செவ்வாய், 1 அக்டோபர், 2019

பொறியியல் கல்வி பாடத்தில் பகவத் கீதையா?

சென்னை  அண்ணா  பல்கலைக்கழகத்தை முற்றுகையிடும் போராட்டம்

தி.மு.க.  மாணவரணி, திராவிட மாணவர் கழகத் தோழர்கள் கைது



சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்வியில் விருப்பப்பாடம் என்கிற பெயரில் பகவத் கீதை, சமஸ்கிருதம் திணிக்கப்படுவதைக் கண்டித்து திமுக மாணவரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் அண்ணா பல்கலைக் கழக முற்றுகைப் போராட்டம் இன்று (1.10.2019) காலை நடைபெற்றது.
திமுக மாணவரணி, திராவிட மாணவர் கழகத் தோழர்கள் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணை செயலாளர்கள்
யாழ்திலீபன்,  பெரியார் சமூகக் காப்பு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் சோ.சுரேஷ் மற்றும் திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், ஊரப்பாக்கம் சீனுவாசன், தமிழ்செல்வன், வேலவன், நா.பார்த்திபன், சண்முகப்ரியன் உள்ளிட்ட மாணவர் கழகம், இளைஞரணி தோழர்கள் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் ஏராளமானவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
பிரின்சு என்னாரெசு பெரியார், சுரேசு, பிரவீண்குமார், தமிழ்ச்செல்வன், திருமால், ரூபன், குணசேகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
- விடுதலை நாளேடு, 1.10.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக