (Hostel) நடத்தி, புதிய கல்விப் புரட்சியைத் தொடங்கிய கல்வி வள்ளல் டாக்டர் சி.நடேசனார் ஆகியோர் கட்டிய அடிக்கட்டுமானம்தான் – அறிஞர் அண்ணா, கலைஞர், இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் படைத்த, படைக்கும், படைக்கப் போகும் சாதனைச் சரித்திரத்தின் தொடக்கமும் அதுதான்!

வலிவோடும், பொலிவோடும் காத்து,
கடமையாற்ற சூளுரைப்போம்!

நன்றி மறக்காது, நமது மூத்தோர், முன்னோடிகள் அமைத்த உரிமை மாளிகையைப் பாதுகாப்பதும், புதுப்பிப்பதும் மட்டுமல்ல, அதனை மேலும் வலி வோடும், பொலிவோடும் காத்து, கடமையாற்றச் சூளுரைப்போம்!

தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன், நீதிக்கட்சியை – சுயமரியாதை இயக்கத்தினை இணைத்து, திராவிடர் கழகமாக 1944 இல் உருவாக்கினார்.

அதன் அரசியல் அணி – அங்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். தி.மு.க. – தி.க. என்ற இரட்டைக்குழல். இன எதிரிகள் உயர்த்திப் பிடிக்கும் மதவெறி, ஜாதி வெறி அரசியல் ஆதிக்க வெறியை விரட்டி அடிக்க உறுதியேற்போம்!

வென்று காட்ட வீறுகொண்டு உழைப்போம்!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை    

27.4.2026   


வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி. தியாகராயர் பிறந்த நாள்-தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஏப். 27- ‘வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர் அவர் களின் பிறந்த நாளான இன்று (27.4.2026) அவரது சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் சென்னையில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வள்ளல், சென்னை மாநகர முதல் மேயர், ‘வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் 175ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (27.4.2026) காலை 10.30 மணியவில் சென்னை மாநகராட்சி மன்றம் (ரிப்பன் பில்டிங்) முகப்பில் உள்ள அவரின் சிலைக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், இராமு, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கோவீ.ராகவன், மேற்கு சென்னை  மாவட்ட தலைவர் கரு. அண்ணாமலை, வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், சி.வெற்றிச்செல்வி, உமா செல்வாஜ், பசும்பொன் செந்தில்குமாரி, தங்க.தனலட்சுமி, த.மரகதமணி, அரும்பாக்கம் சா.தாமோதரன், திருவொற்றியூர் செல்வராஜ், செல்லப்பன், பி.சி.ஜெயராமன், தாம்பரம் மோகன்ராஜ், க.தமிழ்ச்செல்வன், சீர்காழி இராமண்ணா, தி.செ.கணேசன், பெரியார் இனியன், பெரியார் ஆதவன், மகேந்திரன், சோளிங்கநல்லூர் ராஜேந்திரன், சூளைமேடு ராஜேந்திரன், மு.சேகர், கலைச்செல்வன், கோ.தங்கமணி, அய்ஸ்அவுஸ் அன்பு, ஜனார்த்தனன், பா.கோபாலகிருஷ்ணன், பொன்.மாடசாமி, மகேஷ், வை.கலையரசன், மு.இரா.மாணிக்கம், இராவணன், இளவரசன், சுப்பிரமணியன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

சென்னை கோட்டை – தி.மு.க. கூட்டணிக்கு; மனக்கோட்டை – மற்ற அணிகளுக்கு!


சர். பிட்டி. தியாகராயருக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மாலையிடும்!
அந்த மாலைதான், ‘‘மீண்டும் ஸ்டாலின் கோட்டையில்’’ என்பதற்கான அடையாளம்!

சென்னை, ஏப்.27  சர். பிட்டி. தியாகராயருக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மாலையிடும். அந்த மாலைதான், ‘‘மீண்டும் ஸ்டாலின் கோட்டையில்’’ என்பதற்கான அடையாளம். சென்னை கோட்டை – தி.மு.க. கூட்டணிக்கு; மனக் கோட்டை  – மற்ற அணிகளுக்கு! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்

இன்று (27.4.2026) வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரின் பிறந்த நாள். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமறு:


சென்னை கோட்டை – தி.மு.க. கூட்டணிக்கு; மனக்கோட்டை – மற்ற அணிகளுக்கு!

4 Min Read

சர். பிட்டி. தியாகராயருக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மாலையிடும்!
அந்த மாலைதான், ‘‘மீண்டும் ஸ்டாலின் கோட்டையில்’’ என்பதற்கான அடையாளம்!

சென்னை, ஏப்.27  சர். பிட்டி. தியாகராயருக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மாலையிடும். அந்த மாலைதான், ‘‘மீண்டும் ஸ்டாலின் கோட்டையில்’’ என்பதற்கான அடையாளம். சென்னை கோட்டை – தி.மு.க. கூட்டணிக்கு; மனக் கோட்டை  – மற்ற அணிகளுக்கு! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்

இன்று (27.4.2026) வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரின் பிறந்த நாள். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமறு:

‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்!’

‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்ற திராவிடர் இயக்கம் முதன்முதலாக உருவாவதற்குத் தலைமை யேற்ற, வெள்ளுடை வேந்தர் என்று உலகத்தாரால் அறிமுகப்படுத்தப்பட்ட, வரலாற்றுப் பெருமை மிகுந்த ஒரு வாழ்வை அமைத்த  சர். பிட்டி. தியாகராயர் அவர்களுடைய பிறந்த நாள் இன்று!

‘திராவிட மாடல்’ ஆட்சி இன்றைக்கு உலகம் போற்றக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறது.   ‘பார்ப்பனரல்லாதார் இயக்கம்’ என்று தொடங்கப் பெற்று, அது ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்று பதிவு செய்யப்பட்டு, ‘ஜஸ்டிஸ்’ கட்சி என்று மக்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் இயக்கத்தினுடைய முப்பெரும் தலைவர்களில், சர்.பிட்டி தியாகராயர் அவர்கள்தான் தலைமையேற்றவர். திராவிடர் ஆட்சியை அமைப்பதற்கு வழிகாட்டியவர்கள். அதனுடைய அடித்தளம் ஆனவர்கள்.

‘பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை!’

1916 ஆம் ஆண்டு ‘பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை’ (Non Brahmin Manifesto) என்று உருவாக்கி, அதன்மூலம் கல்வி, உத்தியோகத் துறைகளில், எப்படியெல்லாம் நம்முடைய உரிமைகள், வாய்ப்புகள் மறுக்கப்பட்டன என்பதை புள்ளி விவர ரீதியாக எடுத்துச் சொல்லி, தெளிவுபடுத்தி, ஒரு பெரிய இயக்கத்தை உருவாக்கிய பெருமை, அவருக்கும், அவரைச் சார்ந்த தளபதிகளாக இருந்த டி.எம்.நாயர் அவர்களுக்கும், சி.நடேசனார் அவர்களுக்கும் உரியது.

அந்த அடித்தளத்தின்படி – அதற்குப் பிறகு 17 ஆண்டுகள் நீதிக்கட்சி ஆட்சி நடந்தது. பல ஆண்டுகள் கழிந்தும் கூட, மற்றவர்கள் சொன்னார்கள், ‘நீதிக்கட்சியைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டோம்’’ என்று.

அதற்குப் பிறகு பேரறிஞர் அண்ணா அவர்கள், 1967 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மிகத் தெளிவாக   ‘‘நீதிக்கட்சியின் பேரனான நான் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறேன்’’ என்றார்.

அதைத் தொடர்ந்து கலைஞர் அவர்கள், அந்த ஆட்சி யினுடைய பெருமைகளை, சாதனைகளை உயர்த்தினார்.

இந்தியாவே திரும்பிப் பார்க்கக்கூடிய ஓர் அற்புதமான ஆட்சி – ‘திராவிட மாடல்’ ஆட்சி!

அவருக்குப் பிறகு, அதனை மேலும் ‘திராவிட மாடல்’ ஆட்சியாக்கி, இன்றைக்கு இந்தியாவே திரும்பிப் பார்க்கக்கூடிய ஓர் அற்புதமான ஆட்சியை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்து வருகிறார்.

சிலையாக மட்டுமல்ல, நமக்கெல்லாம் வழிகாட்டக்கூடிய சீலமாகவும் விளங்குகிறார்!

எனவே, ஒரு நீண்ட பாரம்பரியத்திற்கு அடித்தளமாக, காரணமாக இருந்து அடிக்கட்டுமானத்தை உருவாக்கிய அந்த மாபெரும் தலைவருடைய பிறந்த நாள்.  தந்தை பெரியார் அவர்கள் அதனை ஒருங்கிணைந்து, நீதிக்கட்சியையும் – சுயமரியாதை இயக்கத்தையும் இணைத்து ‘திராவிடர் கழகமாகி’ – திராவிடர் கழகம் பிறகு இரட்டைக் குழல் துப்பாக்கியாக – திராவிடர் கழகம் – திராவிட முன்னேற்றக் கழகமாக வளர்ந்த ஓர் அரசியல் சரித்திரத்தின் தொடக்கத்திற்கு உரியவர்தான் இன்றைக்குச் சிலையாக மட்டுமல்ல, நமக்கெல்லாம் வழிகாட்டக்கூடிய சீலமாகவும் இருக்கக்கூடிய சர். பிட்டி தியாகராயர் அவர்கள்.

அவருடைய பிறந்த நாளை, நாம் ஒவ்வொரு ஆண்டும் சடங்காக, சம்பிரதாயமாகவோ கடைப்பிடிப்பதில்லை – சரித்திர அடையாள நாளாகக் கடைப்பிடித்து, அதன்மூலமாகத் தமிழ்நாடு யாருக்கும் அடிமையாக்கப்படக் கூடாத ஒன்று – உரிமை முழக்கம் செய்யவேண்டிய ஒன்று என்பதை நாம் தொடர்ந்து அனைவருக்கும் விளக்கவேண்டும்.

கல்வி, வேலை வாய்ப்புகள், சமூகநீதி என்ற அந்தத் தொடக்கவுரையை அவர்தான் உருவாக்கி வைத்தார். அந்த எழுச்சியை இன்றைக்குப் பார்க்கிறோம்.

வீறுநடை – வேக நடை போட்டு எழுச்சியை உருவாக்குவோம்!

தேர்தல்கள் ஒரு களம், அவ்வளவுதான்.பண் பாட்டுப் புரட்சியை அந்தத் தலைவர்கள் தெளிவாக உருவாக்கினார்கள். அதைத் தொடர்வோம், சூளுரைப்போம், சுயமரியாதை உணர்வைப் பெறுவோம்!  அவர் வழியில் என்றென்றைக்கும் வீறுநடை – வேக நடை போட்டு எழுச்சியை உருவாக்குவோம்.

செய்தியாளர்: மே 4 ஆம் தேதி வெளிவரக்கூடிய தேர்தல் முடிவை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? 2006 ஆம் ஆண்டு விஜயகாந்த் வாக்குகளைப் பிரித்தது போன்று, 2026 ஆம் ஆண்டு விஜய் வாக்குகளைப் பிரிப்பார். தனிப்பெரும்பான்மை என்பது எந்தக் கட்சிக்கும் கிடைக்காது. கூட்டணி ஆட்சிக்குத்தான் வாய்ப்பு என்று சொல்கிறார்களே?

1971 ஆம் ஆண்டு நிலை –
மே 4 ஆம் தேதிக்குப் பிறகு வரும்
!

தமிழர் தலைவர்: 2006 ஆம் ஆண்டோடு நிறுத்தி யிருக்கிறார்கள். அதற்கு முன்பு அவர்கள் போகவேண்டும். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 184 இடங்களைப் பெற்று தி.மு.க. வரலாறு படைத்தது.

‘‘இதோடு முடிந்தது. இனி தி.மு.க. ஆட்சிக்கு வராது’’ என்று ஆருடம் கணித்தவர்கள் எல்லாம், அடையாளம் தெரியாமல் ஓடிவிட்டார்கள் –  துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று!  1971 ஆம் ஆண்டு நடைபெற்ற அதே நிலை, மே 4 ஆம் தேதிக்குப் பிறகும் வரும்.

இதே இடத்திற்கு வந்து, சர். பிட்டி. தியாகராயருக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மாலையிடும். அந்த மாலைதான், ‘‘மீண்டும் ஸ்டாலின் கோட்டையில்’’ என்பதற்கான அடையாளம்.

அதை நீங்கள் விரைவில் காணுவீர்கள்.

சென்னை கோட்டை – தி.மு.க. கூட்டணிக்கு;

மனக்கோட்டை  – மற்ற அணிகளுக்கு!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

- விடுதலையின் நாளேடு, 27.04.2026