செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

சூளைமேட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்



திராவிடர் கழகம்

செங்கல்பட்டு, மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர். அதன் விவரம் வருமாறு:-

சூளைமேடு, சென்னை

தென்சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் 23.08.2025 அன்று மாலை 6.30 மணி அளவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்; சூளைமேடு, சவுராஷ்டிரா நகர், முதல் தெருவில் சூளைமேடு பகுதி கழகத் தலைவர் நல்.இராமச்சந்திரன் தலைமையிலும், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை, மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை மற்றும் மாவட்ட இளை ஞரணி செயலாளர்  பெரியார் யுவ ராஜ் ஆகியோர் முன்னிலையிலும் நடை பெற்றது.

பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தொடக்க உரையாற்றினார்.முன்னதாக மாலை 5.30 மணி அளவில் அறிவு மாணனின் கொள்கைப் பாடல்களுடன் ‘இசை நிகழ்ச்சி’ நடைபெற்றது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 112ஆவது வட்ட செயலாளர் த.பரி சிறிது நேரம் உரையாற்றினார்.

மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்ததின் விளைவால் ஏற்பட்ட பயன்களை எடுத்துக் கூறி உரையாற்றினார்.

அடுத்து உரையாற்றிய திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் பா.மணியம்மை சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி மற்றும் திராவிடர் கழகம் போன்றவை மக்களுக்காக ஆற்றிய பணிகளை பட்டியலிட்டு கூறினார்.

திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் தந்தை பெரியாரின் தொண்டினையும், தந்தை பெரியார் அவர்கள் இட ஒதுக்கீட்டிற்காக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய தையும், தந்தை பெரியாரின் இட ஒதுக்கீடு கொள்கையை நீதிக் கட்சி ஏற்றத்தையும், இட ஒதுக்கீட்டிற்கான அடித்தளத்தை அமைத்ததையும், முத்தையா அவர்கள் இட ஒதுக்கீட்டை சட்டம் ஆக்கியதையும் எடுத்துக் கூறி, இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பட்ட தடைகளையும், போராட்டங்களையும், இட ஒதுக்கீட்டிற் காக இந்திய அரசியல் சட்டம்  திருத்தப் பட்டதையும், படிப்படியாக இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்ட வரலாற்றையும் கூறி, ஆசிரியருக்கு கி.வீரமணி அவர் களால்  69% இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு பாது காக்கப்பட்டதையும் விரிவாக எடுத்துக் கூறி  செங்கல்பட்டு மாநாடு வெற்றி அடைய அனைவருக்கும் அழைப்பு விடுத்து சிறப்பு உரையாற்றினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின்  109 ‘அ’ வட்ட செயலாளர் டேவிட் இன்பராஜ், பொன்சீலன், கிருஷ்ணன், 109 ‘அ’ வட்ட பகுதி பிரதிநிதி ஆர்.சேகர், நீலகண்டன், சிவா, போஸ்டல் பாஸ்கர், பரமேஸ்வரி, சாந்தி, தென்சென்னை மாவட்ட கழக மகளிர் அணி தலைவர் வி. வளர்மதி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி, செயலாளர் பி.அஜந்தா, ஆர். தமிழ்ச்செல்வி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, ஆவடி மாவட்ட கழகத் துணை தலைவர் வை. கலையரசன், எம்ஜிஆர் நகர் வெ.கண்ணன், அரங்க.ராசா, வடசென்னை க.செல்லப்பன், அய்ஸ் அவுஸ் உதயா, சூளைமேடு ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இறுதியாக எம்.டி.சி.பா.இராஜேந் திரன் நன்றியுரையாற்றினார்.

-விடுதலை நாளேடு, 26.08.2025


புதன், 20 ஆகஸ்ட், 2025

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு இராயப்பேட்டையில் விளக்கப் பொதுக்கூட்டம்



தமிழ்நாடு

ஆசிரியரின் வழிகாட்டுதல் எங்களுக்குப் பெரிய பலமும், பாதுகாப்புமாகும்!
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு உரை கழகத் துணைத் தலைவர் சிறப்புரையாற்றினார்

சென்னை, ஆக.20 ஆசிரியரின் வழி காட்டுதல் எங்களுக்குப் பெரிய பலமும், பாதுகாப்புமாகும் என்று மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தில் கூறினார்.

தென் சென்னை மாவட்ட கழ கத்தின் சார்பில், இராயப்பேட்டை, வி.பி.ராமன் சாலை மற்றும் டாக்டர் நடேசன் சாலை சந்திப்பில், 17.08.2025, ஞாயிறு, மாலை 6.30 மணி அளவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தென் சென்னை மாவட்டத் தலை வர் இரா.வில்வநாதன் தலைமை யிலும், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன்  ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

கொள்கைப் பாடல்களுடன் ‘இசை நிகழ்ச்சி!’

முன்னதாக மாலை 5.30 மணி அளவில் அறிவுமானனின் கொள்கைப் பாடல்களுடன் ‘இசை நிகழ்ச்சி’ நடை பெற்றது. மாவட்ட இளைஞரணி செயலாளர்  பெரியார் யுவராஜ் வர வேற்புரை ஆற்றினார். மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன் தொடக்க உரையாற்றினார்.

சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு உரை

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு கலந்து கொண்டு, சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும், சுயமரியாத இயக்க கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முனைப்புடன் செயல்படுவதை குறிப்பிட்டும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அணுகுமுறை எங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது. அவர் துணையாக இருந்து வழி காட்டுவது எங்களுக்கு பெரிய பலமும், பாதுகாப்பும் ஆகும்’ என்று சிறிது நேரம் பேசிவிட்டு விடை பெற்றுச் சென்றார்.

செயலவைத் தலைவர்

கழக செயலவைத் தலைவர் வழக்கு ரைஞர் ஆ.வீரமர்த்தினி, ‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு’ நடைபெறுவதற்கான காரணங்களை விளக்கிக் கூறி உரை யாற்றினார்.

துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சுயமரி யாதை இயக்கத்தின் வரலாற்றை எடுத்துரைத்தார்.

சுயமரியாதை இயக்கம் தோன்று வதற்கு முன், திராவிட சமுதாயம் எப்படி எல்லாம் அடிமைப்பட்டுக் கிடந்தது என்பதை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியும், தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி, திராவிட சமுதாயத்தை மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக மாற்றி, சுயமரி யாதையுடன் வாழ்வதற்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தந்தார். அதன் வழியில் திராவிடர் கழகம் பயணித்துப் போராடி பல உரிமைகளை பெற்றுத் தந்து கொண்டுள்ளது.

இன்றைய நிலையில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், திராவிடர் இயக்க அரசியல் கட்சி களுக்கு அறிவுரைகளை வழங்கி, பல சாதனைகளைப் படைத்து வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் நடைபெற உள்ள ‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை’ சிறப்பாக நடத்தி வெற்றி அடைய செய்வோம் என்று விளக்கிக் கூறி சிறப்புரையாற்றினார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் 85 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்குத் தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் தோழர்கள் பய னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பங்கேற்றோர்

நந்தனம் மதி (தி.மு.க.பகுதி கழகச் செயலாளர்), மாமன்ற உறுப்பினர், கிருஷ்ணமூர்த்தி (121ஆவது வட்ட செயலாளர், தி.மு.க.), இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர் ச.மகேந்திரன், இளைஞர் அணி துணைச் செயலாளர், இரா.மாரிமுத்து, திருவல்லிக்கேணி அப்துல்லா, தரமணி ம.ராஜு, எம். டி .சி. இராஜேந்திரன், மாவட்ட மகளிரணி தலைவர் வி. வளர்மதி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி, ஆவடி மாவட்ட துணை செயலாளர் க.தமிழ்ச்செல்வன், தாம்பரம் மோகன்ராஜ், சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, ஜெ. சொப்பன சுந்தரி, சங்கரி, சகானா பிரியா, வினோத் குமார், உதயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதிலிருந்தே மழை பெய்து கொண்டிருந்தபோதும் கூட்டத்தின் கருத்து மழையை பொது மக்கள் கேட்டு தெளிவு பெற்றனர்.

நிறைவாக மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.அன்பு நன்றி யுரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 20.08.2025


செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலுவின் வாழ்விணையர் மறைவு : தமிழர் தலைவர் இறுதி மரியாதை



திராவிடர் கழகம்

தி.மு.க. பொருளாளர் டி. ஆர்.பாலு அவர்களின்  வாழ்விணையர்  –  தொழில்துறை அமைச்சர்
டி.ஆர்.பி. ராஜா அவர்களின் தாயார் பா. ரேணுகாதேவி அவர்கள் இன்று (19.8.2025) மறைவுற்றார் என்பதற்கு வருந்துகிறோம். கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்கள் அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.  டி.ஆர். பாலு அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கலும், ஆறுதலும்  தெரிவித்தார்.

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்,  தாம்பரம் மாவட்டக் கழகத்  தலைவர் ப.முத்தையன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, தாராசுரம் வை .இளங்கோவன், பொறியாளர் கரிகாலன், தோழர்கள் சூளைமேடு இராமச்சந்திரன், கோவி.ராகவன், பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு. மோகன்ராஜ்,  ராமு, அரும்பாக்கம் சா.தாமோதரன், த. மரகதமணி, உடுமலை வடிவேல், பூவரசன், கணேசன், புகழேந்தி ஆகியோர் கழகத்தலைவருடன் சென்று மரியாதை செலுத்தினர். (சென்னை – 19.8.2025)

- விடுதலை நாளேடு, 19.08.25


சனி, 16 ஆகஸ்ட், 2025

நாகாலாந்து ஆளுநர் மறைவு தமிழர் தலைவர் மரியாதை


விடுதலை நாளேடு
திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

நாகாலாந்து ஆளுநரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான இல.கணேசன் அவர்கள் மறைவிற்கு கழக தலைவர் ஆசிரியர் அவர்கள் நேரில் சென்று மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.  உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்ட துணை செயலாளர் கரு. அண்ணாமலை, வழக்குரைஞர் துரை அருண் ஆகியோர் உள்ளனர். தமிழர் தலைவரை சந்தித்த பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இல. கணேசன் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். (சென்னை, 16.8.2025)


வியாழன், 7 ஆகஸ்ட், 2025

முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தில் கழகத் தலைவர் தலைமையில் கழகத் தோழர்கள் புடைசூழ மரியாதை (சென்னை, 7.8.2025)


திராவிடர் கழகம்

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2025) கலைஞரின் நினைவிடத்தில், மருத்துவப் பயனாளியாக பயன்பெற்றுத் திரும்பிய நிலையில், முதன்முதலாக தோழர்கள் புடைசூழ மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஒரத்தநாடு இரா.குணசேகரன்,
ஊமை.ஜெயராமன், வி.பன்னீர்செல்வம் மற்றும் தோழர்கள் உள்ளனர்.

முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாள் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை

சென்னை, ஆக.7 முத்தமிழறிஞர் கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முத்தமிழறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2025) காலை 10 மணியளவில் சென்னை கடற்கரை  காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், மருத்துவப் பயனாளியாகப் பயன் பெற்றுத் திரும்பிய நிலையில், முதன் முதலான நிகழ்ச்சியாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பெருந்திரளான கழகத் தோழர்களுடன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி,, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உரத்தநாடு இரா. குணசேகரன், ஊமை ஜெயராமன், வி. பன்னீர்செல்வம், துணைப் ெபாதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில தொழிலாளரணி செயலாளர் திருச்சி மு.சேகர், கலைஞர் அவர்களின் சிறப்பு உதவியாளர் முத்துவாவாசி, மல்லை சத்யா,  மாநில கிராமப்புற பிரச்சார செயலாளர் முனைவர் க. அன்பழகன். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ. சுரேசு, மாநில மகளிரணி துணைச் செயலாளர் க. இறைவி, மாநில விளையாட்டு அணி அமைப்பாளர் ம. பூவரசன்,  சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, துணைத் தலைவர் சு. இமயவரம்பன், மகளிரணி செயலாளர் வாசந்தி,  தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நெல்லுப்பட்டு அ. இராமலிங்கம், உரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் லெனின், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், அரும்பாக்கம் சா. தாமோதரன், அய்ஸ்அவுஸ் அ. அன்பு எம். ரங்கநாதன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப. முத்தையன், தொழிலாளரணித் தலைவர் மா. குணசேகரன், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்ட காப்பாளர் கி. இராமலிங்கம், துணைத் தலைவர் நா. பார்த்திபன், பொதுக் குழு உறுப்பினர்கள் தி.செ. கணேசன், தங்க.தனலட்சுமி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் த. மரகதமணி,  மாணவர் கழகத் தலைவர் ச.சஞ்சய், தொழிலாளரணித் தலைவர் ஆ.துரைராவணன்,  கொடுங்கையூர் கழகத் தலைவர் கோ. தங்கமணி, செம்பியம் கழகத் தலைவர் ப. கோபாலகிருட்டிணன், பூம்புகார் நகர் கழக அமைப்பாளர் ச. இராசேந்திரன், கண்ணதாசன் நகர் கழக அமைப்பாளர் க. துரை, அண்ணாநகர் ப.சேரலாதன், மகளிரணி கோ. அன்புமணி, திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், செயலாளர் ந. இராசேந்திரன், ஜீவானந்த் மனோகரன், நெய்வேலி வெ. ஞானசேகரன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே. பாண்டு, பொதுக்குழு உறுப்பினர்கள் பி.சி. ஜெயராமன், கலைச்செல்வன், ஆவடி மாவட்ட செயலாளர் க. இளவரசன், துணைச் செயலாளர் பூவை. க. தமிழ்ச்செல்வன், உடுமலை வடிவேல், ஆவடி நகர துணைத் தலைவர் வஜ்ஜரவேலு, பூவை பகுதி தலைவர் க.ச. பெரியார் மாணாக்கன், க. கலைமணி, ஆளந்தன், மகேஷ் கணேசன், முகப்பேர் தி. முரளி, அயப்பாக்கம் அரிகிருஷ்ணன், திருநின்றவூர் இராசேந்திரன், மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலைஞர் நினைவிடத்திற்கு வந்திருந்து மரியாதை செலுத்தினர்.

- விடுதலை நாளேடு,7.8.2025

புதன், 30 ஜூலை, 2025

பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி அளிப்பது செங்கல்பட்டு மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்க முடிவு தென்சென்னை கூட்டத்தில் தீர்மானம்


சென்னை, ஜூலை30– பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி அளிப்பது எனவும், செங்கல்பட்டு மாநாட்டிற்கு வாகனங் களில் சென்று பங்கேற்பது என்றும் தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல்  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது,

27.07.2025, ஞாயிற்றுக் கிழமை, முற்பகல் 11.00 மணிக்கு திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதி கஜபதி தெருவில் உள்ள ஆர்.வீ.ஆட்டோ ஒர்க்ஸ் வாயிலில் தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல்  கூட்டம் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

‘பெரியார் உலகம்’  நிதி திரட்டல், செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க  நூற்றாண்டு நிறைவு மாநாடு மற்றும் ‘குடிஅரசு இதழ்’ நூற்றாண்டு நிறைவு விழா, ‘விடுதலை ஏடு’ சந்தா சேர்த்தல், இயக்க பணிகள் குறித்து துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை, இளைஞரணி மாவட்ட செயலாளர் பெரியார் யுவராஜ், துணைத் தலைவர் அ.அன்பு, துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, பகுதி கழக பொறுப்பாளர்கள் சூளைமேடு நல்.இராமச் சந்திரன், இராயப்பேட்டை கோ.அரிகரன், எம்.ஜி.ஆர்.நகர் கண்ணன் ஆகியோர் கருத்துகளையும் செயல் திட்டங்களையும் கூறினர்.

மாநில  இளைஞரணி  துணைச் செயலாளர் சோ.சுரேஷ் செயல் திட்டங்கள் வகுப்பது குறித்தும், குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயலாற்றுவது  குறித்தும் விளக்கி உரையாற்றினார்.

அய்ஸ் அவுஸ் உதயா, மா.இனியவள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

‘பெரியார் உலகம்’  நிதியை பெருமளவில் திரட்டி தருவது என்றும்,  செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க  நூற்றாண்டு நிறைவு மாநாடு மற்றும் ‘குடிஅரசு இதழ்’ நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு பெருமளவில் வாகனங்களில் சென்று பங்கேற்பது என்றும், மாநாடு குறித்து சுவர் விளம்பரம் செய்தல், நெகிழி திரை வைத்தல்,  தெருமுனைக் கூட்டம் நடத்தி பரப்புரை செய்வது என்றும், ‘விடுதலை ஏட்டிற்கு’ சந்தாக்களை சேர்த்தல் என தீர்மானிக்கப்பட்டது.

இறுதியில் கோட்டூர் புரம் ச.தாஸ் நன்றி கூறினார்.


செவ்வாய், 22 ஜூலை, 2025

மும்மொழித் திட்டம், தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 

சென்னையில் கழகத் துணைத் தலைவர் பங்கேற்றுக் கண்டன உரையாற்றினார்


மும்மொழித் திட்டம், தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும்

ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை, மே 21- மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் நேற்று (20.5.2025) மாலை சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில்: சமூகநீதிக்கு எதிராக ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் சட்டங்களும், நடவடிக்கைகளும் பிற்படுத்தப்பட்ட மற்றும்  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பேராபத்தாகவே உள்ளன.

தமிழ்நாடு

ஜாதியின் காரணமாக கல்வி மறுக்கப்பட்ட பெரும் பான்மை மக்களின் கண்களை திறந்து விட்டதிலும், கைகொடுத்து தூக்கி விட்டதிலும் இடஒதுக்கீட்டிற்கு முக்கிய பங்களிப்பு உள்ளது.

கல்விக் கண்ணொளி

இடஒதுக்கீட்டின் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், சிறுபான்மையினரும் கல்விக் கண்ணொளி பெற்று எழுந்து நடமாடும் நிலையில் பார்ப்பனீயத்திற்கே உரித்தான நயவஞ்சகத் தன்மையோடு, “நீட்” என்றும், பொருளாதார அளவுகோல் (EWS) என்றும் கொல்லைப்புற வழியை தேர்ந்தெடுத்து சமூகநீதிக்கு எதிராக குறிப்பிட்ட கல்வியில், வேலைவாய்ப்பு துறைகளில் இடஒதுக்கீடு கிடையாது என்ற நிலையை ஏற்படுத்தி வருகிறார்கள்.

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கிறார்கள். இவற்றை நாம் ஒருங்கிணைந்து முறியடிக்காவிட்டால் மீண்டும் பார்ப்பனரல்லாத மக்கள் பார்ப்பனீய ஆதிக்கம் என்ற யானையின் காலில் மிதிக்கப்பட்டு நசுங்க வேண்டிய அவல நிலைதான் ஏற்படும்.

மருத்துவக் கட்டமைப்பைச் சிதைக்கும்

நீட் தேர்வில், தற்கொலைகள் தொடர்வதும், மாணவர்களும், பெற்றோரும் அலைக்கழிக்கப்படுவதும் நாளும் தொடர்கதையாகி வருகிறது. மருத்துவக் கல்வியையும், கட்டமைப்பையும் சிதைக்கும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கும் சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரு முறை நிறைவேற்றி அனுப்பப்பட்டும், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மாநில உரிமைக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும் விரோதமானவையாகும்.

நீட் தேர்வு ஒழிப்புப் போர் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இறுதி வெற்றி கிட்டும் வரை சற்றும் ஓயாமல், அயராமல் போராடி, நீட்டை ஒழித்து சமூக நீதியையும் மாநில உரிமையையும் மீட்கவும், மும்மொழிக் கொள்கையையும், தேசியக் கல்விக் கொள்கையையும், ஒன்றிய பா.ஜ.க. அரசு திணிப்பதைக் கண்டித்தும் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் ஆகியவை இணைந்து மாநிலம் முழுவதும் மே 20ஆம் தேதி அன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என கடந்த 11.5.2025 அன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக மாநிலக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது என துணைத் தலைவர் உரையாற்றினார்.

இதன்படி நேற்று (20.5.2025) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நேற்று (20.5.2025) மாலை 4 மணியளவில் திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை வரவேற்புரையாற்ற, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மண்டலத்தில் உள்ள மாவட்டத் தலைவர்கள் வழக்குரைஞர் தளபதிபாண்டியன், இரா.வில்வநாதன், தாம்பரம் ப.முத்தையன், வெ.கார்வேந்தன், புழல் ஆனந்தன், எண்ணூர் வெ.மு.மோகன், வே.பாண்டு.

மாவட்ட செயலாளர்கள் புரசை சு.அன்புச்செல்வன், செ.ர.பார்த்தசாரதி, கோ.நாத்திகன், க.இளவரசன், கும்மிடிப்பூண்டி பாஸ்கர், ந.இராசேந்திரன், விஜய் உத்தமன்ராஜ் மற்றும் கழக இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழக மற்றும் திராவிட மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்ட முழக்கம்

ஆர்ப்பாட்டத்தில் பெரியார் களம் இறைவி, இர.சிவசாமி, பெரியார் யுவராஜ், ப.சக்கரவர்த்தி, இரா.சதீசு, ந.கார்த்திக் ஆகியோர் கீழ்க்கண்ட ஒலி முழக்கங்களை எழுப்பினர்.

காப்போம்! காப்போம்! சமூகநீதியைக் காப்போம்! ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமையை காப்போம்! மீட்போம்! மீட்போம்! ஒன்றிய அரசால் பறிக்கப்படும் உரிமைகளை மீட்போம்!

கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்! ஹிந்தியை சமஸ்கிரு தத்தையும் திணிக்கும் பாஜக அரசைக் கண்டிக்கிறோம்.

ஏற்கமாட்டோம்! ஏற்கமாட்டோம்! மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம். கை வைக்காதே கை வைக்காதே!  கை வைக்காதே! இருமொழிக் கொள்கையில் கை வைக்காதே!

சிதைக்காதே சிதைக்காதே! இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்காதே! தேசிக் கல்விக் கொள்கை என்னும் பெயரால் காவிக் கொள்கையைத் திணிப்பதா? தனியார் மயத்தை வளர்ப்பதா? சமூகநீதியைப் பறிப்பதா?

குலத்தொழில் செய்ய ஆசை காட்டும் விஸ்வகர்மா போஜனா, பார்ப்பனியத்தை ஆள வைக்கும் மனுதர்ம யோஜனா, அய்ந்தாம், எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கட்டாயமாம்! பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் குலக்கல்விக்குப் பட்டாவாம்.

கொண்டுவா கொண்டுவா! கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வா! ஒழித்துக் கட்டுவோம் ஒழிக்கட்டுவோம்! தேசியக் கல்விக் கொள்கையை ஒழித்துக் கட்டுவோம்!

போராடுவோம் வெற்றி பெறுவோம்! வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!  – போன்ற ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கண்டன உரை

இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்க உரையாற்றினார். துணைப் பொதுச் செயலாளர்கள் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினர். நிறைவாக திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரை நிகழ்த்தினார்.

திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் பொறியாளர் தேவ.நர்மதா இணைப்புரை வழங்கினார். திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம் நன்றி கூறினார்.

கலந்து கொண்டோர்

வடசென்னை: கி.இராமலிங்கம், தி.செ. கணேசன், வழக்கு ரைஞர் மு.வேலவன், கோ. தங்கமணி, பா. கோபாலகிருட்டிணன், ச. இராசேந்திரன், சி.பாசுகர், நா. பார்த்திபன், கண்மணிதுரை, ஆ. துரைராவணன், ஏ. மோகன், பா. பார்த்திபன், ந. கார்த்திக், த. பரிதின், ச. சஞ்சய், சி. செல்லப்பன்.

தென்சென்னை:  கரு. அண்ணாமலை, டி.ஆர். சேதுராமன், ந. மணிதுரை, பெரியார் யுவராஜ், சா. தாமோதரன், ச. மகேந்திரன், இரா. மாரிமுத்து, கோ.வீ. ராகவன், எம்.டி.சி. இராஜேந்திரன், நல். இராமச்சந்திரன், நுங்கம்பாக்கம் சஞ்சய், மு. சண்முகப்பிரியன், டைலர் கண்ணன்.

தாம்பரம் மாவட்டம்:  தாம்பரம் சு. மோகன்ராஜ், பொழிசை, க. கண்ணன், பாலமுரளி, அரசன்கழனி குணசேகரன், மா. குணசேகரன், பழனிசாமி, சு.ம. இராமச்சந்திரன், இரா. உத்திரகுமாரன், கேளம்பாக்கம் லட்சுமணன், தனசேகர்.

ஆவடி மாவட்டம்: மு. ரகுபதி, க. தமிழ்ச்செல்வன், இரணியன் (எ) அருள்தாஸ், அ.வெ. நடராசன், துரை. முத்து கிருஷ்ணன், பூ. இராமலிங்கம், முரளி, ஜெயராமன், இரா. கோபால், எ. கண்ணன், கு. சங்கர், அரிகிருஷ்ணன், வி. சோபன்பாபு, சி. வஜ்ரவேல், பெரியார்மாணாக்கன், அய். சரவணன், வெங்கடேசன், வேல்சாமி, சந்திரபாபு, உடுமலை வடிவேல், வை. கலையரசன், வேல்முருகன், தங்கதுரை, இ. தமிழ்மணி.

கும்முடிபூண்டி மாவட்டம்: புழல் சோமு, வடகரை உதயகுமார்,  ஓவியர் ஜனாதிபதி, கசேந்திரன், சோழவரம் ப. சக்கரவர்த்தி, க.ச.க. இரணியன், செகத விஜயகுமார், அய். அருணகிரி (எல்லாபுரம் ஒன்றிய தலைவர்), அ. ஆகாஷ் (மா.இ. அணி செயலாளர்), அ. கலையரசன் (இளைஞர் அணி).

திருவொற்றியூர் மாவட்டம்:  பெ. செல்வராசு, எம்.ஆர்.எப். சேகர், இராவணன், சத்தீஷ்.

சோழிங்கநல்லூர் மாவட்டம்:  தமிழ் இனியன், அரசு, கலைச்செல்வன், குணசேகரன், பி.சி. ஜெயராமன்.

கழக மகளிரணி: சி. வெற்றிச்செல்வி (பொதுக்குழு உறுப்பினர்), பசும்பொன், தங்க தனலட்சுமி (பொதுக்குழு உறுப்பினர்), ச. இன்பக்கனி, டி. இளவரசி, த. திராவிடஎழில், த.யாழ்தமிழ், ஞானதேவி, கனிமொழி, த. தேவி, மோ. மீனாட்சி, மு. பவானி, கோ. குமாரி, தெய்வானை, ராதிகா, சி. அறிவுமதி, பூவை செல்வி, இ.ப. சீர்த்தி, சீ.ப. மகிழன், அன்புச்செல்வி, பகுத்தறிவு, யாழினி மற்றும் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் வேல்.சோ. நெடுமாறன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தோழர்கள் ஜெ. ஜனார்த்தனம், சோமசுந்தரம், மு.இரா. மாணிக்கம் உள்ளிட்ட ஏராளமானத் தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

- விடுதலை நாளேடு,21.5.25

திங்கள், 21 ஜூலை, 2025

‘வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார்’ – நூற்றாண்டு நிறைவு விழா, தந்தைபெரியார் நினைவகம் (ம) பெரியார் நூலகம் திறப்பு விழா (கேரளா –12.12.2024)


இந்தியா, தமிழ்நாடு

தந்தை பெரியார் நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் காட்சியையும், தந்தை பெரியார் நூலகத்தையும், தமிழ்நாடு மாநில முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி மற்றும் அமைச்சர் பெருமக்கள் பார்வையிட்டனர்.

இந்தியா, தமிழ்நாடு

கருநாடகாவை சேர்ந்த எழுத்தாளர் தேவனூர் மஹா தேவாவிற்கு இந்த ஆண்டிற்கான வைக்கம் விருதை 5 லட்சம் ரூபாய் காசோலையுடன் (முதல் விருது) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நினைவுப் பரிசினை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார்.

‘வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார்’ – நூற்றாண்டு நிறைவு விழா, தந்தைபெரியார் நினைவகம் (ம) பெரியார் நூலகம் திறப்பு விழா (கேரளா –12.12.2024)

இந்தியா, தமிழ்நாடு

தந்தை பெரியார் நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் காட்சியையும், தந்தை பெரியார் நூலகத்தையும், தமிழ்நாடு மாநில முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி மற்றும் அமைச்சர் பெருமக்கள் பார்வையிட்டனர்.

இந்தியா, தமிழ்நாடு

கருநாடகாவை சேர்ந்த எழுத்தாளர் தேவனூர் மஹா தேவாவிற்கு இந்த ஆண்டிற்கான வைக்கம் விருதை 5 லட்சம் ரூபாய் காசோலையுடன் (முதல் விருது) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நினைவுப் பரிசினை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார்.

- விடுதலை நாளேடு,13.12.2024

தென் சென்னையில் தந்தை பெரியார் -146ஆவது பிறந்த நாள் விழா

       17.09.2024 நண்பகல் 12.00 மணி அளவில் மயிலாப்பூர் நொச்சி நகர்    பகுதியில் தந்தை பெரியாரின் 146 வது பிறந்த நாளை முன்னிட்டு நெகிழித்திரை வைக்கப்பட்டு, அதன் அருகே தந்தை பெரியாரின் படம் அலங்கரித்து வைத்து மாலை அணிவிக்கப்பட்டது. 

பகுதி கழகத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் இர வில்வநாதன் தலைமையில், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி முன்னிலையில் 100 பேருக்கு கேசரி இனிப்பு வழங்கப்பட்டது.

மாவட்ட துணை செயலாளர் கோ.வீ. ராகவன், தொழிலாளர் அணி தலைவர் ச மாரியப்பன், இளைஞர் அணி செயலாளர் ந.மணிதுரை, இளைஞர் அணி துணைத் தலைவர் ச. மகேந்திரன், இளைஞர் அணி துணை செயலாளர் இரா.மாரிமுத்து, தரமணி ம.ராஜி, பெரியார் ஆதவன் மற்றும் இன்பக் கதிர் ஆகியோர் பங்கேற்றனர்.


சுயமரியாதைச் சுடரொளி அடையாறு கோ. அரங்கநாதன்

 


1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வரலாற்றுப் பாதை படம் பிடித்து காட்டப்படுகிறது.

அடையாறு கோ. அரங்கநாதன்

அடையாறு கோ. அரங்கநாதன் என்றால், அவர் ஓர் அசையாத ‘அடையாறு ஆலமரம்’ என்றே சொல்ல வேண்டும்.

கட்டுக்கடங்காக் கழகப் பற்றுடன் திராவிடர் கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறையும் சென்று இருக்கிறார்.

புதுச்சேரியில் 1928இல் (அக்டோபர் 10) பிறந்த இத்தோழரின் பெற்றோர் கோவிந்தராசு – முனியம்மாள்.

சிறுவயதிலேயே தந்தையைப் பறி கொடுத்த நிலையில்   தாயாரோடும்,  நான்கு சகோதரர் –  சகோதரிகளுடனும் சென்னை மயிலை வந்து சேர்ந்தார். கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் அவலம்.

மயிலையில் கழகத் தோழர்கள்  அமைத்த திருவள்ளுவர் மன்றமே (1946) அவருக்கு எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுத்தது. தையல் கலைஞர் மு. வெங்கடேசன்தான் அந்தப் பகுதியில் கழகத் தோழர்களை உருவாக்கிய ஆசான்.

‘விடுதலை’ வழியாக கல்விக் கற்றார்

‘விடுதலை’யை மற்றவர்கள் படிக்கச் சொல்லிக் கேட்டுக் கேட்டு அதன் வழியாகத்தான் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார்.

தொடக்கத்தில், பக்தி சூழலில் அவர் கையில் அவரது தாயார் கிருஷ்ணர் உருவத்தை பச்சை குத்தி விட்டார். அத்தகைய ஒரு தோழர் கருஞ்சட்டை வீரராகி, பச்சை நாத்திகராகி விட்டார்.

முதலில் மயிலைப் பகுதி திராவிடர் கழகச் செயலாளராக பொறுப்பேற்றார். பின்னர் கிழக்கு சென்னை மாவட்ட செயலாளராகவும், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவராகவும் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார்.   ‘நவ இந்தியா’, ஈ.வெ.கி. சம்பத் நடத்திய தமிழ்ச் செய்தி, கி.வா.ஜெகநாதன் நடத்திய ‘கலைமகள்’ இதழில் அச்சுக் கோப்பாளராக பணியாற்றினார்.

‘செங்கோல்’ இதழை ம.பொ.சி. நடத்திக் கொண்டு இருந்தார்.  அங்கும் அரங்கநாதன் பணி செய்துள்ளார். கலைமகளில் அவர் 22 ஆண்டு காலம் பணியாற்றினார்.

1973இல் நடந்த ஒரு நிகழ்ச்சி – அரங்கநாதனின் தன்மானத்தைச் சீண்டக் கூடிய ஒரு சம்பவம்.

‘‘கலைமகள்’’ அச்சகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சந்திரசேகரன் என்னும் பார்ப்பனர் ஒருவர், (இவர் காஞ்சி சங்கராச்சாரியாராக இருந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் அண்ணன் மகன்).

அச்சுக்கோப்பாளரான அரங்கநாதன் அந்த அய்யரின் பக்கத்தில் சென்ற போது ‘‘டேய் சூத்திரா! என்ன பக்கத்தில் வருகிறாய்?’’ என்று கத்தினாராம். அவ்வளவுதான். அந்த இளைஞரின், மான மறவரின் கருஞ்சட்டை உள்ளம் கொதி நிலையை அடைந்தது. கையில் வைத்திருந்த கத்திரிக்கோலால் அந்தப் பார்ப்பனரின் சிண்டை நறுக்கித் தூக்கி எறிந்து விட்டார்.

அவ்வளவுதான் கலைமகள் அலுவலகமே ‘தீ’ பிடித்துக் கொண்டது. அய்ம்பதுக்கும் மேற்பட்ட பார்ப்பனர்கள் ஒன்றுகூடி விட்டனர். கி.வா. ஜெகநாதனும் இருந்தார்.

கி.வா.ஜெ. தோழர் அரங்கநாதனைப் பார்த்துக் கேட்டார். ‘‘என்ன அரங்கநாதன் இப்படி செய்து விட்டீர்களே!’’

அரங்கநாதன் சொன்ன பதில் ‘‘அய்யா இந்த அய்யர் என்னை  சூத்திரன் என்று சொன்னதால் உணர்ச்சி வசப்பட்டு இப்படி செய்து விட்டேன்’’ என்று கூறினார். (அப்படி அறுக்கப்பட்ட பார்ப்பனரின் சிண்டைக்கூட வெகு நாள் பத்திரப்படுத்தி வைத்திருந்தார் தோழர் அரங்கநாதன்.

இந்த இடத்தில் பார்ப்பனர்களின் சாமர்த்தியத்தைக் கவனிக்க வேண்டும். ‘‘சரி, சரி’ ஏதோ நடந்து விட்டது. இங்கே நடந்த சமாச்சாரம் வெளியில் தெரியக்கூடாது வெளியில் சொல்லக் கூடாது’’ என்று கேட்டுக் கொண்டார்களாம்.

இவர் இணையர் ராஜேஸ்வரி பள்ளிக்கூட ஆசிரியை ஆவார். மூன்று மகன்கள், ஒரு மகள் அனைவரும் கழகக் கொள்கையில் உறுதியானவர்கள். இயக்கத்தைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேசாத, பேசத் தெரியாத பிரச்சார வாகனம் என்று இவரைச் சொல்ல வேண்டும்.

25.12.2007 அன்று சென்னை மயிலாப்பூர் பகுதியில் பெரியார் படிப்பக திறப்பு விழா தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். கூட்டம் முடிந்து காரில் வீடு திரும்பும்போது, அடையாறு அரங்கநாதன்   பேருந்தைப் பிடிக்க வேகமாக நடந்து சென்று கொண்டு இருந்தார். இதைப் பார்த்த கழகத் தலைவர் அவர்கள் காரை நிறுத்தச் சொல்லி தோழர் அரங்கநாதனை காரில் ஏற்றிக் கொண்டு சென்றார். இதை நினைவு கூர்ந்த அரங்கநாதன்   உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் விட்டார். இதுதான் திராவிடர் கழகம். இதுதான் கழகத்தின் தலைமை. இதுதான் இயக்கத் தொண்டர்களின் சிறப்பு.

மறைவிற்கு முதல் நாள் வளசரவாக்கத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசினார். 1.10.2011 அன்று மறைந்தார்.

தொகுப்பாளர்:  தமிழ்க்கோ

(கவிஞர் கலி. பூங்குன்றன் எழுதிய ‘‘சுயமரியாதைச் சுடரொளிகள்’’ என்ற நூலிலிருந்து)

- விடுதலை நாளேடு,28.6.25

வியாழன், 17 ஜூலை, 2025

பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டித் தர முடிவு மகளிரணி – மகளிர் பாசறை கலந்துரையாடலில் தீர்மானம்- சென்னை பெரியார் திடலில்


Viduthalai

சென்னை, ஜூன் 21- சென்னை பெரியார் திடலில் 14.6.2025 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் வட சென்னை, தென் சென்னை, ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர் மாவட்டங்களில் மகளிரணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

மகளிர் அணியைச் சேர்ந்த திராவிஎழில் கடவுள் மறுப்பு கூறினார். மகளிர் பாசறை வளர்ச்சிப் பணிகள் குறித்தும், பெரியார் உலகத்திற்கு இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் தோழர்கள் பங்களிப்பு பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிர் பாசறை செயலாளர் பா மணியம்மை ஆகியோர் தங்கள் ஆலோசனைகளை வழங்கினர். மாதந்தோறும் மகளிர் தோழர்கள் சந்திக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், மகளிருக்கான சீருடை, பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவதற்கான முறைகள் பற்றியும், பெரியார் பிஞ்சு  இதழ் சிறுவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய முறைகள் பற்றியும் மாநில மகளிரணி துணைச் செயலாளர் இறைவி, பொறியாளர் ச.இன்பக்கனி, மாநில மகளிளிரணி துணைச் செயலாளர் பெரியார் செல்வி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தாம்பரம் மகளிர் அணி தலைவர் நாகவல்லி, தாம்பரம் மகளிர் பாசறை செயலாளர் உத்ரா, திருவொற்றியூர் மகளிர் பாசறை செயலாளர் யுவராணி, உமா செல்வராஜ் ஆகியோர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். பெரியார் உலகம் பற்றி கழகத் துணைத் தலைவர் கவிஞர்  அவர்களால் எழுதப்பட்ட அன்றைய விடுதலையில் வெளிவந்த கட்டுரை வாசிக்கப்பட்டது. மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை கூடுவது எனவும், ஒவ்வொரு மாவட்டமும் பெரியார் உலகத்திற்கு குறைந்தது 15 ஆயிரம் பணம் திரட்டி தமிழர் தலைவர் அவர்களைச் சந்தித்து வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் பூவை செல்வி, சுமதி, முகப்பேர் செல்வி, அருணா, அஞ்சனா, சுசித்ரா, இந்திரா,ஞான தேவி,கனிமொழி, விஜயலட்சுமி பெரியார் பிஞ்சு  செம்மொழி ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோழர்களுக்கு சி. வெற்றிசெல்வி தேநீர் வழங்கினார். இறுதியாக இளவரசி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.