திங்கள், 30 நவம்பர், 2020

சேத்துப்பட்டு பெரியார் சிலை திறப்பு

27.12.93 சென்னை, சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில், தந்தை பெரியார் முழு உருவச் சிலையை நான் வாழ்த்தொலியுடன் பலத்த கைதட்டலோடு பொத்தானை அழுத்தி திறந்துவைத்தேன். சிலை திறப்பு விழாவிற்கு சேத்துப்பட்டு திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் ச. தனசேகரன் தலைமை வகித்து உரையாற்றினார். சி. சிகாமணி வரவேற்புரை ஆற்றினார். தென் சென்னை மாவட்ட கழக தலைவர் எம்.பி. பாலு, மாவட்ட செயலாளர் எம்.கே. காளத்தி, மாவட்ட அமைப்பாளர்

எம்.ஏ. கிரிதரன் மாவட்ட இளைஞரணி தலைவர் மு.பாலகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி,

- உண்மை இதழ் ஜூன் 16 - ஜூலை 15.2020


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக