வியாழன், 18 டிசம்பர், 2025

திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் நியமனம்-பொறுப்பு மாவட்டங்கள் ஒரு முக்கிய அறிவிப்பு

 திராவிட மாணவர் கழகத்தின் நிர்வாக வசதிக்காக பின்வருமாறு  பொறுப்பு மாவட்டங்கள் மாற்றம் செய்யப்படுகின்றன.

இரா.செந்தூரபாண்டியன்
(திராவிட மாணவர் கழக
மாநிலச் செயலாளர்)

பொறுப்பு மாவட்டங்கள்:

  1. கன்னியாகுமரி
  2. தூத்துக்குடி
  3. திருநெல்வேலி
  4. தென்காசி
  5. ராஜபாளையம்
  6. மதுரை புறநகர்
  7. மதுரை மாநகர்
  8. ராமநாதபுரம்
  9. காரைக்குடி
  10. சிவகங்கை
  11. புதுக்கோட்டை
  12. அறந்தாங்கி
  13. பட்டுக்கோட்டை
  14. தஞ்சாவூர்
  15. திருச்சி
  16. லால்குடி
  17. துறையூர்
  18. கரூர்
  19. பழனி
  20. திண்டுக்கல்
  21. கம்பம்
  22. தேனி
  23. தாராபுரம்
  24. பொள்ளாச்சி
  25. கோயம்புத்தூர்
  26. மேட்டுப்பாளையம்
  27. நீலமலை
  28. திருப்பூர்
  29. கோபிச்செட்டிப்பாளையம்
  30. ஈரோடு
  31. நாமக்கல்
  32. ஆத்தூர்
  33. சேலம்
  34. மேட்டூர்

நாகை மு.இளமாறன்
(திராவிட மாணவர் கழக
மாநில இணைச் செயலாளர்)

பொறுப்பு மாவட்டங்கள்:

  1. கும்மிடிப்பூண்டி
  2. திருவொற்றியூர்
  3. வடசென்னை
  4. தென் சென்னை
  5. ஆவடி
  6. திருவள்ளூர்
  7. தாம்பரம்
  8. சோழிங்கநல்லூர்
  9. செங்கல்பட்டு
  10. காஞ்சிபுரம்
  11. ராணிப்பேட்டை
  12. ஓசூர்
  13. வேலூர்
  14. திருப்பத்தூர்
  15. கிருஷ்ணகிரி
  16. தருமபுரி
  17. அரூர்
  18. செய்யாறு
  19. திருவண்ணாமலை
  20. திண்டிவனம்
  21. விழுப்புரம்
  22. புதுச்சேரி
  23. கள்ளக்குறிச்சி
  24. விருத்தாசலம்
  25. கடலூர்
  26. சிதம்பரம்
  27. அரியலூர்
  28. பெரம்பலூர்
  29. மயிலாடுதுறை
  30. நாகப்பட்டினம்
  31. காரைக்கால்
  32. திருவாரூர்
  33. கும்பகோணம்
  34. மன்னார்குடி

திராவிடர் கழக இளைஞரணியின் மாநில இணைச் செயலாளராக வழக்குரைஞர் சோ.சுரேஷ் நியமிக்கப்படுகிறார்.

திராவிடர் கழக இளைஞரணி நிர்வாக வசதிக்காக பின்வருமாறு பொறுப்பு மாவட்டங்கள் மாற்றம் செய்யப்படுகின்றன.

நாத்திக.பொன்முடி
(திராவிடர் கழக மாநில இளைஞரணிச் செயலாளர்)

பொறுப்பு மாவட்டங்கள்:

  1. கன்னியாகுமரி
  2. திருநெல்வேலி
  3. தூத்துக்குடி
  4. தென்காசி
  5. ராஜபாளையம்
  6. விருதுநகர்
  7. மதுரை புறநகர்
  8. மதுரை மாநகர்
  9. கம்பம்
  10. தேனி
  11. திண்டுக்கல்
  12. பழனி
  13. திருச்சி
  14. துறையூர்
  15. லால்குடி
  16. புதுக்கோட்டை
  17. அறந்தாங்கி
  18. சிவகங்கை
  19. காரைக்குடி
  20. ராமநாதபுரம்
  21. பட்டுக்கோட்டை
  22. தஞ்சாவூர்
  23. கும்பகோணம்
  24. மன்னார்குடி
  25. திருவாரூர்
  26. நாகப்பட்டினம்
  27. காரைக்கால்
  28. மயிலாடுதுறை
  29. அரியலூர்
  30. விருத்தாசலம்
  31. சிதம்பரம்
  32. கடலூர்
  33. புதுச்சேரி
  34. பெரம்பலூர்

வழக்குரைஞர் சோ.சுரேஷ்
(திராவிடர் கழக இளைஞரணி மாநில இணைச் செயலாளர்)

பொறுப்பு மாவட்டங்கள்:

  1. கும்மிடிப்பூண்டி
  2. திருவொற்றியூர்
  3. வடசென்னை
  4. தென் சென்னை
  5. ஆவடி
  6. திருவள்ளூர்
  7. தாம்பரம்
  8. சோழிங்கநல்லூர்
  9. செங்கல்பட்டு
  10. காஞ்சிபுரம்
  11. ராணிப்பேட்டை
  12. வேலூர்
  13. செய்யாறு
  14. திருவண்ணாமலை
  15. திருப்பத்தூர்
  16. ஓசூர்
  17. கிருஷ்ணகிரி
  18. தருமபுரி
  19. அரூர்
  20. திண்டிவனம்
  21. விழுப்புரம்
  22. கள்ளக்குறிச்சி
  23. ஆத்தூர்
  24. சேலம்
  25. மேட்டூர்
  26. நாமக்கல்
  27. கரூர்
  28. ஈரோடு
  29. கோபிச்செட்டிப்பாளையம்
  30. திருப்பூர்
  31. தாராபுரம்
  32. பொள்ளாச்சி
  33. கோயம்புத்தூர்
  34. மேட்டுப்பாளையம்
  35. நீலமலை

– கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்

(கழகத் தலைவர் ஆணைப்படி)

-விடுதலை நாளேடு,12.12.25

தமிழர் தலைவரின் 93ஆவது பிறந்த நாளை முன்னிட்டு – டி.கே.நடராசன் – குஞ்சிதம் குடும்பத்தின் சார்பாக பெரியார் மருத்துவ நலநிதி அறக்கட்டளைக்கு ரூ.93,000 நன்கொடை

 


மறைந்த நமது தோழர் டி.கே.நடராசன் – குஞ்சிதம் ஆகியோரின் மூத்த மகன் ஆடிட்டர் மணவாளன் – பொறியாளர் ரேணுகா, இளைய மகன் கண்ணுதுரை, சுசீலா குடும்பத்தின் சார்பாக ஆசிரியரின் 93ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்தி, அளித்துள்ள ரூ.93,000 தொகை பெரியார் மருத்துவ நலநிதி அறக்கட்டளையில் (பெரியார் ஹெல்த் கேர் டிரஸ்ட் ஃபண்ட்) சேர்க்கப்பட்டது.

-விடுதலை நாளேடு,13.12.25

செவ்வாய், 16 டிசம்பர், 2025

திராவிடர் கழக மகளிர் அணி – மகளிர் பாசறை கலந்துரையாடல் மகளிர் அனைவரும் முழு உடல் மருத்துவப் பரிசோதனை செய்ய வலியுறுத்தல்


 சென்னை, நவ. 15– வடசென்னை, தென் சென்னை, ஆவடி தாம்பரம், சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர் மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் மற்றும் முன்னாள் மாநில மகளிர் அணி செயலாளர் பார்வதி அவர்களின் நினைவு நாள் கூட்டம் 8.10.2025 அன்று மாலை 4 மணிக்கு  சென்னை பெரியார் திடலில் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் இறைவி தலைமையில்  நடைபெற்றது

பெரியார் பிஞ்சு திராவிட இலக்கியா கடவுள் மறுப்பு கூறி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

திராவிடர் கழகத் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீர மர்த்தினி மறைந்த சுய மரியாதைச் சுடரொளி பார்வதி அவர்களின் தொண்டு, களப்பணிகள் குறித்தும், நம் வீடுகளில் குறிப்பாக குழந்தைகளிடம் இயக்க கொள்கைகளைக் கொண்டு செல்ல வேண் டிய கட்டாயம் குறித்தும் விரிவாக பேசினார்.

மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் வீ.கா.ரா.பெரியார் செல்வி மகளிர் உடல்நலம் பேண வேண்டியது குறித்து பல்வேறு செய்திகளை தெரிவித்தார். 40 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், மாதவிடாய், மார்பகப் சுய பரிசோதனை, புற்றுநோய் தொடர்பான பல மருத்துவ தகவல்களையும், தீர்வுகளையும், ஆரம்பத்தி லேயே எப்படி கண்டறி வது என்பதை பற்றியும் தெரிவித்தார்.

திருவொற்றியூர் உமா செல்வராஜ் மகளிர் எவ்வாறு பணத்தை சேமிக்க வேண்டும்?  குடும்பத்தோடு இயக்கப் பணியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தனது அனுபவங்களோடு தெரிவித்தார். விரைவில் சென்னைக்குள் சிற்றுலா செல்வது என்றும் மகளிர் அனைவரும் முழு உடல் மருத்துவப் பரிசோதனை செய்வது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சி. வெற்றிச்செல்வி, மு. செல்வி, த. இளவ ரசி, சண்முக லட்சுமி, வி.வளர்மதி, சி.தே.கீதா ராமதுரை, மு. செல்வி, பி.அஜந்தா, உத்ரா, க.வெண்ணிலா, நூர்ஜஹான், மு.பவானி, த. மரகதமணி ஆகியோர் தீர்மானங்கள் பற்றிய தம்  கருத்துகளை தெரிவித் தனர். ஜனவரி 2026 கழக மகளிர் அனைவரும் கட்டாயம் முழு உடல் பரிசோதனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.வருகை தந்த அனைவருக்கும் தேநீர்  வழங்கிய பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் மு.பசும்பொன் செந்தில் குமாரி நிகழ்ச்சியின் இறுதி யில் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு,15.11.25

வெள்ளி, 5 டிசம்பர், 2025

ஆளுநர் ஆர்.என். ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்த தமிழ்நாடெங்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது


திராவிடர் கழகம்

* தமிழர் தலைவரின் 93ஆவது பிறந்த நாளையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். * தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்வப் பெருந்தகை தமிழர் தலைவர் பிறந்தநாளையொட்டி பொன்னாடை அணிவித்து, புத்தகங்களை வழங்கினார். உடன்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன். (சென்னை, 4.12.2025)

திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

சென்னை, டிச.5 தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டின்மீது அவதூறு பரப்பும் வகையில் தீவிரவாதம் தலை தூக்கி நிற்பதாக அபாண்டமாக அவதூறுப் பிரச்சாரம் செய்வதைக் கண்டித்து நேற்று (4.12.2025) தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

‘‘தமிழ்நாட்டில் தேசியப் பாதுகாப்புப் பிரச்சினைகள் உள்ளன. இங்கேயும் தேச விரோத சிந்தனைகளும், தீவிரவாதப் போக்கும் நிலவுகின்றன. இதைச் செய்பவர்கள் எவ்வித நடவடிக்கைகளையும் சந்திக்காமல் திரிகிறார்கள்.

ஆனால், என்.அய்.ஏ. அவர்கள்மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதைவிட எனக்குத் தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் கலாச்சாரம்தான் கவலையைத் தருகிறது.

தேசத்தின் மற்ற பகுதிகளில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறது. இது நல்லதுஅல்ல’’ என்று ஒரு தனியார் காவித் தொலைக்காட்சிக்குக் கடந்த10 நாள்களுக்கு முன்பு பேட்டி அளித்துள்ளார் ஆளுநர் ஆர்.என். ரவி.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் நடவடிக்கைகளும், பேச்சுகளும் தமிழ்நாடு அரசுக்கும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், விரோதமாக இருப்பது அவர் வந்தது முதலே நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் தங்களது கடுமையான கண்டனத்தை ஆளுநர் ஆர்.என். ரவிக்குத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு தனக்கு என்ன கட்டளையிட்டதோ, எத்தகைய குழப்பங்களை விளைவிக்க வேண்டும் என்று ஆணையிட்டதோ அவற்றை நோக்கிச் செயலாற்றுவதே தன்னுடைய முதல் கடமை என்று பா.ஜ.க. ஆளுநர் செயல்படுகிறார்.

அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு, தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தைச் சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கும் ஆளுநர் தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் இழித்துரைப்பதையும், பொய்யுரைப்பதையும், தமிழர்களின் சுயமரியாதையைக் குறி வைப்பதையும் ஒரு நாளும் பொறுத்துக் கொள்ள முடியாது. இது தந்தை பெரியாரின் தன்மான திராவிட மண்!

எனவே தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும், தீவிரவாதப் போக்குடையவர்கள், பிரிவினைவாதிகள் என்றெல்லாம் அவதூறு பேசும் ஆளுநரைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் நேற்று (4.12.2025) மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நேற்று 4.12.2025  மாலை5 மணியளவில் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்கள் கீழ்கண்டவாறு எழுப்பப்பட்டன.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் மாநில உரிமைகளைக் காப்போம்! கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் ஆளுநர் ரவியை கண்டிக்கிறோம்! தமிழ்நாட்டையும் தமிழர்களையும் இழிவுபடுத்தும் ஆர்.என்.ரவியைக்  கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்!

சிதைக்காதே சிதைக்காதே  நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்காதே! ஒரிசாவிலும் பீகாரிலும் தமிழர்களை இழிவுபடுத்தி ஒற்றுமையைக் குலைப்பவர் பிரதமரா? தமிழ்நாட்டின் வரிப் பணத்தில் சம்பளத்தை வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் ஆர்.என்.ரவி ஆளுநரா? ஆபத்து! ஆபத்து! ஆர்.எஸ்.எஸ்.சால் ஆபத்து! இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆர்.எஸ்.எஸ்.- சங் பரிவாரால் பா.ஜ.க.வால் ஆபத்து!

மதக் கலவரங்களை நாட்டில் தூண்டி பயங்கரவாதத்தை வளர்ப்பது யார்? ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க! ஷாகாக்கள் என்னும் பெயரால் வன்முறைப் பயிற்சிகள் தருவது யார்? ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.! திராவிடத்தைக் கொச்சைப்படுத்தி தனித் தமிழைக் கொச்சைப்படுத்தி தமிழ்நாட்டின் சம்பளம் வாங்க வெட்கமில்லையா? வெட்கமில்லையா? ஆர்.என்.ரவியே வெட்கமில்லையா? பொறுக்க மாட்டோம்! பொறுக்க மாட்டோம்! பண்பாட்டுப் படையெடுப்பைப் பொறுக்க மாட்டோம்! பொறுக்க மாட்டோம்! என்ற ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து திராவிடர் கழக கிராமப்புற பிரச்சார குழு செயலாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தின் தொடக்கவுரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து ம.தி.மு.க. எழும்பூர் பகுதிச் செயலாளர் தென்றல் நிசார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சேத்துப்பட்டு இளங்கோ, த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹாஜாகனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு.செல்வப் பெருந்தகை, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் கண்டன உரைக்கு பின் திராவிடர்  கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆர்ப்பாட்டத் தலைமை கண்டன உரையை நிகழ்த்தினார். திராவிடர் கழக தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில தலைவர் வழக்குரைஞர்
த. வீரசேகரன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி வி. பன்னீர்செல்வம், திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்டத் தலைவர் முத்தழகன்.

மேலும் பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் வேல்.சோ. நெடுமாறன், பேராசிரியர் ச. இராஜசேகரன், திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வழக்குரைஞர் சு. குமாரதேவன்,  கொடுங்கையூர் தே.செ. கோபால் மற்றும் வெற்றிச்செல்வி, சி. காமராஜ், க. பெரியார் செல்வி.

வடசென்னை: மாவட்டதலைவர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை அன்புச்செல்வன், ராஜேந்திரன், செல்லப்பன், மரகதமணி, தங்கமணி, தனலெட்சுமி,  நா. பார்த்திபன், இந்திரா, மாலதி, லட்சுமி, வாணி, பூங்குழலி, நாகமணி, பிரசீனா, அஸ்வின், வழக்குரைஞர் அருண், கலைமணி, ஆனந்தன், மகேஷ், அசோக்குமார், டெய்சன், ஜனார்த்தனன்.

சோழிங்கநல்லூர் மாவட்டம்: மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, மடிப்பாக்கம் ஜெயராமன், ஆர்.டி. வீரபத்திரன், தமிழ் இனியன்,  மணிகண்டன்.

தென் சென்னை: மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, கோ.வீ. ராகவன், மு.ந.மதியழகன், ச.மகேந்திரன், பெரியார் யுவராஜ், இரா.ரவி, ச. மாரியப்பன், எம்.டி.சி. இராஜேந்திரன், ஆட்டோ சேகர், மு.பவானி, வி. வளர்மதி, வி.யாழ்ஒளி, சா.தாமோதரன், பி. அஜந்தா, மா.சண்முகலட்சுமி, த. ராஜா, மு. சண்முகப்பிரியன், நல். இராமச்சந்திரன், கரு. அண்ணாமலை, நுங்கம்பாக்கம் சஞ்சய்.

கும்மிடிப்பூண்டி மாவட்டம்: மாவட்ட தலைவர் புழல் த. ஆனந்தன், இரா.சோமு, மு. உதயகுமார், ஓவியர் ஜனாதிபதி.

ஆவடி மாவட்டம்:  மாவட்டத் தலைவர் வெ. கார்வேந்தன், செயலாளர் க. இளவரசன், க. தமிழ்ச்செல்வன், ஜெயராமன், சுந்தர்ராஜன், அய். சரவணன், பாசறை கோபால், இரணியன்,இராவணன், நாகராசன், வேல்முருகன், டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், தங்கரவி, பூ. இராமலிங்கம், சி.எல். துரை, அ.வெ. நடராசன், ரகுபதி, வெங்கடேசன், மணிமாறன், அன்புச்செல்வி, பசும்பொன், பூவை. செல்வி, உடுமலை வடிவேல்,. செ.பெ. தொண்டறம், சி. வச்சிரவேல், பெரியார் மாணாக்கன், சந்திரபாபு, பகுத்தறிவு,  மோகனப்ரியா.

தாம்பரம் மாவட்டம்: மாவட்டத் தலைவர் பா. முத்தையன், நாத்திகன், சு. மோகன்ராஜ், ம. குணசேகரன், கருப்பையா, எஸ்.ஆர். வெங்கடேசன், உத்ரமணி, உத்ரகுமார், ராமச்சந்திரன், தனசேகர், பாலகிருஷ்ணன், கரசங்கால் கதிர்வேல் ஆகிய கழகத் தோழர்களுடன், தி.மு.க., காங்கிரஸ்,  கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள்,  த.மு.மு. கழகம் என பெருந்திரளான தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

-விடுதலை நாளேடு, 05.12.2025


ஞாயிறு, 30 நவம்பர், 2025

கழகத் தோழர் க.வெற்றிவீரன் 29.11.2025 காலை 7 மணியளவில் மறைவுற்றார்

 

மறைவு

அசோக்லேலன்ட் திராவிடர்தொழிலாளர் கழகத்தின் முன்னாள் தலைவரும், சோழிங்கநல்லூர் திராவிடர் கழகத்தின் மூத்த தோழருமான ஜி.வெற்றிவீரன் இன்று (29.11.2025) காலை 7 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது இணையர் இந்திரா, மகன்கள் தென்னரசு, இளமாறன் மற்றும் குடும்ப உறவுகளுக்கு சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் ஜி.வெற்றிவீரன் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

முகவரி: இந்திரா இல்லம், 8-340, கம்பர் குறுக்குத் தெரு, விஜயநகரம், மேடவாக்கம், சென்னை (காயிதே மில்லத் கல்லூரி எதிரில்).

விடுதலை நாளேடு, 29.11.2025


– – – – –

தென் சென்னை மாவட்ட நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக செயலாளராகவும் இருந்தார்.


பிற்பகல் 4.10 மணி அளவில் இறுதி ஊர்வல வண்டி புறப்பட்டு நுங்கம்பாக்கம் கிராம  தெருவில் உள்ள அவரது சொந்த இல்லத்தில் சிறிது நேரம் வைக்கப்பட்டு பிறகு நுங்கம்பாக்கம் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.

இறுதி நிகழ்ச்சியின் போது தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் மறைந்த நுங்கம்பாக்கம் பகுதி தோழர் ம.நடராஜன் அவர்களின் துணைவியார் ந.பத்மாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 25 நவம்பர், 2025

பெரியார் உலக நிதி மற்றும் நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி- (எம்.நடராஜன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி) (26.11.2025)

நன்கொடை
அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் முன்னாள் தலைவரும் நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக முன்னாள் துணைத் தலைவருமான எம்.நடராஜன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (26.11.2025) அவரது துணைவியார் ந.பத்மாவதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலகத்திற்கு ரூ.3 ஆயிரமும், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ 5 ஆயிரம் வழங்கினார். உடன் தென்சென்னை மாவட்ட கழகச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி.(24.11.2025)
- விடுதலை நாளேடு, 25.11.25

தென்சென்னை மாவட்டக் கழக சார்பில் முதல் தவணையாக ரூ.10 லட்சம் வழங்க கலந்துரையாடலில் முடிவு


தமிழ்நாடு
சென்னை, நவ. 25- தென் சென்னை மாவட்ட கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 22.11.2025 அன்று மாலை 6 மணி அளவில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ், கஜபதி தெருவில் உள்ள ஆர்.வீ. ஆட்டோ ஒர்க்ஸ் அருகில், மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்த சாரதி முன்னிலையிலும் நடை பெற்றது. மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன் கடவுள் மறுப்பு கூறினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம் பெரியார் உலகம் நிதி திரட்டுதல், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், தமிழர் தலைவர் ஆசிரியரின் 93ஆவது பிறந்த நாளை(டிசம்பர்- 2) சிறப்பாக கொண்டாடுதல் குறித்து நோக்க உரையாற்றினார்.

நோக்க உரையின் அடிப்படையில் பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ. ராகவன், துணைச் செயலாளர் கரு. அண்ணாமலை, அரும்பாக்கம் சா. தாமோதரன், மயிலை சோ.பாலு, எம்.டி. சி. சு.செல்வம், வெ.கண்ணன், இளைஞர் அணி துணைத் தலைவர் அ.அன்பு, இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா. மாரிமுத்து, மந்தைவெளி எ. பன்னீர்செல்வம், தரமணி ம.ராஜு ஆகியோர் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

கவியருவி ஈரோடு தமிழன் பன், தாம்பரம் பெரியார் பெருந் தொண்டர் தி.இரா.ரத்தினசாமி, அவரது இணையர் ர.ஆதிலட்சுமி மற்றும் பெரியார் பெருந்தொண்டர் மயிலை ந.கிருஷ்ணன் ஆகியோரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

‘பெரியார் உலகம்’ கட்டுமான நிதிக்கு  தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் நன்கொடை வசூல் செய்து தருவதென ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது ஆண்டு (டிசம்பர்-2) பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்துவது எனவும்,

கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்து வழங்குதல் மற்றும் கழகப் பரப்புரைப் பணிகளை தீவிரப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

பெரியார் உலகம் நிதி திரட்டுவதற் காக மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நிறைவாக இளைஞர் அணி துணைத் தலைவர் அ.அன்பு நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு, 25.11.25