
சென்னை, ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், படத்திற்கு மலர் தூவியும் தமிழர் தலைவர் மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2025) காலை 11 மணியளவில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்திருக்கும் கலைஞர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும், சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, மாநில வழக்குரைஞர் அணித் தலைவர் த. வீரசேகரன், பொறியாளர் ச. இன்பக்கனி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், கோபி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மு.சென்னிய்பன், பன்னாட்டுத் தமிழுறவு மன்றத் தலைவர் பெருங்கவிக்கோ, வா.மு. சேதுராமன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், துணைத் தலைவர்கள் டி.ஆர். சேதுராமன்,
மு. சண்முகப்பிரியன், இளைஞரணித் தலைவர் ந. மணித்துரை, செயலாளர் பெரியார் யுவராஜ், அரும்பாக்கம் சா. தாமோதரன், நெய்வேலி வெ. ஞானசேகரன், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன், காப்பாளர் கி. இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் தி.செ. கணேசன், தங்க. தனலட்சுமி, கொடுங்கையூர் தலைவர் கோ. தங்கமணி, செம்பியம் தலைவர் பா. கோபாலகிருட்டிணன், பெரம்பூர் – மங்களபுரம் கழக செயலாளர் ஆ. பாஸ்கர், கண்ணதாசன் நகர் கழக அமைப்பாளர் கண்மணி துரை, சி. காமராஜ், தாம்பரம் மாவட்ட தலைவர் ப. முத்தையன், செயலாளர் கோ. நாத்திகன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர்
வே. பாண்டு, பொதுக் குழு உறுப்பினர் பி.சி.ஜெயராமன்,
க. கலைமணி, ஆவடி மாவட்ட துணை செயலாளர் உடுமலை வடிவேல், ஆவடி நகர துணைத் தலைவர் வஜ்ரவேலு, புதுமை இலக்கிய தென்றல் செயலாளர் வை. கலையரசன், வாசகர் வட்டம் – ஜனார்த்தனம், எம். ரங்கநாதன்,
இரா. அருள், யுகேஷ், அ. புகழேந்தி உள்ளிட்ட திரளான தோழர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.